Wednesday 28 October 2015

கோர்ட் (மராத்தி) 2014

“கோர்ட்’னு ஒரு மராத்திப் படம் வந்துருக்கு. அதப் பாரேன்”


மாவட்ட நீதிபதி ஒருவரிடம் பேசிக் கொண்டிருக்கையில்தான் இப்படிக் குறிப்பிட்டேன். நமது நீதிபதிகள் இந்த மாதிரி படங்களைப் பார்த்தால் எப்படி உணர்வார்கள் என்பதைத் தெரிந்து கொள்ள ஆர்வமாக இருந்தது.


“பார்த்து விட்டேன். (ஜுடீசியல்) அகாடெமியில் போட்டார்கள்”


“அகாடெமியிலா, சினிமாவா?” சந்தேகமாயிருந்தது. இருவருடங்களுக்கு முன்னர் அகாடெமி சென்றிருந்த பொழுது இயக்குஞரிடம் ‘இப்படி மதிய நேரத்திலும் க்ளாஸ் என்றால் யார் கவனிப்பார்கள்?, ஏதாவது கேம்ஸ் அல்லது சினிமா போடுங்களேன்’ என்று கூறியது நினைக்கு வந்தது.


தொடர்ந்து படம் குறித்து பேசவில்லை என்றாலும், இந்த சினிமாவைப் பார்க்க வைத்த பின் நீதிபதிகளை படம் சொல்லும் கதையைக் குறித்து விவாதிக்க வைத்தால் விவாதம் படத்தை விட சுவராசியமாக இருக்கலாம் என்று ஏனோ மனதுக்குள் நினைத்தேன்.


எழுச்சிப் பாடல்களால் விளிம்புநிலை மக்களின் உணர்ச்சிகளை தட்டி எழுப்பும் போராளி ஒருவர் மீது அரசு வெவ்வேறு பிரிவுகளில் தொடர்ந்து வழக்கு தொடர்வதும், அவற்றை நீதிமன்றங்கள் இயந்திரத்தனமாக கையாளுவதையும் அடிப்படையாகக் கொண்டு அமைக்கப்பட்ட மெல்ல நகரும் திரைக்கதை.


போரடிக்காதா, என்று நினைத்தால் தவறு. மிகவும் சுவராசியமான படம்.


இந்திய நீதித்துறை குறைபாடுகளைச் சுற்றியே படம் முழுக்கவும் பின்னப்பட்டுள்ளதான தோற்றம் தந்தாலும், அதன் மற்ற சில காட்சிகளின் பின்னுள்ள கதை என்ன என்று படம் பார்த்த சில நாட்களுக்கு நம் மனதில் அசை போட வைக்கும்.


அந்த வகையில் சிறந்த சினிமாவை தனது முதல் படத்திலேயே தந்துள்ள இளம் இயக்குஞரான சைதன்ய தம்ஹானே நீதிமன்ற நடவடிக்கைகளை, முக்கியமாக நீதிபதி, வழக்குரைஞர்கள், வழக்காடிகளின் உடல்மொழியினைப் பற்றி நன்கு ஆராய்ச்சி செய்திருந்தாலும், குற்றவியல் நடைமுறைகளில் முழுக்கவும் கோட்டை விட்டுள்ளார். நமது தமிழ் திரைப்படங்களின் ‘கோர்ட் சீன்’களைப் போலவே நினைத்த நேரத்தில், இஷ்டத்திற்கு ஆளாளுக்கு சாட்சிகளை விசாரிப்பதும், அவ்வளவுக்கு பின்னரும் பெயிலுக்குத்தான் இத்தனை மெனக்கெடல் என்பதும் வழக்குரைஞர்களுக்கு வேடிக்கையாக இருக்கலாம்.


‘இது ஒரு ‘ப்ளாக் காமெடி’ ரகம். இப்படியெல்லாமா ஆராய்வது?’ என்பவர்களுக்கு நான் பரிந்துரைக்க விரும்புவது ஹாலிவுட்டின் ‘மை கசின் வின்னி’ மற்றும் ‘சிக்காகோ’. இரண்டுமே கொலை வழக்கினைப் பற்றிய படம் என்றாலும் முன்னது முழுக்கவும் ‘அக்மார்க்’ காமெடி பின்னது பாதி வசனத்தை பாட்டாகவே பாடும் ம்யூசிகல்.


மாயாஜாலக் கதை போல இவ்விரு படங்களிலும் எப்படி வேண்டுமானாலும் நீதிமன்ற நடைமுறைகளை அமைத்திருக்கலாம் என்றாலும், இரு படத்திலும் குற்றவியல் நடைமுறை அத்தனை ‘ஆத்தென்டிக்’காக இருக்கும்.


படத்தை நமது நீதிபதிகள் பார்த்துள்ளார்களா என்பது தெரியவில்லை. ஆனால், உத்தர பிரதேச நீதிபதி ஒருவர் பார்த்துள்ளார். ‘நீங்க என்னடா எதுக்கெடுத்தாலும் ஏழைங்க மேல மட்டும் செடிஷன் கேஸ் போடுவது. நான் போடுறேன் பார்’னு ‘டைரானி ஆஃப் த அன் எலக்டட்’னு சொன்ன ஒத்த வரிக்காக பைனான்ஸ் மினிஸ்டர் மேலேயே தேசத் துரோக வழக்குப் போட்டுட்டார்.

Thursday 22 October 2015

IN DEFENSE OF COLLEGIUM


Is it paradoxical, a judgment that too of the final arbiter, expected to set at rest all controversies, doubts, claims and apprehensions on a particular issue is generating further debates, arguments, points, counter-points; even more than what existed when the issue was seized for adjudication.

It is embarrassing for any lawyer that it has become a routine; judicial findings in high profile cases, the moment they are decreed, subjected to public scrutiny of a kind, we have never witnessed before; may be because of the reason that finding a media has become possible for anyone to standup and be expressed. For the past one week we have been poured with opinions on the NJAC judgment from all possible angles by the retired judges, jurists, lawyers, academicians, ministers, politicians, commoners leaving only the sitting judges as exceptions.

Ominous signs portending final voice of the highest court is not inspiring the confidence of all, or are they only symptoms of the emergence of an informed and vibrant democracy?

Even scientific theories on the properties of inanimate matters are scrutinized, proved to be wrong later; but it took time to improvise on the theories propounded. On the other hand, the judicial pronouncements particularly in this NJAC case, even before the ink dried on the paper, everyone from the high decibel electronic media to the cerebral print media and the lowly social media have joined in the chorus to chip out where it is lacking; forget to add political platforms.

Well, it is said that a debate, particularly in India never dies; certainly not by the sword of Supreme Court. Neither a sedition charge from a Magistrate can shut an argument, which unites us as a nation as propounded by Dr.Amartya Sen; disagree, he will be proved right.

Leave aside the precedents, laws involved and their complex interpretations, what we need is to have a solution to the vexed problem of selecting the best of the candidates as Judges. However the real problem is that there isn’t any such solution, which I feel the others have not taken note of; definitely not in constitution of NJAC.

If it is only in our country, where the Judges select judges, let that be; let others follow our model as a path towards a judiciary independent of the executive to the maximum. Judges tempered to be apolitical by the nature of their work and they not answerable to any electorate could form a better mind to choose candidates from the wide spectrum of ideologies. The judicial administration will be dynamic only when the law is allowed to be interpreted by judges having different beliefs and opinions. Executive, if allowed to have a say, I have no doubt may restrict the selection only to those candidates having mindsets of that of the ruling class by eliminating anyone they find unpalatable; a recent example we see in the case of Mr.Gopal Subramaniam’s miscarried selection.
Unfortunate, Chief Justice R M Lodha was on tour, denied an opportunity to persuade Mr.Gopal Subramaniam to withdraw. With NJAC he would not get any such opportunity at all.

Transparency, the word thrown ad nauseam to attack collegium is quite misplaced. It dogged my mind few years back to the point of pain, as to what could be the transparency in real terms when the Advocates in Chennai were protesting the recommendation of the candidates. If it meant the secrecy in the selection process, I too felt awkward and uncomfortable then. Judges unlike civil servants are not trained in facing criticisms, protests and public scrutiny and are expected to be more sensitive to publicly discussing their decision. Well, it may be true that they could not defend the attacks against their judgments but such discretion need not be restricted in their administrative actions, particularly when they do a public duty of selecting Judges. I wished sincerely then when the protests Madras High Court reached its peak, the High Court to call for a public hearing of the Advocates Associations by publishing the list of candidates chosen and the credentials submitted by the respective candidates.

Even under NJAC, this could be the only transparency possible and not a bit more. Except saying, a judge is to be a man of intelligence, discretion and honesty we cannot devise a scale to measure. Neither there is a guarantee how a man would conduct himself once he has become a Judge. We have seen advocates exhibiting every trick up their sleeve to save their case, coming upon more heavily on such practice once they become Judges.

Judgeship, particularly in High Courts or Supreme Court is not a promotion from the position of an Advocate. Except a kind of a honor of doing the God’s duty, it is only a disadvantage with which one has to live through. Probably, law could be the only profession, where one can find candidates choosing for a career change agreeing for a reduction of their monetary remuneration by 50% to 90% or even more in some cases; surely something lawyers can be proud of.

It is illogical to place the selection of judges on the same scale as in the selection of any other government employee. Judgeship will have to compromise its honor and prestige if we opt for inviting applications from the bar instead of inviting lawyers to the bench. I feel not many having aspirations to become a judge would like to make an application and to go through a selection process of exam, interview or even public hearing, subjecting themselves to embarrassment and sometimes humiliation. If framing a kind of such selection process is transparency, I fear it will spell doom for the aura attached to the judiciary, reducing it to any other government job. Besides, such process will invite litigations, challenging the selection, rendering the elevation a cumbersome process every time.

The main criticism against the Collegium is that it is dogged with nepotism at the cost of deserving candidates. In my opinion neither NJAC will cure this malady. Even with NJAC, it is the Judges of a High Court who will turn out to be the best persons to recommend candidates as they have the firsthand knowledge of the intelligence, discretion and honesty of the advocates practicing in their courts. Under Collegium system the Judges of Supreme Court is to approve such recommendation and such part will only be taken by the NJAC. In my opinion NJAC instead of helping in reducing nepotism may bring an additional hurdle for the elevation of candidates who exhibit a kind of political views not in line with the party in power. Even today weeding out of such inconvenient candidates is done and as admitted by then Chief Justice P Sadasivam that the Collegium was always considerate of the opinion expressed by the Government on the acceptability of a candidate.
The Chief Justice and the Senior Judges of the High Court and the Collegium of Supreme Court, we have to believe to render justice in the selection of the Judges and the only transparency which one can thought of is to publish the credentials submitted by the chosen candidates and to call for a public hearing of the Advocates Associations to attend before the High Court and to present their comments on the
candidates chosen for recommendation to the collegium.

Such open discussion on the integrity of the candidates, may in my opinion shall help in reducing favoritism and the selection of undeserving candidates. Every selection process will go on record and with such information available in the hands of the public, the Collegium will not be at ease or feel embarrassed in accepting an undeserving candidate.

Collegium is the better, if not the best system, we have thought of and the maladies of such system will crop up in every other system and NJAC is no exception. NJAC will only add to the woes by bringing hurdles to deserving candidates…

Wednesday 21 October 2015

நானா சாகிப் - புதினம்

இந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸை விடவும் மர்மம் பொருந்தியதும் தீரம் மிகுந்ததுமான வாழ்க்கை மராத்திய பேஷ்வா நானா சாகிப்’பினுடையது.


கங்கை நதியின் ‘சதிசெளரா’ கரையிலும் பின்னர் பீபிகரிலும் கொடூரமான முறையில் கொல்லப்பட்ட நூற்றுக் கணக்கான ஆங்கிலேய பெண்கள் மற்றும் குழந்தைகளின் மரணங்களுக்கான காரணகர்த்தா என்று குற்றம் சாட்டப்பட்டு இந்தியா முழுவதும் ஆங்கிலேய படைகளால் கொலை வெறியோடு பல ஆண்டுகளாக துரத்தப்பட்டாலும், இறுதியில் என்னவானார் என்பதற்கு இன்று வரை யூகங்களை மட்டுமே விட்டுச் சென்ற கலகத் தலைவரான நானா சாகிப்’பின் வரலாற்றில் உணர்ச்சி மிக்க திரைக்கதையொன்று ஒளிந்திருப்பதை நம் இயக்குஞர்கள் யாராவது புரிந்து கொண்டால் சரி.


எவ்விதமான விசாரணைக்கோ மன்னிப்புக்கோ இடமின்றி ஆயிரக்கணக்கான இந்திய வீரர்கள் பார்ப்பவர்கள் ரத்தத்தை உறைய வைக்கும் முறையில் ஈவு இரக்கமின்றி கொல்லப்பட்டதோடு கலகம் ஆங்கிலேயர்களால் முற்றிலும் ஒடுக்கப்பட்டு பத்து ஆண்டுகள் கழிந்த சூழ்நிலையில் சில ஆங்கிலேயர்களோடு பிரஞ்சுக்காரர் ஒருவரும் இந்தியாவின் வடபகுதியை சுற்றிப் பார்க்க கிளம்புகின்றனர்.


அப்போதுதான் இயங்கத் தொடங்கியிருந்த ரயில் வண்டிகளை ‘அது ஒரு வண்டியா’ என்று கேலி செய்தபடி குடியிருக்கும் வீட்டையே வண்டி போல இயந்திரம் மூலம் இழுத்துச் சென்றால் எப்படியிக்கும் என்ற நினைப்பில் பெரிய யானை வடிவில் ஒரு நீராவி இயந்திரத்தினை வடிவமைத்து பயணப்படுகிறார்கள். எதிர்ப்படும் ஆறுகளைக் கடக்க, தரையில் மட்டுமல்லாது நீரிலும் கப்பல் போல செல்லும்.


‘இது என்ன காது குத்தல்?, ஜூல்ஸ் வேர்ன் கதையில்தான் இப்படிப் பட்ட கற்பனைகள் சாத்தியமாகும் என்றால், சாட்சாத், ஜுல்ஸ் வேர்ன் கதைதான்.


புத்தக கண்காட்சியில் ஏதோ நானா சாகிப் பற்றிய வரலாற்றுப் புத்தகம் என்ற நினைப்பில் வாங்கி வந்தால், வெறும் கதை என்றவுடன் சற்று ஏமாற்றமாகி விட்டது. ஆயினும் பத்தொன்பதாம் நூற்றாண்டு இந்தியா பற்றி இன்றைய வரலாற்றாசிரியர்கள் எழுதுவதை ‘இவர் வலதா இல்லை இடதா’ என்ற சந்தேகத்தோடேயே படிப்பதை விட எதிர்கால அரசியல் சூழல் குறித்த எவ்வித உணர்வுமின்றி ஜூல்ஸ் வேர்ன் எழுதியிருப்பதை படிப்பது நல்லதுதான் என்று மனதை தேற்றிக் கொண்டேன்.


நானா சாகிப்?


பயணம் செய்யும் ஆங்கிலேய கர்ணல் மன்றோ நானா சாகிப்’பின் கொடூரத்திற்கு காதல் மனைவியை பறி கொடுத்தவர். அதனாலேயே அவனை எப்படியாவது பழி வாங்க வேண்டும் என்று காத்திருப்பவர்.


இடையிடையே அடுத்த புரட்சியை துவக்க வேண்டும் என்ற வேட்கையோடு நானா சாகிப்’பும் வருகிறார். இறுதியில் வீரப்பன் போலவும் ஓசாமா போலவும் பொசுக்’கென்று செத்துப் போகிறார். கதையும் அதோடு முடிந்து போகிறது.


கதை என்ற வகையில் மிகவும் சுமார். மொழி பெயர்ப்பு அதை விட சுமார். அந்தக் காலக் கதை. அதிகம் எதிர்பார்க்கக் கூடாது.


ஆனால் பயணக்குறிப்பு என்ற வகையில் பல தகவல்களை அறியலாம்...


முக்கியமாக வாரணாசியிலுள்ள அவுரங்கசீப் மசூதியைப் பற்றிக் குறிப்பிடுகையில், “அந்த இடத்தில் முன்னொரு காலத்தில் விஷ்ணு ஆலயம் இருந்த போது, ரோம் நகரில் பக்தர்கள் சென்றதைப் போல, முழந்தாளால் மண்டியிட்டபடி, படிகளில் ஏறிச் சென்றார்களாம். தற்பொழுது அந்த இடத்தில் மொகலாயப் பேரரசர் ஒளரங்கசீப் மசூதி எழுப்பப்பட்டிருக்கிறது” என்றாலும்


பீகார் பற்றிய குறிப்புகளில் “ஆனாலும் பல நூற்றாண்டுகளாக பெளத்த துறவியருடைய மடாலயங்கள், பிராமணர்களால் ஆக்கிரமிக்கப்பட்டு வந்தன, பெளத்த விகாரைகளை தமது கட்டுப்பாட்டிற்குள் கொணர்ந்து தமது சமய நிறுவனங்களாக மாற்றி , சமயச் சடங்குகளை நிகழ்த்தி அதன் மூலம் கிடைத்த வருவாயில் பிராமணர்கள் வாழ்ந்து வந்தனர்” என்கிறார்.


ஆக ஆனைக்கும் பானைக்கும் சரிதான்...

Tuesday 20 October 2015

நீதிபதி நியமனம்?

இந்திய உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக மட்டுமே 7 ஆண்டுகள் பணியாற்றியவர் Y.V.சந்திரசூட். மும்பை உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்படுவதற்கு முன்னர் சுமார் 18 ஆண்டுகள் வழக்குரைஞராக பயிற்சி பெற வேண்டியிருந்தது. அதிக காலம் பணியாற்றிய மற்றொருவரான K.G.பாலகிருட்டிணன் வழக்குரைஞராக பணியாற்றத் தொடங்கியது 1968. கேரள உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டது 1985. அதாவது இவரும் அதே அளவு வருடங்கள் நீதிபதியாக நியமிக்கப்படுவதற்கு காத்திருக்க வேண்டியிருந்தது.


தமிழகத்தில் உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்படுவதற்கே 45 வயது நிரம்ப வேண்டும் என்ற எழுதப்படாத விதி உள்ளது. குறைந்தபட்சம் 20 வருட அனுபவம் வேண்டும்.


சில வருடங்களுக்கு முன்னர், தில்லி உயர்நீதிமன்றத்திலிருந்து வெறும் 10 வருடம் 4 மாத அனுபவம் மட்டுமே நிரம்பிய வழக்குரைஞர் ஒருவரை உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமிக்க பரிந்துரைக்கப்பட்டு, பின்னர் உச்ச நீதிமன்றமும் அதனை ஏற்றுக் கொண்டது. தொடர்ந்து பிரதம மந்திரியின் ஒப்புதலையும் கடந்து இறுதியில் அந்த வழக்குரைஞரின் பெயர் ஒப்புதலுக்காக குடியரசுத் தலைவரிடம் சென்றது.


குடியரசுத் தலைவருக்கு ஆச்சரியம்!


நமது அரசியலமைப்புச் சட்டம் உயர்நீதிமன்ற நீதிபதிக்கு தகுதி 10 வருட அனுபவம் என்று கூறினாலும், அந்த குறைந்த பட்ச அனுபவத்திலேயே நீதிபதியாக பரிந்துரைக்கப்படும் அளவிற்கு அவ்வளவு திறமை வாய்ந்தவரா, இவர் என்று.


வழக்குரைஞரின் திறமைக்கு அறுதியான அளவு கோல் கிடையாது. ஆயினும் வழக்குரைஞர்களின் வருமானம் ஒரு அளவு கோல். எனவே, உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்படுபவரின் வருமான வரி கணக்கு ஒரு ஆதாரமாக சமர்ப்பிக்கப்படும். இந்த வழக்குரைஞரின் வருமான வரி கணக்கை ஆராய்ந்த குடியரசுத் தலைவருக்கு மேலும் அதிர்ச்சி. அந்த காலகட்டமான 1989-90 ஆண்டில் அந்த வழக்குரைஞரின் மாத வருமானம் ரூ.2000க்கும் கீழ்!


குடியரசுத் தலைவர் அந்த பரிந்துரையை மறுபரிசீலனை செய்யும்படி பிரதமருக்கே அனுப்பினார். அந்த வழக்குரைஞர் பின் எப்போதும் நீதிபதியாக தேர்ந்தெடுக்கப்படவில்லை.


அந்த குடியரசுத் தலைவர் மறைந்த R.வெங்கட்ராமன்.


வழக்குரைஞரின் பெயர் ரொக்சனா. அதே காலகட்டத்தில் இந்தியாவின் சட்ட அமைச்சராக பணியாற்றிய டாக்டர்.சுப்பிரமணிய சுவாமி அவர்களின் மனைவி.
(From 'My Presidential Years' by R.Venkatraman)


“I would’ve made a dreadful judge, and am glad I didn’t succeed” Roxana at her magnanimous best in an interview to OUTLOOK.

Saturday 10 October 2015

குப்பைக் காகிதமாகும் தீர்ப்புகள்

எவ்வளவுதான் மூளையை கசக்கிக் கொண்டு படித்தாலும், கீழமை நீதிமன்ற தீர்ப்பினை எதிர்த்து அப்பீல் தாக்கல் செய்வதற்கு ஒரு பாயிண்ட் கூட அகப்படவில்லையா?

கவலை வேண்டாம். அந்த தீர்ப்பு ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருக்கிறதா என்று பாருங்கள். அப்படியெனில் அந்த ஒரு பாயிண்ட் போதும், அதை ‘குப்பைக் காகிதம்’ என்று முழுமையாக தள்ளுபடி செய்ய மேல்முறையீட்டு நீதிமன்றத்தைக் கேட்கலாம்.

தமிழில் எழுதப்பட்டது என்ற ஒரே காரணத்திற்காக கீழமை நீதிமன்ற தீர்ப்பு ஒன்றினை ‘த ஜட்ஜ்மெண்ட் இன் தமிழ் இஸ் நோ ஜட்ஜ்மெண்ட் அட் ஆல், இட் ஈஸ் ஸோ மச் வேஸ்ட் பேப்பர்’ என்று நமது நீதிமன்றம் 1978ம் ஆண்டு தள்ளுபடி செய்துள்ளது. (Ramayee v. Muniyandi Konar (1978)2 MLJ 442)

தமிழில் எழுதினால்தானே, குப்பைக் காகிதம்?

அந்த கீழமை நீதிமன்ற தீர்ப்பு எழுதப்பட்ட ஆண்டு 1970. அதனால் அப்படி.

1976ல் கீழமை நீதிமன்ற தீர்ப்புகள் தமிழில் எழுதப்பட வேண்டும் என்ற சட்டத் திருத்தம் கொண்டு வரப்பட்டாலும் உரிமையியல் நீதிமன்றங்களைப் பொறுத்து 01/02/82 முதல் அமல்படுத்தப்பட்டது.

உடனடியாக தமிழில் தீர்ப்புகள் எழுதப்பட வேண்டும் என்ற சட்டத்தை எதிர்த்து பல நீதிப்பேராணை மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அவை யாவும் 1994ம் ஆண்டில் தள்ளுபடி செய்யப்பட்டாலும், நமது உயர் நீதிமன்றம் வெளியிட்ட துறைரீதியிலான உத்தரவு மூலம் தொடர்ந்து ஆங்கிலத்திலும் தீர்ப்புகள் கூறப்பட்டு வந்தன.

‘ஆங்கிலத்திலும் தீர்ப்புகளை எழுதலாம்’ என்ற துறைரீதியிலான உத்தரவானது சட்டத்திற்கு புறம்பானது என்று சோலை சுப்பிரமணியம் என்பவர் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த பொது நல வழக்கானது முதலில் தள்ளுபடி செய்யப்பட்டது.

ஆனால் விரைவிலேயே அவ்வாறு தள்ளுபடி செய்யப்பட்டது தவறு என்று  திரு.பொ.ரத்தினம் என்ற வழக்குரைஞர் வழக்கில் தன்னை இணைத்துக் கொண்டு மறுஆய்வு மனு ஒன்றை தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த நீதிபதிகள் வி.இராமசுப்பிரமணியம் மற்றும் வி.எம்.வேலுமணி ஆகியோர் உயர் நீதிமன்றத்தின் துறைரீதியிலான உத்தரவானது சட்ட விரோதமானது என்று 01/07/14 அன்று தீர்ப்பளித்துள்ளனர்.

இதனை எதிர்த்து வி.வசந்தகுமார் என்பவர் உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு தாக்கல் செய்துள்ளார். ஆயினும் இடைக்காலத் தடை ஏதும் வழங்கப்படவில்லை...

எனவே சமீபகாலமாக பெருவாரியாக ஆங்கிலத்தில் எழுதப்படும் கீழமை நீதிமன்ற தீர்ப்புகள் அனைத்தும் அவை 01/07/14க்கு பின் எழுதப்படின் சட்டத்திற்கு விரோதமானது.

சட்டத்திற்கு புறம்பானது என்பது மட்டுமல்ல. கீழமை நீதிமன்றங்கள் ஆங்கிலத்தில் தீர்ப்பு எழுதுவது உயர்நீதிமன்றத்தின் அதிகாரத்தை அவமதிக்கும் செயலுமாகும்.

குற்றப்பின்னணி?

சட்டக் கல்லூரியில் அவ்வப்போது ஸ்டிரைக் நடக்கும். அப்படி ஒரு நாள் நடந்த போது, காரணத்தைக் கேட்டால் ஆளுநர் கலந்து கொண்ட பட்டமளிப்பு விழாவில் சட்ட மாணவர் ஒருவர் பட்டம் பெற மேடை ஏறக்கூடாது என்று தடுக்கப்பட்டதாக’ கூறினர்.

அன்று காலை செய்தித் தாளில் நானும் அந்தச் செய்தியினைப் படித்திருந்தேன். அவர் கொலைக் குற்றத்திற்கான தண்டனைக் கைதி என்றதால் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்ள அனுமதி மறுக்கப்பட்டதாக.

சில வருடங்கள் கழித்து, அலுவலகத்தில் சக ஜூனியர் ஒருவர் அவரைப் பார்க்க வந்திருந்த நண்பரை எனக்கு அறிமுகம் செய்தார்.

கோடு போட்ட முழுக்கைச் சட்டையை மிக நேர்த்தியாக கால்சாராய்க்குள் இன் செய்தபடி, உயரமான தோற்றத்திலும் வசீகரமான சிரிப்பிலும் ஏதோ கம்பெனி எக்ஸிகியூட்டிவ் போல இருந்தார்.

தனது நண்பர் ‘சட்டம் உட்பட வரலாறு, சமூகவியல், கணிதம் என்று பல்வேறு முதுகலைப் பட்டங்களைப் பெற்று தற்பொழுது தண்டனைக் கைதியாக சிறையிலிருந்தபடியே கணிதத்தில் ஆராய்ச்சி செய்து வருவதாக’க் கூறியதைக் கேட்டதும் எனக்கு சின்ன அதிர்ச்சி.

அதுவரை கொலைக் குற்றவாளி ஒருவரை அவ்வளவு அருகில் பார்த்ததில்லை.

ஆனால் அவரோ மற்ற யாரையும் போலத்தான் இருந்தார். வாஞ்சையுடன் நான் பற்றியிருந்த அவரது கைகளில் கொலைக்கான எந்த சமிக்ஞையும் இல்லை.

‘அடடே, பட்டமளிப்பு விழாவில் உங்களை அனுமதிக்கவில்லை என்று நாங்கள் ஸ்டிரைக் எல்லாம் பண்ணியிருக்கோமே’ என்றேன்

அடிக்கடி எங்களது அலுவலகம் வருவார், எப்போதும் அந்த வசீகர சிரிப்பும் உற்சாகமான பேச்சும் என்னைக் கவரும், முக்கியமாக நேர்த்தியான அவரது உடைகள். பின்னர் சாலையில் இறங்கி நடந்து செல்லும் அவரை ‘இங்கிருந்து நேராக சிறைக்கு செல்கிறார்’ என்று யாரும் நினைக்க முடியாது.

அவரது தந்தையாரும் அவருடன் சக தண்டனைக் கைதியாக இருந்தார். மிகவும் நோய்வாய்ப்பட்டு மரணத்தை எதிர்நோக்கியிருந்த அவரை கருணை அடிப்படையில் விடுதலை செய்விக்க எனது நண்பர் பெரும் முயற்சி எடுத்து வந்தார். ‘விடுதலை பெற்ற மனிதனாக அவரை மரிக்க விடுங்கள்’ என்று நான் கூட ஆளுநருக்கு மனு ஒன்று தயாரித்துக் கொடுத்தேன்.

ஆனால், பலனின்றி சிறையிலேயே அவர் மரணமடைந்ததாக பின்னர் அறிந்தேன்.

சில மாதங்களுக்கு முன்னர் எனது அலுவலகம் வந்த கட்சிக்காரர் தன்னுடன் துணைக்கு அழைத்து வந்த ஒருவரைப் பார்த்த மாத்திரத்தில் அந்த சிரிப்பை வைத்தே கண்டுபிடித்து விட்டேன்.

மற்ற விஷயங்களைப் பேசிய பின்னர் தனியே அவரிடம், ‘இப்போ எங்கேயிருக்கிறீர்கள்’ என்றேன் தயக்கமாக. புகழ்பெற்ற பல்கலைக் கழகம் ஒன்றில் கணிதப் பேராசிரியராக பணிபுரிவதாகக் கூறினார்.

‘பிராக்டிஸுக்கு வந்திருக்கலாமே’ என்றேன் சம்பிரதாயமாக...

‘நல்லவேளை வரவில்லை’ என்று ஏனோ இன்று நினைத்துக் கொண்டேன்

Madurai
06/10/2015

'முழி' பெயர்ப்பு!

ஒழுங்கு நடவடிக்கைக்கு உள்ளாகியுள்ள வழக்குரைஞர் நண்பர் ஒருவருக்கு பார் கவுன்ஸில் அளித்துள்ள ஆவணத் தொகுப்பினை ஆய்ந்து கொண்டிருந்தேன் அப்போது கண்ணில்பட்ட ‘Oh Central Government Oh Supreme Court’ என்ற வாசகத்தைப் படித்ததில் முதலில் ஒன்றும் புரிபடவில்லை.

முழுவதும் அந்த ஆவணத்தைப் படித்தால், குறிப்பிட்ட தினத்தில் நீதிமன்றத்திற்கு வெளியே கூடிய சில வழக்குரைஞர்கள் எழுப்பிய கோஷங்களைக் குறித்து உயர்நீதிமன்ற பதிவாளர் தலைமை நீதிபதிக்கு அனுப்பிய அறிக்கை அது.

அப்படியும் கொஞ்ச நேரம் பிடித்தது.

‘மத்திய அர’சே’ உச்ச நீதிமன்ற’மே’ என்பதின் ஆங்கில மொழிபெயர்ப்புதான் அது என்று புரிய.

‘கோர்ட் இங்கு சீரியஸாக நடந்து கொண்டிருக்கையில் என்னத்தை அங்கு படித்து விட்டு சிரித்துக் கொண்டிருக்கிறான்’ என்று நீதிபதி நினைத்திருப்பார்.
நீதிமன்றப் பதிவாளர் என்றால் எப்படி எல்லாம் கஷ்டப்பட வேண்டியிருக்கிறது.

நீதிபதி வேலை கூட அப்படித்தான்.

சில வருடங்களுக்கு முன்னர் விபத்து இழப்பீடு வழக்கு. மேல்முறையீடு தாக்கல் செய்ய வேண்டுமென்று தீர்ப்பினை படித்துக் கொண்டிருந்தேன்.
‘இறந்தவர் உலோகம் முதலான கடினப்பொருட்களுக்கான பட்டயப்படிப்பை படித்திருந்தார்’ என்ற வாசகம் என்னைக் குழப்பியது. ‘என்னடா இது, தென்காசியில் மெட்டாலர்ஜியெல்லாம் படிக்கிறார்களா?’ என்று நினைத்தேன். ஆவணங்களைப் பரிசீலித்த பின்னர்தான் புரிந்தது,

Diplomo in Hardware Technology!

விபத்தில் எலும்பு முறிவு ஏற்ப்படும் வழக்குகளீன் தீர்ப்புகள் அனைத்திலும் தவறாமல் ‘காயமடைந்தவர் ‘இயற்பியல் சிகிச்சை’ செய்த வகைக்கு உண்டான செலவு…..’ என்ற வாக்கியம் இடம் பெறும். எலும்பு முறிவுக்கும் பிஸிக்ஸுக்கும் ஏதும் சம்பந்தமில்லையே என்று நினைக்க வேண்டாம்.

இது Physiotherapy!

வழக்குரைஞர்களும் விதிவிலக்கல்ல...

இயேசு சிலுவையில் அறையப்படும் நாளுக்கு முந்தைய நாள் இரவு தனது சீடர்களுடன் உணவருந்திய சடங்கினை கிறிஸ்தவர்கள், தங்களது பிரார்த்தனையின் பொழுது பின் பற்றி வருகிறார்கள். சி எஸ் ஐ பிரிவினை சேர்ந்தவர்கள் எப்போது நடைபெற்றாலும் இந்த சடங்கினை ‘இராப்போஜனம்’ என்று அழைப்பார்கள். ஆங்கிலத்தில் ‘Holy Communion’

அவசரமாக பிராது எழுத முயன்ற, கிறிஸ்தவரல்லாத அந்த சீனியர் வக்கீலுக்கு ‘இராப்போஜனத்’தை ஆங்கிலத்தில் எப்படி எழுதுவது என்று புலப்படவில்லை. ‘The Defendant did not participate in ‘Night Meals’ என்று எளிதில் முடித்து விட்டார்.

அந்த சீனியருக்கே சீனியரான என் சீனியரின் கையில் அந்தப் பிராது வந்தது. ‘போன போடுறா அவனுக்கு’ என்று கூப்பிட்டு விளாசித் தள்ளிவிட்டார். டெல்லிக்கே ராஜாவானாலும் அம்மைக்கு பிள்ளைதானே...

கடந்த வாரம், உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் மனுதாரரின் விபரம் அதிர்ச்சியாக இருந்தது.

Fr.Francis Xavier
Shareholder
St.Assisi Roman Catholic Church

‘அட, வெளிப்படையாவே கோவில் சொத்தை பங்கு வச்சு பிரிச்சுக்கிட்டாங்களா’ என்று நினைத்தேன். சம்பந்தப்பட்டவரிடம் கேட்டால், ‘பங்குத் தந்தை’யை கிளார்க் அப்படி அடித்து விட்டதாக கூறினார்.

என்ன ஒரு தீர்க்க தரிசனம்!

Thursday 8 October 2015

மீறுதல்களும் கருணையும்

உயர் நீதிமன்றம்.

திடீரென சில கல்லூரி மாணவ, மாணவிகள் நீதிமன்றத்திற்குள் நுழைந்து தங்கள் தாய்மொழியைப் போற்றி கோஷங்களை எழுப்பினார்கள். ஆங்கில ஆதிக்கத்தை ஒழிப்போம் என்றார்கள், பாடல்களைப் பாடினார்கள், துண்டுப் பிரசுரங்களை வீசினார்கள்.

நீதிபதிக்கு வழக்கை நிறுத்தி விட்டு தனது அறைக்குத் திரும்புவதைத் தவிர வேறு வழியில்லை.

ஒருவழியாக ஆர்ப்பாட்டக்கார்களை அப்புறப்படுத்தி ஒழுங்கு ஏற்ப்படுத்தப்பட்டது. மீண்டும் தனது இருக்கையில் அமர்ந்த நீதிபதி முன் பதினொன்பது பேர் நிறுத்தப்பட்டனர். நீதிபதி அவர்கள் செய்த செயலுக்கு வருத்தம் தெரிவிப்பதாயில் அபராதத்தோடு விட்டு விடுவதாகக் கூறினார். சிலர் வருத்தம் தெரிவித்தார்கள்.

மற்றவர்கள் ‘எங்களுக்காக ஒலிபரப்பப்படும் ரேடியோ நிகழ்ச்சிகள் கூட ஆங்கிலத்தில்தான் இருக்க வேண்டுமா?. எங்கள் மொழி என்ன அவ்வளவு கேவலமா. நாட்டின் கவனத்தைக் கவரவே இவ்வாறு செய்ய வேண்டியதாயிற்று. எங்களால் கொள்கை ரீதியில் வருத்தம் தெரிவிக்க முடியாது’ என்றனர். நீதிபதி அவர்களுக்கு வேறு வழியின்றி மூன்று மாத காலம் சிறைத் தண்டனை விதித்தார்.
நடந்தது பிப்ரவரி’4 1970ல் இடம் இங்கிலாந்து. தண்டிக்கப்பட்ட மாணவர்கள் வேல்ஸ் நாட்டு பல்கலைக்கழக மாணவர்கள்.

அடுத்து நடந்தது முக்கிய திருப்பம்.

தண்டிக்கப்பட்டவர்கள் மேல் முறையீடு செய்தனர்.

அவர்கள் அதிஷ்டம், குயின்ஸ் பெஞ்ச் எனப்படும் மேல் முறையீட்டு நீதிமன்றத்தில் இருந்த நீதிபதி வேல்ஸ் மொழி, கலாச்சாரம் மீது பரிவு கொண்டவர். தன்னுடன் வெல்ஷ் மொழி அறிந்த நீதிபதி ஒருவரையும் மற்றொருவரையும் துணைக்கு வைத்து கொண்டு ஒரே வாரத்தில் வாதங்களைக் கேட்டு தீர்ப்பினைக் கூறினார்.

‘மொழிக்காக போராடுவதில் தவறில்லை. மக்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் நீதிமன்றத்திற்குள்ளா வந்து போராடுவது, இதற்கெல்லாம் தண்டனை மூன்று மாதமல்ல ஆறு மாதமே சரியானதாயிருக்கும், இனி போராட்டமென்று இங்கு வந்தால் தொலைத்து விடுவேன், என்றெல்லாம் கண்டித்தாலும் சரி, இதுவரை இருந்த ஒரு வார காலத்தோடு விடுகிறேன்’ என்று விடுதலை செய்தார்.

இங்கு போலவே நீதிபதியை பல்வேறு வார்த்தைகளில் திட்டி மொட்டைக் கடிதங்கள்.

ஆயினும் தனது இந்த தீர்ப்புக்காக மெத்த திருப்தியுற்றதற்காக தான் எழுதிய புத்தகத்தில் குறிப்பிட்டுள்ள நீதிபதி உலகின் சிறந்த நீதிபதிகளுள் ஒருவராக மதிக்கப்படும் லாட்ர் டென்னிங்!
கதை இத்துடன் முடியவில்லை.

மோரிஸ் எதிர் க்ரவுண் ஆஃபீஸ் (1970 1 All ER 1079) என்ற வழக்கில் லார்ட் டென்னிங் கூறியுள்ள கருத்துகளை நமது உச்ச நீதிமன்றம் சந்தீப் குமார் ((2011) 4 MLJ 1006 (SC)) என்ற வழக்கில் எடுத்தாண்டது. தொடர்ந்து நமது உயர்நீதிமன்றத்தின் இளம் வயதில் ஏதாவது குற்ற வழக்கில் சம்பந்தப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டதை வைத்தே காவலர் பணி மறுக்கப்பட்டவர்களுக்கான மணிகண்டன், அலெக்ஸ் பொன்சீலன் வழக்கு உட்பட அனைத்து வழக்குகளிலும் இந்த வழக்கு பற்றிய குறிப்பினைக் காணலாம்.

எங்கோ என்றோ போராடிய வேல்ஸ் மாணவர்களின் செயல், தமிழகத்தில் சிலருக்கு காவலர் வேலை கிடைக்கச் செய்துள்ள அதிசயம்தான் ‘பட்டர்ஃப்ளை எஃபக்டோ?’

சிலருக்கு வேலை பெற்றுத் தந்தது மட்டுமல்ல இனி, சில சட்டக் கல்லூரி மாணவர்களின் படிப்பையும் காப்பாற்றப் போகிற லார்ட் டென்னிங்’கின் மனித நேயம் மிகுந்த வார்த்தைகள், ஏதோ தமிழில் மொழி பெயர்க்க முடியாது என்பதால் அல்ல. நேரமின்மையால் ஆங்கிலத்திலேயே:

They have already served a week in prison. I do not think it necessary to keep them inside it any longer. These young people are no ordinary criminals. There is no violence, dishonesty or vice in them. On the contrary, there was much that we should applaud. They wish to do all they can to preserve the Welsh language. Well may they be proud of it. It is the language of the bards - of the poets and the singers - more melodious by far than our rough English tongue. On high authority, it should be equal in Wales with English. They have done wrong- very wrong - in going to the extreme they did. But, that having been shown, I think we can, and should, show mercy on them. We should permit them to go back to their studies, to their parents and continue the good course which they have so wrongly disturbed.

Saturday 3 October 2015

உனக்கு நீயே எதிரியாதல்



மதுரை வழக்குரைஞர் சங்க தலைவர் மற்றும் செயலாளர் ஆகியோர் மீதான் நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் கடந்தமுறை ஏ.கே.இராமசாமி அவர்களிடமும் இந்த முறை தர்மராஜ் அவர்களிடமும் நீதிமன்றம் பல கேள்விகளை எழுப்பி அதற்கான பதில்களை கேட்டது.

பொதுவாக அந்தக் கேள்விகளின் தன்மையானது, ‘ஆம்’ என்று பதிலளித்தால் அந்தப் பதிலே அவர்கள் நீதிமன்ற அவமதிப்பு குற்றம் புரிந்துள்ளார்கள் என்பதை நிரூபிக்க ஏதுவாக இருக்கும் வகையில் இருந்தது.

அவ்வகையான கேள்விகள் இந்திய அரசியலமைப்புச் சட்ட பிரிவு 20(3)ல் அளிக்கப்பட்ட ‘குற்றம் சாட்டப்பட்ட எந்த நபரையும், தமக்கு எதிராக தாமே சாட்சியம் கொடுக்கும்படி வற்புறுத்தக்கூடாது’ என்ற உரிமையை மீறுவதாகாதா? (Right against Self-incrimination)

‘இல்லை’ என்கிறது உச்ச நீதிமன்றம் தனது தில்லி ஜுடீசியல் அசோசியேசன் எதிர் ஸ்டேட் ஆஃப் குஜராத் (AIR 1991 SC 2176) என்ற வழக்கில்.

அதாவது நீதிமன்ற அவமதிப்பு வழக்கினை மற்ற குற்ற வழக்குகளோடு சம்பந்தப்படுத்த முடியாது, குற்றவியல் நடைமுறைச் சட்டமும் அதற்குப் பொருந்தாது என்றும் ‘எனவே நீதிமன்ற அவமதிப்பிற்காக வழக்கு தொடரப்படுபவரை பிரிவு 20(3)ல் குறிப்பிடப்படும் ‘குற்றம் சாட்டப்படுபவர்’ என்று கருத முடியாது’ என்றும் கூறியுள்ளது.

இருந்த போதிலும், இயற்கை நீதியில் அடிப்படையில் இது சரியாக இருக்குமா என்றால், இருக்கப் போவதில்லை என்பதுதான் என் பதிலாக இருக்க முடியும்.

நீதிமன்ற அவமதிப்பு வழக்கு மற்ற குற்றவியல் அடிப்படைகளிலிருந்து வேறுபடுகிறது என்றாலும், முடிவில் இங்கும் சம்பந்தப்பட்டவரின் தனிமனித சுதந்திரத்தைப் பறிக்கும் உத்தரவை பிறப்பிக்க முடியும். அதையும் அவரிடம் இருந்து பெறப்பட்ட பதிலை வைத்தே பறிக்க முடியும்.

அவ்வாறு என்றால், பிரிவு 20(3) எந்த நோக்கத்திற்காக இயற்றப்பட்டுள்ளதோ, குற்றம் சாட்டப்படுபவர் மீது எவ்விதமான அதிகார துஷ்பிரயோகம் பிரயோகிக்கப்படுவதிலிருந்து அவரை காப்பாற்றுவதற்காக சிந்திக்கப்பட்டுள்ளதோ அதே காரணங்கள் நீதிமன்ற அவமதிப்பு வழக்கிலும் இருக்காது என்பதற்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை என்றே நான் நினைக்கிறேன்.

பிரிவு 20(3) அளிக்கும் பாதுகாப்பு நீதிமன்ற அவமதிப்பு குற்றம் சாட்டப்பட்டவரின் உரிமையாக இல்லாதிருக்கலாம். ஆனால், அதன் நோக்கங்களை அறிந்து அதை அவருக்கு தாமாக அளிப்பது குற்றம் சாட்டுபவரின் கடமை!

நீதிமன்றத்திற்குள்ளான ஆர்ப்பாட்டங்கள்


ஏப்ரல்’1 2015.

காலை சரியாக மணி பத்து. தலைமை நீதிபதியின் மன்றம். நீதிபதிகள் அனைவரும் அமர்ந்த பின்னர் மற்றவர்களும் தங்கள் இருக்கையில் அமர்கின்றனர். முதல் வழக்கு அழைக்கப்படும் அதே நேரத்தில், பார்வையாளர்கள் வரிசையிலிருந்து ஒருவர் எழுகிறார். பதாகை ஒன்றை உயர்த்தியபடி ‘ நம் நாட்டின் மக்களாட்சி மாண்பினைக் காக்க இங்கு நான் எழுகிறேன். ஒருவரு ஒரு ஓட்டு’ என்று உரத்த குரலில் கத்தவும், காவலர்கள் பாய்ந்து வந்து அவரை மடக்கி வெளியே அழைத்துச் செல்கின்றனர்.

தலைமை நீதிபதி சுதாரித்துக் கொண்டு, ‘இன்றைக்கு விசாரிக்கப்படவுள்ள இன்ஸால்வன்ஸி வழக்குக்கு இத்தனை ஆர்ப்பாட்டமா?’ என்று கிண்டலடிக்கவும், அனைவரும் சிரிக்க நீதிமன்றம் சகஜமாகியது.

ஆனால் அந்த அமைதி கொஞ்ச நேரம் கூட நீடிக்கவில்லை. சில நிமிடங்களில் வேறு ஒருவர் எழுந்து வேறு ஒரு முழக்கத்தை எழுப்பவும், அவரும் குண்டுக்கட்டாக தூக்கப்படுகிறார்.
தொடர்ந்து மற்றொருவர். இப்படியாக பெண்கள் உட்பட ஏழு நபர்கள். அதில் ஒருவர் தனது முழக்கத்தை பாட்டாகப் பாடியது இன்னமும் வேடிக்கை.

ஐந்து நபர்கள் கைது செய்யப்பட்டு தற்பொழுது வழக்கினை எதிர் நோக்கியுள்ளனர்.

நீதிபதிகளுக்கும் இது புது அனுபவமல்ல. ஏற்கனவே 2014ம் ஆண்டில் இதே 99rise இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் இவ்வாறு முழக்கத்தை எழுப்பியதற்கு கைது செய்யப்பட்டனர். மீண்டும் பிப்ரவரி 2015ல் மீண்டும் முழக்கங்கள். கைது.

இதெல்லாம் எங்கு?

அமெரிக்க உச்ச நீதிமன்றத்தில்.

தேர்தலில் கட்டுக்கடங்காமல் பணம் செலவழிப்பதை அனுமதிக்கும் உச்ச நீதிமன்ற தீர்ப்புகளை எதித்துதான் இந்தப் போராட்டங்கள்.

முதலிருமுறையும் போராட்டம் நடத்தியதை வீடியோ எடுத்து வெளியிட்டதை தடுக்கும் வண்ணம் மார்ச்’2015ல் நீதிமன்றத்திற்கு வருபவர்கள் கடுமையான சோதனைக்கு பின்பு அனுமதிக்கப்பட்டாலும் மூன்றாம் முறையும் பேனா கேமரா மூலம் வீடியோ எடுக்கப்பட்டு விட்டது.

அமெரிக்க உச்ச நீதிமன்ற வரலாற்றிலேயே அதன் நீதிமன்ற அறை வீடியோ எடுக்கப்பட்டது இந்த மூன்று முறைதான்.

முதலிரண்டு முறையும் கீழமை நீதிமன்றங்களில் சாதாரண கிரிமினல் வழக்குகள் தொடர்ந்து, ஒன்றிரண்டு நாட்களிலேயே விடுதலை செய்யப்பட்டாலும், இம்முறை நீதிபதிகளின் கோபம் உக்கிரமடைந்துள்ளதால் முழக்கமிட்டவர்கள் மீது கிரிமினல் கண்டெம்ட் வழக்கு தொடரலாமா என்று விவாதித்து வருகிறார்கள்.

போராட்டவாதிகளின் வழக்குரைஞரும் சாமான்யப்பட்டவர் இல்லை. நீதிமன்றத்திற்குள் முழக்கமிடக்கூடாது என்பது பேச்சுரிமையைப் பாதிப்பது இல்லையா என்ற ரீதியில் தாக்கல் செய்துள்ள எதிர்வாதவுரையை பாருங்களேன்.

Even as to a nonpublic forum, a restriction on speech must still be reasonable. A ban on ‘loud … language,’ which is entirely untethered to the need to maintain the order and decorum of the court, is unreasonable. It is not reasonable to prohibit loud language regardless of whether the loudness is necessary; regardless of whether the speech is disruptive; regardless of whether the speech is raucous; regardless of whether the volume of the speech is intended to communicate a message rather to interfere with official proceedings; regardless of the time of day; regardless of whether the loudness of the speech presents a clear and present danger of imminent violence; regardless of whether the speech is amplified; regardless of the location of the speaker within the forum; and regardless of the actual volume of the speech

அபார துணிச்சல்தான்...

நீதிமன்றம், ஆர்ப்பாட்டங்கள், துண்டுப்பிரசுரங்கள்...

சென்னை உயர்நீதிமன்ற வளாகத்திற்குள் போராட்டம், ஆர்ப்பாட்டம் போன்றவை நடத்தக் கூடாது என்று ஏற்கனவே உத்தரவு இருப்பதாக நினைவு. ஆயினும் ஊர்வலம், போராட்டம் என்று தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டுதான் இருந்தது, சமீப காலம் வரை.

ஆனால், இது வரை பொதுமக்கள் கூடி ஆர்ப்பாட்டம் நடத்தியதில்லை என்று நினைக்கிறேன்.

ஆனால் அமெரிக்காவில் நடத்துவார்கள்.

அவற்றைத் தடுப்பதற்காக 1949ம் ஆண்டில் இயற்றப்பட்ட சட்டம் உச்சநீதிமன்ற கட்டிடம், வளாகம், மற்றும் சுற்றுப் பாதைகளில் மக்கள் கூடுவதோ, ஊர்வலம் நடத்துவதோ, ஆர்ப்பாட்டம் செய்வதோ, பதாகைகளை பிடிப்பதோ, பிரசுரங்களை விநியோகிப்பதோ குற்றம் என்று தடை செய்தது.

இவ்வாறு ஆர்ப்பாட்டங்கள் நடத்துவது, ‘நீதிமன்றத்தின் மாண்பினைக் குலைத்து விடும் என்பதோடு, வழக்கின் போக்கினை இவ்வகையான போராட்டங்களும் தீர்மானிக்கும் என்ற எண்ணப்பாட்டினை மக்கள் மனதில் உருவாக்கலாம்’ என்பதும் காரணம்.

ஆனால் பிரச்னை, ‘அமெரிக்க சட்டமன்ற கட்டிடத்திற்கு வெளியே மக்கள் ஆர்ப்பாட்டம் நடத்துவதை தடை செய்த சட்டமானது செல்லாது’ என்று 1972ம் ஆண்டு கூறப்பட்ட தீர்ப்பில் ஆரம்பித்தது.
சில வருடங்களில் உச்ச நீதிமன்றத்தை சுற்றியுள்ள நடைபாதை (sidewalk) யில் நீதிபதிகளையும் தீர்ப்புகளையும் எதிர்த்து ஆர்ப்பாட்டம் செய்து, துண்டுப் பிரசுரங்களை விநியோகித்த இருவர் தடுக்கப்பட்டனர்.

மாவட்ட நீதிமன்றம் 1949ம் வருட சட்டம் செல்லும் என்று தீர்ப்பு கூறினாலும் உயர் நீதிமன்றமும் உச்ச நீதிமன்றமும் சுற்றுப்பாதையில் ஆர்ப்பாட்டம் செய்வதை தடை விதிப்பது செல்லத்தக்கதல்ல என்று கூறி சுற்றுப் பாதையில் ஆர்ப்பாட்டங்களை அனுமதித்தது.

சுற்றுப் பாதையோடு திருப்தி அடையாத போராளிகள், உச்ச நீதிமன்ற வளாகத்திற்குள்ளும் அவ்வப்போது நுழைந்து போராட மீண்டும் வழக்கு.

மாவட்ட நீதிமன்றம் (Circuit Court) இந்த முறை சுற்றுப் பாதையில் என்ன உள்ளேயும் போராட்டம் நடத்துவதை தடை செய்வது செல்லாது என்று கூறவும் உயர்நீதிமன்றத்தில் (Court of Appeals) மேல்முறையீடு செய்யப்பட்டு கடந்த மாதம் 28ம் தேதி உயர்நீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள் அடங்கிய அமர்வு அப்படியெல்லாம் உள்ளே வர முடியாது, சுற்றுப்பாதையிலேயே ஆர்ப்பாட்டங்கள் நின்று விட வேண்டும் என்று தீர்ப்பு கூறியுள்ளது.

இனி வழக்கு உச்ச நீதிமன்றம் போகலாம். ஆனால் தீர்ப்பு எழுதியவர் யார் என்று தெரிந்தால், ‘ஆர்ப்பாட்டமாவது மண்ணாவது, தீர்ப்பு முழுக்கவும் சரிதான்’ என்று கூறத் தோன்றும்.

பராக் ஒபாமாவால் நியமிக்கப்பட்டவரும், உச்ச நீதிமன்றம் செல்வார் என்று நம்பப்படுபவருமானவரும், நம்மவருமானவருமான நீதிபதி சீனிவாசன்!

PROOF OF WILLS ADMITTED BY TESTATOR

INTRODUCTION I have had the privilege to hear the lecture of Mr.Nagamuthu, Senior Advocate on ‘Execution and Proof of Will’....