Tuesday 29 December 2015

வேளாங்கன்னி 2015

சுனாமியின் சுவடுகளை வேளாங்கன்னி முற்றிலும் துடைத்து எறிந்துவிட்டது போல. கடந்த பத்தாண்டுகளில் பலமுறை டிசம்பர் கடைசியில் சென்றிருக்கிறேன். அநேக நினைவஞ்சலி போஸ்டர்கள் கண்ணில்படும். ‘காணவில்லை’ என்ற போஸ்டர் கூட பல ஆண்டுகளுக்குப் பிறகும் ஒட்டப்பட்டிருக்கும்.

இந்த முறை ஒரு போஸ்டர் கூட இல்லை. நான் பார்த்த ஒரே ஒரு சுவரொட்டியும் வேறு ஒரு நாள் நிகழ்ந்த இறப்பிற்கானது. The world has to move on, leaving the dead behind!

வேளாங்கன்னி பரிணாம வளர்ச்சியில் அடுத்த நூறு ஆண்டுகளில் இந்துக் கோவிலாக மாறிப் போகும் சாத்தியங்கள் இருக்கிறது. பூசைக்கான பொருட்கள் இந்துப் பழக்கங்களை கொஞ்சம் கொஞ்சமாக உள்வாங்குவதை உணர முடிகிறது. கூட்டம் கூட்டமாக இந்துக்கள் மற்ற கோவில்களுக்கு யாத்திரை செல்கையில், வேளாங்கன்னியையும் அதில் சேர்த்துக் கொள்கிறார்கள்.

முழுக்கவும் வியாபாரம். வருபவர்களுக்கு பலன் கிடைக்கிறதோ இல்லையோ, வேளாங்கன்னி மாதா ஜாதி மத பேதமின்றி அங்கிருக்கும் அனைவருக்கும் வாழ்வளிக்கிறார்.

இரவு கடற்கரையோரம் பொரித்த மீன் ஆப்பம், கணவாய் என்று சாப்பிட்டுவிட்டு கடைத்தெரு வழியாக கோவிலை நோக்கி நடந்த பொழுது, ‘திடீரென சவுக்கைத் தூக்கிக் கொண்டு எருசலேம் தேவாலயத்துக்குள் போன மாதிரி இப்போது இயேசு வந்தால் எப்படியிருக்கும்’ என்று சம்பந்தமில்லாமல் தோன்றியது.

‘சேச்சே, அவர் இரக்கமானவர். பிழைத்துப் போகட்டும் என்று விட்டுவிடுவார்’ என்று நினைத்தவாறே மகள் மிகவும் ஆசைப்பட்டபடி சிறிய சங்கில் அவளுடைய பெயரைப் பொறித்து அதை கீ செயினாக மாற்றிக் கொடுத்த எளிய மனிதர் கேட்ட நாற்பது ரூபாயைக் கொடுத்தேன்

-oOo-

“இந்தப் பூட்டை எல்லாம் அப்புறம் எப்படி எடுப்பாங்க?” என் மகள், இரு நாட்களுக்கு முன்னர் வேளாங்கன்னி ஆலயத்தில் நேர்த்திக்காக பூட்டப்பட்டிருந்த பூட்டுகளைப் பார்த்து.

“ஒரு வேளை அறுத்து எடுப்பாங்களாக்கும்” நான்.

“ஐயோ வேஸ்டா போயிடுமே”

“பழைய இரும்புக்கு போடுவாங்க” சொல்லும் போது கஷ்டமாகத்தானிருந்தது.

“போங்கப்பா, இங்க உள்ள கடையிலதானே வாங்குறாங்க. பூட்டு நம்பரைப் பாத்து டூப்ளிகேட் கீ கடையில இருந்து வாங்கிட்டு வந்து திரும்பவும் வித்துறுவாங்க”

அட இப்படி ஒரு வழியிருப்பது எப்படி எனக்குத் தெரியாமல் போயிற்று. எந்தப் புதிருக்கும் எளிதான விடையிருப்பது எனக்கு எப்போதும் தோன்றுவதேயில்லை.

“என்ன இருந்தாலும் அவர் ஒரு அதிசயமானவர்தாம். மேடையில ஜெபம் செஞ்சுகிட்டு இருக்கும் போதே, கூட்டத்திலிருந்து யாரையாவது பெயரைச் சொல்லிக் கூப்பிடுறாரே’ தூத்துக்குடிக்கு சுவிசேஷ கூட்டம் நடத்த வந்திருந்த சகோதரர் டி ஜி எஸ் தினகரன் பற்றி அம்மா வியந்து பேசிக் கொண்டிருந்தார்கள்.

‘அதெல்லாம் ஒன்னும் இல்லை. சும்ம சேகர், எலிசபெத்’துன்னு பொதுவா கூப்புடுறாரு. செளந்தரின்னுல்லாம் சொல்லக் கூடாது. ஞான செளந்தரி பொன்னம்மாள்’னு உங்க முழுப் பெயரையும் சொல்லிக் கூப்பிடட்டும். நான் நம்புறேன்”

‘”ஏன் கூப்பிடுவாறே” அம்மா முகத்தில் சிறு புன்னகை.

எனக்கு பயம் வந்து விட்டது, ஒரு வேளை அப்படியும் கூப்பிட்டு விடுவாரோ என்று. “தெர்மல் நகரில் குடியிருக்கும் ஞான செளந்தரி’ன்னு கூப்பிடுவாரா’ சோதனையை தீவிரப்படுதினேன்.

“அதுவும் முடியுமே”

பள்ளிக்கூடப் பையனைப் போல நான் முழித்ததைப் பார்த்து அம்மாவுக்கு சிரிப்பு தாங்கவில்லை “ஜெபம் பண்றதுக்கு நம்ம வீட்டு முழு ஹிஸ்டரியும் பத்தி ஜீஸஸ் கால்ஸுக்கு லெட்டர் எழுதியிருக்கேன்” என்று சொல்லியவாறே எழுந்து போய் விட்டார்கள்.

Thursday 24 December 2015

லே ஹேய்னி (பிரான்ஸ்) 1995

‘நாளைக்கு காலைல உன்னை தூக்குல போடப் போறாங்கன்னாக் கூட கவலப்படக் கூடாது’ன்னு சொல்லிட்டு அடுத்து அப்பா சொன்ன காரணம் வித்தியாசமானது. ‘ராத்திரியே பெரிய பூகம்பம் வந்து ஒருவேளை உன்னோடு மொத்தமா எல்லோரும் செத்துரலாம்’ என்றார்.

தூத்துக்குடியில் எழுபதுகளில் குடியேறிய தொழிலாளர்களை ‘புறம்போக்கு நிலத்தில் ஆக்கிரமித்து வீடு கட்டியுள்ளார்கள்’ என்று அதை இடித்துத் தள்ளினால்தான் ஆயிற்று என்று கலெக்டர் கச்சை கட்டிக்கொண்டு இறங்கிய வழக்கில் வாதாடும் போது ஏனோ அப்பா சொன்னது நினைவுக்கு வந்து, ‘இன்று ராத்திரியே பெரிய பூகம்பம் வந்து இந்த வீடுகள் எல்லாம் இடிந்து போனால், நாம் பார்த்துக் கொண்டிருப்போமா. இடிக்கப் போறோம்னு சொல்ற இதே அரசு வீடிழந்தவர்களுக்கு இலவசமாக வீடு கட்டிக் கொடுக்கும். சுனாமியின் பொழுது அதுதானே நடந்தது’ என்றதை நீதிபதிகள் இறுக்கமான முகத்துடன் கேட்டுக் கொண்டனர்.

நேற்று ராத்திரி பார்த்த ‘லெ ஹெய்னி’ (Hate) என்ற பிரஞ்சுப் படத்தில் ஹுயூபர்ட் ‘Heard about the guy who fell off a skyscraper? On his way down past each floor, he kept saying to reassure himself: So far so good... so far so good... so far so good. How you fall doesn't matter. It's how you land! என்று தனது நண்பர்களிடம் பேசுவதைக் கேட்கையில் அப்பா சொன்னது மீண்டும் ஞாபகத்துக்கு வந்தது.

வெறுப்பு வெறுப்பு வெறுப்பு என்று வெறுப்பு சூழ்ந்த உலகில் வசிப்பவர்களுக்கு ‘இது வரை ஏதும் இல்லை’ என்ற நம்பிக்கை மட்டுமே ஒரே ஆறுதல்.

பிரான்ஸ் தேசத்தில் குடியேறியவர்களுக்கான வசிப்பிடத்தில் வசிக்கும் யூத, கறுப்பு, அராபிய இனத்தைச் சேர்ந்த மூன்று நண்பர்களின் பரபரப்பான ஒரு நாள் வாழ்வுதான் படம். பரபரப்பு என்றதும் சுறுசுறுப்பாக வேலை செய்கிறார்கள் என்பதல்ல. இங்கும் அங்கும் சுற்றுகிறார்கள். வேகவேகமாக பேசுகிறார்கள். நியோ நாஜிக்களிடம் சண்டையிடுகிறார்கள். போலீஸைப் பற்றி கோபத்தைக் கக்குகிறார்கள். திருடுகிறார்கள். தப்பியோடுகிறார்கள். போதாதற்கு போதை மருந்து வேறு.

முந்தைய நாள் நடந்த கலவரத்தில் அவர்களது மற்றொரு நண்பன் போலீஸாரால் தாக்கப்பட்டு கோமாவில் இருக்கிறான். மூவரில் கொஞ்சம் அமைதியான ஹுபர்ட் ஆப்ரிகன். கலவரத்தின் அவனது உடர்பயிற்சியகம் எரிந்து போயிருக்கிறது. அமைதியானவன். எப்படியாவது அந்தச் சூழலிலிருந்து தப்பி வேறு எங்காவது சென்று வாழ்வில் முன்னேற வேண்டும் என்று நினைத்தாலும் எப்படி என்று தெரியாமலிருப்பவன்.

யூதன் கலவரத்தில் போலீஸ் தவற விட்ட துப்பாக்கியை வைத்துக் கொண்டு கோமாவில் இருக்கும் நண்பன் செத்தால், ஒரு போலீஸையாவது பழிக்கு கொல்ல வேண்டும் என்று எப்போதும் கோபத்தோடு திரிபவன்.

அராபியனாக நடித்துள்ள சையத் தக்மாய், படம் முழுக்க பேசுகிறான் பேசுகிறான் அவ்வளவு பேசுகிறான். கவிஞனாம். ‘மை கசின் வின்னி’யில் வரும் ஹாலிவுட்டின் ஜோ பெஸ்ஸியேதான். அப்படியே குள்ளம் வேறு. உற்சாகமான நடிப்பால் மனதை கொள்ளை கொண்ட இவர் யார் என்று தேடினால் பிரான்ஸில் புகழ்பெற்ற நடிகர் போல. முஸ்லீம். ஆனால் புத்திசாலித்தனமாக இப்போதே அமெரிக்க குடியுரிமை வாங்கியுள்ள விபரம் டோனால்ட் ட்ரம்புக்கு தெரியுமா என்பது தெரியவில்லை.

பிரான்ஸில் குடியேறிய ஆப்ரிக்க அராபிய குடும்ப இளைஞர்களுக்கும் போலீஸுக்கும் உள்ள பிரச்னை என்பதால் இப்போதுதான் வந்த படம் என்று நினைக்க வேண்டாம். 1995ல் வந்த படம். இருபது ஆண்டுகளில் ப்ரான்ஸ் ஒரு சுற்று சுற்றி மீண்டும் பழைய இடத்துக்கே தற்பொழுது வந்து நிற்கிறது.

‘வெள்ளையர்களின் சுமை’ என்று காலனியாதிக்கத்தை ருட்யார்ட் கிப்ளிங் வர்ணித்து நூறு ஆண்டுகள் கழிந்து விட்ட தற்பொழுதுதான் அந்தச் சுமையின் உண்மையான வலியை மேற்கத்திய நாடுகள் அனுபவிக்க ஆரம்பித்துள்ளன. அவர்களுக்கும் இது so far so good...தாம்
.
சொல்ல மறந்து விட்டேன். இது கறுப்பு வெள்ளைபடம். எனக்கும் படம் முடியும் வரை அது தட்டுப்படவேயில்லை. ஆமாம், நல்ல திரைப்படங்களுக்கு எதற்கு வர்ணம்?

Sunday 20 December 2015

TRUE, CASTE HAS NO PLACE IN AGAMAS

It is not a misstatement, to welcome the judgment of the Supreme Court in the case of Adi Saiva Sivachariyargal Nala Sangal as yet another bold step in the march of law towards the goal of eradicating caste as a criteria in the appointment of archakas in Hindu Temples; may be not final but a decisive step that it has given clear signals that caste would not come anywhere within the four corners of ‘Agamas’.

On the other hand, the Government of Tamilnadu as the facts of this case reveal, seems to have been still stuck with the days of Seshammal Vs State of Tamilnadu 1972 (2) SCC 1. The Government Order in G.O. No. 118 dated 23.05.2006 under challenge is nothing but a damp squib that it only stipulates ‘Any person who is a Hindu and possessing the requisite qualification and training can be appointed as a Archaka in Hindu temples’ It does require only a child’s brain to understand that this is not even a small step from what we were after Seshammal; the term ‘requisite qualification’ is the dampener.

Why an attempt, which in my opinion not even a pussy’s meow was hailed then as a lion’s roar driving the Sivachariargal to the Supreme Court?

It was the Ordinance No.5 of 2006 dated 14.07.2006, which sought to amend the Section 55(2) of the HR & CE Act 1959 to the effect that ‘No person to shall be entitled to be appointed to any vacancy …………………………….. “merely on the ground of any custom or usage”

The Ordinance would surely have upset the Seshammal’s case because in Seshammal it was held though the Trustee need not appoint an archaka on hereditary principle, he could not  give up the usage governing appointments, in other respects. Besides the Supreme Court in Seshammal seems to have suggest that if the Government brings any Rule in the appointment of archakas in violation of agamic rituals and ceremonies, the same could be challenged.

Alas, that roar was silenced even before it reaches the lion’s own ear; the Ordinance did not materialize and was dropped. I am wondering now why then this much ado about nothing?

The Supreme Court only considered the Government order; no wonder it is upheld as in the case of Seshammal, upholding the amendments to the HR & CE Act. Does this look like a splendid coincidence that both in Seshammal and Saiva Sivachariargal, the Supreme Court upheld the Government legislations but still no celebration on the Government side; people siding with the Government are in fact mourning.

In Seshammal, what the Supreme Court has stated about usage or agamas was taken as an affirmation of caste as a criteria in the appointment of archakas; though the judgment does not speak about caste at all; it was referred only in the submissions of the Counsels and that too in not more than two places. There is no categorical pronouncement in Seshammal that agamic injunctions proscribe persons who do not belong to Brahminical caste from doing the service as archaka. Still no one questioned or doubted but now questions are being raised; surely the law has marched forward.

The submissions of the Government in Saiva Sivachariargal case is strikingly similar to what was submitted in Seshammal. As in Seshammal, the Advocate General conceded that ‘if the usage or practice of a temple required the archaka of a temple to be of a particular denomination the said usage is binding

Beyond this what more to be decided, one may think as this was already considered or rather conceded in Seshammal. True to its consistency the Supreme Court too disposed of the writ petition by upholding the Government Order and reiterating that appointments or archakas must conform to the agamas, governing the respective temples.

What in the minds of all following Saiva Sivachariargal case was ‘Caste’ and no one worried about denomination, which the Supreme Court has laid much stress in its judgment. Supreme Court even includes group/sect and particular segment with denomination but the word ‘caste’ is shunned as if it is taboo. Supreme Court ended up finding that it is nothing wrong the archakas are appointed from a particular denomination/sect/group if the agamas injunct the others; no word about caste.

The million dollar question now is whether the terms denomination/sect/group or particular segment include caste as a criteria or that by quoting agamas persons belonging to a particular caste can be prevented from doing the service of archaka. The beauty of this case is where the Government failed, the Supreme Court succeeded in taking up a stride; much farther than it took in N.Adithayan’s case. Though the word caste was shunned, the Supreme Court has indicated in clear terms that ‘caste can no longer be a criteria’, which in my opinion has far reaching implications in the future appointments of archakas.

The Supreme Court while concluding the judgement finds that ‘In this regard it will be necessary to re-emphasize …………………………………….. that the exclusion of some and inclusion of a particular segment or denomination for appointment as Archakas would not violate Article 14 so long such inclusion/exclusion is not based on the criteria of caste, birth or any other constitutionally unacceptable parameter’ This finding means any consideration of caste in determining a particular denomination entitled to be appointed will violate fundamental right to equality.

In another place the Judges further state that the discussions in Seshammal ‘proceeds on the basis that entry to the sanctum sanctorum for a particular denomination is without any reference to caste or social status’ Can we take it that even in Seshammal caste was not a consideration? If anyone has doubt it will be cleared by what the Judges say in the end of the said 26th para with ‘Exclusion solely on the basis of caste was not an issue in Seshammal’’

The judges have no second opinion even in 41st para that Seshammal did not consider caste but only denomination and before concluding the paragraph with their much publicized observation ‘The constitutional legitimacy, naturally, must supersede all religious beliefs or practices’ state in unequivocal terms ‘Surely, if the Agamas in question do not proscribe any group of citizens from being appointed as Archakas on the basis of caste or class the sanctity of Article 17 or any other provision of Part III of the Constitution or even the Protection of Civil Rights Act, 1955 will not be violated

If we remove the double negative the above finding would read and mean ‘fundamental right guaranteed under the constitution would be violated if agamas proscribe any person from being appointed as archakas on the basis of caste or class’; even N.Adithayan, considered to be a revolutionary judgement falls short of saying this.

Now science has proved by genetic evidence, that all human beings in existence now descend from one single man who lived in Africa about 60,000 years ago. ‘No caste is pure’ and mankind is a story of migration, miscegenation and cultural evolution, says RM. Pitchappan, Professor Emeritus, School of Biological Sciences, Madurai Kamaraj University and the Regional Director of the Geographic Project. Supreme Court in its observation that ‘such exclusion (in the agamas) is not on the basis of caste, birth or pedigree’ only echoes such scientific temper.


What more is required to celebrate this judgment as a giant leap towards temples sans castes; but all credit must go to Saiva Sivachariargal, who fought an issue that was not there and ended in stuck with a finding, which is not to their liking.

For full text of the Judgment :
http://supremecourtofindia.nic.in/FileServer/2015-12-16_1450255713.pdf

Friday 18 December 2015

ஹமோன் (ஈரான்) 1990


ஹாமோன், ஈரானிய படங்களிலேயே சிறந்த படம் என்று பாராட்டப்படும் படம். ஹை டெபினிஷன் தரத்தில் படங்களைப் பார்த்த பிறகு 1990ல் இயக்கப்பட்ட இப்படத்தை சாதாரண தரத்தில் பார்ப்பது இன்னமும் பழைய படத்தைப் பார்ப்பது போல இருந்தது.

புத்தகங்களை விரும்பும் நடுத்தர வர்க்க இளைஞனாகிய ஹமீத் ஹமோனை வலிய காதலித்து மணக்கும் பணக்கார பெண்ணாகிய மாஷித்’ பின்னர் அவனது போக்கு பிடிக்காமல் அவனிடமிருந்து விவாகரத்து கோருவதும், அதனால் அவர்களுக்கிடையில் எழும் போராட்டமும்தான் கதை. பொருந்தாத திருமண வாழ்க்கையின் அழுத்தத்தில் இருவருமே மனச்சிக்கலுக்கு ஆட்படுவதும், தனது வாழ்க்கையின் அர்த்தத்தை புரிய முயன்று ஹமோன் தோற்பதுமாக நான் லீனியராக திரைக்கதை சொல்லப்படுகிறது.

பொதுவாக நான் பார்த்த இரானியப் படங்கள் சிக்கலோ குழப்பமோ இல்லாமல் ஏதோ நல்ல சிறுகதையைப் பார்ப்பது போல இருக்கும். இதே இயக்குஞரின் படமான லீலா உட்பட. ஆனால் இந்தப் படம் அப்படியல்ல. ஹமோனுக்கு ஏற்ப்படும் மனப்பிறழ்வுகளும் கனவுகளும் நம் தலையையும் சுற்ற வைக்கிறது.

முக்கியமாக நான் சொல்ல வந்தது, வழக்குகாக நீதிமன்றத்திற்குள் செல்லும் ஹமோனை காவலர் லேசாக தடவிப் பார்த்து உடல் பரிசோதனை செய்கிறார்.

இரண்டு நாட்களுக்கு முன்னர் இந்தப் படத்தைப் பார்த்திருந்தால், வெள்ளிக்கிழமை சென்னை நீதிமன்றம் சென்ற பொழுது என்னை சி ஐ எஸ் எஃப் காவலர் பரிசோதனை செய்த போது அப்படி சங்கோஜப்பட்டிருந்திருக்க மாட்டேன்.

ஆனாலும் எனது அடையாள அட்டையை திருப்பிக் கொடுத்த காவலர் ‘தாங்க் யூ’ என்று சொன்னது கொஞ்சம் ஆறுதலாக இருந்தது.

ஒரு செய்தி : மதுரைக்கு இப்போதைக்கு சி ஐ எஸ் எஃப் இல்லையாம்...

சீக்கியர் பெளத்தர்கள் கூட அர்ச்சகர் ஆகலாமா?

2006ம் ஆண்டில் ‘அனைத்துப் பிரிவினரும் அர்ச்சகராகும் சட்டத்’திற்கு இடைக்கால தடை உத்தரவு வேண்டி திரு பாராசரன் உச்ச நீதிமன்றத்தில் வாதாடிய பொழுது ‘இந்துக்கள் அனைவரும் அர்ச்சகராக முடியும் என்றால், சீக்கியர்கள் மற்றும் பெளத்தர்களும்’ கூட இந்துக் கோவில்களில் அர்ச்சகராக நியமிக்கப்படும் அபாயம் உள்ளது’ என்று வாதிட்டதாக செய்தித்தாளில் படித்தேன்.

அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 25ல் ‘இந்து என்ற பதமானது சீக்கியர் மற்றும் பெளத்தர்களையும் உள்ளடக்கியது’ என்று கூறப்படும் விளக்கத்தை வைத்து இப்படி ஒரு அச்சத்தை அவர் வெளிப்படுத்தியிருக்கலாம். ஆனால் அந்த விளக்கத்தை முழுமையாகப் படித்தால் அந்தந்த மத நிறுவனங்களைப் பொறுத்து அம்மதத்தைச் சேர்ந்த அனைவருக்கும் உரிமையளிக்கலாம் என்ற ரீதியில் அந்தப் பிரிவு இருப்பதை புரிந்து கொள்ளலாம்.

ஆனாலும் தமிழக அரசு இந்த விஷயத்தில் கவனமாகவே இருந்துள்ளது.

நமது இந்து அறநிலையத்துறை சட்டத்தின் (The Tamilnadu Hindu Religious and Charitable Endowments Act’1959) 10வது பிரிவில் ‘இந்த சட்டத்தின் நோக்கங்களை நிறைவேற்றும் எந்த ஒரு ஊழியரும் இந்து மதத்தினை பின்பற்றுபவர்களாக (person professing hindu religion) இருத்தல் வேண்டும் என்றுதான் உள்ளது. ‘இந்து’ என்று இல்லை.

55ம் பிரிவின்படி கோவில் ஊழியர்கள் (அச்சகர்கள்) நியமிக்கப்படுகிறார்கள். எனவே அர்ச்சகர் இந்து மதத்தினை பின்பற்றுபவராக இருந்தல் வேண்டும். சீக்கியரோ அல்லது பெளத்தரோ சட்டத்தின் பார்வையில் இந்துவாக இருக்கலாம். ஆனால் இந்து மதத்தினை பின்பற்றுபவர் இல்லை.

கோவில் ஊழியர்களை நியமிப்பது குறித்த விதிகளிலும் (The Tamilnadu Hindu Religious Institutions (officers and servants) Service Rules’1964 3வது விதி இந்து மதத்தினை பின்பற்றுபவராக இருத்தல் வேண்டும் என வலியுறுத்துகிறது. மேலும் இந்து மதத்தினை பின்பற்றுபவர் என்று எவ்வாறான உறுதி மொழி எடுக்க வேண்டும் என்பதற்கும் அரசாணை எண் 4055/1961 மூலம் விதிமுறைகள் ஏற்ப்படுத்தப்பட்டுள்ளன.

எனவே திரு பராசரனின் அச்சம் தேவையற்றது...

Wednesday 16 December 2015

அர்ச்சகர் பிரச்னையின் பயணம்...

கடந்த சில நாட்களாக ‘அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் வண்ணம் தமிழக அரசு கொணர்ந்த அவரச சட்டத்திற்கு உச்ச நீதிமன்றம் அளித்த இடைக்கால தடையுத்தர’வை விமர்சித்து பல வலைப்பதிவுகளை கண்ணுற நேர்ந்தது. கிழக்கு பதிப்பக பத்ரி நாராயணின் வலைப்பதிவில் அர்ச்சகர்கள் நியமனம் குறித்த உச்ச நீதிமன்றத்தின் இரு வழக்குகள் குறித்து எழுதியுள்ளார். பலரும் இவ்விரு வழக்குகள் பற்றியே குறிப்பிடுகின்றனர். இவ்விரு வழக்குகளுக்கிடையில் ஆந்திர மாநிலம் சம்பந்தப்பட்ட 1996ம் ஆண்டு வழக்கு ஒன்றும் உள்ளது. தமிழகம் (1972) ஆந்திரம் (1996) கேரளா (2002) வழக்குகளை ஆராய்ந்தால் எவ்வாறு உச்ச நீதிமன்றமும் கால வெள்ளத்தில் படிப்படியாக தன்னை இந்த பிரச்னையில் தளர்த்திக் கொள்கிறது என்பது புரியும். திரு.ரவி ஸ்ரீனிவாஸ் குறிப்பிடுவது போலவே 2002 வழக்கிலும் உச்ச நீதிமன்றம் முழுமையான உரிமையினை அளிக்கவில்லை. எனவே தற்போதய தமிழக சட்டம் எவ்வித பிரச்னையுமின்றி உச்ச நீதிமன்றத்தின் பரிசீலனைக்கு (judicial review) தப்பிவிடும் என்று அறுதியிட்டு கூற முடியாது. ஏனெனில் 1972 தமிழக வழக்கின் தீர்ப்பு இன்று வரை 2002 கேரள வழக்கின் தீர்ப்பு உட்பட எந்த தீர்ப்பினாலும் மேலாத்திக்கம் (overrule) செய்யப்படவில்லை. எனவே, 1972ம் வருட தமிழக வழக்கின் தீர்ப்பு உண்மையில் தற்போதைய சட்ட திருத்ததிற்கு எதிரானது என்றே நான் கருதுகிறேன். எனவே, உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்ததில் ஏதும் வியப்பில்லை!


அர்ச்சகர் நியமனம் குறித்த எந்த வழக்கிலும், குறிப்பிடப்படும் உரிமை அரசியலமைப்பு சட்டத்தின் 25 மற்றும் 26ம் பிரிவுகள் (Article 25 and 26). 25வது பிரிவு எந்த ஒரு மதத்தினையும் பின்பற்றும் உரிமையினை அளிக்கிறது. 26ம் பிரிவு மத நிறுவனங்களை நிறுவி அவற்றை நிர்வகிக்கும் உரிமையினை அளிக்கிறது. இவை அடிப்படை உரிமைகள். இந்த உரிமைகள் சில விதிவிலக்குகளுக்கு உட்பட்டவை. முக்கியமாக 25 வது பிரிவின் 2(b) உட்பிரிவு சமுக நலன் மற்றும் சீர்திருத்தம் அல்லது இந்து சமய நிறுவனங்களுக்குள் அனைத்து இன, பிரிவு இந்துக்களுக்கு உட்பிரவேசிக்கும் வண்ணம் சட்டமியற்ற அரசுக்கு முழு உரிமையளிக்கிறது (social welfare and reform or throwing open Hindu religious institutions of public character to all classes and sections of Hindus) இந்தப் பிரிவு கூற விரும்புவது வெறும் ஆலய பிரவேசமா அல்லது ஆலய பணிகளையும் மேற்கொள்வதா என்பதை அறிய இந்தப்பிரிவு குறித்து அரசியலமைப்புக்குழு (constituent assembly) என்ன விவாதித்தது என்பதை ஆராய வேண்டும். சமூக நலன் மற்றும் சீர்திருத்தம் என்பதை தனியே படிக்கையில் அரசின் சட்டதிருத்தம் சமூக சீர்திருத்தம் என்ற வட்டத்திற்குள் அடங்கிவிடும் என்றே நான் நினைக்கிறேன். ஆயினும், மேற்கூறிய மூன்று வழக்குகளிலும் இந்தப் பிரிவானது பெருமளவில் அரசினால் கையிலெடுக்கப்படவில்லை.


-oOo-


தமிழ்நாடு இந்து சமய மற்றும் அறநிலைய சட்டமானது 1959ம் ஆண்டு இயற்றப்பட்டது. இந்த சட்டத்தின் 55வது பிரிவின்படி கோவில் தர்மகர்த்தா (trustee) அர்ச்சகரை நியமிக்கும் உரிமை படைத்தவர். ஆனால் அர்ச்சகர் பரம்பரை அர்ச்சகராயிருக்கும் பட்சத்தில் தர்மகர்த்தாவிற்கு அந்த உரிமை கிடையாது. இந்தச் சட்டத்தினை செயலாக்குவதற்க்கான விதிகள் 1964ம் ஆண்டு (Madras Hindus Religious Institutions (Officers and Servants) Service Rules 1964) இயற்றப்பட்டது. இந்த விதிகளிலேயே சில சீர்த்திருத்தங்கள் ஏற்படுத்தப்பட்டன. முக்கியமாக, 12ம் விதியின் கீழ் எந்த ஒரு நபரும் அர்ச்சகராக வேண்டுமென்றால், மத நிறுவன தலைவரிடம் இருந்து ‘தகுதி சான்றிதழினை’ பெற வேண்டும். இதன் மூலம் தகுதியற்ற ஒருவர் பரம்பரை உரிமையில் அர்ச்சகராவது தடுக்கப்பட்டது. ஆக இன்றைய நிலைக்கு முதல் செங்கல் வைக்கப்பட்டது 1964ம் ஆண்டில்.


1969ம் ஆண்டு அரசினால் நியமிக்கப்பட்ட ‘அட்டவணை வகுப்பினரின் கல்வி பொருளாதார மேம்பாடு மற்றும் தீண்டாமைக்கான குழு’ அரசிடம் தனது அறிக்கையினை அளித்தது. அவ்வறிக்கை ‘இந்துக் கோவில்களில் உள்ள பரம்பரை அர்ச்சகர் முறையினை ஒழித்து அர்ச்சகர் மற்றும் இதர கோவில் பணிகளை அனைத்து ஜாதியினருக்கும் அளிக்க’ பரிந்துரை செய்தது. அந்த பரிந்துரையினை ஏற்ற அரசு 1970ம் ஆண்டு மேற்கூறிய சட்டத்தின் 55ம் பிரிவினை மாற்றியது. இதன்படி பரம்பரை அர்ச்சகர் முறை முற்றிலும் அகற்றப்பட்டது. இந்த சட்ட திருத்தத்தினை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குதான் சேஷம்மா வழக்கு என்று அழைக்கப்படும் 1972ம் வருட வழக்கு!


உச்ச நீதிமன்றத்தின் ஐந்து நீதிபதிகளை கொண்ட மன்றம் தமிழக அரசின் இந்த சட்ட திருத்தமானது அரசியலமைப்பு சட்டத்தின் 25 மற்றும் 26ம் பிரிவுகளை மீறியதாகாது என்று கூறியது என்னவோ உண்மைதான். ஆனால் அவ்வாறு கூறியதற்கான காரணம் இன்றைய சட்ட திருத்தத்தின் முன் பிரச்னையாக உருவெடுக்கக்கூடும். தமிழக அரசு அப்போது உச்ச நீதிமன்றத்தின் முன் வைத்த வாதம் அப்படிப்பட்டது!


1972ல் வழக்கு தாக்கல் செய்தவர்கள் முன் வைத்த வாதம், ‘இந்து கோவில்கள் ஆகம நெறிப்படி நிர்வகிக்கப்படுகின்றன. ஆகம முறைப்படி குறிப்பிட்ட வகுப்பினர்தான் விக்ரகத்தை தொட்டு பூசை செய்ய இயலும். வேறு யாரும் அவர் எவ்வளவு பெரிய மதத்தலைவராயினும் சரி, மடாதிபதியாயினும் சரி ஏன் மற்ற பிராமணர்களே விக்ரகத்தை தொடுவது மட்டுமல்ல கர்பகிரகத்தில் பிரவேசித்தாலே விக்ரகம் தீட்டுப்பட்டதாகும்’ என்பதாகும்.


இந்த வாதத்தினை நீதிமன்றம் ஏற்றுக்கொள்ள தமிழக அரசின் அட்வோகேட் ஜெனரல் சட்ட திருத்தத்தின் நோக்கத்திலிருந்து விலகி ‘இந்து சமய மற்றும் அறநிலைய சட்டத்தின் 28ம் பிரிவின்படி தர்மகர்த்தா கோவிலை அதனது வழக்கப்படிதான் (usage) நிர்வகிக்க முடியும், எனவே வழக்கம் ஒரு குறிப்பிட்ட வகுப்பினர்தான் அர்ச்சகராயிருக்க வேண்டுமென்றிருந்தால் அவர் அதற்கு கட்டுப்பட்டவர். திருத்திய 55ம் பிரிவிலும் அவர் வழக்கத்தினை மீற வேண்டும் என்று கூறப்படவில்லையே’ என்று பின் வாங்க ‘அப்படியாயின் பரம்பரையாக அர்ச்சகரை நியமிப்பதும் பழக்கம்தானே’ என்று வழக்கு தொடர்ந்தவர்கள் முன்னேறினர்.


தமிழக அரசு மேலும் இறங்கி வந்து ‘பரம்பரை அர்ச்சகர் முறைதான் ஒழிக்கப்படுகிறதே தவிர அர்ச்சகரின் மகன் அவருக்கு பின்னர் அர்ச்சகராவதற்கு தடையேதும் இல்லையே...நடைமுறையில் அவரையே தர்மகர்த்தா நியமிக்க போகிறார்’ என்று வாதிட்டு மேலும் ‘அர்ச்சகர் நியமனம் மதம் சாராத (secular) பணி, இறைப்பணியல்ல (religious)’ என்று கூற உச்ச நீதிமன்றமும் ‘ஆமாம், அர்ச்சகர் என்பவர் ஒரு மடாதிபதியினைப் போல நிறுவனத்தின் மதத்தலைவராக மாட்டார்’ என்று கூறி வழக்கினை தள்ளுபடி செய்தது. ஆனால் தனது தீர்ப்பில் தெளிவாக ‘பரம்பரை வழக்கப்படி அர்ச்சகரை நியமிக்கும் கடப்பாட்டிலிருந்து மட்டும், மட்டுமே (to that extent and to that extent alone) தர்மகர்த்தா கோவிலின் பழக்கத்திலிருந்து விலகமுடியும்’ என்று கூறியது.


இறுதியில் ‘ஜாதி பேதமின்றி அனைவரும் அர்ச்சகராகும் வண்ணம் அரசு அர்ச்சகருக்கான தகுதி குறித்த விதிகளை எதிர்காலத்தில் மாற்றி விடும்’ என்ற அச்சம் வழக்கு தொடுத்தவர்களால் முன் வைக்கப்பட்டது. உச்ச நீதிமன்றாமோ அவ்வாறு கோவில் பழக்கத்திற்கும் வழிப்பாட்டு முறைகளுக்கும் மாறாக விதிகள் மாற்றப்பட்டால், கோவில் வழிபாட்டில் உரிமையுள்ளவர்கள் அதனை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்து கொள்ளலாம்’ என்று கூறி வழக்கினை முடித்து வைத்தது. (Seshammal Vs State of Tamilnadu 1972 (2) SCC 11)


-oOo-


அடுத்த வழக்கு ஆந்திர அரசு 1987ம் வருடம் கொணர்ந்த இந்து சமய அறநிலைய சட்டத்தின் பிரிவுகளை எதிர்த்து. இங்கும் பரம்பரை அர்ச்சகர் முறை ஒழிக்கப்பட்டதே வழக்கிற்கான மூலம். வழக்கினை தொடுத்தது திருமலை திருப்பதியின் தலைமை அர்ச்சகர்களில் ஒருவர். வழக்குரைஞர் திரு.பராசரன். சேஷம்மா வழக்கில் திரு.நானி பல்கிவாலா!


நாராயண தீக்ஷிதுலு என்று அழைக்கப்படும் 1996ம் வருட ஆந்திர தீர்ப்பு சுவராசியமானது. நான் படித்த சட்டபுத்தகத்தில் சுமார் 69 பக்கங்களுக்கு உள்ள இந்த தீர்ப்பின் 50 பக்கங்கள் சுவாமி விவேகானந்தர், அரவிந்தரிலிருந்து பல்வேறு மேல் நாட்டு அறிஞர்கள், இந்திய அறிஞர்கள் ஆகியோரின் எழுத்து, பேச்சிலிருந்து மேற்கோள்கள். தத்துவத்தை படிப்பதில் ஆர்வமிருப்பவர்களால் மட்டுமே முழுவதும் படிக்க இயலக்கூடிய தீர்ப்பு. உச்ச நீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் மட்டுமே அடங்கிய இந்த மன்றமானது சேஷம்மா வழக்கிற்கு எதிராக ஏதும் கூற இயலாது. ஆனால் குறிப்பிடத்தகுந்த ஒரு வித்தியாசம் உண்டு. சேஷம்மா வழக்கில் ‘மற்றவர்கள் தொடுவதால் விக்ரகம் தீட்டுப்படும்’ என்று கூறக்கூடிய ஒரு ஆகமத்திலிருந்து மட்டுமே மேற்கோள் காட்டப்பட்டது. தீஷிதுலு வழக்கிலோ மேற்கோள்களாக சமுதாய புரட்சியாளர்களான விவேகானந்தர், அரவிந்தர் ஆகியோரின் கருத்துகள்! நீதிமன்றம் பயணிக்கும் பாதையினை புரிந்து கொள்ள முடிகிறது.


ஆந்திர வழக்கின் இறுதியில் பரம்பரை அர்ச்சகர் முறையினை ஒழிக்கும் ஆந்திர சட்டத்தினை ஏற்றுக் கொண்டதோடு, சேஷம்மா வழக்கினைப் போல அர்ச்சகர் நியமனத்தில் பரம்பரை வழக்கம் மட்டுமே ஒழிக்கப்படுகிறது என்று வலுவாக கூறப்படவில்லை. மேலும், நியமனம் பழக்கத்திற்கு மட்டுமே உட்பட்டது என்றும் தெளிவாக கூறவில்லை என்றாலும் எவ்வாறும் இருக்கலாம் என்று கோடிட்டு காட்டப்படுகிறது. ஏனெனில் ஒரு குறிப்பிட்ட வகுப்பார்தான் (denomination) அர்ச்சகர்களாக இருக்கலாம் என்று வாதிடும் திரு.பராசரனைப் பார்த்து நீதிபதிகள், ‘அந்த குறிப்பிட்ட வகுப்பார்கள் அனைவரும் நன்கு கல்வி பயின்று மேல் நாடுகளுக்கு வேலைக்கு போய் வேறு யாருமே இல்லையென்றால் என்ன செய்வீர்கள்?’ என்று கேட்க திரு.பராசரன் வேறு வழியில்லாமல் ‘அப்படியென்றால் வெளியே தேட வேண்டியதுதான்’ என்று கூற வேண்டியதாயிற்று!


ஆக, தெளிவாக கூறவில்லை என்றாலும் இந்த வழக்கானது சேஷம்மா வழக்கிலிருந்து சமூகம் அதிக தூரம் பயணித்து விட்டதை குறிப்பால் உணர்த்தியது என்றே கூற வேண்டும். (A.S.Narayana Deekshitulu Vs State of AP 1996 (9) SCC 548)


-oOo-


அர்ச்சகர்கள் தகுதி குறித்து அடுத்த அதே சமயம் ஓரளவுக்கு தெளிவான அடியினை எடுத்து வைத்தது ‘ஆதித்யன் வழக்கு’ என்று அழைக்கப்படும் கேரள வழக்கு!


திருவாங்கூர் தேவஸ்வம் போர்டின் கட்டுப்பாட்டில் உள்ள சிவன் கோவில் ஒன்றில் பணியாற்றிய சாந்திக்காரன் என்று அழைக்கப்படும் அர்ச்சகர் நிலையிலுள்ள ஒருவரின் நடத்தை குறித்து அதிக குற்றச்சாட்டுகள் எழ, பிராமணரல்லாத ஒருவர் சாந்திக்காரனாக நியமிக்கப்பட கோவிலின் தந்த்ரி அவரை பணியேற்க அனுமதிக்கவில்லை. ஆனால், தேவஸ்வம் ஆணையர் அவ்வாறு பிராமணர்கள் மட்டுமே சாந்திக்காரனாக பணியாற்ற இயலும் என்ற விதி ஏதும் இல்லை என்று சுட்டிக்காட்டவே, ‘அவ்வாறு மலையாள பிராமணரல்லாத ஒருவரை சாந்திக்காரனாக நியமிப்பது தன்னுடைய வழிபாட்டு உரிமையினை பாதிப்பதாக’ பக்தர் ஒருவர் வழக்கு தாக்கல் செய்ய இறுதியில் பிரச்னை உச்ச நீதிமன்றத்திற்கு வந்தது.


இந்த வழக்கில் இவ்வாறு மலையாள பிராமணர்கள் மட்டுமே சாந்திக்காரனாக நியமிக்கப்பட முடியும் என்பதற்கான பழக்கமோ அல்லது கோவிலை உருவாக்கியவரின் விருப்பம் குறித்தோ தெளிவான வாதம் வைக்கப்படவில்லை என்று கூரி வழக்கினை தள்ளுபடி செய்தாலும் இந்த தீர்ப்பில் உச்ச நீதிமன்றம் கூறிய பல கருத்துகள் குறிப்பிடத்தகுந்தது. உதாரணமாக, ‘காலங்காலமாக பிராமணர்கள் மட்டுமே அர்ச்சகர்களாயிருப்பதால் மற்றவர்களுக்கு அர்ச்சகர்களாவதற்கு தடையிருக்கிறது என்று பொருளில்லை மாறாக அவர்கள் வேதங்களை கற்பதிலிருந்தும், புனித நூலினை அணிவதிலிருந்தும் தடுக்கப்பட்டார்கள் என்றுமே எடுத்துக் கொள்ள வேண்டும்’ என்று கூறியது கவனிக்கத்தகுந்தது. ஆயினும் இந்த வழக்கிலும் எந்தக் கோவிலிலும் யார் வேண்டுமானாலும் அர்ச்சகராக நியமிக்கப்பட முடியும் என்று இந்த தீர்ப்பிலும் கூறப்படவில்லை. ஐந்து நீதிபதிகளால் தீர்க்கப்பட்ட சேஷம்மா வழக்கு குறுக்கே நிற்பதுதான் காரணம் என்று நினைக்கிறேன். எனினும் நேரடியாக ஜாதி குறித்த பிரச்னையை அணுகியதிலிருந்து, இந்த தீர்ப்பினை அர்ச்சகர் பிரச்னையில் ஒரு திருப்புமுனை என்றே கருத வேண்டும் (N.Adithayan Vs Travancore Devsswom Board 2002 (8) SCC 106)


சேஷம்மா வழக்கின் தீர்ப்பு, இன்றளவும் நிலுவையில் உள்ளது. எனவே தமிழக சட்ட திருத்தம் குறித்த வழக்கு, ஐந்து நீதிபதிகளுக்கு மேற்பட்ட நீதிபதிகள் அடங்கிய மன்றத்திற்கு அனுப்பப்படும் என்று நினைக்கிறேன். அதுவரை இப்போதுள்ள நிலமை நீடிக்கும் வண்ணம், இடைக்கால தடை சட்ட முறைகளின்படி நியாயமானதுதான்.

(21.08.06 அன்று உச்சநீதிமன்றம் அளித்த தடை உத்தரவு குறித்து இணையத்தில் எழுந்த விமர்சனங்களுக்கு எதிர்வினையாக எழுதப்பட்டது)

முழு தீர்ப்பு வேண்டுவோர்:Seshammal Vs State of Tamilnadu 1972 (2) SCC 11
A.S.Narayana Deekshitulu Vs State of AP 1996 (9) SCC 548
N.Adithayan Vs Travancore Devsswom Board 2002 (8) SCC 106

PROOF OF WILLS ADMITTED BY TESTATOR

INTRODUCTION I have had the privilege to hear the lecture of Mr.Nagamuthu, Senior Advocate on ‘Execution and Proof of Will’....