Tuesday 29 December 2015

வேளாங்கன்னி 2015

சுனாமியின் சுவடுகளை வேளாங்கன்னி முற்றிலும் துடைத்து எறிந்துவிட்டது போல. கடந்த பத்தாண்டுகளில் பலமுறை டிசம்பர் கடைசியில் சென்றிருக்கிறேன். அநேக நினைவஞ்சலி போஸ்டர்கள் கண்ணில்படும். ‘காணவில்லை’ என்ற போஸ்டர் கூட பல ஆண்டுகளுக்குப் பிறகும் ஒட்டப்பட்டிருக்கும்.

இந்த முறை ஒரு போஸ்டர் கூட இல்லை. நான் பார்த்த ஒரே ஒரு சுவரொட்டியும் வேறு ஒரு நாள் நிகழ்ந்த இறப்பிற்கானது. The world has to move on, leaving the dead behind!

வேளாங்கன்னி பரிணாம வளர்ச்சியில் அடுத்த நூறு ஆண்டுகளில் இந்துக் கோவிலாக மாறிப் போகும் சாத்தியங்கள் இருக்கிறது. பூசைக்கான பொருட்கள் இந்துப் பழக்கங்களை கொஞ்சம் கொஞ்சமாக உள்வாங்குவதை உணர முடிகிறது. கூட்டம் கூட்டமாக இந்துக்கள் மற்ற கோவில்களுக்கு யாத்திரை செல்கையில், வேளாங்கன்னியையும் அதில் சேர்த்துக் கொள்கிறார்கள்.

முழுக்கவும் வியாபாரம். வருபவர்களுக்கு பலன் கிடைக்கிறதோ இல்லையோ, வேளாங்கன்னி மாதா ஜாதி மத பேதமின்றி அங்கிருக்கும் அனைவருக்கும் வாழ்வளிக்கிறார்.

இரவு கடற்கரையோரம் பொரித்த மீன் ஆப்பம், கணவாய் என்று சாப்பிட்டுவிட்டு கடைத்தெரு வழியாக கோவிலை நோக்கி நடந்த பொழுது, ‘திடீரென சவுக்கைத் தூக்கிக் கொண்டு எருசலேம் தேவாலயத்துக்குள் போன மாதிரி இப்போது இயேசு வந்தால் எப்படியிருக்கும்’ என்று சம்பந்தமில்லாமல் தோன்றியது.

‘சேச்சே, அவர் இரக்கமானவர். பிழைத்துப் போகட்டும் என்று விட்டுவிடுவார்’ என்று நினைத்தவாறே மகள் மிகவும் ஆசைப்பட்டபடி சிறிய சங்கில் அவளுடைய பெயரைப் பொறித்து அதை கீ செயினாக மாற்றிக் கொடுத்த எளிய மனிதர் கேட்ட நாற்பது ரூபாயைக் கொடுத்தேன்

-oOo-

“இந்தப் பூட்டை எல்லாம் அப்புறம் எப்படி எடுப்பாங்க?” என் மகள், இரு நாட்களுக்கு முன்னர் வேளாங்கன்னி ஆலயத்தில் நேர்த்திக்காக பூட்டப்பட்டிருந்த பூட்டுகளைப் பார்த்து.

“ஒரு வேளை அறுத்து எடுப்பாங்களாக்கும்” நான்.

“ஐயோ வேஸ்டா போயிடுமே”

“பழைய இரும்புக்கு போடுவாங்க” சொல்லும் போது கஷ்டமாகத்தானிருந்தது.

“போங்கப்பா, இங்க உள்ள கடையிலதானே வாங்குறாங்க. பூட்டு நம்பரைப் பாத்து டூப்ளிகேட் கீ கடையில இருந்து வாங்கிட்டு வந்து திரும்பவும் வித்துறுவாங்க”

அட இப்படி ஒரு வழியிருப்பது எப்படி எனக்குத் தெரியாமல் போயிற்று. எந்தப் புதிருக்கும் எளிதான விடையிருப்பது எனக்கு எப்போதும் தோன்றுவதேயில்லை.

“என்ன இருந்தாலும் அவர் ஒரு அதிசயமானவர்தாம். மேடையில ஜெபம் செஞ்சுகிட்டு இருக்கும் போதே, கூட்டத்திலிருந்து யாரையாவது பெயரைச் சொல்லிக் கூப்பிடுறாரே’ தூத்துக்குடிக்கு சுவிசேஷ கூட்டம் நடத்த வந்திருந்த சகோதரர் டி ஜி எஸ் தினகரன் பற்றி அம்மா வியந்து பேசிக் கொண்டிருந்தார்கள்.

‘அதெல்லாம் ஒன்னும் இல்லை. சும்ம சேகர், எலிசபெத்’துன்னு பொதுவா கூப்புடுறாரு. செளந்தரின்னுல்லாம் சொல்லக் கூடாது. ஞான செளந்தரி பொன்னம்மாள்’னு உங்க முழுப் பெயரையும் சொல்லிக் கூப்பிடட்டும். நான் நம்புறேன்”

‘”ஏன் கூப்பிடுவாறே” அம்மா முகத்தில் சிறு புன்னகை.

எனக்கு பயம் வந்து விட்டது, ஒரு வேளை அப்படியும் கூப்பிட்டு விடுவாரோ என்று. “தெர்மல் நகரில் குடியிருக்கும் ஞான செளந்தரி’ன்னு கூப்பிடுவாரா’ சோதனையை தீவிரப்படுதினேன்.

“அதுவும் முடியுமே”

பள்ளிக்கூடப் பையனைப் போல நான் முழித்ததைப் பார்த்து அம்மாவுக்கு சிரிப்பு தாங்கவில்லை “ஜெபம் பண்றதுக்கு நம்ம வீட்டு முழு ஹிஸ்டரியும் பத்தி ஜீஸஸ் கால்ஸுக்கு லெட்டர் எழுதியிருக்கேன்” என்று சொல்லியவாறே எழுந்து போய் விட்டார்கள்.

Thursday 24 December 2015

லே ஹேய்னி (பிரான்ஸ்) 1995

‘நாளைக்கு காலைல உன்னை தூக்குல போடப் போறாங்கன்னாக் கூட கவலப்படக் கூடாது’ன்னு சொல்லிட்டு அடுத்து அப்பா சொன்ன காரணம் வித்தியாசமானது. ‘ராத்திரியே பெரிய பூகம்பம் வந்து ஒருவேளை உன்னோடு மொத்தமா எல்லோரும் செத்துரலாம்’ என்றார்.

தூத்துக்குடியில் எழுபதுகளில் குடியேறிய தொழிலாளர்களை ‘புறம்போக்கு நிலத்தில் ஆக்கிரமித்து வீடு கட்டியுள்ளார்கள்’ என்று அதை இடித்துத் தள்ளினால்தான் ஆயிற்று என்று கலெக்டர் கச்சை கட்டிக்கொண்டு இறங்கிய வழக்கில் வாதாடும் போது ஏனோ அப்பா சொன்னது நினைவுக்கு வந்து, ‘இன்று ராத்திரியே பெரிய பூகம்பம் வந்து இந்த வீடுகள் எல்லாம் இடிந்து போனால், நாம் பார்த்துக் கொண்டிருப்போமா. இடிக்கப் போறோம்னு சொல்ற இதே அரசு வீடிழந்தவர்களுக்கு இலவசமாக வீடு கட்டிக் கொடுக்கும். சுனாமியின் பொழுது அதுதானே நடந்தது’ என்றதை நீதிபதிகள் இறுக்கமான முகத்துடன் கேட்டுக் கொண்டனர்.

நேற்று ராத்திரி பார்த்த ‘லெ ஹெய்னி’ (Hate) என்ற பிரஞ்சுப் படத்தில் ஹுயூபர்ட் ‘Heard about the guy who fell off a skyscraper? On his way down past each floor, he kept saying to reassure himself: So far so good... so far so good... so far so good. How you fall doesn't matter. It's how you land! என்று தனது நண்பர்களிடம் பேசுவதைக் கேட்கையில் அப்பா சொன்னது மீண்டும் ஞாபகத்துக்கு வந்தது.

வெறுப்பு வெறுப்பு வெறுப்பு என்று வெறுப்பு சூழ்ந்த உலகில் வசிப்பவர்களுக்கு ‘இது வரை ஏதும் இல்லை’ என்ற நம்பிக்கை மட்டுமே ஒரே ஆறுதல்.

பிரான்ஸ் தேசத்தில் குடியேறியவர்களுக்கான வசிப்பிடத்தில் வசிக்கும் யூத, கறுப்பு, அராபிய இனத்தைச் சேர்ந்த மூன்று நண்பர்களின் பரபரப்பான ஒரு நாள் வாழ்வுதான் படம். பரபரப்பு என்றதும் சுறுசுறுப்பாக வேலை செய்கிறார்கள் என்பதல்ல. இங்கும் அங்கும் சுற்றுகிறார்கள். வேகவேகமாக பேசுகிறார்கள். நியோ நாஜிக்களிடம் சண்டையிடுகிறார்கள். போலீஸைப் பற்றி கோபத்தைக் கக்குகிறார்கள். திருடுகிறார்கள். தப்பியோடுகிறார்கள். போதாதற்கு போதை மருந்து வேறு.

முந்தைய நாள் நடந்த கலவரத்தில் அவர்களது மற்றொரு நண்பன் போலீஸாரால் தாக்கப்பட்டு கோமாவில் இருக்கிறான். மூவரில் கொஞ்சம் அமைதியான ஹுபர்ட் ஆப்ரிகன். கலவரத்தின் அவனது உடர்பயிற்சியகம் எரிந்து போயிருக்கிறது. அமைதியானவன். எப்படியாவது அந்தச் சூழலிலிருந்து தப்பி வேறு எங்காவது சென்று வாழ்வில் முன்னேற வேண்டும் என்று நினைத்தாலும் எப்படி என்று தெரியாமலிருப்பவன்.

யூதன் கலவரத்தில் போலீஸ் தவற விட்ட துப்பாக்கியை வைத்துக் கொண்டு கோமாவில் இருக்கும் நண்பன் செத்தால், ஒரு போலீஸையாவது பழிக்கு கொல்ல வேண்டும் என்று எப்போதும் கோபத்தோடு திரிபவன்.

அராபியனாக நடித்துள்ள சையத் தக்மாய், படம் முழுக்க பேசுகிறான் பேசுகிறான் அவ்வளவு பேசுகிறான். கவிஞனாம். ‘மை கசின் வின்னி’யில் வரும் ஹாலிவுட்டின் ஜோ பெஸ்ஸியேதான். அப்படியே குள்ளம் வேறு. உற்சாகமான நடிப்பால் மனதை கொள்ளை கொண்ட இவர் யார் என்று தேடினால் பிரான்ஸில் புகழ்பெற்ற நடிகர் போல. முஸ்லீம். ஆனால் புத்திசாலித்தனமாக இப்போதே அமெரிக்க குடியுரிமை வாங்கியுள்ள விபரம் டோனால்ட் ட்ரம்புக்கு தெரியுமா என்பது தெரியவில்லை.

பிரான்ஸில் குடியேறிய ஆப்ரிக்க அராபிய குடும்ப இளைஞர்களுக்கும் போலீஸுக்கும் உள்ள பிரச்னை என்பதால் இப்போதுதான் வந்த படம் என்று நினைக்க வேண்டாம். 1995ல் வந்த படம். இருபது ஆண்டுகளில் ப்ரான்ஸ் ஒரு சுற்று சுற்றி மீண்டும் பழைய இடத்துக்கே தற்பொழுது வந்து நிற்கிறது.

‘வெள்ளையர்களின் சுமை’ என்று காலனியாதிக்கத்தை ருட்யார்ட் கிப்ளிங் வர்ணித்து நூறு ஆண்டுகள் கழிந்து விட்ட தற்பொழுதுதான் அந்தச் சுமையின் உண்மையான வலியை மேற்கத்திய நாடுகள் அனுபவிக்க ஆரம்பித்துள்ளன. அவர்களுக்கும் இது so far so good...தாம்
.
சொல்ல மறந்து விட்டேன். இது கறுப்பு வெள்ளைபடம். எனக்கும் படம் முடியும் வரை அது தட்டுப்படவேயில்லை. ஆமாம், நல்ல திரைப்படங்களுக்கு எதற்கு வர்ணம்?

Sunday 20 December 2015

TRUE, CASTE HAS NO PLACE IN AGAMAS

It is not a misstatement, to welcome the judgment of the Supreme Court in the case of Adi Saiva Sivachariyargal Nala Sangal as yet another bold step in the march of law towards the goal of eradicating caste as a criteria in the appointment of archakas in Hindu Temples; may be not final but a decisive step that it has given clear signals that caste would not come anywhere within the four corners of ‘Agamas’.

On the other hand, the Government of Tamilnadu as the facts of this case reveal, seems to have been still stuck with the days of Seshammal Vs State of Tamilnadu 1972 (2) SCC 1. The Government Order in G.O. No. 118 dated 23.05.2006 under challenge is nothing but a damp squib that it only stipulates ‘Any person who is a Hindu and possessing the requisite qualification and training can be appointed as a Archaka in Hindu temples’ It does require only a child’s brain to understand that this is not even a small step from what we were after Seshammal; the term ‘requisite qualification’ is the dampener.

Why an attempt, which in my opinion not even a pussy’s meow was hailed then as a lion’s roar driving the Sivachariargal to the Supreme Court?

It was the Ordinance No.5 of 2006 dated 14.07.2006, which sought to amend the Section 55(2) of the HR & CE Act 1959 to the effect that ‘No person to shall be entitled to be appointed to any vacancy …………………………….. “merely on the ground of any custom or usage”

The Ordinance would surely have upset the Seshammal’s case because in Seshammal it was held though the Trustee need not appoint an archaka on hereditary principle, he could not  give up the usage governing appointments, in other respects. Besides the Supreme Court in Seshammal seems to have suggest that if the Government brings any Rule in the appointment of archakas in violation of agamic rituals and ceremonies, the same could be challenged.

Alas, that roar was silenced even before it reaches the lion’s own ear; the Ordinance did not materialize and was dropped. I am wondering now why then this much ado about nothing?

The Supreme Court only considered the Government order; no wonder it is upheld as in the case of Seshammal, upholding the amendments to the HR & CE Act. Does this look like a splendid coincidence that both in Seshammal and Saiva Sivachariargal, the Supreme Court upheld the Government legislations but still no celebration on the Government side; people siding with the Government are in fact mourning.

In Seshammal, what the Supreme Court has stated about usage or agamas was taken as an affirmation of caste as a criteria in the appointment of archakas; though the judgment does not speak about caste at all; it was referred only in the submissions of the Counsels and that too in not more than two places. There is no categorical pronouncement in Seshammal that agamic injunctions proscribe persons who do not belong to Brahminical caste from doing the service as archaka. Still no one questioned or doubted but now questions are being raised; surely the law has marched forward.

The submissions of the Government in Saiva Sivachariargal case is strikingly similar to what was submitted in Seshammal. As in Seshammal, the Advocate General conceded that ‘if the usage or practice of a temple required the archaka of a temple to be of a particular denomination the said usage is binding

Beyond this what more to be decided, one may think as this was already considered or rather conceded in Seshammal. True to its consistency the Supreme Court too disposed of the writ petition by upholding the Government Order and reiterating that appointments or archakas must conform to the agamas, governing the respective temples.

What in the minds of all following Saiva Sivachariargal case was ‘Caste’ and no one worried about denomination, which the Supreme Court has laid much stress in its judgment. Supreme Court even includes group/sect and particular segment with denomination but the word ‘caste’ is shunned as if it is taboo. Supreme Court ended up finding that it is nothing wrong the archakas are appointed from a particular denomination/sect/group if the agamas injunct the others; no word about caste.

The million dollar question now is whether the terms denomination/sect/group or particular segment include caste as a criteria or that by quoting agamas persons belonging to a particular caste can be prevented from doing the service of archaka. The beauty of this case is where the Government failed, the Supreme Court succeeded in taking up a stride; much farther than it took in N.Adithayan’s case. Though the word caste was shunned, the Supreme Court has indicated in clear terms that ‘caste can no longer be a criteria’, which in my opinion has far reaching implications in the future appointments of archakas.

The Supreme Court while concluding the judgement finds that ‘In this regard it will be necessary to re-emphasize …………………………………….. that the exclusion of some and inclusion of a particular segment or denomination for appointment as Archakas would not violate Article 14 so long such inclusion/exclusion is not based on the criteria of caste, birth or any other constitutionally unacceptable parameter’ This finding means any consideration of caste in determining a particular denomination entitled to be appointed will violate fundamental right to equality.

In another place the Judges further state that the discussions in Seshammal ‘proceeds on the basis that entry to the sanctum sanctorum for a particular denomination is without any reference to caste or social status’ Can we take it that even in Seshammal caste was not a consideration? If anyone has doubt it will be cleared by what the Judges say in the end of the said 26th para with ‘Exclusion solely on the basis of caste was not an issue in Seshammal’’

The judges have no second opinion even in 41st para that Seshammal did not consider caste but only denomination and before concluding the paragraph with their much publicized observation ‘The constitutional legitimacy, naturally, must supersede all religious beliefs or practices’ state in unequivocal terms ‘Surely, if the Agamas in question do not proscribe any group of citizens from being appointed as Archakas on the basis of caste or class the sanctity of Article 17 or any other provision of Part III of the Constitution or even the Protection of Civil Rights Act, 1955 will not be violated

If we remove the double negative the above finding would read and mean ‘fundamental right guaranteed under the constitution would be violated if agamas proscribe any person from being appointed as archakas on the basis of caste or class’; even N.Adithayan, considered to be a revolutionary judgement falls short of saying this.

Now science has proved by genetic evidence, that all human beings in existence now descend from one single man who lived in Africa about 60,000 years ago. ‘No caste is pure’ and mankind is a story of migration, miscegenation and cultural evolution, says RM. Pitchappan, Professor Emeritus, School of Biological Sciences, Madurai Kamaraj University and the Regional Director of the Geographic Project. Supreme Court in its observation that ‘such exclusion (in the agamas) is not on the basis of caste, birth or pedigree’ only echoes such scientific temper.


What more is required to celebrate this judgment as a giant leap towards temples sans castes; but all credit must go to Saiva Sivachariargal, who fought an issue that was not there and ended in stuck with a finding, which is not to their liking.

For full text of the Judgment :
http://supremecourtofindia.nic.in/FileServer/2015-12-16_1450255713.pdf

Friday 18 December 2015

ஹமோன் (ஈரான்) 1990


ஹாமோன், ஈரானிய படங்களிலேயே சிறந்த படம் என்று பாராட்டப்படும் படம். ஹை டெபினிஷன் தரத்தில் படங்களைப் பார்த்த பிறகு 1990ல் இயக்கப்பட்ட இப்படத்தை சாதாரண தரத்தில் பார்ப்பது இன்னமும் பழைய படத்தைப் பார்ப்பது போல இருந்தது.

புத்தகங்களை விரும்பும் நடுத்தர வர்க்க இளைஞனாகிய ஹமீத் ஹமோனை வலிய காதலித்து மணக்கும் பணக்கார பெண்ணாகிய மாஷித்’ பின்னர் அவனது போக்கு பிடிக்காமல் அவனிடமிருந்து விவாகரத்து கோருவதும், அதனால் அவர்களுக்கிடையில் எழும் போராட்டமும்தான் கதை. பொருந்தாத திருமண வாழ்க்கையின் அழுத்தத்தில் இருவருமே மனச்சிக்கலுக்கு ஆட்படுவதும், தனது வாழ்க்கையின் அர்த்தத்தை புரிய முயன்று ஹமோன் தோற்பதுமாக நான் லீனியராக திரைக்கதை சொல்லப்படுகிறது.

பொதுவாக நான் பார்த்த இரானியப் படங்கள் சிக்கலோ குழப்பமோ இல்லாமல் ஏதோ நல்ல சிறுகதையைப் பார்ப்பது போல இருக்கும். இதே இயக்குஞரின் படமான லீலா உட்பட. ஆனால் இந்தப் படம் அப்படியல்ல. ஹமோனுக்கு ஏற்ப்படும் மனப்பிறழ்வுகளும் கனவுகளும் நம் தலையையும் சுற்ற வைக்கிறது.

முக்கியமாக நான் சொல்ல வந்தது, வழக்குகாக நீதிமன்றத்திற்குள் செல்லும் ஹமோனை காவலர் லேசாக தடவிப் பார்த்து உடல் பரிசோதனை செய்கிறார்.

இரண்டு நாட்களுக்கு முன்னர் இந்தப் படத்தைப் பார்த்திருந்தால், வெள்ளிக்கிழமை சென்னை நீதிமன்றம் சென்ற பொழுது என்னை சி ஐ எஸ் எஃப் காவலர் பரிசோதனை செய்த போது அப்படி சங்கோஜப்பட்டிருந்திருக்க மாட்டேன்.

ஆனாலும் எனது அடையாள அட்டையை திருப்பிக் கொடுத்த காவலர் ‘தாங்க் யூ’ என்று சொன்னது கொஞ்சம் ஆறுதலாக இருந்தது.

ஒரு செய்தி : மதுரைக்கு இப்போதைக்கு சி ஐ எஸ் எஃப் இல்லையாம்...

சீக்கியர் பெளத்தர்கள் கூட அர்ச்சகர் ஆகலாமா?

2006ம் ஆண்டில் ‘அனைத்துப் பிரிவினரும் அர்ச்சகராகும் சட்டத்’திற்கு இடைக்கால தடை உத்தரவு வேண்டி திரு பாராசரன் உச்ச நீதிமன்றத்தில் வாதாடிய பொழுது ‘இந்துக்கள் அனைவரும் அர்ச்சகராக முடியும் என்றால், சீக்கியர்கள் மற்றும் பெளத்தர்களும்’ கூட இந்துக் கோவில்களில் அர்ச்சகராக நியமிக்கப்படும் அபாயம் உள்ளது’ என்று வாதிட்டதாக செய்தித்தாளில் படித்தேன்.

அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 25ல் ‘இந்து என்ற பதமானது சீக்கியர் மற்றும் பெளத்தர்களையும் உள்ளடக்கியது’ என்று கூறப்படும் விளக்கத்தை வைத்து இப்படி ஒரு அச்சத்தை அவர் வெளிப்படுத்தியிருக்கலாம். ஆனால் அந்த விளக்கத்தை முழுமையாகப் படித்தால் அந்தந்த மத நிறுவனங்களைப் பொறுத்து அம்மதத்தைச் சேர்ந்த அனைவருக்கும் உரிமையளிக்கலாம் என்ற ரீதியில் அந்தப் பிரிவு இருப்பதை புரிந்து கொள்ளலாம்.

ஆனாலும் தமிழக அரசு இந்த விஷயத்தில் கவனமாகவே இருந்துள்ளது.

நமது இந்து அறநிலையத்துறை சட்டத்தின் (The Tamilnadu Hindu Religious and Charitable Endowments Act’1959) 10வது பிரிவில் ‘இந்த சட்டத்தின் நோக்கங்களை நிறைவேற்றும் எந்த ஒரு ஊழியரும் இந்து மதத்தினை பின்பற்றுபவர்களாக (person professing hindu religion) இருத்தல் வேண்டும் என்றுதான் உள்ளது. ‘இந்து’ என்று இல்லை.

55ம் பிரிவின்படி கோவில் ஊழியர்கள் (அச்சகர்கள்) நியமிக்கப்படுகிறார்கள். எனவே அர்ச்சகர் இந்து மதத்தினை பின்பற்றுபவராக இருந்தல் வேண்டும். சீக்கியரோ அல்லது பெளத்தரோ சட்டத்தின் பார்வையில் இந்துவாக இருக்கலாம். ஆனால் இந்து மதத்தினை பின்பற்றுபவர் இல்லை.

கோவில் ஊழியர்களை நியமிப்பது குறித்த விதிகளிலும் (The Tamilnadu Hindu Religious Institutions (officers and servants) Service Rules’1964 3வது விதி இந்து மதத்தினை பின்பற்றுபவராக இருத்தல் வேண்டும் என வலியுறுத்துகிறது. மேலும் இந்து மதத்தினை பின்பற்றுபவர் என்று எவ்வாறான உறுதி மொழி எடுக்க வேண்டும் என்பதற்கும் அரசாணை எண் 4055/1961 மூலம் விதிமுறைகள் ஏற்ப்படுத்தப்பட்டுள்ளன.

எனவே திரு பராசரனின் அச்சம் தேவையற்றது...

Wednesday 16 December 2015

அர்ச்சகர் பிரச்னையின் பயணம்...

கடந்த சில நாட்களாக ‘அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் வண்ணம் தமிழக அரசு கொணர்ந்த அவரச சட்டத்திற்கு உச்ச நீதிமன்றம் அளித்த இடைக்கால தடையுத்தர’வை விமர்சித்து பல வலைப்பதிவுகளை கண்ணுற நேர்ந்தது. கிழக்கு பதிப்பக பத்ரி நாராயணின் வலைப்பதிவில் அர்ச்சகர்கள் நியமனம் குறித்த உச்ச நீதிமன்றத்தின் இரு வழக்குகள் குறித்து எழுதியுள்ளார். பலரும் இவ்விரு வழக்குகள் பற்றியே குறிப்பிடுகின்றனர். இவ்விரு வழக்குகளுக்கிடையில் ஆந்திர மாநிலம் சம்பந்தப்பட்ட 1996ம் ஆண்டு வழக்கு ஒன்றும் உள்ளது. தமிழகம் (1972) ஆந்திரம் (1996) கேரளா (2002) வழக்குகளை ஆராய்ந்தால் எவ்வாறு உச்ச நீதிமன்றமும் கால வெள்ளத்தில் படிப்படியாக தன்னை இந்த பிரச்னையில் தளர்த்திக் கொள்கிறது என்பது புரியும். திரு.ரவி ஸ்ரீனிவாஸ் குறிப்பிடுவது போலவே 2002 வழக்கிலும் உச்ச நீதிமன்றம் முழுமையான உரிமையினை அளிக்கவில்லை. எனவே தற்போதய தமிழக சட்டம் எவ்வித பிரச்னையுமின்றி உச்ச நீதிமன்றத்தின் பரிசீலனைக்கு (judicial review) தப்பிவிடும் என்று அறுதியிட்டு கூற முடியாது. ஏனெனில் 1972 தமிழக வழக்கின் தீர்ப்பு இன்று வரை 2002 கேரள வழக்கின் தீர்ப்பு உட்பட எந்த தீர்ப்பினாலும் மேலாத்திக்கம் (overrule) செய்யப்படவில்லை. எனவே, 1972ம் வருட தமிழக வழக்கின் தீர்ப்பு உண்மையில் தற்போதைய சட்ட திருத்ததிற்கு எதிரானது என்றே நான் கருதுகிறேன். எனவே, உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்ததில் ஏதும் வியப்பில்லை!


அர்ச்சகர் நியமனம் குறித்த எந்த வழக்கிலும், குறிப்பிடப்படும் உரிமை அரசியலமைப்பு சட்டத்தின் 25 மற்றும் 26ம் பிரிவுகள் (Article 25 and 26). 25வது பிரிவு எந்த ஒரு மதத்தினையும் பின்பற்றும் உரிமையினை அளிக்கிறது. 26ம் பிரிவு மத நிறுவனங்களை நிறுவி அவற்றை நிர்வகிக்கும் உரிமையினை அளிக்கிறது. இவை அடிப்படை உரிமைகள். இந்த உரிமைகள் சில விதிவிலக்குகளுக்கு உட்பட்டவை. முக்கியமாக 25 வது பிரிவின் 2(b) உட்பிரிவு சமுக நலன் மற்றும் சீர்திருத்தம் அல்லது இந்து சமய நிறுவனங்களுக்குள் அனைத்து இன, பிரிவு இந்துக்களுக்கு உட்பிரவேசிக்கும் வண்ணம் சட்டமியற்ற அரசுக்கு முழு உரிமையளிக்கிறது (social welfare and reform or throwing open Hindu religious institutions of public character to all classes and sections of Hindus) இந்தப் பிரிவு கூற விரும்புவது வெறும் ஆலய பிரவேசமா அல்லது ஆலய பணிகளையும் மேற்கொள்வதா என்பதை அறிய இந்தப்பிரிவு குறித்து அரசியலமைப்புக்குழு (constituent assembly) என்ன விவாதித்தது என்பதை ஆராய வேண்டும். சமூக நலன் மற்றும் சீர்திருத்தம் என்பதை தனியே படிக்கையில் அரசின் சட்டதிருத்தம் சமூக சீர்திருத்தம் என்ற வட்டத்திற்குள் அடங்கிவிடும் என்றே நான் நினைக்கிறேன். ஆயினும், மேற்கூறிய மூன்று வழக்குகளிலும் இந்தப் பிரிவானது பெருமளவில் அரசினால் கையிலெடுக்கப்படவில்லை.


-oOo-


தமிழ்நாடு இந்து சமய மற்றும் அறநிலைய சட்டமானது 1959ம் ஆண்டு இயற்றப்பட்டது. இந்த சட்டத்தின் 55வது பிரிவின்படி கோவில் தர்மகர்த்தா (trustee) அர்ச்சகரை நியமிக்கும் உரிமை படைத்தவர். ஆனால் அர்ச்சகர் பரம்பரை அர்ச்சகராயிருக்கும் பட்சத்தில் தர்மகர்த்தாவிற்கு அந்த உரிமை கிடையாது. இந்தச் சட்டத்தினை செயலாக்குவதற்க்கான விதிகள் 1964ம் ஆண்டு (Madras Hindus Religious Institutions (Officers and Servants) Service Rules 1964) இயற்றப்பட்டது. இந்த விதிகளிலேயே சில சீர்த்திருத்தங்கள் ஏற்படுத்தப்பட்டன. முக்கியமாக, 12ம் விதியின் கீழ் எந்த ஒரு நபரும் அர்ச்சகராக வேண்டுமென்றால், மத நிறுவன தலைவரிடம் இருந்து ‘தகுதி சான்றிதழினை’ பெற வேண்டும். இதன் மூலம் தகுதியற்ற ஒருவர் பரம்பரை உரிமையில் அர்ச்சகராவது தடுக்கப்பட்டது. ஆக இன்றைய நிலைக்கு முதல் செங்கல் வைக்கப்பட்டது 1964ம் ஆண்டில்.


1969ம் ஆண்டு அரசினால் நியமிக்கப்பட்ட ‘அட்டவணை வகுப்பினரின் கல்வி பொருளாதார மேம்பாடு மற்றும் தீண்டாமைக்கான குழு’ அரசிடம் தனது அறிக்கையினை அளித்தது. அவ்வறிக்கை ‘இந்துக் கோவில்களில் உள்ள பரம்பரை அர்ச்சகர் முறையினை ஒழித்து அர்ச்சகர் மற்றும் இதர கோவில் பணிகளை அனைத்து ஜாதியினருக்கும் அளிக்க’ பரிந்துரை செய்தது. அந்த பரிந்துரையினை ஏற்ற அரசு 1970ம் ஆண்டு மேற்கூறிய சட்டத்தின் 55ம் பிரிவினை மாற்றியது. இதன்படி பரம்பரை அர்ச்சகர் முறை முற்றிலும் அகற்றப்பட்டது. இந்த சட்ட திருத்தத்தினை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குதான் சேஷம்மா வழக்கு என்று அழைக்கப்படும் 1972ம் வருட வழக்கு!


உச்ச நீதிமன்றத்தின் ஐந்து நீதிபதிகளை கொண்ட மன்றம் தமிழக அரசின் இந்த சட்ட திருத்தமானது அரசியலமைப்பு சட்டத்தின் 25 மற்றும் 26ம் பிரிவுகளை மீறியதாகாது என்று கூறியது என்னவோ உண்மைதான். ஆனால் அவ்வாறு கூறியதற்கான காரணம் இன்றைய சட்ட திருத்தத்தின் முன் பிரச்னையாக உருவெடுக்கக்கூடும். தமிழக அரசு அப்போது உச்ச நீதிமன்றத்தின் முன் வைத்த வாதம் அப்படிப்பட்டது!


1972ல் வழக்கு தாக்கல் செய்தவர்கள் முன் வைத்த வாதம், ‘இந்து கோவில்கள் ஆகம நெறிப்படி நிர்வகிக்கப்படுகின்றன. ஆகம முறைப்படி குறிப்பிட்ட வகுப்பினர்தான் விக்ரகத்தை தொட்டு பூசை செய்ய இயலும். வேறு யாரும் அவர் எவ்வளவு பெரிய மதத்தலைவராயினும் சரி, மடாதிபதியாயினும் சரி ஏன் மற்ற பிராமணர்களே விக்ரகத்தை தொடுவது மட்டுமல்ல கர்பகிரகத்தில் பிரவேசித்தாலே விக்ரகம் தீட்டுப்பட்டதாகும்’ என்பதாகும்.


இந்த வாதத்தினை நீதிமன்றம் ஏற்றுக்கொள்ள தமிழக அரசின் அட்வோகேட் ஜெனரல் சட்ட திருத்தத்தின் நோக்கத்திலிருந்து விலகி ‘இந்து சமய மற்றும் அறநிலைய சட்டத்தின் 28ம் பிரிவின்படி தர்மகர்த்தா கோவிலை அதனது வழக்கப்படிதான் (usage) நிர்வகிக்க முடியும், எனவே வழக்கம் ஒரு குறிப்பிட்ட வகுப்பினர்தான் அர்ச்சகராயிருக்க வேண்டுமென்றிருந்தால் அவர் அதற்கு கட்டுப்பட்டவர். திருத்திய 55ம் பிரிவிலும் அவர் வழக்கத்தினை மீற வேண்டும் என்று கூறப்படவில்லையே’ என்று பின் வாங்க ‘அப்படியாயின் பரம்பரையாக அர்ச்சகரை நியமிப்பதும் பழக்கம்தானே’ என்று வழக்கு தொடர்ந்தவர்கள் முன்னேறினர்.


தமிழக அரசு மேலும் இறங்கி வந்து ‘பரம்பரை அர்ச்சகர் முறைதான் ஒழிக்கப்படுகிறதே தவிர அர்ச்சகரின் மகன் அவருக்கு பின்னர் அர்ச்சகராவதற்கு தடையேதும் இல்லையே...நடைமுறையில் அவரையே தர்மகர்த்தா நியமிக்க போகிறார்’ என்று வாதிட்டு மேலும் ‘அர்ச்சகர் நியமனம் மதம் சாராத (secular) பணி, இறைப்பணியல்ல (religious)’ என்று கூற உச்ச நீதிமன்றமும் ‘ஆமாம், அர்ச்சகர் என்பவர் ஒரு மடாதிபதியினைப் போல நிறுவனத்தின் மதத்தலைவராக மாட்டார்’ என்று கூறி வழக்கினை தள்ளுபடி செய்தது. ஆனால் தனது தீர்ப்பில் தெளிவாக ‘பரம்பரை வழக்கப்படி அர்ச்சகரை நியமிக்கும் கடப்பாட்டிலிருந்து மட்டும், மட்டுமே (to that extent and to that extent alone) தர்மகர்த்தா கோவிலின் பழக்கத்திலிருந்து விலகமுடியும்’ என்று கூறியது.


இறுதியில் ‘ஜாதி பேதமின்றி அனைவரும் அர்ச்சகராகும் வண்ணம் அரசு அர்ச்சகருக்கான தகுதி குறித்த விதிகளை எதிர்காலத்தில் மாற்றி விடும்’ என்ற அச்சம் வழக்கு தொடுத்தவர்களால் முன் வைக்கப்பட்டது. உச்ச நீதிமன்றாமோ அவ்வாறு கோவில் பழக்கத்திற்கும் வழிப்பாட்டு முறைகளுக்கும் மாறாக விதிகள் மாற்றப்பட்டால், கோவில் வழிபாட்டில் உரிமையுள்ளவர்கள் அதனை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்து கொள்ளலாம்’ என்று கூறி வழக்கினை முடித்து வைத்தது. (Seshammal Vs State of Tamilnadu 1972 (2) SCC 11)


-oOo-


அடுத்த வழக்கு ஆந்திர அரசு 1987ம் வருடம் கொணர்ந்த இந்து சமய அறநிலைய சட்டத்தின் பிரிவுகளை எதிர்த்து. இங்கும் பரம்பரை அர்ச்சகர் முறை ஒழிக்கப்பட்டதே வழக்கிற்கான மூலம். வழக்கினை தொடுத்தது திருமலை திருப்பதியின் தலைமை அர்ச்சகர்களில் ஒருவர். வழக்குரைஞர் திரு.பராசரன். சேஷம்மா வழக்கில் திரு.நானி பல்கிவாலா!


நாராயண தீக்ஷிதுலு என்று அழைக்கப்படும் 1996ம் வருட ஆந்திர தீர்ப்பு சுவராசியமானது. நான் படித்த சட்டபுத்தகத்தில் சுமார் 69 பக்கங்களுக்கு உள்ள இந்த தீர்ப்பின் 50 பக்கங்கள் சுவாமி விவேகானந்தர், அரவிந்தரிலிருந்து பல்வேறு மேல் நாட்டு அறிஞர்கள், இந்திய அறிஞர்கள் ஆகியோரின் எழுத்து, பேச்சிலிருந்து மேற்கோள்கள். தத்துவத்தை படிப்பதில் ஆர்வமிருப்பவர்களால் மட்டுமே முழுவதும் படிக்க இயலக்கூடிய தீர்ப்பு. உச்ச நீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் மட்டுமே அடங்கிய இந்த மன்றமானது சேஷம்மா வழக்கிற்கு எதிராக ஏதும் கூற இயலாது. ஆனால் குறிப்பிடத்தகுந்த ஒரு வித்தியாசம் உண்டு. சேஷம்மா வழக்கில் ‘மற்றவர்கள் தொடுவதால் விக்ரகம் தீட்டுப்படும்’ என்று கூறக்கூடிய ஒரு ஆகமத்திலிருந்து மட்டுமே மேற்கோள் காட்டப்பட்டது. தீஷிதுலு வழக்கிலோ மேற்கோள்களாக சமுதாய புரட்சியாளர்களான விவேகானந்தர், அரவிந்தர் ஆகியோரின் கருத்துகள்! நீதிமன்றம் பயணிக்கும் பாதையினை புரிந்து கொள்ள முடிகிறது.


ஆந்திர வழக்கின் இறுதியில் பரம்பரை அர்ச்சகர் முறையினை ஒழிக்கும் ஆந்திர சட்டத்தினை ஏற்றுக் கொண்டதோடு, சேஷம்மா வழக்கினைப் போல அர்ச்சகர் நியமனத்தில் பரம்பரை வழக்கம் மட்டுமே ஒழிக்கப்படுகிறது என்று வலுவாக கூறப்படவில்லை. மேலும், நியமனம் பழக்கத்திற்கு மட்டுமே உட்பட்டது என்றும் தெளிவாக கூறவில்லை என்றாலும் எவ்வாறும் இருக்கலாம் என்று கோடிட்டு காட்டப்படுகிறது. ஏனெனில் ஒரு குறிப்பிட்ட வகுப்பார்தான் (denomination) அர்ச்சகர்களாக இருக்கலாம் என்று வாதிடும் திரு.பராசரனைப் பார்த்து நீதிபதிகள், ‘அந்த குறிப்பிட்ட வகுப்பார்கள் அனைவரும் நன்கு கல்வி பயின்று மேல் நாடுகளுக்கு வேலைக்கு போய் வேறு யாருமே இல்லையென்றால் என்ன செய்வீர்கள்?’ என்று கேட்க திரு.பராசரன் வேறு வழியில்லாமல் ‘அப்படியென்றால் வெளியே தேட வேண்டியதுதான்’ என்று கூற வேண்டியதாயிற்று!


ஆக, தெளிவாக கூறவில்லை என்றாலும் இந்த வழக்கானது சேஷம்மா வழக்கிலிருந்து சமூகம் அதிக தூரம் பயணித்து விட்டதை குறிப்பால் உணர்த்தியது என்றே கூற வேண்டும். (A.S.Narayana Deekshitulu Vs State of AP 1996 (9) SCC 548)


-oOo-


அர்ச்சகர்கள் தகுதி குறித்து அடுத்த அதே சமயம் ஓரளவுக்கு தெளிவான அடியினை எடுத்து வைத்தது ‘ஆதித்யன் வழக்கு’ என்று அழைக்கப்படும் கேரள வழக்கு!


திருவாங்கூர் தேவஸ்வம் போர்டின் கட்டுப்பாட்டில் உள்ள சிவன் கோவில் ஒன்றில் பணியாற்றிய சாந்திக்காரன் என்று அழைக்கப்படும் அர்ச்சகர் நிலையிலுள்ள ஒருவரின் நடத்தை குறித்து அதிக குற்றச்சாட்டுகள் எழ, பிராமணரல்லாத ஒருவர் சாந்திக்காரனாக நியமிக்கப்பட கோவிலின் தந்த்ரி அவரை பணியேற்க அனுமதிக்கவில்லை. ஆனால், தேவஸ்வம் ஆணையர் அவ்வாறு பிராமணர்கள் மட்டுமே சாந்திக்காரனாக பணியாற்ற இயலும் என்ற விதி ஏதும் இல்லை என்று சுட்டிக்காட்டவே, ‘அவ்வாறு மலையாள பிராமணரல்லாத ஒருவரை சாந்திக்காரனாக நியமிப்பது தன்னுடைய வழிபாட்டு உரிமையினை பாதிப்பதாக’ பக்தர் ஒருவர் வழக்கு தாக்கல் செய்ய இறுதியில் பிரச்னை உச்ச நீதிமன்றத்திற்கு வந்தது.


இந்த வழக்கில் இவ்வாறு மலையாள பிராமணர்கள் மட்டுமே சாந்திக்காரனாக நியமிக்கப்பட முடியும் என்பதற்கான பழக்கமோ அல்லது கோவிலை உருவாக்கியவரின் விருப்பம் குறித்தோ தெளிவான வாதம் வைக்கப்படவில்லை என்று கூரி வழக்கினை தள்ளுபடி செய்தாலும் இந்த தீர்ப்பில் உச்ச நீதிமன்றம் கூறிய பல கருத்துகள் குறிப்பிடத்தகுந்தது. உதாரணமாக, ‘காலங்காலமாக பிராமணர்கள் மட்டுமே அர்ச்சகர்களாயிருப்பதால் மற்றவர்களுக்கு அர்ச்சகர்களாவதற்கு தடையிருக்கிறது என்று பொருளில்லை மாறாக அவர்கள் வேதங்களை கற்பதிலிருந்தும், புனித நூலினை அணிவதிலிருந்தும் தடுக்கப்பட்டார்கள் என்றுமே எடுத்துக் கொள்ள வேண்டும்’ என்று கூறியது கவனிக்கத்தகுந்தது. ஆயினும் இந்த வழக்கிலும் எந்தக் கோவிலிலும் யார் வேண்டுமானாலும் அர்ச்சகராக நியமிக்கப்பட முடியும் என்று இந்த தீர்ப்பிலும் கூறப்படவில்லை. ஐந்து நீதிபதிகளால் தீர்க்கப்பட்ட சேஷம்மா வழக்கு குறுக்கே நிற்பதுதான் காரணம் என்று நினைக்கிறேன். எனினும் நேரடியாக ஜாதி குறித்த பிரச்னையை அணுகியதிலிருந்து, இந்த தீர்ப்பினை அர்ச்சகர் பிரச்னையில் ஒரு திருப்புமுனை என்றே கருத வேண்டும் (N.Adithayan Vs Travancore Devsswom Board 2002 (8) SCC 106)


சேஷம்மா வழக்கின் தீர்ப்பு, இன்றளவும் நிலுவையில் உள்ளது. எனவே தமிழக சட்ட திருத்தம் குறித்த வழக்கு, ஐந்து நீதிபதிகளுக்கு மேற்பட்ட நீதிபதிகள் அடங்கிய மன்றத்திற்கு அனுப்பப்படும் என்று நினைக்கிறேன். அதுவரை இப்போதுள்ள நிலமை நீடிக்கும் வண்ணம், இடைக்கால தடை சட்ட முறைகளின்படி நியாயமானதுதான்.

(21.08.06 அன்று உச்சநீதிமன்றம் அளித்த தடை உத்தரவு குறித்து இணையத்தில் எழுந்த விமர்சனங்களுக்கு எதிர்வினையாக எழுதப்பட்டது)

முழு தீர்ப்பு வேண்டுவோர்:Seshammal Vs State of Tamilnadu 1972 (2) SCC 11
A.S.Narayana Deekshitulu Vs State of AP 1996 (9) SCC 548
N.Adithayan Vs Travancore Devsswom Board 2002 (8) SCC 106

Sunday 29 November 2015

எபிசோடா யு சிவோத்து பெராக்கா ஜெலேயா (போஸ்னியா)

பார்க்கும் எவரையும், அவர் மனதின் ஏதாவது ஒரு மூலையில் கொஞ்சமேனும் மனிதாபிமானம் ஒட்டியிருப்பின் போதும், கவரும் சிறந்த ஒரு திரைப்படத்தைத் தயாரிக்க என்ன தேவை?

சிக்கலான கதை. அசத்தலான க்ளைமாக்ஸ்? ‘ம்ஹூம் ஒரு சம்பவம் போதும்’

மாஸ் நடிகர்கள்? ‘எதற்கு சம்பவத்தில் பங்கு கொண்ட சாதரணர்கள் போதும்’

விலையுயர்ந்த காமிராக்கள்? ‘ஏன், 2.5லட்ச ரூபாய்க்கு கிடைக்கும் கானன் 5Dக்கு என்ன குறைச்சல்’

இசை? ‘அதுதான் ஓடும் காரிலும், குழந்தைகளின் கூச்சலிலும்தான் இசையிருக்கே. தனியாக ஏன் இசையமைக்க வேண்டும்’

என்று கேட்பது போல Epizoda u zivotu beraca zeljeza (2013) என்ற போஸ்னிய படத்தை எடுத்து விருதுகளை அள்ளிக்குவித்துள்ளர் அதன் இயக்குஞர் டானிஸ் டனோவிச். இப்படி படம் எடுத்துள்ளார் என்றவுடன் ஏதோ கடைநிலை இயக்குஞர் என்று நினைத்துவிட வேண்டாம். பலரும் நன்கு அறிந்த ‘நோ மேன்ஸ் லாண்ட்’ மற்றும் நான் ஏற்கனவே இங்கு குறிப்பிட்டுள்ள ‘ட்ரையேஜ்’ ஆகிய படங்களை இயக்கிய உலகப் புகழ் பெற்ற இயக்குஞர்.

துரதிஷ்டம் பிடித்த ரோமா, ஜிப்ஸிஸ் என்றால் அனைவருக்கும் தெரிந்த இனத்தைச் சேர்ந்த நஸீபும் அவன் மனைவி செனாடாவும் அவர்கள் இரு பெண் குழந்தைகளோடு வசிப்பது போஸ்னியாவின் புறநகரில். பழைய இரும்புகளை பொறுக்கி விற்பதுதான் அவன் தினப்படி வருமானம். ‘ஏதாவது நோய் வந்து அவன் படுத்து விட்டால் அந்த குடும்பம் என்ன செய்யும்’ என்று நினைத்து முடிக்க வில்லை, செனாடாவுக்கு வயிற்று வலி. உதிரப்போக்கு.

நகர்புற மருத்துவமனைக்குச் சென்றால், அவள் வயிற்றிலுள்ள குழந்தை இறந்து போனதாகவும், மேலும் மருத்துவ சிகிச்சைக்கு பணம் கட்ட வேண்டுமென்கிறார்கள். அவனிடம் பணமுமில்லை. அவளுக்கு மருத்துவ காப்பும் இல்லை. இரண்டு முறை வீட்டிலிருந்து மருத்துவமனைக்கு கஷ்டப்பட்டு சென்றாலும் பலனில்லை. பின்னர் தொண்டு நிறுவனங்களை தொடர்பு கொண்டு அவர்கள் வீட்டுக்கு வந்து அழைத்தாலும், சோர்விலும் வெறுப்பிலும் செனாடா அவர்களுடன் செல்ல மறுத்து விடுகிறாள். இறுதியில் அவளது தம்பி மனைவியின் காப்பீட்டைக் காண்பித்து சிகிச்சை பெற்று வீட்டுக்கு திரும்பினால், கரண்டு பில் கட்டாததால் வீட்டில் மின்சாரம் கட்!


நஸீப் அவனது பழைய காரை உடைத்து அதை விற்ற பணத்தில் மனைவிக்கு மருந்தும், கரண்ட் பில்லும் கட்ட மீண்டும் வீட்டில் உற்சாகம் பொங்குவதோடு படம் முடிகிறது.

உதிரப் போக்கோடு மருத்துவத்திற்கு வழியில்லாமல் தவிக்கும் காட்சிகள் இல்லையென்றால், நடக்கும் சம்பவங்களை அப்படியே படம் பிடிக்கிறார்கள் என்றுதான் நினைத்திருப்பேன். போருக்குப் பின்னதான போஸ்னியாவில், ரோம இன மக்கள் உதாசீனப்படுத்தப்படுவதை உலகின் பார்வைக்கு மீண்டும் கொண்டு செல்வதற்காக நஸீப்-செனாடா தம்பதியினரின் அனுபவத்தை அப்படியே திரைப்படத்திற்கான எவ்வித அழகியலும் இன்றி, நாமும் அவர்களின் குடும்பத்தின் ஒருவராக நின்று நடப்பவைகளை பார்ப்பது போல இயக்கப்பட்டுள்ளது.

அதுவும் படம் முழுவதும் அந்த இரட்டைப் பெண் குழந்தைகளின் குதியாட்டமும், கொண்டாட்டமும், கூச்சலும்; சொல்வதற்கு வார்த்தைகள் இல்லை.

பிற திரைப்படங்களின் போஸ்டரைக் கூட காப்பியடிக்கும் அளவிற்கு அறிவு வறட்சியில் தவிக்கும் நம்மவர்கள்களைப் பார்த்து பழகிய கண்களுக்கு, இப்படியெல்லாம் கூடவா திரைப்படங்களை இயக்க முடியும் என்று ஆச்சரியமாக இருக்கிறது.

Monday 23 November 2015

ஸோசைட் சீச்சி நி நாரு (ஜப்பான்) 2014

“நாங்கள் சிறுவர்களாக இருக்கும் போது அப்பாதான் பட்டம் செய்வார். மூங்கில் குச்சிகளை வெட்டி, அவற்றை கயிற்றால் கட்டி அதன் மீது காகிதத்தை ஒட்டுவார். செய்தித்தாளின் காகிதத்தைத்தான் வெட்டி வாலாக வைப்பார். அந்தப் பட்டங்களை பறக்க விடுவதே சிரமம். இப்போது பட்டங்கள் அப்படியே கிடைக்கிறது. உடனடியாக பறக்கவும் செய்கிறது”

நேற்றுப் பார்த்த ஸோசைட் சீச்சி நி நாரு (Like Father, Like Son) என்ற ஜப்பானியப் படத்தில் இயல்பாக நடக்கும் இந்த உரையாடல், சின்ன வயதில் அண்ணன் செய்த பட்டங்களைப் பற்றி நானே பேசியது போல இருந்தது. ஏதோ தேர்ந்த சர்ஜன் போல அண்ணன் கையை நீட்டும் போதெல்லாம் அதில் கோந்தும் கயிறும் பிளேடும் வைப்பது மட்டும்தான் என் வேலை என்பதால், பட்டம் செய்யும் நுணுக்கம் தெரியாமலே போய் விட்டது.

இன்னமும் இரு நாட்கள் தங்கிப் போக முடியாதா? என்று கேட்கும் மகளிடம், “இங்கு இருப்பது ஏதோ ஹோட்டலில் இருப்பது போல இருக்கிறது” என்று நகரின் முக்கியப் பகுதியில் அமைந்த மருமகனின் நவீன ப்ளாட்’ பற்றி மாமியார் கூறுவதும் சென்னையில் தங்க நேரிடும் உறவினரின் குடியிருப்பைப் பற்றி நான் கூறியது போலவே இருந்தது.

மற்றபடி படம், தங்களது மகன்கள் பிறந்தவுடன் மருத்துவமனையில் மாறிப் போனது, ஆறு வருடங்கள் கழித்து தெரியவரும் இரு பெற்றோர்களைப் பற்றியது. பெர்பக்ஷனுக்கு பெயர் பெற்ற ஜப்பானியர்களின் மருத்துவமனையில் குழந்தைகள் மாறிப் போவதா, என்றால் இறுதியில் நீதிமன்றத்தில் மருத்துவமனை செவிலி தனது கணவருடனான சண்டையின் வெறுப்பில் குழந்தைகளை வேண்டுமென்றே மாற்றி வைத்து விட்டதாக சாட்சி சொல்வதும் நடக்கிறது.

பாடல்கள் இல்லை, மெல்ல நகரும் கதை என்பதை தவிர்த்து விட்டால் மணிரத்தினம், வஸந்த் படம் பார்ப்பது போல இருக்கலாம். வணிகச் சமாச்சாரங்களைத் எடிட் செய்து ‘விருது’க்காக தனியே ஒரு வெர்ஷன் தயாரிக்க முனைந்திருந்தால் மகேந்திரன், பாலுமகேந்திராவிலிருந்து தொண்ணூறுகளின் மற்ற சில தமிழ்ப்பட இயக்குஞர்கள் உலக அளவில் பெயர் வாங்கியிருக்கலாம்.

விருதுகளால் பலன் என்னவா, இந்தப் படத்தைப் பார்த்த ஸ்பீல்பெர்க்கின் பரிந்துரையில் ட்ரீம்வொர்க்ஸ் இதன் ஹாலிவுட் உருமாற்ற உரிமைகளை வாங்கியுள்ளது.

Sunday 22 November 2015

கர் வாப்ஸி...

இன்று காலை கோர்ட்டுக்கு போனவன், போன இடம் திருமோகூர் காளமேகப் பெருமாள் கோவில்.

சீனியர் யாரிடமோ கோவிலுக்குப் போகலாமா என்று கேட்டுக் கொண்டிருந்தார். சில நாட்களாகவே ஏதோ சஞ்சலமாக உணர்ந்து கொண்டிந்ததால் ஒரு மாறுதலுக்கு, ‘சார், நான் கூட்டிப் போகிறேன்’ என்று கிளம்பி விட்டேன்.

கோவில்களுக்கு போவதிலோ அல்லது பூஜைகளில் கலந்து கொள்வதிலோ எனக்குள்ள பிரச்னை, எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பது தெரியாமலிருப்பதுதான்.

கடந்த மாதம் தெருமுனை ஆட்டோ ஓட்டுநர்கள் நடத்திய ஆயுத பூஜையில் கலந்து கொண்ட போதும் அப்படித்தான், எதையாவது தவறுதலாக செய்து அவர்களுக்கு தர்மசங்கடத்தை ஏற்ப்படுத்தி விடுவேனோ என்றிருந்தது.

ஆனால் சீனியர் கூட செல்லும் போது பிரச்னையிருக்காது. நம் கையைப் பிடித்தபடி அப்படியே கூட்டிப் போய்விடுவார். அப்படியும் ஒரு கர்ப்பக்கிரகத்திலிருந்து வெளியே வரும் போது வெண்கல தகடு வேய்ந்த படி மீது ஏறியிறங்கியதில் ஏற்ப்பட்ட சத்தத்தில் ‘படி மீது ஏறாமல் தாண்டி வர வேண்டுமோ’ என்று பயந்து கொண்டிருந்தேன். சீனியர் அருகிலிருந்ததாலோ அல்லது கெத்’தாக தீபாராதனை தட்டில் நான் போட்ட நூறு ரூபாயாலோ குருக்கள் ஏதும் சொல்லவில்லை.

தொடர்ந்து ஒவ்வொரு சந்நியாகப் போய் அங்கும் பூஜை தட்டில் பணம் என்று சீனியர் போட்ட போதுதான் ‘அடடே மொத்தமாகப் ஒரே இடத்தில் போட்டு விட்டோமோ’ என்றிருந்தது. ஆனால், பூஜை செய்த மாலை, பூக்கள் நிரம்பிய தட்டினை இரு கைகளிலும் ஏந்திக் கொண்டதால் கைகளை எப்படி வைத்துக் கொள்வது என்ற பிரச்னையும் இல்லை. இவன் காசும் எடுக்க மாட்டான் என்று அவர்களாகவே புரிந்து கொண்டது போலவும் இருந்தது.

அடுத்த சங்கடம் சீனியர் அவருடைய நட்சத்திரம் எல்லாம் சொல்லி மந்திரம் சொன்ன பின்னர் என்னுடைய நட்சத்திரம் என்ன என்று கேட்டு நான் தயங்கும் அந்த ஒரு வினாடி நேரம். சீனியரின் கண்களிலேயே புரிந்து கொண்டது போல தொடர்ந்து எனக்கும் நடந்த பிரார்த்தனையில் ‘சுப மங்களம் உண்டாகட்டும்’ என்ற வார்த்தையில் சற்று குழம்பிப் போனேன். ஏனெனில், எங்களுக்கு முன்னதாக வந்த சின்னப் பெண்ணை ‘சீக்கிரம் விவாகம் நடக்கும்’ என்ற முறையில் வாழ்த்தி பிரகாரத்தை 12 முறை சுற்றி வாருங்கள் என்று சொன்னதில் அந்த பெண்ணின் முகத்தின் தோன்றியிருந்த வெட்கத்தையும் புன்னகையையும் காண கண் கோடி வேணடியிருந்தது
.
சார், ‘மங்களம் உண்டாகட்டும் என்றால், எல்லாம் சுபமாக நடக்கும் என்று அர்த்தம்’ என்றார்.

சொன்னது மாதிரி ‘இன்று என்னை வறுத்து எடுக்கப் போகிறார்’ என்று நினைத்துக் கொண்டிருந்த வழக்கில் நீதிபதி இராமசுப்பிரமணியம் மத்தியானம் எதுவுமே கேட்காமல் ஸ்டே கொடுத்து விட்டார்.

ஆஞ்சநேயர் சந்நிதியில் தமிழிலேயே விளக்கமெல்லாம் கூறி தமிழிலிலேயே அர்ச்சனை செய்தது கேட்க நன்றாக இருந்தது. பூஜை செய்த மாலையை சார் எனக்கு போடச் சொன்னார். அப்பவும் மாலையை போட்டுக்கணுமா, அல்லது அரசியல்வாதிங்க மாதிரி போடுறதுக்கு முன்னாலேயே லாவகமா கையில வாங்கிக்கணுமாங்கற குழப்பம். கண்ணப்ப நாயனாரை மனசுல நினைச்சுகிட்டு அப்படியே போட்டுக்கிட்டேன்.

கோவிலுக்கு உள்ளேயும் வெளியேயும் ஒரிருவரைத் தவிர வேறு பக்தர்கள் இல்லை. கோவிலும் அவ்வளவு சுத்தம். அதுவும் வெளியே இருந்த தெப்பக்குளமும் அதற்கு அப்பால் தெரிந்த யானை மலையும் கொள்ளை அழகு.

கோர்ட்டிலிருந்து பத்து நிமிட தூரத்தில் இவ்வளவு ரம்மியமும் அழகும் முக்கியமாக அமைதியும். இந்து நண்பர்கள் கொடுத்து வைத்தவர்கள்தாம்.

சாருக்கு க்ளாஸ் மேட் இல்லாத ஊரே இருக்காது. ‘இங்க ஒரு ப்ரண்ட் இருக்காண்டா, இந்தக் கோவில் பேஷ்கர். பாத்துட்டு போயிருவோம்’ என்றதால் அவரை வீட்டு வாசலில் இறக்கி விட்டு விட்டு காரை திருப்பிக் கொண்டு வந்து நிறுத்தினேன்.

மிகவும் பலவீனமாக இருந்த நண்பனிடம் சார் சத்தமாக ‘டேய் எதாவது வேணுமாடா……நான், ஏதாவது உனக்கு பண்ணணுமாடா’ என்று கேட்டுக் கொண்டிருந்தது வெளியே தெரு வரை கேட்டது.

‘எனக்கு என்னடா வேணும். உன் அன்பு இருந்தா போதும்டா’

ஆமா, இல்ல...

Sunday 15 November 2015

வாவியன் (துருக்கி) 2009

ஏற்கனவே ஒரு முறை சொல்லியிருக்கிறேன். ‘ரோட் டு அனடோலியா’ என்ற படம் பார்த்த பிறகு திரைப்படங்கள் மீதான காதலை ஈரானிலிருந்து துருக்கிக்கு மாற்றிக் கொண்டேன். இரானிய இயக்குஞர்களுக்கு இல்லாத சுதந்திரம் துருக்கியில் இருப்பதால், அவர்களது படங்களில், காட்சிகளில் அவ்வளவு இல்லையென்றாலும் கதையில் சற்றுத் துணிச்சல் இருக்கும்.

‘வாவியன்’ என்றால் மின் விளக்கு விசிறி போன்றவற்றை இரு சுவிட்சுகளால் இயக்கும் வசதி’ என்கிறான் கதைநாயகன்/வில்லன் என்கிய்ன் குனாதின். கதைக்கும் நாயகன் அவர்தாம். ஆம். கதாசிரியரும் அவர்தாம்.

மனைவியின் பணத்துக்காக ஆசைப்பட்டு அவளை கொலை செய்ய முயலும் த்ரில்லிங்'கான கதையை எழுதியதால் பாக்யராஜ் அவரே நடிக்கவில்லையா, அது போல ஒரு கதையை எழுதி விட்டு இவரும் தானே நடிக்கவில்லை என்றால் எப்படி?

படத்தின் தொடக்கத்தில் அவனது காரில், ஓட்டுநர் சுவிட்ச் போட்டால் பக்கவாட்டில் தானாகவே திறந்து மூடும் கதவை பொருத்துகிறான். எனக்கு கூட ‘அட இப்படி ஆட்டோமேட்டிக் கதவு உள்ள கார்கள் ஏன் இங்கு இல்லை’ என்று தோன்றியது. படத்தைப் பார்த்ததும்தான் ஏன் இல்லை என்று புரிந்தது.

கதாநாயகன் எப்படியாவது மனைவியை தீர்த்துக் கட்ட வழி பார்த்து அதை நிறைவேற்றினாலும், மனைவி இரண்டு நாட்களில் தப்பித்து வருகிறார் என்றாலும் அநியாயத்துக்கு எண்பதுகளின் தமிழ்ப்பட கதாநாயகிகளைப் போல கணவன் மேல் பாசமோ பாசமாக பொறுத்துப் போகிறார். ஒரு கட்டத்தில் நாமே திரைக்குள் போய் அவனை நாலு சாத்து சாத்தி விட்டு வரலாமா என்றிருக்கிறது.

இதற்கு தமிழ்ப்படமே பார்க்கலாமே என்றால், பார்க்கலாம்தான். ஆனால், தமிழ்ப்படங்களில் இத்தனை கொடுமைகள் செய்யும் கணவன் ‘தடா’லென திருந்தி விடுவான் அல்லது செத்து விடுவான். அப்படியில்லாமல், கணவனது பொருளாதார பிரச்னைகள் மனைவி மூலமாகத் தீர்கையில், எவ்வித மன்னிப்புமின்றி கண்ணீருமின்றி அன்பான தந்தையாகவும் சற்று அனுசரணையான கணவனாகவும் இயல்பாக குடும்பத்தில் தன்னை இணைத்துக் கொள்கிறான்.

இயக்குஞர்கள் இருவர், சகோதரர்கள். ஹாலிவுட்டின் கோயன் சகோதரர்கள் போன்று துருக்கியில் டேலான் சகோதரர்களாம். (ப்ளாக்) காமெடி ரகப் படமென்றாலும், கோயர் சகோதரர்களின் படம் போன்றே ஏதோ சில்லிட வைக்கும் அமானுஷ்யமான பய உணர்வை படம் நெடுக இவர்களாலும் ஊட்ட முடிகிறது.

தமிழ்ப்படங்கள் பிடிக்கும் எவருக்கும் இந்தப் படம் பிடிக்கும்...

Wednesday 11 November 2015

LIGHT A LIGHT FOR THE UNSEEN


The concerns of the High Court, in directing the gates of the subordinate courts to be closed by 7PM is understandable, in the light of the complaints that few of the Advocates are misusing their chambers by indulging in activities, which are not purely professional. But aren’t our forefathers left us a message, tested by experience that one cannot throw the baby with the bathwater; we have a Tamil equivalent in mocking the one attempting to burn down the house for the fear of bugs.

I have never been within the court complex beyond court timings barring an odd exception, when I had to wait for an urgent order copy; it was decades ago and the Madras High court building was in its innocence best.

I am fortunate. I don’t have to depend upon the chamber facility to carryon my profession. I was able to find Seniors, who had offices of their own having enough room to spread our furniture, books and case bundles. Our clients felt at ease in able to sit before us for briefing. Even when I came out of my Senior’s house, I did not find wanting as I could rent an office of my own.

But I see many advocates, particularly in subordinate courts who are not so fortunate. They don’t have an uncle who could put them in some office of repute as mine did. Not only their parents, even their teachers could not teach or train them enough in English to impress a Senior on their own. Whom they could end up last is a person, who would not be in a position to sustain a Junior’s needs; even the bare minimum.

They have to come out within few years into their own practice as their parents, living in some village or at best a small town nearby would be resting their hopes on them to earn something. The motorbikes, mobile phones and internet are of great help but still they need a place with a chair to sit and a stool at least for their client; a shelf even if it is a shared one to keep the bundles. These are luxuries in the room or the house they have rented to live.
I see many such Advocates, with an urge to come up and make a decent life for themselves; though the odds keeping them chained at the bottom are many. Chambers, constructed by the Government is their only hope to shed some of those chains.

We, the fortunate see chambers as a place to rest in between the cases; they see it as their office. This measure of driving them out of their chambers after 7 is in effect deprives them of their livelihood; their clients’ too.

Secondly I sincerely feel, with all due respects to those who have taken this decision that this measure of squeezing all life from the court campus beyond court hours will not help in curbing the menace as they intend.

As long as the chambers are allowed to function at night hours, they would present a lively place with Advocates, Clerks, Typists and litigants everywhere. If Advocates are encouraged to run their offices with better facilities, particularly by lighting the place bright, they themselves would guard it against getting out of control. On the other hand close it down into dark, there are people still looking for an opportunity to exploit the darkness within the campus; mark my words the day is not far off for an embarrassing scandal to break out.

I studied law in Madurai 25 years ago, when anyone can walk through Madurai city at any hour in the night without having any fear in mind. In places like Simmakkal or Periyar Bus-stand even woman don’t feel alone. Thanks to effective steps taken by the Police in the name of curbing crimes, Madurai is successfully snuffed out of its night life; gone are the days we enjoyed masala tea and butter bun in any roadside tea-shop with Illayaraaja playing for us in the middle of the night and well into early morning.

It was not few years ago, the bar and bench were into a debate as to the establishment of Evening Courts. Gujarat pioneered and few States followed by framing necessary Rules. It is my fervent appeal, this is the best time to bring in any novel idea and by making use of the situation, the High Court may seriously think of establishing Evening Courts in District Headquarters; the experiences in other States may help.

If not otherwise, at least in the name of establishing Evening Courts the High Court can help so many less fortunate Advocates, who could not find or rent an office of their own but only to depend upon the Chambers provided by the Government to build their legal practice.

Light a Light for the Unseen
Bring them back into their livelihood.

தீபாவளி வாழ்த்து...

முப்பது வருடங்களுக்கு முன்னர் பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்த சிறுமி காவலர் ஒருவரால் பலாத்காரம் செய்யப்பட்டார் என்ற செய்தி நகர மக்கள் அனைவரையும் உலுக்கியது என்பதில் வியப்பிருக்காது. மேலும் நகரம் என்றாலும் அது சிறிய ஊர்தான். பேருந்து நிலையமும் மிகச்சிறியது. ஆனால் அதன் அளவிற்கு சம்பந்தமேயில்லாது தினமும் காலையும் மாலையும் நூற்றுக்கணக்கான பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள் அங்கு கூடுவதை வைத்து மக்களின் அதிர்ச்சியை புரிந்து கொள்ளலாம்.


நகரின் ஒட்டு மொத்த வெறுப்பும் கைது செய்யப்பட்டவர் மீது இருக்க, அவருக்காக பிணை மனு தாக்கல் செய்தார் அந்த வக்கீல். ஏற்கனவே ‘பாரி’ல் அவரை யாருக்கும் பிடிக்காது. அனைவரின் கவனமும் பிணை மனு மீதான விசாரணையில்


நீதிபதி வக்கீலைப் பார்த்தார், இதில் பேசுவதற்கு என்ன இருக்கிறது என்பது போல...


’த பிராஸிக்யூரிக்ஸ் கேர்ல் இஸ் ஆஃப் இம்மாரல் கேரக்டர் யுவர் ஆனர்’ என்று ஆரம்பித்தார். நீதிபதி புருவத்தை உயர்த்த,


‘எப் ஐ ஆரிலேயே அப்படித்தான் இருக்கிறது’ என்று முதல் தகவல் அறிக்கையை கையிலெடுக்க நீதிபதி இப்போது போலீஸை முறைத்தார்.


’இதோ வாசிக்கிறேன் யுவர் ஆனர், அந்தப் பெண் சொல்கிறாள் ‘என் மாமா என்னை தீய வழிக்கு அழைத்துச் செல்வதற்காக பஸ் ஸ்டாண்டில் நின்று கொண்டிருந்தார். அப்போது...’


நீதிபதி மேலும் கேட்க விரும்பாமல், பிராஸிகியூட்டரை ‘இது என்ன’ என்பது போல பார்த்தார்.


அரசு வழக்குரைஞர் சற்று குழப்பத்துடன் எப் ஐ ஆரைப் பார்த்தவர் பின்னர் எழுந்து, ‘யுவர் ஆனர், நான் வாசிக்கிறேன் ‘என் மாமா என்னை தீபாவளிக்கு அழைத்துச் செல்வதற்காக பஸ் ஸ்டாண்டில் நின்று கொண்டிருந்தார்’ என்று இருக்கிறது’ எனவும் நீதிபதி வக்கீலைப் பார்த்த பார்வையின் வெறுப்பில் அவரை பின்னர் நீதிமன்றத்தில் பார்ப்பதை விட ராமாயணம், மகாபாரதம் என்று கதாகாலாட்சேப கூட்டங்களில்தான் பார்க்க முடிந்ததாம்...

Thursday 5 November 2015

தி விசில் ப்ளோயர் 2010

ஆப்கானிஸ்தான் அதிபர் ‘ஹமீது கர்சாய்’க்கு பாதுகாப்பளிப்பது, ‘டின்கார்ப்’ என்ற அமெரிக்க நிறுவனம். ஏதோ தேச சேவையல்ல. டின்கார்ப் பாதுகாப்பு சம்பந்தப்பட்ட சேவையளிக்கும் அமெரிக்க நிறுவனம். வருட வருமானம் 3 பில்லியன் டாலர்களைத் தாண்டும்.

ஈராக் காவலர்களுக்கு பயிற்சியளிப்பதும் டின்கார்ப்தான். மொத்தத்தில் அமெரிக்க ராணுவத் தொடர்பு எங்கெல்லாம் இருக்கிறதோ அங்கெல்லாம், டின்கார்ப்பின் ஒப்பந்த சேவையிருக்கும்.

போஸ்னியா!

அங்கில்லாமலா? போஸ்னிய யுத்தத்திற்கு பின்பு அங்கு பணிபுரிய சென்ற காத்தரீன் போல்காவோச் என்ற அமெரிக்க பெண் காவலர், அங்கு டின்கார்ப் நிறுவன ஊழியர்கள் இளம்பெண்களை செக்ஸ் அடிமைகளாக பயன்படுத்தும் human traffickingக்கு துணை போவதையும் ஈடுபடுவதையும் கண்டு புகார் கூறியதால் வேலையிலிருந்து நீக்கப்படுகிறார். பின்னர் அவர் பிபிசி நிறுவனம் மூலம் இதனை உலகின் கவனத்திற்கு கொண்டு வந்தாலும்….சில ஊழியர்கள் திருப்பி அவர்கள் நாட்டுக்கே திருப்பி அனுப்பப்பட்டதைத் தவிர வேறு பலன் இல்லை.

கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் நிலவும் ட்ராபிக்கிங் பற்றி படமெடுக்க வேண்டும் என்று நினைத்த லாரீஸா கோண்ராக்கி என்ற பெண்மணி எப்படி எடுப்பது என்று திகைத்து காத்தரீன் அனுபவத்தை எடுக்கலாம் என்று எடுத்த படம் நேற்று பார்த்த ‘தி விசில் ப்ளோயர்’

பல விருதுகளை அள்ளிக்குவித்தாலும் ட்ராமாட்டிக்கான முடிவு இல்லாமல், ஏதும் இல்லாமல், வெறுமே முடிந்து போனதானாலோ அல்லது வேறு வகையில் திரைக்கதை வடிவமைக்கப்பட்டிருக்கலாம் என்று நான் நினைத்ததாலோ, இப்படத்தை பார்த்துதானாக வேண்டும் என்று கூற மாட்டேன்.

மதுரை
05/11/2013

நானும் ரவுடிதான் (தமிழ்) 2015

‘நானும் ரவுடிதான்’ நல்ல காமெடின்னு கேள்விப்பட்ட தைரியத்தில் போனால், ஏமாற்றமில்லை. இறுதிக் காட்சிகளில் புத்திசாலித்தனம் இருந்தாலும் முதல் பாதியில் தியேட்டரில் சுற்றியிருந்த அனைவரும் குலுங்கிச் சிரித்த சில காட்சிகளில் அசட்டுத்தனமாக உணர்ந்து கொண்டிருந்தேன்.


குழந்தைகள் அசட்டுத்தனங்களை உணர்வதில்லை. அவர்களது சிரிப்பில் எனக்கும் மகிழ்ச்சிதான் என்றாலும், அவ்வப்போது தலைகாட்டிய வசனங்கள் சிலவற்றின் ‘இரண்டாவது’ அர்த்தத்தை புரிந்து கொண்டதால் சிரிக்கிறார்களோ என்று பயமாக இருந்தது.


அதுவும் கடைசிக்காட்சியில், யாருமே வசனத்தின் விபரீதத்தில் நெளிந்ததாகத் தெரியவில்லை.


தமிழில் எனக்குத் தெரிந்து, இரட்டை அர்த்த வசனங்களுக்காக தணிக்கைச் சான்றிதழை ரத்து செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது எஸ் ஜே சூர்யாவின் ‘நியூ’ படத்திற்குத்தான்.


நியூ பட தீர்ப்பில் அந்தப் படத்தை தடை செய்வதற்கான காட்சிகளை ஒவ்வொன்றாக ஆங்கிலத்தில் நீதிபதிகள் விளக்குவதைப் படிக்கையில் வேடிக்கையாக இருக்கிறது. அதுவும் வைரமுத்து பாடல் ஒன்றின் வரிகளை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து அர்த்தம் கொள்கையில், வாலி பாடல்கள் சிலவற்றையும் இப்படி மொழி பெயர்த்தால் எப்படியிருக்கும் என்றிருக்கிறது.


வெள்ளிக்கிழமை, பெட்ரோல் பங்க் உரிமங்கள் வழங்குவதில் பெண்களுக்கும் எஸ்ஸி எஸ்டி பிரிவினருக்கும் உள்ள ஒதுக்கீட்டினை வாபஸ் பெற்றது பற்றிய வழக்கு. வாதத்தின் இடையில் வழக்குரைஞர் மோகன் தற்செயலாகக் கூறிய பதிலின் மற்றொரு விபரீதமான அர்த்தத்தை அந்த நீதிமன்றத்தில் புரிந்து கொண்டது, அதைப் பற்றி உடனடியாக கமெண்ட் அடித்த நீதிபதியும், சத்தமாக சிரித்த நானும்தான். எதிர் வழக்குரைஞர் ஜிஆர்எஸ் வழக்கமாக மிஸ் பண்ண மாட்டார். மோகன் மீது அதீத கோபத்திலிருந்தார். அதனாலோ என்னவோ, முகத்தில் புன்னகை இல்லை.


எப்படியோ, நியூ படம் தடை செய்யப்பட்ட 2005லிருந்து வெகுதூரம் பயணித்து விட்டோம் என்று நேற்று படம் பார்க்கும் போது நினைத்தேன்.


அப்புறமும் ஏன் பாடகர் கோவனை சிறையிலடைக்கிறார்கள்?

பாபநாசம் (தமிழ்) 2015

‘பாபநாசம்’ படத்தில் அதி தீவிர திரைப்பட ரசிகரான கமல்ஹாசன் ஒரு திரைக்கதையைப் போலவே ஆகஸ்ட்  2ம் தேதி என்ற நாளைச் சுற்றி கற்பனையாக நிகழ்ச்சிகளை உருவாக்கி காவலர்களை நம்ப வைத்துள்ளார் என்று காவல் அதிகாரியாக வரும் ஆஷா சரத் கூறுவார்.


ஹாலிவுட்டின் சிறந்த பத்து படங்கள் என்று பட்டியலிட்டால், பல திரைப்பட ரசிகர்களின் பட்டியல் இடம் பெறக்கூடிய படம் ’12 ஆங்ரி மென்’ என்ற பெயரில் 1957ம் ஆண்டு வெளி வந்த திரைப்படம்.


கொலை வழக்கு ஒன்றின் சாட்சி விசாரணை முடிந்து, முடிவெடுப்பதற்காக பன்னிரண்டு ஜூரர்கள் அறைக்குள் செல்வதோடு ஆரம்பிக்கும் படம் ‘குற்றவாளி இல்லை’ என்ற முடிவோடு அறையிலிருந்து வெளிவருவதோடு முடியும். படத்தின் 99 சதவீத நேரமும் அந்த அறைக்குள் மட்டும் நிகழ்வதுதான் சிறப்பு.


ஆனாலும் படம் முழுவதும் விறுவிறுப்பாகவே இருக்கும்.


‘குற்றவாளி இல்லை’ என்று முதலிலேயே நம்பும் ஒரே ஒரு ஜூரர் மற்ற ஜூரர்கள் அனைவரின் மனதை எவ்வாறு மாற்றுகிறார் என்பதுதான் திரைக்கதை. படம் முழுக்க அவர் பேசிக் கொண்டே இருந்தால் எப்படி விறுவிறுப்பாக இருக்கும் என்று நினைத்தால், அவர் பேசுவது வெறும் விவாதமல்ல. மாறாக குறுக்கு விசாரணை.


ஆம். நீதிமன்றத்தில் சாட்சிகளிடம் நடந்திருக்க வேண்டிய குறுக்கு விசாரணையை அவர் ஜூரர்களிடம் நடத்துவார்.


வெறும் ‘கோர்ட் ரூம் ட்ராமா’வாக பத்தோடு பதினொன்றாக இருந்திருக்க வேண்டிய ஒரு படத்தை புத்திசாலித்தனமான திரைக்கதை மூலம் ஜூரர்கள் அறைக்குள் நடத்தி ஏதோ வித்தியாசமான படம் போல ஒட்டு மொத்த ரசிகர்களையும் நம்ப வைத்துள்ளார்கள் என்று படம் பார்த்த எனக்குத் தோன்றியது.


பாபநாசம் படம் முடிந்த பின்னர் எனக்கு ஆஷா சரத் சொன்னதும், 12 ஆங்ரி மென் படமும் ஞாபகத்துக்கு வந்தது. ஏனென்றால் பாபநாசத்திலும் தேவையில்லாத ஒன்றைச் சுற்றி புத்திசாலித்தனமான திரைக்கதையை உருவாக்கி நம்மை நம்ப வைத்துள்ளார்களோ என்ற சந்தேகம் எழுந்தது.


அவ்வளவு ரிஸ்க் எடுத்து, இறந்தவனின் காரைக் கொண்டு எங்கோ தள்ளுவதைக் கூட விடுங்கள், ஏன் அப்படி மெனக்கெட்டு அக்டோபர் 2ம் தேதி ஊரில் இல்லாதது போல ஆவணங்களைத் திரட்டி காவலர்களோடு கண்ணாமூச்சி ஆட வேண்டும் என்ற கேள்வி எழுவது எனக்கு மட்டும்தானா?


இந்தக் கேள்வி புடிக்காத கமல் ரசிகர்களுக்கு.


பேருந்து நடத்துநர் காசு வாங்க மறுத்து பணத்தை கமலிடமே திருப்பிக் கொடுக்கும் காட்சியில் பக்கத்தில் அமர்ந்திருக்கும் கெளதமி முகத்தில் தோன்றும் பெருமித உணர்வையும் சிறு புன்னகையையும் பலர் கவனித்திருக்க வாய்ப்பில்லை. விநாடி நேரம்தான், அதுவும் அவர் முகம் சற்று அவுட் ஆஃப் போகஸில் தெரியும். இயக்குஞர் கூட ‘நீங்க அதுக்கு இப்படி எக்ஸ்பிரஷன் கொடுக்குறீங்க’ன்னு சொல்லியிருப்பாரான்னு தெரியல.


உண்மையாகவே மனைவியாக இருப்பவருக்குத்தான் அப்படி ஒரு இயல்பான ரியாக்க்ஷன் சாத்தியம்.

Wednesday 28 October 2015

கோர்ட் (மராத்தி) 2014

“கோர்ட்’னு ஒரு மராத்திப் படம் வந்துருக்கு. அதப் பாரேன்”


மாவட்ட நீதிபதி ஒருவரிடம் பேசிக் கொண்டிருக்கையில்தான் இப்படிக் குறிப்பிட்டேன். நமது நீதிபதிகள் இந்த மாதிரி படங்களைப் பார்த்தால் எப்படி உணர்வார்கள் என்பதைத் தெரிந்து கொள்ள ஆர்வமாக இருந்தது.


“பார்த்து விட்டேன். (ஜுடீசியல்) அகாடெமியில் போட்டார்கள்”


“அகாடெமியிலா, சினிமாவா?” சந்தேகமாயிருந்தது. இருவருடங்களுக்கு முன்னர் அகாடெமி சென்றிருந்த பொழுது இயக்குஞரிடம் ‘இப்படி மதிய நேரத்திலும் க்ளாஸ் என்றால் யார் கவனிப்பார்கள்?, ஏதாவது கேம்ஸ் அல்லது சினிமா போடுங்களேன்’ என்று கூறியது நினைக்கு வந்தது.


தொடர்ந்து படம் குறித்து பேசவில்லை என்றாலும், இந்த சினிமாவைப் பார்க்க வைத்த பின் நீதிபதிகளை படம் சொல்லும் கதையைக் குறித்து விவாதிக்க வைத்தால் விவாதம் படத்தை விட சுவராசியமாக இருக்கலாம் என்று ஏனோ மனதுக்குள் நினைத்தேன்.


எழுச்சிப் பாடல்களால் விளிம்புநிலை மக்களின் உணர்ச்சிகளை தட்டி எழுப்பும் போராளி ஒருவர் மீது அரசு வெவ்வேறு பிரிவுகளில் தொடர்ந்து வழக்கு தொடர்வதும், அவற்றை நீதிமன்றங்கள் இயந்திரத்தனமாக கையாளுவதையும் அடிப்படையாகக் கொண்டு அமைக்கப்பட்ட மெல்ல நகரும் திரைக்கதை.


போரடிக்காதா, என்று நினைத்தால் தவறு. மிகவும் சுவராசியமான படம்.


இந்திய நீதித்துறை குறைபாடுகளைச் சுற்றியே படம் முழுக்கவும் பின்னப்பட்டுள்ளதான தோற்றம் தந்தாலும், அதன் மற்ற சில காட்சிகளின் பின்னுள்ள கதை என்ன என்று படம் பார்த்த சில நாட்களுக்கு நம் மனதில் அசை போட வைக்கும்.


அந்த வகையில் சிறந்த சினிமாவை தனது முதல் படத்திலேயே தந்துள்ள இளம் இயக்குஞரான சைதன்ய தம்ஹானே நீதிமன்ற நடவடிக்கைகளை, முக்கியமாக நீதிபதி, வழக்குரைஞர்கள், வழக்காடிகளின் உடல்மொழியினைப் பற்றி நன்கு ஆராய்ச்சி செய்திருந்தாலும், குற்றவியல் நடைமுறைகளில் முழுக்கவும் கோட்டை விட்டுள்ளார். நமது தமிழ் திரைப்படங்களின் ‘கோர்ட் சீன்’களைப் போலவே நினைத்த நேரத்தில், இஷ்டத்திற்கு ஆளாளுக்கு சாட்சிகளை விசாரிப்பதும், அவ்வளவுக்கு பின்னரும் பெயிலுக்குத்தான் இத்தனை மெனக்கெடல் என்பதும் வழக்குரைஞர்களுக்கு வேடிக்கையாக இருக்கலாம்.


‘இது ஒரு ‘ப்ளாக் காமெடி’ ரகம். இப்படியெல்லாமா ஆராய்வது?’ என்பவர்களுக்கு நான் பரிந்துரைக்க விரும்புவது ஹாலிவுட்டின் ‘மை கசின் வின்னி’ மற்றும் ‘சிக்காகோ’. இரண்டுமே கொலை வழக்கினைப் பற்றிய படம் என்றாலும் முன்னது முழுக்கவும் ‘அக்மார்க்’ காமெடி பின்னது பாதி வசனத்தை பாட்டாகவே பாடும் ம்யூசிகல்.


மாயாஜாலக் கதை போல இவ்விரு படங்களிலும் எப்படி வேண்டுமானாலும் நீதிமன்ற நடைமுறைகளை அமைத்திருக்கலாம் என்றாலும், இரு படத்திலும் குற்றவியல் நடைமுறை அத்தனை ‘ஆத்தென்டிக்’காக இருக்கும்.


படத்தை நமது நீதிபதிகள் பார்த்துள்ளார்களா என்பது தெரியவில்லை. ஆனால், உத்தர பிரதேச நீதிபதி ஒருவர் பார்த்துள்ளார். ‘நீங்க என்னடா எதுக்கெடுத்தாலும் ஏழைங்க மேல மட்டும் செடிஷன் கேஸ் போடுவது. நான் போடுறேன் பார்’னு ‘டைரானி ஆஃப் த அன் எலக்டட்’னு சொன்ன ஒத்த வரிக்காக பைனான்ஸ் மினிஸ்டர் மேலேயே தேசத் துரோக வழக்குப் போட்டுட்டார்.

Thursday 22 October 2015

IN DEFENSE OF COLLEGIUM


Is it paradoxical, a judgment that too of the final arbiter, expected to set at rest all controversies, doubts, claims and apprehensions on a particular issue is generating further debates, arguments, points, counter-points; even more than what existed when the issue was seized for adjudication.

It is embarrassing for any lawyer that it has become a routine; judicial findings in high profile cases, the moment they are decreed, subjected to public scrutiny of a kind, we have never witnessed before; may be because of the reason that finding a media has become possible for anyone to standup and be expressed. For the past one week we have been poured with opinions on the NJAC judgment from all possible angles by the retired judges, jurists, lawyers, academicians, ministers, politicians, commoners leaving only the sitting judges as exceptions.

Ominous signs portending final voice of the highest court is not inspiring the confidence of all, or are they only symptoms of the emergence of an informed and vibrant democracy?

Even scientific theories on the properties of inanimate matters are scrutinized, proved to be wrong later; but it took time to improvise on the theories propounded. On the other hand, the judicial pronouncements particularly in this NJAC case, even before the ink dried on the paper, everyone from the high decibel electronic media to the cerebral print media and the lowly social media have joined in the chorus to chip out where it is lacking; forget to add political platforms.

Well, it is said that a debate, particularly in India never dies; certainly not by the sword of Supreme Court. Neither a sedition charge from a Magistrate can shut an argument, which unites us as a nation as propounded by Dr.Amartya Sen; disagree, he will be proved right.

Leave aside the precedents, laws involved and their complex interpretations, what we need is to have a solution to the vexed problem of selecting the best of the candidates as Judges. However the real problem is that there isn’t any such solution, which I feel the others have not taken note of; definitely not in constitution of NJAC.

If it is only in our country, where the Judges select judges, let that be; let others follow our model as a path towards a judiciary independent of the executive to the maximum. Judges tempered to be apolitical by the nature of their work and they not answerable to any electorate could form a better mind to choose candidates from the wide spectrum of ideologies. The judicial administration will be dynamic only when the law is allowed to be interpreted by judges having different beliefs and opinions. Executive, if allowed to have a say, I have no doubt may restrict the selection only to those candidates having mindsets of that of the ruling class by eliminating anyone they find unpalatable; a recent example we see in the case of Mr.Gopal Subramaniam’s miscarried selection.
Unfortunate, Chief Justice R M Lodha was on tour, denied an opportunity to persuade Mr.Gopal Subramaniam to withdraw. With NJAC he would not get any such opportunity at all.

Transparency, the word thrown ad nauseam to attack collegium is quite misplaced. It dogged my mind few years back to the point of pain, as to what could be the transparency in real terms when the Advocates in Chennai were protesting the recommendation of the candidates. If it meant the secrecy in the selection process, I too felt awkward and uncomfortable then. Judges unlike civil servants are not trained in facing criticisms, protests and public scrutiny and are expected to be more sensitive to publicly discussing their decision. Well, it may be true that they could not defend the attacks against their judgments but such discretion need not be restricted in their administrative actions, particularly when they do a public duty of selecting Judges. I wished sincerely then when the protests Madras High Court reached its peak, the High Court to call for a public hearing of the Advocates Associations by publishing the list of candidates chosen and the credentials submitted by the respective candidates.

Even under NJAC, this could be the only transparency possible and not a bit more. Except saying, a judge is to be a man of intelligence, discretion and honesty we cannot devise a scale to measure. Neither there is a guarantee how a man would conduct himself once he has become a Judge. We have seen advocates exhibiting every trick up their sleeve to save their case, coming upon more heavily on such practice once they become Judges.

Judgeship, particularly in High Courts or Supreme Court is not a promotion from the position of an Advocate. Except a kind of a honor of doing the God’s duty, it is only a disadvantage with which one has to live through. Probably, law could be the only profession, where one can find candidates choosing for a career change agreeing for a reduction of their monetary remuneration by 50% to 90% or even more in some cases; surely something lawyers can be proud of.

It is illogical to place the selection of judges on the same scale as in the selection of any other government employee. Judgeship will have to compromise its honor and prestige if we opt for inviting applications from the bar instead of inviting lawyers to the bench. I feel not many having aspirations to become a judge would like to make an application and to go through a selection process of exam, interview or even public hearing, subjecting themselves to embarrassment and sometimes humiliation. If framing a kind of such selection process is transparency, I fear it will spell doom for the aura attached to the judiciary, reducing it to any other government job. Besides, such process will invite litigations, challenging the selection, rendering the elevation a cumbersome process every time.

The main criticism against the Collegium is that it is dogged with nepotism at the cost of deserving candidates. In my opinion neither NJAC will cure this malady. Even with NJAC, it is the Judges of a High Court who will turn out to be the best persons to recommend candidates as they have the firsthand knowledge of the intelligence, discretion and honesty of the advocates practicing in their courts. Under Collegium system the Judges of Supreme Court is to approve such recommendation and such part will only be taken by the NJAC. In my opinion NJAC instead of helping in reducing nepotism may bring an additional hurdle for the elevation of candidates who exhibit a kind of political views not in line with the party in power. Even today weeding out of such inconvenient candidates is done and as admitted by then Chief Justice P Sadasivam that the Collegium was always considerate of the opinion expressed by the Government on the acceptability of a candidate.
The Chief Justice and the Senior Judges of the High Court and the Collegium of Supreme Court, we have to believe to render justice in the selection of the Judges and the only transparency which one can thought of is to publish the credentials submitted by the chosen candidates and to call for a public hearing of the Advocates Associations to attend before the High Court and to present their comments on the
candidates chosen for recommendation to the collegium.

Such open discussion on the integrity of the candidates, may in my opinion shall help in reducing favoritism and the selection of undeserving candidates. Every selection process will go on record and with such information available in the hands of the public, the Collegium will not be at ease or feel embarrassed in accepting an undeserving candidate.

Collegium is the better, if not the best system, we have thought of and the maladies of such system will crop up in every other system and NJAC is no exception. NJAC will only add to the woes by bringing hurdles to deserving candidates…

PROOF OF WILLS ADMITTED BY TESTATOR

INTRODUCTION I have had the privilege to hear the lecture of Mr.Nagamuthu, Senior Advocate on ‘Execution and Proof of Will’....