Tuesday 3 March 2015
முகமூடி எதற்கு?
கீர்த்திவாசன் பள்ளிச் சிறுவன். மாலை கீர்த்தியை பள்ளியிலிருந்து அழைத்து வந்த கார் முன்பின் தெரிந்திராத இரு நபர்களால் கடத்தப்பட்டது. காரைக் கடத்தியவர்கள் சிறிது தூரத்தில் ஓட்டுநரைப் வெளியே தள்ளிவிட்டு கீர்த்தியை மட்டும் கடத்திச் சென்று பணம் கேட்டு மிரட்டினர். தொகை கொடுக்கப்பட்டு சிறுவன் மீட்கப்பட்டாலும், பின்னர் காவலர்கள் கடத்தியவர்களைக் கைது செய்தது. கைதானவர்கள் அளித்த ‘ஒப்புதல் வாக்கு’ மூலமாக பிணையத்தொகை முழுவதும் மீட்கப்பட்டது.
நடந்த குற்றம் சென்னை நகரை உலுக்கியதால், மக்களிடையே காவலர்கள் மீது நம்பிக்கையை ஏற்ப்படுத்தும் விதமாக, காவல்துறை ஆணையாளரே நேரடியாக கைது செய்யப்பட்டவர்களை ஊடகவியலாளர்கள் முன் ஆஜர்படுத்தி பேட்டி கொடுத்தார். பிடிபட்டவர்களையும் மீட்கப்பட்ட பணத்தையும் தொலைக்காட்சியில் பார்த்த மக்களும் நிம்மதியானார்கள்.
கைதானவர்கள்தான் கீர்த்தியைக் கடத்தியது என்று குற்றம் நடைபெறுகையில் அவர்களைப் பார்த்த கீர்த்தியும், ஓட்டுநரும் சாட்சி சொல்ல வேண்டும். காவலர்கள் யாரைவாது பிடித்து ‘இவர்கள்தானே அவர்கள்’ என்று சாட்சிகளைக் கூற வைக்கும் அபாயம் இருப்பதால், நீதிமன்ற நடுவர் முன்னிலையில் கைதானவர்களை மற்றவர்களுடன் கலந்து நிற்க வைத்து சாட்சிகள் அவர்களை அடையாளம் காணும் அடையாள அணிவகுப்பு (identification parade) நடத்தப்பட வேண்டும். இவ்வாறு அடையாளம் கண்டது, அணிவகுப்பை நடத்திய நடுவர் மூலமாக பின்னர் வழக்கு விசாரணையில் சாட்சியாக ஏற்றுக் கொள்ளப்படும்.
கீர்த்தி வழக்கிலும் அடையாள அணிவகுப்பில் கைதானவர்கள்தாம், கீர்த்தியை கடத்தியவர்கள் என்று அடையாளம் காணப்பட்டனர்.
தற்பொழுது வழக்கு விசாரணையில், கைது செய்யப்பட்டவர்களை அடையாளம் கண்டவர்கள், ஏற்கனவே அவர்களை தொலைக்காட்சியில் தெளிவாகப் பார்த்த பிறகு, ‘அடையாள அணிவகுப்பு’ என்பது வெறும் கண்துடைப்பே என்று கேள்விகள் வைக்கப்படுகிறது. அதோடு நிற்காமல் அந்த வாதத்திற்கு வலு சேர்க்கும் வண்ணம், ‘சென்னை ஆணையாளரை’ தங்கள் தரப்பில் சாட்சியாக விசாரிக்க வேண்டும் என்றும் கோரப்பட்டு நீதிமன்றம் அதை ஏற்றுக் கொண்டது.
இவ்வாறு காவல்துறை ஆணையாளரையே குற்றம்சாட்டப்பட்டவர்கள் தரப்பு சாட்சியாக அழைத்ததை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆணையாளர் தரப்பில் மனுச் செய்ய, அதை நீதிபதி.நாகமுத்து அவர்கள் தள்ளுபடி செய்து சமீபத்தில் (State Vs K.Prabhu and another Crl.O.P.No.24768 of 2014 dated 12/12/14) தீர்ப்புக் கூறியுள்ளார்.
இந்த காரணத்திற்காகத்தான், குற்றம் செய்தவர்கள் என்ற சந்தேகத்தின் பெயரில் கைது செய்யப்படுபவர்களை வெளியில் அழைத்து வருகையில், காவலர்கள் அவர்களது முகங்களை மூடியவாறு அழைத்து வருகிறார்கள். ஆனால் இணையத்தில் தேடினால், சட்டமுறை சாராத பல காரணங்கள் கிடைக்கிறது.
மதுரை
24/01/15
Subscribe to:
Post Comments (Atom)
PROOF OF WILLS ADMITTED BY TESTATOR
INTRODUCTION I have had the privilege to hear the lecture of Mr.Nagamuthu, Senior Advocate on ‘Execution and Proof of Will’....
-
‘அதனால்தான் என் கண்கள் சற்று சொருகியுள்ளது. மற்றபடி எனக்குப் பிரச்னையில்லை. ஆகவே, கடவுளுக்குப் படைக்கும் எதையும் எப்படி நான் எனக்குள் எடுத...
-
“நள்ளிரவு ஒன்றரை மணிக்கு ஆரஞ்சு உறித்து ஒவ்வொரு சுளையாக தின்று கொண்டிருக்கிறேன். பளிச் பளிச்சென்று புளித்தினிக்கிறது” விஜய் பாஸ்கர்விஜ...
-
‘இறந்து போகும் ஒவ்வொரு உறவினரும் நான் வாழ்வதற்கான காரணங்களில் சிலவற்றை எடுத்துக் கொண்டே போகிறார்கள்’ சமீபத்தில் இறந்து போன சித்தப்பாவைப்...
No comments:
Post a Comment