புத்தகங்களை விரும்பும் நடுத்தர வர்க்க இளைஞனாகிய ஹமீத் ஹமோனை வலிய காதலித்து மணக்கும் பணக்கார பெண்ணாகிய மாஷித்’ பின்னர் அவனது போக்கு பிடிக்காமல் அவனிடமிருந்து விவாகரத்து கோருவதும், அதனால் அவர்களுக்கிடையில் எழும் போராட்டமும்தான் கதை. பொருந்தாத திருமண வாழ்க்கையின் அழுத்தத்தில் இருவருமே மனச்சிக்கலுக்கு ஆட்படுவதும், தனது வாழ்க்கையின் அர்த்தத்தை புரிய முயன்று ஹமோன் தோற்பதுமாக நான் லீனியராக திரைக்கதை சொல்லப்படுகிறது.
பொதுவாக நான் பார்த்த இரானியப் படங்கள் சிக்கலோ குழப்பமோ இல்லாமல் ஏதோ நல்ல சிறுகதையைப் பார்ப்பது போல இருக்கும். இதே இயக்குஞரின் படமான லீலா உட்பட. ஆனால் இந்தப் படம் அப்படியல்ல. ஹமோனுக்கு ஏற்ப்படும் மனப்பிறழ்வுகளும் கனவுகளும் நம் தலையையும் சுற்ற வைக்கிறது.
முக்கியமாக நான் சொல்ல வந்தது, வழக்குகாக நீதிமன்றத்திற்குள் செல்லும் ஹமோனை காவலர் லேசாக தடவிப் பார்த்து உடல் பரிசோதனை செய்கிறார்.
இரண்டு நாட்களுக்கு முன்னர் இந்தப் படத்தைப் பார்த்திருந்தால், வெள்ளிக்கிழமை சென்னை நீதிமன்றம் சென்ற பொழுது என்னை சி ஐ எஸ் எஃப் காவலர் பரிசோதனை செய்த போது அப்படி சங்கோஜப்பட்டிருந்திருக்க மாட்டேன்.
ஆனாலும் எனது அடையாள அட்டையை திருப்பிக் கொடுத்த காவலர் ‘தாங்க் யூ’ என்று சொன்னது கொஞ்சம் ஆறுதலாக இருந்தது.
ஒரு செய்தி : மதுரைக்கு இப்போதைக்கு சி ஐ எஸ் எஃப் இல்லையாம்...
No comments:
Post a Comment