Tuesday 21 June 2016

சுவாமியின் முதல் எதிரி

ரகுராம் ராஜனை கல்லூரிதான் அவர் வீடு என்றால், அதற்கு அனுப்பியது நான்தான்என்று இனி சுப்பிரமணியன்சுவாமி பெருமைப்பட்டுக் கொள்வார். ‘இந்தியாவை அதன் பொருளாதார அழிவிலிருந்து மீட்டேன்என்று கூடச் சொல்லத் துணிவார்.

ரகுராம் ராஜனை விட சுவாமி வன்மையாக தாக்குதல் தொடுத்த பொருளாதார நிபுணர் ஒருவர் உண்டு என்றால், அது இந்திய புள்ளியியல் துறையின் தந்தை என்று கருதப்பட்ட பி.சி.மகலனோபிஸ்.

தனது எதிரிகளில் முதலாவது நபர் என்று சுவாமியால் அறிவிக்கப்பட்ட மகலனோபிஸ் பிறந்தநாளை 'தேசிய புள்ளியியல் தின'மாக அறிவித்து இந்திய அரசு கொண்டாடி வருகிறது.

பத்தொன்பது வயது மாணவனாக தான் எழுதிய கட்டுரை, மகலனோபிஸ் ஒரு அறிவுத் திருடர் (Plagiarist) என்பதை நிரூபித்து அதனால் சிதைக்கப்பட்ட அவரது சர்வதேசப் புகழிலிருந்து அவர் மீளவே முடியவில்லைஎன்று சுவாமியால் தற்போது குறிப்பிடப்படும் மகலனோபிஸ் கல்கத்தாவில் உள்ள இந்திய புள்ளியியல் நிறுவனத்தில் (Indian Statistical Institute) சுவாமி முதுகலை படிக்கையில் அதன் முதல்வராயிருந்தவர்.

மகலனோபிஸ் சுவாமியின் தந்தையின் மீது கொண்ட பகையால், சுவாமி மீது வெறுப்பை கக்கினாராம். அதனால் மற்ற பேராசிரியர்கள் சுவாமியை அனைத்து பரீட்சைகளிலும் தோல்வியுற செய்தனராம். எனவே சுவாமி, நிறுவன நூலகத்தில் அமர்ந்து மகலனோபிஸ் கட்டுரைகள் அனைத்தையும் படித்து, மகலனோபிஸ் தயாரித்த இரண்டாவது ஐந்தாண்டு திட்டம், 1930ல் பெல்ட்மான் என்ற ரசியரின் குறிப்புகளிலிருந்து திருடப்பட்டதாக அறிய வந்தாராம்.

அடுத்து மகலனோபிசுவின் அதி முக்கிய கருத்தானபிராக்டைல் அனாலிசுசு’ (Fractile Analysis) என்ற கோட்பாடு ஒன்றுக்கும் உதவாத ஒன்று என்று நவீன கணிதம் மூலம் நிரூபிக்க முடியும் என்று கண்டுபிடித்து அதனை ஒரு பத்திரிக்கையில் வரச் செய்தாராம். அக்கட்டுரையாதான் மகலனோபிசுவின் சர்வதேச புகழ் சிதைந்து போய், அதிலிருந்து அவர் மீளவே முடியவில்லை என்கிறார்.

பத்ம விபூசன் விருது உட்பட உலகின் பல்வேறு பல்கலைக்கழக விருதுகளைப் பெற்ற மகலனோபிஸை இந்தியா டுடே தனது சிறாப்பிதழ் ஒன்றில், இந்தியாவை அமைத்தவர்களான 100 நபர்களில் ஒருவராக, குறிப்பாக இந்தியாவை கட்டியவர்களில் ஒருவராக குறிப்பிடுகிறது.

இணையத்தில் காணக்கிடைக்கும் எந்த ஒரு செய்தியிலும், மகலனோபிசை சர்வதேச அளவில் ஒன்றுமில்லாமல் போகச் செய்த 19 வயது மாணவனைப் பற்றிய செய்தியோ அல்லது மகலனோபிசு ஒரு அறிவுத் திருடர் என்றோ அல்லதுதுருப்பிடித்த இடதுசாரி’ (corrupt leftist) என்றோ இல்லை.

கிடைக்கும் தகவல்களில் இருந்து மகலனோபிசை சர்வதேச அளவில் ஒன்றுமில்லாமல் போகச் செய்தேன் என்பது, சுவாமியின் சுய விளம்பர யுக்தியாகவே தெரிகிறது.

இணையத்தில் தேடியதில், சுவாமி 1963ல் எகனாமெட்ரிகோ என்ற பத்திரிக்கையில் தனது கட்டுரையினை வெளியிட்டுள்ளார். ஆனால், அவர் கூறியது போல அதற்கு பதிலில்லாமல் போகவில்லை. 1965ல் வேறு இரண்டு அறிஞர்கள் அதே பத்திரிக்கையில் சுவாமி குறிப்பிடும் முறை தவறு என்று மறுத்து எழுதியுள்ளனர்.

அதே போல, ‘மகலனோபிசு மாடல்எனப்படும் இரண்டாவது ஐந்தாண்டுத் திட்டத்துக்கான அவரது கொள்கையும், பெல்ட்மானிடம் இருந்து திருடப்பட்டதாகவும் யாரும் கூறியிருப்பதாக தெரியவில்லை. அதனை ஒரு திருட்டு என்ற அளவில் அறிஞர் மட்டத்தில் ஏதும் விவாதம் நடந்ததாக தெரியவில்லை.

பெல்ட்மானின் கொள்கை, ஹாரட் என்பவரால், 1957ல் ஆங்கிலத்தில் மாற்றப்பட்டு பின்னர் பெல்ட்மான் - ஹாரட் - டோமர் மாடல் என்று அழைக்கப்படுகிறது. மகலனோபிசு மாடல் 1952ல் வெளியிடப்பட்டது. இரண்டும் கருத்தளவில் ஒன்றுபடுவதுதான்.

மற்ற விஞ்ஞான கண்டுபிடிப்புகளைப் போல நான் முந்தி நீ முந்தி என்று ஏதும் சர்ச்சை ஏற்ப்பட்டதாக தெரியவில்லை.

சுவாமி தான் மகலனோபிசுவை சிறுமைப்படுத்துவதாக நினைத்து, திருட்டு (plagiarism) என்ற வார்த்தையை உபயோகப்படுத்துகிறார். ஆனால் அவர் பெருமைப்படுவது போல, அவரது கட்டுரையோடு, மகலனோபிசு சர்வதேச அளவில் செல்லாக்காசாகிப் போனார் என்றெல்லாம் ஏதும் இல்லை.


ஒருவேளை ராஜன் சுவாமிக்கு முன்னதாக செத்துப் போனால், அவரையும்இந்தியா வல்லரசாவதற்கு எதிரான சர்வதேச சதியின் கருவிஎன்று சுப்பிரமணியன் சுவாமிநிரூபிக்கலாம்’.

Saturday 18 June 2016

The Bourne Triology (English)

These are testing times, I am torn between my loyalties; my love for football impeding my craving for films and in between my jealous mistress trying to catch up with renewed vigor, the days lost during summer vacation!


Life is difficult but still I could manage to see the Bourne Trilogy back to back. The screenplay is based on the novels written by Robert Ludlum, who I ignored for no reason during my college days when I was chasing James Hadley Chase, Irving Wallace, Sidney Sheldon etc., Ludlum I am told, known for his thrillers on international conspiracies and of course these three films are about a renegade CIA spy, who couldn’t remember his past and the events that unfold one by one brings in the memories bit by bit and the agency which created him into a killing machine by wiping his past is now trying to eliminate him.


Matt Damon, with very ordinary looks and physique hardly be a choice to don the role of an action hero, particularly when he has to emerge unscathed out of every action scene however much difficult the situation be, with the ease of a superman; But he dispelled my doubts with a convincing effort, may be due to the deft editing with jump-cuts and shaky camera. Our film-makers use a crude version of this technique to make our heroines do Bharathanatyam!


It was only when I was watching through the third film, I understood that that it was the editing with shaky camera ably complemented by background music, I was ‘illusion’ed to believe as if the trilogy was a fast paced edge of the seat thriller. As hero jumps from one city to another all around the globe including our own Goa as if he was in a constant hurry to catch a train, even when there isn’t anything worry about, little we realize that it a spell cast by the director; that is the uniqueness in which these films stand apart.



I must admit that at the end of this ‘filmathon’ exercise, I thought of our own Billa, which Suresh Krishna successfully passed off here as a thriller with Ajith walking in slow-motion even while drawing his guns and pumping bullets!

(From Facebook 18/06/14)

Sunday 12 June 2016

ஆர்டர்..! ஆர்டர்..!!

புத்தங்கள்தாம் எவ்வளவு சிறந்த நண்பன்.

ஒரு கோட்டோவியனாக அல்லது வயலின்? கலைஞனாகக் கூட இல்லை குறைந்தபட்சம் வாசிக்கத் தெரிந்தவனாக இருக்க முடியுமானால் போதுமே, எவ்வித தனிமையையும் எப்படிப்பட்ட புறக்கணிப்பையும் வென்று விடலாம் என்று நினைப்பேன்.

நுண் திறமைகளை வளர்த்துக் கொள்ள பொறுமையற்ற என்னைப் போன்றவர்களுக்கு இயற்கை அளித்த ஆறுதல் புத்தகங்கள் என்பதை சமீபகாலமாக அதிகமாக உணர்கிறேன்.

அதுவும் புத்தகக் காட்சியில் வாங்கி வந்த நீதிபதி சந்துருவின்ஆர்டர் ஆர்டர்என்ற புத்தகம் தனிமையில் எனக்குத் துணை நின்றது என்பதை விட இறுதியில் சுயசரிதையாக சுமார் நாற்பது பக்கங்களில் எழுதப்பட்டவை, அவரது வாழ்க்கையைப் பற்றியதான புரிதலில் ஒரு நல்ல நண்பனைப் போல எனது பார்வையை விலாசமாக்கியுள்ளது என்றுதான் சொல்ல வேண்டும்.

சந்துரு சாரைப் பொறுத்தவரை, சக வழக்குரைஞர்களால் அவரளவுக்கு நேசிக்கப்பட்டவர்களும் இருக்க முடியாது விமர்சிக்கப்பட்டவர்களும் இருக்க முடியாது.

ஆனால் இப்புத்தகம் பல புதிர்களை அவிழ்த்து, ‘மனுஷன், என்ன மாதிரியான வாழ்ந்திருக்கிறான்என்று படிப்பவர்களில் சிலருக்கேனும் அவரது வாழ்க்கையில் இருக்கும் முரணைப் பற்றிய சரியான புரிதலை ஏற்ப்படுத்தும். அவரது நியாயங்களும் புரியவரலாம்.

சந்துருவும் ஒரு கலகக்காரர்தானேஎன்று ஆதங்கப்படும் பலரிடமிருந்து அவர் வித்தியாசப்படுவதுகல்என்பதைகலகம் செய்என்பதற்கு முன்னதாக வைத்த அம்பேத்கர் அவர்களின் அறிவுரையை அதே வரிசையில் தன் போராட்ட வாழ்க்கையில் பின்பற்றியதுதான்.

மாணவனாக அவர் நடத்திய அண்ணாமலை பல்கலைக்கழக, சட்டக்கல்லூரி போராட்டங்கள் என்றாலும் சரி, பொதுவுடமைவாதியாக அவர் பங்கு கொண்ட பாடி டிவிஎஸ் தொழிற்சாலைப் போராட்டமென்றாலும் சரி இறுதியில் வழக்குரைஞராக அவர் முன்னின்ற போராட்டங்களிலும்கலகம்என்பதற்கு முன்னே அந்தப் போராட்டங்களயும், பிரச்னைகளையும் பற்றிய முழுமையான கல்வி அவரிடம் இருந்தது நாமறிந்த மற்ற பல கலகக்காரர்களிடம் இருந்து அவரை வித்தியாசப்படுத்துகிறது.

இப்புத்தகத்திலிலுள்ள கட்டுரைகள் ஜூனியர் விகடனில் எழுதப்பட்ட காலகட்டத்தில் மும்பையில் இருந்ததால் நான் அவற்றை அறிந்திருக்கவில்லை. ஆனால் அதே நேரத்தில் இணையத்தில் நானும் சட்டம் பற்றி எழுதி வந்தேன். தமிழில் அவ்வாறு எழுதப்படுவது நான் மட்டுமே என்று கூட நினைத்து வந்தேன்.

சந்துரு சாரின் இப்புத்தகத்தைப் படிக்கையில் எப்படி இக்கட்டுரைகளை தவற விட்டேன் என்று வெட்கமாக இருக்கிறது.

இப்போதும் சட்டம் சம்பந்தமாக எழுதி வருகிறார் என்றாலும், அவரை ஒரு நீதிபதியாக மட்டுமே தற்போது அறிந்த பலருக்கும் ஒரு வழக்குரைஞராக இருபது ஆண்டுகளுக்கு முன்னரே தமிழக வழக்குரைஞர்கள் முன்னே இன்றும் பூதாகரமாக எழுந்து நிற்கும் பிரச்னைகளைப் பற்றி அவரது எண்ணம் எவ்வாறு வெளிப்பட்டது என்பது புரிபடும்.

வழக்குரைஞர்கள், முக்கியமாக இளம் வழக்குரைஞர்கள் இப்புத்தகத்தை வாசிப்பதன் மூலம் பல்வேறு சட்டப் பிரச்னைகளில் அவர்களது அறிவை வளர்த்துக் கொள்வதோடு, சமூகத்தைப் பற்றிய பார்வையையும் விரிவாக்கிக் கொள்ளலாம்.

ஆங்கிலத்தை விட தமிழில் சோர்வில்லாமல், மேலும் வேகமாக படிக்க இயலும் விரும்பும் வழக்குரைஞர்களின் பின்னணியைக் கருத்தில் கொண்டு இப்புத்தகத்தில் விலை 100ரூபாய்க்குள் இருந்திருக்கலாம். அல்லது அனைத்து வழக்குரைஞர் சங்க நூலகங்களில் மற்ற வறட்டு சட்ட சஞ்சிகைகளுடன் இப்புத்தகத்தையும் சுற்றுக்கு விடலாம்.

பாராளுமன்றத்தில் பொடா சட்டத்தை ஆதரித்துப் பேசிய வைகோ பின்னர் அதே சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டதை கிண்டலடித்து வந்தோம். ஆனால் நெருக்கடி நிலையில் மிசா சட்டத்தின் கொடுமைகளுக்கு உள்ளான திமுக 1971ம் ஆண்டு இந்திரா காந்தி அரசு இச்சட்டத்தை இயற்றிய பொழுது அதற்கு துணை நின்ற வரலாறையும் பின்னர் இச்சட்டதைப் பயன்படுத்தி தமிழக அரசியல் தலைவர்கள் சிலரை உள்ளே தள்ளிய விபரத்தையும் இப்புத்தகத்தில் அறியலாம்.

தமிழக அரசியல் தலைவர்கள் பலரையும் அவர்களது குறிப்பிட்ட ஒரு செயலுக்காக பாராட்டும் அதே வேளையில் கம்யூனிஸ்ட் தலைவர்கள் உட்பட எவ்வித பாரபட்சமின்றி அவர்களது மற்ற செயல்களுக்காக விளாசியும் தள்ளுகிறார் சந்துரு.

ஜஸ்டிஸ்என்ற ஆங்கில வார்த்தையைநடுவர்என்று மொழியாக்கம் செய்யாமல்நீதியரசர்என்று மொழியாக்கம் செய்யப்பட்டதைபிரபுவே என்று விளிப்பதுஎன்ற ஒரு கட்டுரையில் வழக்குரைஞராக கிண்டலடித்தவர் இன்றுநீதிநாயகம் சந்துருவாக’ வளர்ந்து நிற்பதும் சமயங்களில்நீதியரசர்’ சந்துருவையும் பொறுத்துக் கொள்வது இப்புத்தகத்திலுள்ள கட்டுரைகளை நேர்மையாக அணுகும் எவருக்கும் அவரிடம் வெளிப்படுவது முரணில்லை மாறாக பரிணாமவளர்ச்சிஎன்பது தெரியவரும்.

நீதித்துறையில் கடந்த சில நாட்களாக, இல்லை மாதங்களாகவே நிலவி வரும் நிச்சயமற்ற தன்மையால் மனக்குழப்பத்தில் இருக்கும் இளம் வழக்குரைஞர்களுக்கு என்னுடைய அறிவுரை. இப்புத்தகத்தைப் படியுங்கள், தயவு செய்து; பின் சிந்தியுங்கள்.


தொடர்ந்து, ஒற்றைக் குரலாக இக்கட்டுரைகளிலிருந்து ஒலிக்கும் சந்துருவோடு நீங்கள் விவாதிக்கத் தொடங்குவதை உணர்வீர்கள்.

PROOF OF WILLS ADMITTED BY TESTATOR

INTRODUCTION I have had the privilege to hear the lecture of Mr.Nagamuthu, Senior Advocate on ‘Execution and Proof of Will’....