Showing posts with label Tamil Nadu. Show all posts
Showing posts with label Tamil Nadu. Show all posts

Sunday, 10 January 2016

கிறிஸ்தவ விளக்கு!

இழுத்து இழுத்து வட அமெரிக்கர்கள் பேசும் ஆங்கிலத்தை இங்கிலாந்துக்காரர்கள் கிண்டலடித்துக் கொண்டே இருந்தார்களாம். பொறுத்துப் பொறுத்துப் பார்த்த அமெரிக்கர்கள், ‘நாங்கள் பேசுவது ஆங்கிலம் என்று யார் சொன்னது. இது அமெரிக்கன், போங்கடா’ என்று சொல்லி விட்டார்களாம்.

அது மாதிரி ‘இது என்ன குத்து விளக்கா’ என்று யாராவது கேட்டால், கேரள கிறிஸ்தவர்கள் ‘இது கிறிஸ்தவ விளக்காக்கும்’ என்று சொல்லிவிடுவார்கள். இஸ்லாமியர்களுக்குத்தான் பாவம், குத்து விளக்கு ஏற்றுவது ஹராமா, ஹலாலா என்று மம்முட்டியை வைத்துக் கொண்டு இன்னமும் மண்டையை உடைத்துக் கொண்டிருக்கிறார்கள்

கிறிஸ்தவ சந்நியாசி ஜீவிதத்தில் (அப்படித்தான் மலையாளத்தில் பேசினார்கள்) ஐம்பது ஆண்டுகள் நிறைவு செய்த உறவுக்கார பெண்மணிக்கு மற்றவர்கள் வியாழக்கிழமை பாராட்டு விழா நடத்தினார்கள்.

கேரளா என்றதும் மனமும் உடலும் உடனடியாக ஒத்துழைக்க ஒரே நாளில் போய்த் திரும்பினாலும், திண்டுக்கல் ஒட்டன் சத்திரம் சாலை அவ்வளவு மோசம். திரும்பும் போது செம்பட்டி வழியாக வந்து விடலாம் என்றால் அதுவும் மோசம். போதாதற்கு எச்சரிக்கையே இல்லாமல் ‘ஸ்பீட் பிரேக்கர்’ என்ற பெயரில் ‘போன் பிரேக்கர்ஸ்’.

ஒட்டன்சத்திரம் மேம்பாலம் கட்டி இரு வருடங்கள்தாம் இருக்கும். அதிலுள்ள சாலை முழுக்கவும் உடைந்து சின்னாபின்னமாகியிருக்கிறது. நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்தக்காரர்களை, ‘ஏன் இப்படி சாலை உடைந்து போகிறது?’ என்று கேட்க மாட்டார்களா? தமிழகத்தில் கிராமங்கள் வரை சாலைகள் போடப்பட்டுக் கொண்டேயிருக்கிறார்கள். ஆனால், தரம்தான் வர வர குறைந்து வருகிறது.

கிராமங்கள் ஏன், மதுரை நகருக்குள் உள்ள எந்த சாலையும் உருப்படியாக இல்லை. மக்களாகத் திரண்டு மாநகராட்சியை பிடித்து உலுக்கினால்தான் உண்டு. திருச்சூர் நகரம் மதுரையில் கால்வாசி கூட கிடையாது. ஆனால் சாலைகள் அவ்வளவு சுத்தம். பாராட்டு விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட ‘அட்வோகேட் ராமகிருஷ்ணன் தொடர்ந்து 25 ஆண்டுகளாக திருச்சூர் சட்டமன்ற உறுப்பினராக பணியாற்றி வருகிறார் என்றது எனக்கு வியப்பாக இல்லை.

திமுக’வோ அதிமுக’வோ நாட்டின் உள்கட்டமைப்பை ஊழலால் சீர் குலைப்பது மாறும் என்ற நம்பிக்கையும் எனக்கில்லை.

PROOF OF WILLS ADMITTED BY TESTATOR

INTRODUCTION I have had the privilege to hear the lecture of Mr.Nagamuthu, Senior Advocate on ‘Execution and Proof of Will’....