Tuesday 31 March 2015

தமிழுக்கு எண் 1ஐ அழுத்தவும்

அவ்வப்பொழுது தமிழ் படங்களைப் பற்றி எழுதிக் கொண்டிருந்தாலும், தமிழ்ப்படங்களே பார்ப்பதில்லையா என்று கேட்கிறார்கள்.

பல வருடங்களுக்கு முன்னர், எழுத்தாளர் சுஜாதா குரோம்பேட்டையிலுள்ள எம் ஐ டியில் நடைபெற்ற கருத்தரங்கு ஒன்றில் கலந்து கொள்ள வந்திருந்தார். அவர் தொழில்நுட்பம் படித்தது அங்குதான். மதிய உணவுக்குப் பின்னர் மாணவர்கள் அவருடன் அளவளாவிக் கொண்டிருந்தனர். ‘மாணவர்களுக்கு அவரது அறிவுரை என்ன’ என்று ஒரு மாணவர் கேட்க, ‘இந்தப் பாரதிராஜா, பாக்கியராஜான்னு சினிமா பாத்துக்கிட்டு இருக்காம ஒழுங்கா படிங்க. அது போதும்’ என்றாராம்.

அதுமாதிரி இந்தக் கமல்ஹாசன், ரஜினிகாந்த், சூர்யா, விஜய் எல்லாம் கொஞ்சம் ஒதுங்கிக் கொண்டு இப்போ புதுசு புதுசா இளைஞர்கள் தூள் கிளப்பிக் கொண்டிருக்கிறார்களே அவர்களுக்கு வழி விட்டால் நானும் தொடர்ந்து தமிழ் சினிமா பார்க்கத் தயார்.

போன வாரம் தற்செயலாக பார்க்க நேர்ந்த ‘தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும்’ என்ற படத்தைக் குறிப்பிட்டாக வேண்டும். இடையே எவ்வித தொய்வும் இன்றி முக்கியமாக பாடலின் குறுக்கீடு இல்லாமல் இறுதி வரை வேகமாக நகர்ந்த திரைக்கதை. டாக்ஸி ஓட்டுநராக நடித்தவரின் இயல்பான நடிப்பு. ஏன், அந்த நகுல்? டிவியில் அவரைப் பார்க்கும் பொழுதெல்லாம், ‘சுண்டெலி மாதிரி இருக்கிறான், இவன் எல்லாம் நடிக்க வந்திருக்கான்’ என்று நினைத்திருக்கிறேன். இந்தப் படத்தில் அவரை மிகவும் பிடித்து விட்டது. அவரைக் காதலிக்கும் கல்லூரிப் பெண் உட்பட சினிமாத்தனம் இல்லாத இயல்பான முகங்கள். பார்ப்பவர்களை கஷ்டப்படுத்தாத மிகையில்லாத நடிப்பு. இம்மாதிரியான படங்கள் வெற்றி பெற்றால் தமிழ்ப்படம் உருப்படலாம்.

படத்தில் வரும் கல்லூரி முதல்வரைப் பார்த்தவுடன், தனது பொறியியற் கல்லூரி மாணவர்களுடனும், அவர்களது புதிய புதிய ‘கண்டுபிடிப்பு’களுடனும் அடிக்கடி பத்திரிக்கைகளில் பெருமை பொங்க போஸ் கொடுக்கும் தென்மாவட்ட பல்கலைக்கழக தாளாளர் ஒருவர்தாம் நினைவுக்கு வந்தார்...

ரயிலின் கூரையில் விசிறியை பொருத்தி, ரயில் ஓடும் பொழுது சுற்றும் விசிறியிலிருந்து மின்சாரம் தயாரித்து ரயில் விளக்குகளை எரியச் செய்யலாம் என்ற ‘அதி’புத்திசாலித்தனமான கண்டுபிடிப்புகளை எல்லாம் நமது மாணவர்கள் பத்திரிக்கைகளில் நிகழ்த்துகிறார்கள். நோபல் பரிசு கொடுக்கத்தான் ஆளில்லை!

மதுரை
19/03/15

Sunday 29 March 2015

THE CHICKENS WILL COME HOME TO ROOST

The judgement of the Supreme Court in Shreya Singhal is lauded, quite rightly for its scholarly attempt in striking down a penal legislation and the English press is more vociferous in its excitement. However two of the grounds on which the constitutionality of Section 66A is mainly tested viz., its vagueness and chilling effect may embarrass the Supreme Court when it sits to hear a Criminal Appeal pending on its file in Criminal Appeal No. 1234 of 2007.

It was in 2007, Mid Day ran certain investigative stories on the retired Chief Justice Y.K.Sabharwal, suggesting that he allowed his sons to benefit from the series of orders he passed, presiding the Court as Chief Justice to seal thousands of shops, houses and commercial complexes that cropped up all over Delhi in violation of Master Plan. The allegation was that such steamrolling of all commercial establishments into dust raised the demand for spaces in the Malls, where his sons had stakes.

Mid Day made known its intentions more succinctly by publishing a cartoon, depicting Chief Justice Y.K.Sabharwal in his robes holding a bag with currency flowing out and a man in the sidewalk crying ‘Help! the mall is in your court’

It was the cartoon more than the articles, which made the Delhi High Court to go livid with anger when Senior Advocate R.K.Anand brought them to its notice, which promptly initiated Contempt proceedings against the Cartoonist Irfan Khan besides the Editor, Printer and the Publisher trio. In the words of the Delhi High Court, the cartoon and the articles were aimed at lowering the image of judiciary. As expected Bhushan Sr. and Junior, stepped in aid of the contemnors.

In a strange irony of facts, R.K.Anand who made the Court to initiate contempt proceedings against Mid Day within few days found himself caught on tape in a sting operation, bribing a witness in the infamous BMW hit and run case and was proceeded against for contempt and punished within an year.

In Mid Day case, Bhushans defended the contemnors, submitting that Justice Y.K.Sabharwal was already retired no longer holding Court; and the element of truth. The Delhi High Court was not impressed and in a brief order sentenced the contemnors to imprisonment for four months. The Delhi High Court held that in the garb of attacking a retired Justice, the contemnors scandalised the Institution. The press all over India instantaneously rose up in protest against the sentence.

The Supreme Court brought in a temporary truce in suspending the sentence and it will be exciting to any student of law, if the Supreme Court takes up these appeal and hear it in the light of its observations in Shreya Singhal case on the ‘manageable standard' by which a person can be said to have committed an offence or not have committed an offence’

It is interesting to note whether the terms ‘scandalising the institution’ and ‘lowering the image of judiciary’ will be examined in the new findings of the Supreme Court that ‘ordinary people should be able to understand what conduct is prohibited and what is permitted. Also, those who administer the law must know what offence has been committed so that arbitrary and discriminatory enforcement of the law does not take place

The Mid Day Cartoon and the Articles were there before the nation and the entire press, barring few exceptions thought that the contemnors did not cross the ‘Laxman rekha’ to be hauled up for contempt; Will it be safe, in such a scenario to leave it to the wisdom of two learned Judges to say the collective wisdom of thousands of Cartoonists, Correspondents and Intelligentsia who rose in support of the contemnors as wrong?

I can’t wait, the day when the chickens will come home to roost!

Madurai
29/03/15

Saturday 28 March 2015

இண்டர்ஸ்டெல்லாரில் பாகவத புராணம்!

ரேவதியின் தந்தைக்கு குழப்பம். அவரது தகுதிக்கும், ரேவதியின் அழகுக்கும் உரிய கணவனாக யாரைத் தேர்ந்தெடுப்பது என்பதில். பேசாமல் பிரம்மாவிடமே கேட்டு விடுவோம் என்று மகளை அழைத்துக் கொண்டு பிரம்மலோகம் சென்றார். அவர்கள் சென்ற நேரம் அருமையான இசைக் கச்சேரி நடந்து கொண்டிருந்தது. இசை முடியும் வரை காத்திருந்தவர், பின்னர் பிரம்மா சந்தித்து, ரேவதியை மணமுடிக்க மனுச்செய்த மாப்பிள்ளைகளின் பட்டியலிலிருந்து ஒருவரை தேர்ந்தெடுக்கச் சொன்னார்.

பிரம்மன் பெரிதாகச் சிரித்தார், ‘பிரம்மலோக இசையில் மயங்கி நீ காத்திருந்த சிறிது நேரத்தில் பூமியில் பல யுகங்கள் கழிந்திருக்குமே. இந்தப் பட்டியலில் உள்ளவர்கள் அனைவருக்கும் ஏற்கனவே திருமணமாகி செத்துப் போய் அவர்களது சந்ததிகளும் பல தலைமுறைகளுக்கு வாழ்ந்து மறைந்திருப்பார்கள் என்றார்.

ரேவதியின் தந்தைக்கு கிலி பிடித்தது. பிரம்மா அவரைத் தேற்றி, ‘பூமியில் விஷ்ணுவின் அவதாரமான கிருஷ்ணாவும் அவரது சகோதரர் பலராமரும் இருப்பார்கள். அவர்களில் பலராமருக்கு இவளை மணமுடி’ என்று அனுப்பி வைத்தார்.

பூமிக்குத் திரும்பியவர்களுக்கு அடுத்த அதிர்ச்சி. அனைத்தும் மாறிப் போயிருந்தது. முக்கியமாக பரிணாம வளர்ச்சியில் மனிதர்கள் சிறிய அளவில் மாறியிருந்தார்கள். பலராமர் வேறு வழியில்லாமல் தன் கையில் இருந்த கதையால் ரேவதியின் தலையில் அடிக்க அவள் பலராமர் உயரத்துக்கு குறுகி பின் அவரை மணமுடித்தாள்….

நேற்றுப் பார்த்த இண்டர்ஸ்டெல்லார் படக்கதை பாகவத புராணத்திலிருந்து திருடியதா தழுவியதா என்று யாரும் வழக்குப் போடவில்லையா?

II பேதுரு 3:8
பிரியமானவர்களே, கர்த்தருக்கு ஒருநாள் ஆயிரம்வருஷம்போலவும், ஆயிரம்வருஷம் ஒருநாள்போலவும் இருக்கிறதென்கிற இந்த ஒரு காரியத்தை நீங்கள் அறியாதிருக்கவேண்டாம்

சங்கீதம் 90:4
உமது பார்வைக்கு ஆயிரம் வருஷம் நேற்றுக்கழிந்த நாள்போலவும் இராச்சாமம்போலவும் இருக்கிறது

குரான் 22:47
அல்லாஹ் தன் வாக்குறுதிக்கு மாறு செய்வதேயில்லை; மேலும் உம்முடைய இறைவனிடம் ஒரு நாள் என்பது, நீங்கள் கணக்கிடுகிற ஆயிரம் ஆண்டுகளைப் போலாகும்

உண்மையச் சொல்லுங்க ஐன்ஸ்டைன், உங்க ஜெனரல் தியரி ஆஃப் ரிலேடிவிட்டி’’யை கண்டுபிடிச்சது யார்?

என்ன ஐன்ஸ்டைன் செத்துப் போய் பல வருசமாச்சா, அதனாலென்ன, பிளாக் ஹோல் ஈவண்ட் ஹொரைசனுக்குள்ள வண்டிய உட்டா அவரைப் புடிச்சுறலாம்….

நான் எங்க இருக்கேன்?

Madurai
24/11/14

INTERSTELLAR

Apocalypse; the instincts of an ordinary man may work to stand guard to his family but a scientist thinks for the survival of the humankind. The conflict between hero Cooper and Professor Brand, elegantly played by Michael Caine in ‘Interstellar’ is no different. Christopher Nolan has seamlessly woven a beautiful screenplay on an uncompromising bond between a father and daughter in the backdrop of pure science; at least in cinematic terms.

In the early eighties it was writer Sujatha, kindled my interest in ‘black holes’ and ‘time dilation’ with his comic strip in a weekly, the name I don’t remember; a dear friend and mentor tried to explain but with half success, Einstein’s theory of relativity with the passion and perseverance, no Professor whom later I came across exhibited.

Interstellar, I am sure will help in rekindling the interest on inter galactic travel in many a hearts; any viewer at the close of curtains will return home wondering about ‘wormhole’, ‘black hole’, and the relation between time with speed and gravity. Fear not, it is otherwise and interesting film and science is spoken in laymen’s language, keeping the general audience in mind.

Till the end there is no nail biting moment, to pull one to the edge of the seat but still the film succeeds in keeping the audience riveted to their seats with its thought provoking dialogues, monotonous they may be.

Survival; is intrinsic in every living thing, with no exceptions. We do not know why but it is written in our genetic codes that we have to survive; without such core quality we would not have been evolved against the odds. Mother’s love, I mean all living creatures and the urge to copulate cannot be explained otherwise. Methinks, if humans start to procreate through ‘in vitro fertilisation’ procedures, future generations may evolve with less and less appetite for sexual pleasures!

The quote ‘Do not go gentle into that goodnight’ which Caine uses to urge others to fight for survival is from a very famous poem written by a Welsh poet Dylon Thomas seeing his father fighting death. This poem, it seems has been used in many films, including ‘Independence Day’ with a minor variation as ‘We will not go quietly into the night’. One must admit and admire the fighting spirit of Americans, particularly after seeing they closed ranks and regrouped after September’11 attack.

In Interstellar as the world is sinking in its own weight, scientists as usual from US of A driven by their urge to survive devising ways to colonise planets in other galaxies. Help comes from ‘they’ one may interpret as God, aliens or future generations in forming a traversable wormhole to sneak into a distant galaxy. Cooper, a former shuttle pilot has to captain the mission to collect data from those who had already been sent to other planets and the film revolves around his love towards his family, particularly his promise to his daughter that he would return conflicting with his duty to the humanity.


In the end, we are left bewildered by the awesomeness of science and its unlimited possibilities and pondering over questions about what we now come in conflict,

‘The Family’.

Madurai
25/11/14

Thursday 26 March 2015

தி இமிடேஷன் கேம்



இன்று காலை, ‘ஐக்கிய நாடு சபையில் வேலை செய்யும் ஒரே பாலின தம்பதிகளுக்கும் மற்றவர்களுக்கு அளிக்கப்படும் பேறுகால சலுகை உட்பட அதே சலுகைகளை அளிப்பதை ரத்து செய்ய வேண்டும்’ என்று ரஷ்யா கொண்ர்ந்த தீர்மானம் தோற்க்கடிக்கப்பட்டது’ என்ற செய்தியை படித்த பின் மதியம் ‘இமிடேஷன் கேம்’ படம் பார்க்க நேரிட்டது தற்செயலானதா என்பது தெரியாது. ஆனால், படம் பார்த்த பாதிப்பில், ரஷ்யாவின் தீர்மானத்துக்கு பாகிஸ்தானோடு சேர்ந்து இந்தியாவும் ஆதரவாக ஓட்டளித்ததில், இந்திய வெளியுறவுத்துறை மீது நேற்றுப் பார்த்த ‘டைம்ஸ் நவ்’ செய்தி ஆசிரியர்களைப் போலவே கோபம் வந்தது.

ஒரே பாலின உறவு என்பது இந்தியாவில் குற்றமாக இருக்கையில், இந்தியா ரஷ்யாவுக்கு ஆதரவாக ஓட்டளித்ததில் வியப்பில்லை. மிகமிகச் சிலரைத் தவிர ஏறக்குறைய அனைவருமே இங்கு ஒரே பாலின உறவினை வெறுத்து ஒதுக்கும் சூழலில், ‘இமிடேஷன் கேம்’ போன்ற படங்கள் முக்கியத்துவம் பெறுகிறது.

ஆலன் டூரிங். செயற்கை அறிவின் (Artificial Intelligence) தந்தை. அதோடு கணணியின் முன்னோடி என்று புகழப்படும் கணித மேதை. 1952ம் வருடம் பிரிட்டிஷ் அரசால் ஓரினச் சேர்க்கைகாக குற்றம்சாட்டப்பட்டார். இரண்டு வருடம் சிறை அல்லது பாலுணர்வை மழுங்கடிக்கும் மருந்தை ஏற்றுக் கொள்ளல் என்ற முடிவு அவர் முன் வைக்கப்பட்டது (Chemical castration). ஆலன் இரண்டாவதை ஏற்றுக் கொண்டார். மருந்தின் வீரியம் அவரைக் கடுமையாகத் தாக்க இரண்டே ஆண்டுகளில் ஆலன் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. அப்போது அவருக்கு 42 வயது கூட ஆகவில்லை.

கொடூரமான சட்டம் மூலம் ஆலன் டூரிங்’கின் உயிரைப் பலி வாங்கிய பிரிட்டிஷ் மக்களுக்கு அப்போது தெரிந்திருக்கவில்லை, ‘இரண்டாம் உலகப் போரில் நேச நாடுகளின் வெற்றிக்கு ஆலன் முக்கியப் பங்காற்றி வடிவமைத்த கருவியும் ஒரு காரணம்’ என்பது. ஆலன் முக்கியப் பங்காற்றிய பிரிட்டிஷ் குழு ஜெர்மனியர்களின் சங்கேத மொழியான எனிக்மா’வை உடைத்து அவர்களது செய்திப் பறிமாற்றத்தை தொடர்ந்து கண்காணித்திருக்காவிட்டால் உலகப் போர் முடிவடைய மேலும் சில ஆண்டுகளாகி பல மில்லியன் மக்களைப் பலிவாங்கியிருக்கும் என தற்பொழுது கணிக்கப்படுகிறது.

கணணி அறிவியலின் முன்னோடியான ஆலன் டூரிங்’கிற்கு ஆதரவாக இணையம் முலம் உருவாக்கப்பட்ட கருத்தாக்கத்திற்கு பணிந்து இங்கிலாந்து அரசாங்கம் 2009ம் ஆண்டில் ஆலனுக்கு இழைக்கப்பட்ட கொடுமைக்கு பொது மன்னிப்பு கோரியது. 2013ம் ஆண்டில் அரசி ஆலனின் ‘குற்றத்தை’ மன்னிப்பளித்தார்.

2014ல் ஹாலிவுட் சற்று சினிமாத்தனத்துடன், டூரிங்’கின் கருவியை மையமாக வைத்து ‘இமிடேஷன் கேம்’ படத்தை தயாரித்து விருதுகளை அள்ளியுள்ளது. முக்கியமாக, ஆலன் டூரிங்’காக நடித்துள்ள ‘பெனிடிக்ட் கம்பர்பேட்ச்’ என்ற நடிகரின் நடிப்பைக் குறிப்பிட வேண்டும்……அப்புறம் வழக்கம் போல, வசனம்

"மனிதர்கள் ஒருவருக்கொருவர் பேசும் பொழுது, அவர்கள் எதைச் சொல்ல நினைக்கிறார்களோ அதைப் பேசுவதில்லை………………….அவர்கள் எதையோ சொல்லி அவர்கள் சொல்ல நினைப்பதைத்தான் சொல்வதாக மற்றவர் புரிந்து கொள்ள வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள்

இணைய விவாதங்களில் எப்போதும் நடப்பது அதுதானே!

மதுரை
26/03/15

Wednesday 25 March 2015

மன்னர் மறைந்தார், வாழ்க மன்னர்!

ஷ்ரேயா சிங்கால் வழக்கில் தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் பிரிவு 66Aவை நீக்கம் செய்துள்ள உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பினை வரவேற்று நாளை பத்திரிக்கைகள் அனைத்திலும் தலையங்களை எதிர்பார்க்கலாம். ஆனால் ஏதோ 66A வந்ததிலிருந்து பறிபோன சுதந்திரத்தை மீட்டெடுத்து விட்டதாக புகுந்து விளையாட காத்திருக்கும் இணையவாசிகளை மீண்டும் எச்சரிக்க வேண்டியது அவசியம் என உணர்கிறேன். என் பதிவுகளை தொடர்ந்து படித்தவர்கள் ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் ‘சைபர் க்ரைம்’ என்று எழுதப்பட்டு பின்னர் சின்மயி-ராஜன் பிரச்னையின் பொழுது மீள்பதியப்பட்ட பதிவினைப் பற்றி அறிந்திருக்கலாம்.

மீண்டும் சொல்கிறேன். நமது நாட்டில் யாரும் ஏதாவது குற்றத்திற்காக நாம் நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டு விடுவோமோ என்று அஞ்சுவதில்லை. மாறாக ஏதாவது குற்றத்திற்காக காவலர்களாள் கைது செய்யப்பட்டு விடுவோமோ என்பதுதான் அச்சமே. ஓவியர் ஹுசைனோ அல்லது நடிகை குஷ்பு’வோ இந்தியாவின் எந்த நீதிமன்றத்தாலும் தண்டிக்கப்படவில்லை. ஆனால் அனைத்து நீதிமன்றங்களிலும் இழுக்கப்பட்டு ஹுசைன் இந்தியாவை விட்டே ஓடினார். குஷ்பு அரசியல் கட்சியில் தஞ்சமடைந்தார். 66A அதற்கு காரணமில்லை.

66Aவை எடுத்துக் கொண்டாலும், அது துஷ்பிரயோகம் செய்யப்பட்டதாக கூறப்பட்டுள்ள எந்தவொரு வழக்கிலும் யாரும் அதாவது பால் தாக்கரே பற்றி எழுதிய மும்பை சிறுமிகள் ஷாகீன் தாதா, ரினு ஸ்ரீனிவாசனிலிருந்து அசம் கானை விமர்சித்த உத்தரபிரதேச சிறுவன் வரை இதுவரை தண்டிக்கப்பட்டதில்லை. ஆனால் கைது செய்யப்பட்டார்கள். சிறையிலடைக்கப்பட்டார்கள். அவமானங்களை சந்தித்தார்கள்.

66A இல்லாவிட்டாலும், இதே செயலுக்காக துணிந்தால் சம்பந்தப்பட்ட ஏதாவது இந்திய தண்டனைச் சட்டப்பிரிவுகளில் காவலர்களால் கைது செய்ய முடியும். அது பிணையில் விடக்கூடிய வழக்காக இருப்பினும், காவல்நிலையம், குற்றவியல் நடுவர் நீதிமன்றம், பிணை, கையெழுத்து, வாய்தா என்று அதே அவமானங்கள். உயர்நீதிமன்றம் பின் அந்த முதல் தகவல் அறிக்கையினை நசுக்கினாலும் (quash) இந்தச் செயல் இந்த சட்டப்பிரிவுக்குள் எப்படி வரும் என்று எந்தக் காவலர் மீதும் நடவடிக்கை இருக்கப் போவதில்லை.

66A தனிப்பட்ட நபருக்கு எரிச்சலூட்டும் (annoyance) காரியத்தை செய்தாலே குற்றம்சாட்டும் வகையில் இயற்றப்பட்டுள்ளது. உதாரணமாக ‘மோடி ஆட்சிக்கு வந்தால் ஹோலோகாஸ்ட் நிகழும்’ என்று எழுதியதும் அல்லது மம்தா பானர்ஜியை கிண்டல் செய்து வரையப்பட்ட கார்ட்டூனையும் கூறலாம். இந்த ஒரு கூறுதான் 66Aவை அதே போன்றதொரு மற்ற இந்திய தண்டனைச் சட்ட பிரிவுகளிலிருந்து வேறுபடுத்துகிறது. 66A இல்லாதது இத்தகைய செயல்களை மட்டுமே பாதுகாக்கலாம்…..லாம்’தான்.

ஏனெனில் பாராளுமன்றத்தைப் பற்றி கார்ட்டூன் வரைந்த அசீம் த்ரிவேதி மீது 66Aவோடு தேசதுரோக (sedition) குற்றமும் சுமத்தப்பட்டது. அசம் கானைப் பற்றி எழுதப்பட்ட செயலிலும் 66A இல்லாவிட்டாலும், ‘அவர் கோபமுற்று தனது தொண்டர்களைத் தூண்டி விட்டு கலவரம் செய்ய வேண்டுமென்ற எண்ணத்தில் எழுதினார்’ என்று இந்திய தண்டனைச் சட்ட பிரிவு 504ல் வழக்கு பதிவு செய்து கைது செய்தால் நீதிமன்றங்கள் பிணை வழங்கலாம், முதல் தகவல் அறிக்கையை தள்ளுபடியும் செய்யலாம். ஆனால் அதற்குள் சம்பந்தப்பட்டவர் வேண்டிய கஷ்டத்தை அனுபவித்து விடுவார்.

எனவே,  நாளை செய்தியைப் படித்து விட்டு ‘ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோம்’ என்று சார்லி ஹெப்டோ கார்ட்டூன்களை தூசி தட்ட ஆரம்பித்து விடாதீர்கள்.


மதுரை
24/03/15

Tuesday 24 March 2015

தி ப்ரின்ஸ் ஆஃப் ஈஜிப்ட்/ எக்ஸோடஸ் காட்ஸ் அண்ட் கிங்ஸ்

ஜியாஃப்ரே கட்டன்பெர்க்’கும் அவரது டிஸ்னி குழுமமும் ஐநூறுக்கும் மேற்ப்பட்ட யூத, கிறிஸ்தவ, இஸ்லாமிய அறிஞர்களை, மோசஸ் பிரின்ஸ் ஆஃப் ஈஜிப்ட் (1998) திரைக்கதையின் உண்மைத்தன்மைக்காக ஆலோசித்தார்களாம். ஆனால், மகாபாரத கர்ணன் – துரியோதனன் நட்பினைப் பற்றி அறிந்திருந்தார்களா என்பது தெரியவில்லை. 

மோசே பற்றி எத்தனையோ படங்கள் எடுக்கப்பட்டிருப்பினும், இந்த ஒரு படத்தில்தான் மோசே – ராமஸீஸ்’ நட்பானது பைபிளில் அது பற்றிய குறிப்புகள் ஏதும் இல்லை என்றாலும் உணர்வுபூர்வமாக திரைக்கதையாக்கப்பட்டிருக்கும்.  ராமசீஸ்’ஸின் பாத்திரமும், பார்வையாளர்களது அனுதாபத்தை அள்ளிச் செல்வதாகவும் சொல்லப்பட்டிருக்கும். கர்ணன் மோசே இருவரின் மனப்போராட்டங்களுக்கும் ஒன்றுதான் என்றாலும் கர்ணன் துரியோதனன் நட்பு நமது மரபுவழி அறநெறி சார்ந்தது. 

ஹாலிவுட்’ அறிந்தோ அறியாமலோ இப்படத்தில் அதை உள்வாங்கியிருக்கும்...

ஆனால், தற்பொழுது வெளிவந்துள்ள ரிட்லி ஸ்காட்டின் எக்ஸ்டோடஸ் தொழில்நுட்பத்திலும், திரையாக்கத்திலும் டிஸ்னியின் கார்ட்டூனை விட பல மடங்கு பெரிதாயினும், பதினைந்து ஆண்டுகளாயினும் இன்னமும் நம் மனதில்  உறைந்து போன பிரின்ஸ் ஆப் ஈஜிப்ட்’டின் உணர்வுகளையும் உறவுகளையும் கொஞ்சமும் அசைக்க முடியவில்லை. படம் முடிந்து வெளியே வருகையில் பத்தோடு பதினைந்து அதில் இதுவும் ஒரு படம் என்ற உணர்வுதான் மிஞ்சுகிறது. மீண்டும் பார்வோனை வில்லனாக சித்தரிக்க முனையும் இப்படம் எகிப்தில் தடை செய்யப்பட்டிருப்பதில் வியப்பில்லை.

1956ல் வெளிவந்த ‘டென் கமாண்ட்மெண்ட்ஸ்’ பற்றியும், செங்கடல் பிளக்கும் அதன் உச்சகட்ட காட்சி பற்றியும் என் அம்மா பிரமிப்புடன் கூறக் கேட்டிருக்கிறேன். பார்த்ததில்லை. 1998க்கு முன்பும் பின்னும் எத்தனையோ படங்கள் வந்திருக்கலாம். ஆனால் பிரின்ஸ் ஆஃப் ஈஜிப்ட்’ நம் மனதில் ஏற்ப்படுத்திய தாக்கத்தினை எந்தப் படமும் ஏற்ப்படுத்தப் போவதில்லை. அதற்கு பலர் நினைப்பது போல அப்படத்தின் பாடல்கள் முக்கிய காரணமல்ல.

மாறாக, ஆழமான நட்பு முன்னிறுத்தப்பட்டதேயாகும்...

மதுரை
22/03/15

Sunday 22 March 2015

அலைக்கற்றை தீர்ப்பும் கொண்டாட்டமும்!

சென்னை உயர்நீதிமன்ற வளாகத்திலுள்ள அதன் முக்கிய கட்டிடத்தின் ஒரு பகுதியில் வழக்குரைஞர்களுக்கான அறைகள் அமைந்துள்ளன. அந்த அறைகள் போதுமானதாக இல்லை என்பதால் புதிதாக வழக்குரைஞர் வளாகம் ஒன்று கட்டப்பட்டது. புதிய வளாகத்திலுள்ள அறைகளும் காணாத நிலையில், அனைவரிடமும் மனுக்களைப் பெற்று அதற்கான குழு ஒன்று தனது நடைமுறைப்படி அறைகளை ஒதுக்கியது.

அறைகளைப் பெறுவதற்காக போட்டி நிலவிய அந்தச் சூழலில், அனைவருக்கும் சமவாய்ப்பளிக்கும் வண்ணமும், அறைகளை கட்டிய அரசிற்கு முழு வருமானம் பெரும் முறையுமாக ஒன்று இருக்குமாயின் அது பொது ஏலமாகத்தான் இருக்க முடியும்.

அப்படியான ஒரு பொது ஏலமானது அறைகளை விரும்பும் அனைவருக்கும் சம வாய்ப்பளித்திருக்கும். மற்றும், நகரின் மிகமிக முக்கியமான இடத்தில் அரசிடம் உள்ள மிகச் சொற்பமான கட்டிடத்திற்கு, அதன் மதிப்பிற்கு ஈடான வருமானத்தை அரசிற்கு பெற்று தந்திருக்கும்.

ஆனாலும், புதிதாக கட்டிய வழக்குரைஞர் அறைகள் பொது ஏலத்தில் விடப்படவில்லை.

ஏனெனில், ஏற்கனவே உயர்நீதிமன்றத்தின் முக்கிய கட்டிடத்தில் அமைந்துள்ள அறைகள், சந்தை மதிப்பிலான வாடகை இன்றி, உயர்நீதிமன்ற குழு நிர்ணயித்த வாடகையினை கொடுத்து வரும் சூழலில், புதிய அறைகளை பெரும் வழக்குரைஞர்களிடம் இருந்து சந்தை மதிப்பிலான வாடகை பெறுவது, அவர்களுக்கிடையேயான சமநிலையை (Level Playing Field) பாதிக்கும். அதாவது ஒரு வழக்குரைஞர் தனது கட்சிக்காரரிடம் இருந்து பெறும் கட்டணத்தில், அந்த வழக்கிற்கான அலுவலக செலவும் அடங்கும். ஒரே வகையிலான சேவைக்கு, தனது கூடுதலான அலுவலக செலவினால் புதிய அறையில் இருக்கும் வழக்குரைஞர் கூடுதல் கட்டணம் நிர்ணயிக்க நேரிடும், அல்லது தனது நிகர கட்டணத்தை குறைத்துக் கொள்ள வேண்டியிருக்கும். எனவே ஏற்கனவே இருந்து கொண்டிருக்கும் வழக்குரைஞர்களிடம் என்ன வாடகை நிர்ணயிக்கப்படுகிறதோ, அதையேதான் புதிய அறைகளுக்கும் நிர்ணயிப்பது நியாயமான செயலாக இருக்க முடியும்.

வழக்குரைஞர்கள் தங்களது தொழிலை கைக்கொள்ளுவதற்கு, அரசிடம் அரிதாக உள்ள முக்கிய இடம், குறைந்த வாடகைக்கு கொடுக்கப்பட முடியுமா? பொது ஏலத்தில் அறைகள் கொடுக்கப்படாதலால், எவ்வளவு நட்டம்?

அது நட்டம் இல்லை என்பதுதான் நிதர்சனம்.

தனது குடிமக்களுக்கு நீதியை வழங்க வேண்டியது அரசின் முக்கிய கடமை. நீதியைப் பெறுவதற்காக பல குடிமக்களுக்கு வழக்குரைஞரின் உதவி தேவைப்படுகிறது. ஒரு நாளைக்கு ஐந்து லட்சம் கட்டணம் பெறும் வழக்குரைஞர்கள் முதல் ஐம்பது ரூபாய் வாங்கும் வழக்குரைஞர்கள் வரை இருக்கிறார்கள். ஆனால், அந்த ஐம்பது ரூபாயைக் கூட கொடுக்க முடியாத மக்களும் நமது நாட்டில் உண்டு. அவர்களுக்கும், நீதியை அளிப்பதற்காகவே, அரசு இலவச சட்ட உதவியை அளிக்கிறது. அதாவது, வழக்குரைஞர் கட்டணத்தை தானே செலுத்த வேண்டிய கட்டாயம், மக்கள் நலம் பேணும் அரசிற்கு (Welfare State) உண்டு.

இந்தச் சூழ்நிலையில் சந்தை மதிப்பில் வழக்குரைஞர்கள் அறைகள் ஒதுக்கப்பட்டால், நூறு ரூபாய் கட்டணம் வாங்கும் வழக்குரைஞர் நூற்றி ஐம்பது ரூபாயும், ஐம்பது ரூபாய் வாங்கிய வழக்குரைஞர் நூறு ரூபாயும் வாங்க நேரிடும். அதுவரை ஐம்பது முதல் தொண்ணூற்று ஒன்பது ரூபாய் வரை கட்டணம் செலுத்த வசதி படைத்த குடிமக்களும் இலவச சட்ட உதவி மையத்தை அணுக வேண்டிய கட்டாயம் ஏற்ப்படும். இறுதியில் சந்தை மதிப்பில் பெற்ற வாடகையினை அரசு இலவச சட்ட உதவி மைய வழக்குரைஞர் கட்டணமாக திருப்பிச் செலுத்தும்!

-oOo-

சென்னை மாநகராட்சி அதற்குச் சொந்தமான இடங்களில், கட்டிடங்களை கட்டி கடைகளாக வாடகைக்கு விட்டுள்ளது. அந்தக் கடைகளுக்கும் போட்டி நிலவும் சூழலில், பொது ஏலம் நடத்தி சந்தை மதிப்பினை வாடகையாக பெறுகிறது. ஆனால், அதற்கான காரணம் இருக்கிறது.

வீட்டு வசதி வாரியம், தான் கட்டும் வீடுகளையும், மனைகளையும் அதிகளவில் மனுக்கள் இருக்கும் சூழலில் லாட்டரி (Lot) மூலம் ஒதுக்குகிறது. அதற்கான காரணம் தனியே இருக்கிறது.

அதைப் போல, முதலில் வருபவருக்கு முன்னுரிமை ( First come First serve) என்ற முறையும் நமது நாட்டில் சுதந்திரம் கிடைத்த நாள் முதலே ஏற்றுக் கொள்ளப்பட்டு நடைமுறையில் இருக்கும் ஒரு முறைதான். உதாரணமாக சிறுகனிம வளங்களை (Minor Minerals) எடுப்பது சம்பந்தமான உரிமங்கள் இந்த முறையில் கொடுக்கப்படுவதுண்டு. அப்படியான முறையில் உரிமங்களை அளிப்பதற்கும் விசேட காரணங்கள் உண்டு. அந்த முறையும் மற்ற முறைகளைப் போலவே, சமத்துவ உரிமையை (Right to equality) பாதிப்பதாக நீதிமன்றங்கள் கருதியதில்லை.

-oOo-

எந்த எந்த உரிமம் எந்த எந்த முறையில் கொடுக்கப்படலாம் என்பது அரசின் கொள்கை முடிவு. அரசு நிர்வாகம் மக்களுக்கு நேரிடையாக பதில் சொல்ல கடமைப்பட்டது. பல்வேறு காரண காரியங்களை ஆராய்ந்த பின்னரே அரசு ஒரு கொள்கை முடிவினை தீர்மானிக்கிறது. எனவேதான், நீதிமன்றங்கள் அரசின் கொள்கை முடிவில் தலையிடுவதில்லை.

கண்மாய் பாதுகாப்பு சட்டத்தில் கூறியுள்ளவாறு நீர்ப்பிடிப்பு பகுதிகளில் குடிசை கட்டி வாழ்பவர்களை, அகற்றி நீர்வளத்தினைப் பெருக்குங்கள் என்று எளிதில் நீதிமன்றங்கள் நிர்வாகத்திற்கு கட்டளையிடலாம். ஆனால், அரசால் அப்படி கண்ணை மூடிக்கொண்டு தனது குடி மக்களை தூக்கி எறிந்து விட முடியாது. பல்வேறு காரணிகளையும், விளைவுகளையும் சீர்தூக்கி பார்க்க வேண்டும். எனவேதான் நீதிமன்றங்கள் அரசு நிர்வாகத்தில் எளிதில் தலையிடுவதில்லை.

இதன் காரணமாகவே, இனி அலைக்கற்றை (Spectrum) உரிமத்தினை பொதுஏலம் மூலமாகவே அளிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம், அதற்கெனவே அமைக்கப்பட்ட டிராய் (TRAI) க்கு கட்டளையிட்டுள்ளது எவ்வளவு தூரம் சரியான ஒரு தீர்ப்பாக இருக்க முடியும் என்பதில் எனக்கு ஐயமுண்டு!

ஏனெனில், 2003ம் ஆண்டு வாஜ்பாய் தலைமையிலான அரசு புதிய உரிமங்களை ‘முதலில் வருபவருக்கு முதலில் உரிமம்’ என்ற அடிப்படையில் அளிக்க வேண்டும் என்று தீர்மானித்ததற்கு பிரத்யேக காரணங்கள் உண்டு. முக்கியமாக அரசு, அலைக்கற்றை உரிமத்தினை, தகவல் தொடர்பு மூலம் வளர்ச்சிக்கான ஒரு காரணியாகத்தான் பார்த்ததேயொழிய அரசின் வருவாயை பெருக்கும் ஒரு வளமாக கருதவில்லை.

’How would you empower citizens? There could be all sorts of technologies - one is cellphones’

இக்பால் காதிர் என்ற வங்காள தேச தொலைதொடர்பு தொழில்முனைவோர் கூறிய மேற்க்கண்ட கருத்தினை இன்றைய டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழ் தனது தலையங்க பக்கத்தில் பிரசுரித்துள்ளதற்கு காரணமுண்டு!

இதனை உணர்ந்து கொண்டதாலேயே, டிராய் 2007ம் ஆண்டிலும், சிறு நகர, கிராமப்புறங்களிலும் அலைபேசிச் சேவை பரவலாக்கப்பட வேண்டும் என்றால் 2ஜி அலைக்கற்றை உரிமம் மட்டுமாவது ஏற்கனவே நிலுவையில் இருந்து வரும் முறையிலேயே அளிக்கப்பட வேண்டும் என்று முடிவு எடுத்தது. ஏற்கனவே அதே முறையில் உரிமம் பெற்று அலைபேசி சேவை அளித்து வரும் நிறுவனங்களோடு புதிதாக உரிமம் பெறும் நிறுவனங்கள் போட்டியிட வேண்டுமாயின், புதிய உரிமங்களுக்குமான கட்டணமும் 2001ம் ஆண்டில் நிர்ணயிக்கப்பட்ட கட்டணமாகவே இருக்க வேண்டும் என்றும் முடிவெடுத்தது. டிராயின் இந்த முடிவு தவறான நோக்கத்துடன்  (Ulterior Motives) எடுக்கப்பட்டது என்றோ அல்லது கெட்ட எண்ணத்துடன் (Malafide) எடுக்கப்பட்டது என்றோ உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பில் கூறவில்லை. அப்படியான ஒரு வாதமும் வைக்கப்பட்டதாக தெரியவில்லை.

2003ம் ஆண்டு தொடங்கி பொது ஏலம் மூலம் கிடைக்கும் அபரிதமான பணத்தை துறந்து உரிமங்கள் அளிக்கப்பட்டு வந்த சூழ்நிலையில், 2ஜி உரிமங்கள் மட்டும் பொது ஏலம் மூலம் அளிக்கப்படாதலால் அரசுக்கு 1.7லட்சம் கோடி ரூபாய் அரசுக்கு இழப்பு என்றால், அந்தக் கூற்று பிழையானதாகும் (Fallacious). எனினும் உச்ச நீதிமன்றம் தனது விசாரணையிலும் தீர்ப்பிலும் தணிக்கையாளரின் (CAG) அறிக்கைக்குள் செல்லவில்லை!

வேடிக்கை என்னவென்றால், 2001ம் ஆண்டில் மத்திய அரசு பொது ஏலம் தவிர்த்து குறைந்த தொகைக்கு அலைக்கற்றை உரிமத்தை வாரி வழங்கி அரசுக்கு 11,000/- கோடி நட்டம் ஏற்ப்படுத்தி விட்டதாக நமது உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு உட்பட நீதிப்பேராணை மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அரசின் வாதம் பொது மக்களின் நலனை முன்னிட்டு தொலை தொடர்பு வளர்ச்சிக்காக பொது ஏலம் கூடாது என்பது அரசின் கொள்கை முடிவு என்பதால் நீதிமன்றங்கள் அதில் தலையிட முடியாது என்பதாகும். இவ்வாறு வாதிட்டது யு பி ஏ அரசு அல்ல. மாறாக என் டி பி அரசு!

2001ம் ஆண்டில் 11ஆயிரம் கோடி என்று மதறாஸ் உயர்நீதிமன்றத்தில் எடுத்து வைக்கப்பட்ட வாதம், மக்கள் நலனுக்கான கொள்கை முடிவிற்கு எதிராக பொது நலவழக்கா? என்று நிராகரிக்கப்பட்டதை நாம் நினைவில் கொள்வது அவசியம்.

எனவே, கடந்த பத்து ஆண்டுகளாக இரு அரசுகளாலும் பொதுமக்களின் நலனை முன்னிட்டு ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒரு நடைமுறையினை உச்ச நீதிமன்றம், கூடாது என்பதோடு ஏற்கனவே அளிக்கப்பட்ட உரிமங்களையும் யார் தவறு செய்தவர்கள் யார் உரிமையோடு பெற்றவர்கள் என்று முழுவதும் ஆராயாமல் மொத்தமாக ரத்து செய்தது, ஒரு சரியான தீர்ப்பாக இருக்க முடியாது என்பது என் பணிவான கருத்து. இனி நிகழப் போகும் குழப்பங்களாலும், உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படப் போகின்ற மறுஆய்வு (Review) மனுக்களாலும் எனது கருத்து நிலைபெறும் (vindicate) என்று நம்புகிறேன்.

(2G அலைக்கற்றை பொது ஏலம் மூலமே அளிக்கப்பட வேண்டும் என்ற உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பினைக் குறித்து 03/02/12 அன்று எழுதிய கட்டுரையிலிருந்து. கட்டுரையின் இறுதியில் எதிர்பார்த்தது நடக்கவில்லை. மறுஆய்வு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. தீர்ப்பில் கட்டளையிட்டவாறு ஏற்கனவே அளிக்கப்பட்ட உரிமங்கள் ரத்து செய்யப்பட்டு ஏலமும் நடத்தப்பட்டது. ஆயினும் அலைக்கற்றையானது வளரும் நாடுகளில் பொது ஏலம் மூலம் அளிக்கப்படலாகாது என்ற எனது கருத்தில் மாற்றமில்லை)

Saturday 21 March 2015

பிடுங்கப்பட்ட தூண்டில்

‘மிதிவண்டியில் வீடுவீடாக சென்று பால் விற்கும் பால்காரர் ஒருவருக்கு அலைபேசி அழைப்பு வரும். தலையில் கட்டியிருக்கும் முண்டாசிலிருந்து அலைபேசியை எடுக்கும் அவர், ‘ஹலோ’ ‘ஹலோ’ என்று கத்திவிட்டு வெறுப்பாக காலி சட்டியில் அலைபேசியை வீசி எறிவார்’

தற்போதய சூழ்நிலையில் எவ்விதமான சுவராசியமுமில்லாத இத்திரைப்பட காட்சியமைப்பு, சில ஆண்டுகளுக்கு முன்னர் தொலைக்காட்சியில் அடிக்கடி காண்பிக்கப்பட்டு நம் மனதில் உறைந்து போன நகைச்சுவைக் காட்சி!

ஆனால், அந்த நகைச்சுவையின் பின்னே ஒளிந்திருக்கும் குரூரமான மனநிலைதான் இன்றும், ‘விலைமதிப்பற்ற அலைக்கற்றையை இலவசமாக சிலர் கொள்ளையடிப்பதா? வாங்கிக் கொள்ளட்டும் அதனை வசதியிருப்பவர்கள்’ என்று தர்ம அடிக்கும்பல் (lynching mob) போல ‘பொது ஏலம்’ ‘பொது ஏலம்’ என்று வலியிறுத்தும் ஊடகங்களை ஆட்டுவிக்கிறது.


சமூகத்தில் நடுநிலையில் இருப்பவர்களான பால் விற்பனையாளர்களையெல்லாம் தாண்டி அலைபேசிகள் இன்று அடிமட்டம், ஏன் எந்தமட்டத்திலும் இல்லாத பிச்சைக்காரர்கள் வரை புழக்கத்திற்கு வந்து விட்டது என்றால், அலைக்கற்றை ஏறக்குறைய இலவசம் என்ற அரசின் கொள்கையன்றி வேறெதுவும் இல்லை.



வளர்ச்சிக்கான முக்கியத் தேவை, தொலைதொடர்பும், போக்குவரத்தும் என்பது நமது நாட்டில் பல ஆண்டுகளாக உணரப்படவே இல்லை. தொலைபேசி என்பது ஆடம்பரமாகவே கருதப்பட்டு, சமூகத்தின் நடுத்தர வர்க்கத்தினருக்கே அவ்வசதி மறுக்கப்பட்டு வந்ததை நாற்பது வயதை கடந்தவர்கள் நன்கு அறிவார்கள்.

தொலைபேசி வசதியில்லாத ஒருவன், தான் நிற்கும் சமூக அடுக்கிலிருந்து இருந்து மேல் அடுக்கிற்கு செல்ல முன்பு எடுத்த முயற்சியில் இன்று தன் கையில் அலைபேசியை வைத்திருக்கும் ஒருவன், நூற்றில் ஒரு பங்கு முயன்றால் போதும். அதே வளர்ச்சியை எட்ட முடியும்.

வசதி வாய்ப்பு அற்றவர்களின் வளர்ச்சியில் அலைபேசி எவ்வாறு பங்கெடுக்க முடியும் என்பதை நான் அடிக்கடி நினைவு கூறும் ஒரு உதாரணத்தைக் கொண்டே விளக்க முடியும். மும்பையில் இருக்கையில் பல இளம் வழக்குரைஞர்கள் அலைபேசியை மட்டும் வைத்துக் கொண்டு தங்கள் கட்சிக்காரர்களுடன் அனைத்து தொடர்புகளையும் ஏற்ப்படுத்திக் கொண்டு தங்கள் தொழிலை புரிவதை கவனித்திருக்கிறேன். இவர்கள், வழக்குரைஞர் குடும்பங்களில் பிறந்தவர்கள் இல்லை. அலுவலகம் வாடகைக்கு பிடிக்கும் அளவுக்கு வசதியான குடும்பங்களில் பிறந்தவர்களும் இல்லை. பெரிய சட்ட நிறுவனங்களில் இணைந்து பணியாற்ற இவர்களுக்கு வாய்ப்பு கிடைக்காது. வேறு ஒரு வழக்குரைஞரின் அலுவலகத்தில் போதிய வருமானம் இன்றி இளைய வழக்குரைஞராக பணியாற்றுவதற்கு அவர்களது குடும்ப சூழ்நிலை இடம் கொடுக்காது.

சமூகத்தின் கடைக்கோடியில் நிற்கும் இவர்களைப் போன்ற வழக்குரைஞர்களும், வசதிமிக்க எதிர்காலம் குறித்த நம்பிக்கையுடன் மற்ற வழக்குரைஞர்களுக்கு நிகராக தொழில் செய்ய முடிகிறதென்றால், அதற்கு காரணம் ஏறக்குறைய இலவசமாக கிடைக்கும் தொலைத் தொடர்பு வசதிதான்.

இந்த உதாரணம் அனைத்து தொழிலுக்கும் பொருந்தும். ஏன், இன்று எழுத ஆர்வமுள்ள எவருக்கும் தமது கருத்தினை இணையத்தில் பதிந்து மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள முடிகிறது. இதன் மூலம் கிடைக்கும் பிரபல்யத்தால், தங்களது ஆக்கத்தை புத்தகமாகவும் பதிப்பித்து அடுத்த கட்டத்துக்கு போவது எளிதாக உள்ளது. பெரிய எழுத்தாளர்கள் என்று அறியப்படுபவர்களோடும் சரிக்கு சரியாக நின்று வாசகர்கள் விவாதம் செய்கின்றனர். பத்து ஆண்டுகளுக்கு முன்னர், சென்னையில் இயங்கும் பத்திரிக்கை நிறுவனங்களோடு அறிமுகமில்லாத ஒரு எளிய எழுத்தாளருக்கு கிடைக்காத வாய்ப்பு தமிழகத்தின் கடைக்கோடியில் உள்ள எழுத்தாளன் ஒருவனுக்கும் இன்று கிடைக்கிறது என்றால், அதற்குக் காரணம் தொலைத்தொடர்பு வசதியை மக்களிடமே விலை பேசும் கொள்கையை அரசு கை விட்டதினால்தான்.




தொலைபேசி நிறுவனங்களுக்கு விற்க்கப்படும் அலைக்கற்றை இறுதியில் விற்க்கப்படுவது நாட்டின் வளர்ச்சியில் தங்களின் பங்கினைப் பெற நம்பிக்கையுடன் காத்திருக்கும் சாதாரண மக்களிடம்தான். அலைபேசி சேவை கட்டணங்களை தீர்மானம் செய்ய ‘டிராய்’க்கு (TRAI) அதிகாரமுண்டு. தற்பொழுது நிலவும் போட்டியின் காரணமாக, விலை குறைவாக இருப்பதை கவனத்தில் கொண்டு விலை நிர்ணயிக்கப்படவில்லை. ஆயினும், எந்தக் காலத்திலும் டிராய் சேவையின் அதிகபட்ச விலை அல்லது குறைந்தபட்ச விலை ஆகியவற்றை நிர்ணயிக்கலாம். அவ்வாறு நிர்ணயிப்பது, சேவை நிறுவனம் அந்த சேவைக்காக செய்துள்ள முதலீட்டிற்கான நியாயமான வட்டி விகிதத்தின் அடிப்படையில் இருக்க வேண்டுமென டிராய் நெறிமுறைகள் கூறுகின்றன.

அவ்வாறான நிலையில், அலைக்கற்றையை பெறுவதற்கு ஒரு நிறுவனம் அரசிற்கு செலுத்தும் தொகையையும் அதன் முதலீடாக கணக்கில் எடுக்கப்படும். அலைக்கற்றை இலவசமாக அளிக்கப்படும் பட்சத்தில், சேவை நிறுவனத்தின் செலவினங்கள் மட்டுமே முதலீடாக கணக்கில் எடுக்கப்படும். எனவே, 1.75 லட்சம் கோடிக்கு அலைக்கற்றையை விற்று இருக்க முடியும் என்றால், அந்த கோடியை இறுதியில் செலுத்தப் போவது, சேவையை பயன்படுத்தும் சாதாரண மக்கள்தான்.

பேருந்து வழித்தட உரிமங்களையே எடுத்துக் கொள்வோம். மதுரையிலிருந்து தேனி, கம்பம் செல்லும் வழித்தடத்தின் மதிப்பு ஒரு கோடியை எட்டுகிறது. ஆனால், வழித்தடமானது இலவசமாகவே அரசால் முதலில் வருபவருக்கு முன்னுரிமை அடிப்படையில் அளிக்கப்படுகிறது. வழித்தட உரிமையை ஏலம் விட்டால், அரசுக்கு பல கோடி கிடைக்கும்தான். ஆனால், இதுதான் பேருந்து கட்டணம் என்று அரசு நிர்ணயிக்க முடியாது.

(17/02/12 அன்று 2G அலைக்கற்றை தீர்ப்பு வெளிவந்த நேரத்தில், அலைக்கற்றையை குறிப்பாக 2G அலைக்கற்றையையாவது இலவசமாக வழங்குவது என்பது ‘வளரும் நாடான’ இந்தியாவிற்கு பொருத்தமானது என்று NDA மற்றும் UPA ஆட்சியாளர்களால் எடுக்கப்பட்ட கொள்கை முடிவை மாற்றுவதன் விளைவுகளைப் பற்றி எழுதிய கட்டுரை. மற்ற எதையெதையோ இலவசமாக கொடுப்பதற்கு தொலைத்தொடர்பு வசதியில் 2ஜி வசதியையாவது, மக்களுக்கு இலவசமாக வழங்குவது, பசித்தவனுக்கு அளிக்கப்படும் தூண்டிலைப் போன்றது)

Friday 20 March 2015

காயிதே மில்லத் ஆவணப்படம்

சென்னை புதுக்கல்லூரி. 

மாணவர்களிடையே ஒருவர் சென்று புகைப்படம் ஒன்றினைக் காட்டி இது யார் என்று வினவுகிறார். முகமது அலி ஜின்னாவிலிருந்து, நாகூர் அனிபா வரை ஆளாளுக்கு ஒரு பெயரைக் கூறுகின்றனர். 

அடுத்தக் காட்சியில் இஸ்லாமியக் கல்விக் கழகம் பாளையங்கோட்டையில் நடத்தும் அனாதை இல்ல சிறார்கள், தொடர்ந்து வேறு ஒரு இஸ்லாமிய அமைப்பு நடத்தும் கல்வி நிறுவனம் என அனைத்து இடங்களிலும் கூறப்பட்ட அதே மாதிரியான பதில்களால் எழுந்த கேலி உணர்வு தொடர்ந்த காட்சிகளில், ‘அந்தப் படத்திலிருப்பவர் ‘கண்ணியத்துக்குறிய காயிதே மில்லத்’ என்று கலைஞர் கருணாநிதியின் பேச்சினூடாகவோ அல்லது ஏதோ திராவிட இயக்க கூட்ட பேச்சுகளிலோ கேட்டதைத் தவிர வேறு எதுவும் எனக்கும் அவரைப் பற்றித் தெரிந்திருக்கவில்லை என்ற புரிதலில் வெட்கமாக மாறியது.

விடுதலை பெற்ற இந்தியாவின் மிகப் பெரிய இஸ்லாமிய சமுதாய அரசியல் தலைவராக விளங்கிய தமிழர் ஒருவரைப் பற்றி ஒன்றுமே தெரியாமல் நான் இருந்திருப்பதைப் போல பலர் இருக்கலாம் என்ற அடிப்படையில் ஒரு முறை கூட பிரச்சாரத்துக்கு செல்லாமல் கேரள மாநிலம் மஞ்சேரி தொகுதியிலிருந்து மூன்று முறை நாடாளுமன்றத்துக்கு தேர்தெடுக்கப்பட்டவரும், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் தேசிய தலைவராக விளங்கியவருமாகிய காயிதே மில்லத் இஸ்மாயில் சாகிப் அவர்களை அறிமுகப்படுத்தும் ஆவணப்படம் ஒன்றினை, ஆளூர் ஷாநவாஸ் அவர்கள் இயக்கி தயாரித்துள்ளார்.

அவரது உழைப்பில் உருவான சென்னை புதுக்கல்லூரி மற்றும் தமிழகமெங்கும் இருக்கும் பல இஸ்லாமிய கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணவர்கள் அவரைப் பற்றி தெரிந்திராமல் இருப்பதில் வியப்பு ஏதும் இல்லை. ஏனெனில், அவர் பேசிய பேச்சின் ஒலிப்பதிவோ அவரைப்பற்றிய ஒளிப்பதிவோ ஏதும் நம்மிடையே இல்லை. ஆயினும் அவரைப் பற்றி மற்ற அரசியல் தலைவர்களைப் பேச வைத்து திறமையான எடிட்டிங் மூலம் அலுப்புத் தட்டாத வண்ணம் இயக்கியுள்ளார் விடுதலை சிறுத்தை கட்சியைத் சேர்ந்த ஷாநவாஸ்.

ஆனால், வழக்காமாக தனது ஏற்ற இறக்கமான தமிழ் உச்சரிப்பால் நம்மை கொள்ளை கொள்ளும், அப்துல் ஹமீது’வின் பின்னணிக் குரலில் சற்றுத் தடுமாறியிருக்கிறார்.

காயிதே மில்லத் அவர்களின் சிறப்புகள் பல கூறப்பட்டாலும், அவர் நெல்லை பேட்டை’யில் பிறந்தவர் என்பதும், இந்திய அரசியல் நிர்ணய சபையில் பழமையான மொழியையே நமது நாட்டின் தேசிய மொழியாக ஏற்றுக் கொள்ள வேண்டும் என்ற கருத்து முன் வைக்கப்பட்ட போது அதன் உறுப்பினராயிருந்த காயிதே மில்லத் அவர்கள் ‘இந்த நாட்டு மண்ணில் பேசப்பட்ட மொழிகளில் மிகவும் பழமையானதும், ஆரம்ப காலத்தில் இருந்து பேசப்பட்டு வரும் மொழியாக இருப்பதும் தமிழ்தான். உயர்தரமான இலக்கிய வளங்களும், நயங்களும் நிறைந்த மொழி தமிழ் பழமையான மொழியைத்தான் இந்நாட்டின் தேசிய மொழியாக்க வேண்டுமென்றால் இந்தியாவின் தேசிய மொழியாகத் தமிழைத்தான் ஏற்றுக் கொள்ள வேண்டும்’ என்று பேசியதையும் இங்கு குறிப்பிட வேண்டும்.

என்னவிருந்தாலும் திருநெல்வேலிக்காரரல்லவா?

Wednesday 18 March 2015

'ஸ்ரீப்'... 'ஸ்ரீப்'...


விடுமுறை தின மத்தியான வேளையில் ஏதாவது வேலை விஷயமாக வீட்டை விட்டு கிளம்புவதைப் போல துன்பம் வேறு எதுவும் இருக்கப் போவதில்லை. நெஞ்சு நிறைய எரிச்சலுடனும் உடல் முழுவதும் அசதியுடனும், இறுதியாக கண்ணாடியில் ஒரு முறை பார்த்துக் கொண்டு உள்ளறையிலிருந்து வெளியேறிய போதுதான், வார்த்தைகளில் வடிக்க முடியாத அந்த சிறு சத்தங்கள் என்னை ஒரு முறை எல்லாவற்றையும் மறந்து ஒரு கணம் அப்படியே நிற்க வைத்து விட்டது.

"ஸ்ரீப்" "ஸ்ரீப்"

சத்தம் வந்த பக்கம் முகத்தை பாதி திருப்புகையிலையே மீண்டும் "ஸ்ரீப்" "ஸ்ரீப்".

எனக்குப் புரிந்து போனது. கண்ணாடி வைத்த அந்த பீரோவுக்கு மேலே நெருக்கமாக மேற்கூரை வரை அடுக்கி வைக்கப்பட்ட பயணப் பெட்டிகளுக்கு பின்னே சில நாட்களுக்கு முன்னர் பொரித்த புறாக்குஞ்சுககளின் சத்தம்தான் அது.

அதற்கு மேலும் முகத்தை திருப்பவில்லை. கால்கள் என்னையறியாமல் வெளியே செலுத்த படியில் இறங்கிக் கொண்டிருந்தேன். அதுவரை என்னை நிறைத்திருந்த எரிச்சலும், அசதியும் பற்றிய நினைப்பே இல்லாமல், 'நான் ஏன் இப்படி அசடு போல புன்னகைத்துக் கொண்டிருக்கிறேன்' என்று வியப்பாக இருந்தது. தொடர்ந்து சாலையில் நடக்கையிலும், ஆட்டோவில் பயணிக்கையிலும், ரயிலின் நெரிசலிலும் ஏதோ சந்தோஷமாகவே உணர்ந்து கொண்டிருந்தேன். வழக்கமாக மும்பை வீதிகளிலும், ரயில் நிலையங்களிலும் இருந்து மனதை பிசையும் சில காட்சிகள் எதுவும் அன்று எதுவும் கண்ணில் பட்டதாக எனக்குத் தெரியவில்லை. என்ன வேலை விஷயமாக அன்று வெளியே போனேன் என்று கூட இப்போது ஞாபகம் இல்லை. மேலே இருந்து வந்த அந்த சிறு சத்தம் இன்னும் மனதில், மிட்டாயை தின்ற பிறகும் நாவில் ஒட்டியிருக்கும் இனிப்பினைப் போல சந்தோஷத்தை விதைத்துக் கொண்டு இருக்கிறது.

வீட்டிற்கு திரும்பியபின்னர் முதலில் நான் சென்றது பீரோவுக்கு அருகில்தான். ஆனால் சத்தம் ஏதும் கேட்கவில்லை. கடந்த ஒரு மாதமாகவே அந்த பீரோவுக்கும் ஜன்னலுக்குமாக பறந்து கொண்டிருந்த புறாக்கள்தான் எங்களுக்கு வேடிக்கை. எனக்கு புறாக்கள் மீது அதிக பிரியம் இருந்ததில்லை. இரண்டொரு நாட்களுக்கு முன்னர் கூட, 'கொஞ்சம் இங்கே வந்து கேளுங்களேன் என்று எனது மனைவி ரகசியமாக குஞ்சுகளின் சத்தத்தைக் கேட்க அழைத்த போது, 'ஹாங்' என்று அசிரத்தையாக மறுத்தேன். மும்பையில் அங்கிங்கெனாதபடி எங்கும் புறாக்கள் நிறைந்திருப்பதால் இருக்கலாம். அல்லது ஜன்னலை ஒட்டிய மரம் முழுவதும் நிறைந்த காகங்கள் மீது நான் கொண்ட அபரிதமான காதலும் காரணமாக இருந்திருக்கலாம். பெரும்பாலான மக்களின் அன்பு புறாக்கள் மீதும் வெறுப்பு காகங்கள் மீதும் படிந்திருந்தது எனக்கு வழக்கம் போலவே ஒரு வேறுபட்ட நிலையை எடுக்க வைத்திருந்தது. சில நாட்கள் முன்பு ‘புறாக்கள் காகங்களை விட வன்முறை விரும்பிகள்’ என்று வேறு படித்துத் தொலைத்து விட்டேன்.

ஆறு மாதங்களுக்கு முன்னர் ஜன்னலை அடுத்து இருந்த மரத்தில் இரண்டு காகங்கள் குஞ்சு பொரிப்பதற்க்காக கட்டிய ஒரு கூடு எங்கள் பொழுது போக்காக இருந்தது. தினமும் குஞ்சுகள் பொரிப்பதற்காக காத்திருந்தோம்.

ஒரு நாள் என் மனைவி, "அந்த கூட்டில் பார்த்தீர்களா என்னவென்று?"

"என்ன குஞ்சு பொரித்து விட்டதா?"

"இல்லை. அங்கே பாருங்கள்"

கொஞ்சம் கவனமாக பார்த்ததில் அந்தக் கூட்டினை கட்ட உபயோகப்பட்ட மரக்குச்சிகளிடையே எனது அலுமினிய சட்டை தொங்க போடும் ஹாங்கர்!

"அட! இந்த ஜன்னல் கம்பி வழியா எப்படி எடுத்துட்டுப் போயிருக்கும்" என்று நான் வியந்து கொண்டிருந்ததில் அந்த திருட்டுக் காகங்களின் மீதும் கோபம் வரவில்லை.

ஆனால் தினமும் கவனித்துக் கொண்டிருந்தாலும் குஞ்சு பொரித்து விட்டதா இல்லையா என்று கணிக்க முடியவில்லை. எங்கள் திருட்டுப் பார்வையில் இருந்து தங்களை பாதுகாத்துக் கொள்கையில் மிகவும் கவனமாக இருந்து விட்டன அந்தக் காகங்கள். எனக்கும் காக்கா முட்டை எத்தனை நாளில் பொரிக்கும் என்ற விபரமெல்லாம் தெரியாது. விரைவில் கூடு கூட மெல்ல மெல்ல சிதிலமாகி வர, ஒரு நாள் அடித்த பெரிய காற்றில் அந்தக் கூட்டின் வடிவம் கூட மாறிப் போனது.

'என்னப்பா! குஞ்சு பொரிச்சுதா இல்லையா. என்ன பண்ணுது அந்தக் காக்கா?"

சற்றே கூட்டை உற்றுப் பார்த்த என் மனைவி, 'இல்லப்பா, அந்தக் காக்காதான் குஞ்சுன்னு நினைக்கிறேன். நல்லா வளர்ந்துட்டுது"

"என்ன சொல்ற அது ஏதோ கோழி சைசுக்கு இருக்குது" என்று சொன்னாலும் கொஞ்சம் கவனமாக பார்த்ததில் அதுதான் பொரித்த குஞ்சுவாக இருக்கும் என்று எனக்குத் தோன்றியது. வெட்கம்! கடைசியில் ஏற்கனவே குஞ்சு பொரித்து அதுவே பெரிய காக்கா மாதிரி எங்களுக்குத் தெரியாமலே வளர்ந்து விட்ட விஷயத்தை என் மகளிடம் சொல்ல தைரியம் இல்லை. அது வரை 'எங்கள் வீட்டில் எப்படி கோழிக்குஞ்சு பொரித்தது என்பதிலிருந்து காக்காக் குஞ்சு பொரிப்பது வரை ஏகப்பட்ட விஷயங்களை' அவளிடம் மேதாவி போல அளந்து வைத்திருந்தேன்.

இப்போது அந்தக் கூட்டின் ஏதோ ஒன்றிரண்டு குச்சிகளே மரத்தில் எஞ்சியிருக்கிறது. எனது ஹேங்கரை கூட காணவில்லை. நைசாக மீண்டும் எனது வீட்டிலேயே, அந்த காகங்கள் கொண்டு வந்து வைத்து விட்டதா என்பது தெரியவில்லை. திருப்பித் தரவிட்டாலும் பரவாயில்லை. அந்த ஹாங்கரை கூட்டில் பார்த்த போது மனதில் வந்து பரவிய ஒரு சந்தோஷ அலைக்கு என்ன விலை குடுத்தாலும் தகும்.

இந்த சந்தோஷமோ கஷ்டமோ நம் மனதில்தான் இருக்கிறது போல. குளத்தில் எறிந்த கல் முழுகிப் போனாலும் அலை வளையங்கள் மெல்லத்தான் ஓய்ந்து போகின்றது. ஆனாலும் அலை ஓய்ந்த பின்னரும் மனதுக்குள் கற்பனைக் கல்லை எறிந்து அலைகளை அவ்வப்போது பரவச் செய்வதும் சாத்தியமே.

சில வருடங்களுக்கு முன்னர் கூட இது போலத்தான். அப்போது வேறு ஒரு வீட்டில் வசித்து வந்தோம். அதன் ஜன்னலருகே இப்போது உள்ளது போல மரம் இல்லை. ஆனாலும் அருகிலிருந்த சுவற்றின் கீரலில் இருந்து முளைத்து போதிய பின்பலம் இல்லாதலால் அரையடி நீளத்துக்கு மேல் வளரவே முடியாமல், என்றும் பதினாறாக விளங்கிய ஒரு செடி ஜன்னலருகே நான் செல்லும் போதெல்லாம் என்னைப் பார்த்து புன்னகைக்கும்.

ஒரு ஞாயிற்றுக்கிழமை காலை, எழும்ப மனமில்லாமல் படுக்கையில் புரண்டு கொண்டிருந்த போது கேட்ட "தட்" என்ற சத்தம் என்னை அதிர்ந்து எழ வைத்தது. என்னவென்று புரிபட சிறிது நேரம் பிடித்தது. ஜன்னல் கம்பி வழியே வீட்டினுள் பாய்ந்த ஒரு சிட்டுக்குருவிதான் மின்விசிறியில் அடிபட்டு மூலையிலிருந்த மேஜைக்கு அடியில் தூக்கியெறிப்பட்டுக் கிடந்தது. அருகே சென்று பார்த்ததில் அதற்கு உயிர் இருந்தது புரிந்தது. என்னைப் பார்த்து பயந்து ஒரு மூலைக்குள் ஒதுங்க முயன்று தோற்றுப் போனதைப் பார்த்து ஒரு பெரிய நிம்மதி எனக்குள்.

மகளை வேகமாக எழுப்பினேன். கண்களை திறக்க முடியாமல் இருந்தவள் விஷயம் தெரிந்தவுடன் மிகவும் உற்சாகத்துடன் என்னுடன் சேர்ந்து கொண்டாள். மெல்ல அதன் அருகில் சென்று எனது கைகளில் அதை பதவிசாசக எடுத்தேன். உடல் முழுவதும் ஜன்னி கண்டது போல நடுங்கிக் கொண்டிருந்தது. எனக்கு புரிந்து போனது. அடி ஏதும் படவில்லை. அதிர்ச்சிதான் அதனை அப்படி கட்டிப் போட்டிருக்கிறது என்று.

மகள் வேகமாக உள்ளே போய் நீர் எடுத்து வந்தாள். மெல்ல அதற்கு ஊட்ட வேகமாக குடித்தது. உடல் நடுக்கம் நின்ற மாதிரி இருந்த போது அதனை கீழே விட்டால் அதற்கு நிற்க முடியவில்லை. 'பொத்' என்று விழுந்து கிடந்தது. இறக்கைகளை அடிக்கக் கூட அதற்கு தைரியமில்லை. மகளுடைய பிஞ்சுக்கைகளில் பின்னர் தஞ்சமாக, அதற்கு இதமாக இருந்திருக்க வேண்டும் போல. நன்றாக பொதிந்து அமர்ந்து கொண்டது.

இது வரை மரத்திலும் ஆகாயத்திலுமே பார்த்து வியந்திருந்த சிட்டுக்குருவியை கைகளில் கண்ட மகளுக்கு ஏகப்பட்ட சந்தோஷம். அவள் முகம் அப்படி மலர்ந்திருந்தது. சிறிது நேரத்தில் மெல்ல எழ முயன்ற அந்த சிட்டுக்குருவி சடாரென் எழும்பிப் பறந்து டி.விக்கு பின்னே மறுபடியும் விழுந்து ஒளிந்து கொண்டது.

பறக்க முடியவில்லையோ என்று அருகே சென்று பார்த்தால், மீண்டும் அங்கிருந்து ஒரு எம்பு எம்பி ஜன்னல் கம்பியில் உட்கார்ந்து சில விநாடிகளில் வெளிக்காற்று பட்ட உற்சாகத்தில் எதுவுமே நிகழாதது போல ‘ஜிவ்’ என்று பறந்து போனது.

மகளுக்கு முதலில் ஏமாற்றமாக இருந்தது. 'ஏம்பா, அது இங்கருந்து போயிருச்சு' என்று கேட்டபடி இருந்தாள். பின்னர் அதையே ஒரு 'இப்படி அடிபட்டு அவளால் காப்பாற்றப்பட்ட ஒரு ஆண்குருவி தனது பெண்குருவியுடன் இணைந்த கதையாக' நான் சொல்ல புன்னகையுடன் கேட்டுக் கொண்டாள்.


எனக்கு இன்றும் நன்றாக நினைவிருக்கிறது. அந்த ஞாயிற்றுக் கிழமை முழுவதும், 'என்ன நடந்தது. ஏன் இப்படி மனம் லேசாக ஏதோ சந்தோஷமாக உணர்கிறேன்' என்று வியந்தவாறே இருந்தேன்...

TWO FATHERS, THREE MOTHERS AND A CONFUSED CHILD

It was in the year 1978, India’s first IVF baby (in vitro fertilisation) was born. In the past 35 years, the Assisted Reproductive Technology (ART) has developed into such a stage, where a single child can lay claim upon five persons as his parents…

It is possible today that a child can be constructed at the wish and expenses of two consenting adults (Commissioned Mother and the Father) with an egg donated by a woman (Genetic Mother), fertilised with that of a donor’s sperm (Genetic Father) and the embryo is grown in the womb of a third woman (Surrogate Mother).

Now the question is whose property the child would inherit as a natural heir and which personal law to be followed, if those parents belong to different religion.

In order to avoid confusion, let us examine a simple case of a child born to a Hindu couple with the sperm, donated by a stranger. Except consenting to the artificial insemination, the Commissioned Father has no connection to the child, unless he adopts the child under the provisions of the Hindu Adoptions and Maintenance Act’1956 as if the child is the one whose parentage is not known.

If no adoption takes place, the child cannot be a heir to the Commissioned Father in accordance to the law of succession, governing Hindus. On the other hand the child, if able to trace the biological father can have a claim to his properties as his son! This may send shivers down the spine of sperm donors. It was only two years back, a South Indian couples made it to the headlines of the Newspapers, seeking donors who are tall, fair and IIT graduates. How interesting it would be, if any future Nadella Satya, donating sperm in his college days ending up in a lawsuit from his biological son from a non-descript town in India!

The Law Commission of India in its Report No.228, though addresses some of the issues arising out of surrogacy, still falls short of coming with any clear solution to this vexed issue of succession.

The Assisted Reproductive Technologies (Regulation) Bill -2010 is yet to take the shape of an Act. Its provision under Section 35 (1) “A child born to a married couple through the use of assisted reproductive technology shall be presumed to be the legitimate child of the couple, having been born in wedlock and with the consent of both spouses, and shall have identical legal rights as a legitimate child born through sexual intercourse” may be an answer but still, I feel that it is possible for the child to go behind the biological father, stating that this legislation runs contrary to principles of the religion, to which he is subscribed to. The Ahamas and Shastras will once again gain prominence in court halls searching for an answer to this modern problem; whether it is possible for the biological father to renounce his rights as father in any other manner other than the process of adoption, which is long been recognised as an accepted practice.

The above discussion is only academic as we don’t have any such legislation till this day and it is doubtful whether this provision can be given retrospective effect. As on date we have only ‘guidelines’ in the form of National Guidelines for Accreditation, Supervision and Regulation of ART Clinics in India, framed by Indian Council of Medical Research (ICMR) dealing the subject of ART.

The Regulation 3.12.1 reads in the same lines as that of the draft bill.
A child born through ART shall be presumed to be the legitimate child of the couple, having been born in wedlock and with the consent of both the spouses. Therefore, the child shall have a legal right to parental support, inheritance, and all other privileges of a child born to a couple through sexual intercourse

This being a Regulation will create only a contractual right but not a statutory right and hence as on date there is no legislation, except Hindu Succession Act’1956 to deal with this issue. If we go by the provisions of the Hindu Succession Act, it is still the biological father (Genetic Father) and not the commissioned one who is the father of the child for the purpose of inheritance; such statutory rights cannot be taken away by contract between the parents to the detriment of the child. As for adoption, there is no presumption and that one has to satisfy the requirements of the Hindu Adoptions and Maintenance Act and to prove it by persuasive evidence.


The only irresistible conclusion is that it is advisable for the Commissioned parents of children born through ART, to go for adoption as if the child whose parentage is not known to them. However the issue, which is discussed here, is the most simplistic of the kind of issues that are going to arise in future; but our laws are hopelessly inadequate to deal those impending disputes.

Tuesday 17 March 2015

ஓட்டுநர் உரிமம், வாகன ஆவண சோதனை?

பள்ளி மாணவர்கள் உரிமம் இல்லாமல் மோட்டார் வாகனங்களை ஓட்டுவதை காவலர்கள் எவ்வாறு தடுக்கலாம் என முகப்புத்தகத்தில் கேள்வி எழுப்பியிருந்தேன். பல்வேறு ஆலோசனைகள் கூறப்பட்டாலும், இராமநாதபுரத்தில் பணிபுரியும் சிவா என்ற இளநிலை வழக்குரைஞர் சரியான பதிலைக் கூறியிருந்தார்.

மோட்டார் வாகனச் சட்டம் பிரிவு 4(2)ன் படி பதினெட்டு வயது நிரம்பாதவர்கள் வாகனம் ஓட்ட இயலாது என்பதால், பள்ளி மாணவர்கள் உரிமம் பெற்றிருக்க வாய்ப்பில்லை. ஆனால், பதினெட்டு வயது நிரம்பாதவர்கள் சிறார்கள் (Juvenile) என்பதால், அவர்கள் மீது வழக்கு பதியும் சிக்கல் ஏன் என காவலர்கள் நினைக்கலாம். மேலும், மாணவர்கள் மீதான கரிசனையும் அவர்களைத் தடுக்கலாம்.

ஆனால், சட்டத்தில் வழியில்லாமலில்லை. எப்படி மோட்டார் வாகன சட்டப்பிரிவு 181 உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டுபவர்களுக்கு 3 மாதம் தண்டனை என்று கூறுகிறதோ, அதே போல பிரிவு 180 அவ்வாறு உரிமம் இல்லாதவரை வண்டியோட்ட அனுமதித்த அதன் உரிமையாளரையோ அல்லது வண்டியை கைவசம் வைத்திருப்பவரையோ 3 மாத காலம் தண்டிக்கலாம் என்று கூறுகிறது.

எனவே மாணவரை விட்டு விட்டு பிரிவு 180ன் கீழ் வண்டி உரிமையாளர் அல்லது அதனை பராமரிப்பவர் மீது குற்ற வழக்கு தொடருங்கள் என்பதே காவலர்களுக்கு ஒரு வழக்குரைஞரின் ஆலோசனையாக இருக்க முடியும்.

தொடர்ந்து மோட்டார் வாகனத்தை ஓட்டிச் செல்பவர்கள் ஓட்டுநர் உரிமம், வண்டி பதிவு மற்றும் காப்பீடு சான்றிதழ் ஆகிய ஆவணங்களை வாகன சோதனையின் பொழுது காவலர்களின் பரிசீலனைக்கு சமர்ப்பிக்கவில்லை என்றால், அவர்களை தண்டிக்க முடியுமா என்ற இரண்டாவது கேள்விக்கும், வழக்குரைஞர் சிவா தகுந்த பதிலைக் கூறி அறிவிக்கப்பட்ட பரிசினைத் தட்டிச் சென்றார்.

பிரிவு 130(1)ன் படி காவலர் கேட்கையில் ஓட்டுநர் உரிமம் சமர்ப்பிக்கப்படவேண்டும். அவ்வாறு சமர்ப்பிக்கவில்லை என்றால் பிரிவு 177படி முதல் தடவை ரூ.100ம் பின்னர் ரூ.300ம் அபராதம் கட்ட வேண்டும். பதினைந்து நாட்களுக்குள் காண்பிக்கிறேன் என்பதெல்லாம் கிடையாது.

மற்ற ஆவணங்களைப் பொறுத்தவரை பிரிவு 130(3)ன் படி மோட்டார் வாகனத்துறை அதிகாரி கேட்கையில் அளிக்க வேண்டும். இதே 130(3) பிரிவின் இரண்டாம் பாகத்தில் இந்த ஆவணங்கள் கைவசம் இல்லையெனில் 15 நாட்களுக்குள் அவற்றின் சான்றிட்ட நகலை (attested copy) பதிவுத் தபாலில் அனுப்ப வேண்டும் என்று இருப்பது மற்றொரு கடமை. எனவே, சோதனையின் பொழுது ஆவணங்கள் இல்லை என்றால் மேலே கண்டபடி பிரிவு 177ன்படி அபராதம் கட்ட வேண்டும். பின்னர் அனுப்பி வைக்கவில்லை என்றால் அதற்கும் தனியே அபராதம் கட்ட வேண்டி வரும்.

பதினைந்து நாட்களுக்குள் ஆவணங்களை சமர்ப்பித்தால் அபராதத்திலிருந்து தப்பிக்கலாம் என்பது தவறு என்பதை பிரிவு 130(4)லிருந்து அறிய்லாம். ஏனெனில் இந்தப் பிரிவு மத்திய அரசு அதற்கான தகுந்த உத்தரவு பிறப்பித்தாலே அவ்வாறு கருத முடியும் என்று கூறுகிறது. ஆனால், கவலை வேண்டாம். மத்திய மோட்டார் வாகன விதிகள் விதி 139ல் இவ்வாறு பதினைந்து நாட்களில் அனுப்பலாம் என்று கூறியிருப்பதை மைய அரசின் உத்தரவாக எடுத்துக் கொள்ளலாம்.

எனவே ஓட்டுநர் உரிமத்தை பின்னர் கொடுப்பதால் அபராதத்திலிருந்து தப்பிக்க இயலாது. மற்ற ஆவணங்களை பின்னர் அனுப்பலாம்.

அப்படியென்றால் இனி சோதனையின் பொழுது துணிந்து, ‘மற்ற ஆவணங்களை 15 நாட்களுக்குள் அனுப்பி வைக்கிறேன் சார்’ என்று சொல்ல முடியுமா? முடியும், ஆனால், காவலர், ‘உங்களிடம் வண்டிக்குறிய ஆவணங்கள் இல்லை என்று நான் சந்தேகிக்கிறேன். எனவே, பிரிவு 207ல் எனக்குள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி வண்டியை பறிமுதல் செய்கிறேன். ஆவணங்களைக் காட்டியபின் வண்டியை எடுத்துச் செல்லலாம்’ என்றும் சொல்லலாம்.


எதுக்கு வம்பு?

மதுரை
10/12/14

Sunday 15 March 2015

பிஹெச்டி ஃபார் ஆபீஸ் அப்ஜெக்ஷன்ஸ்

யுவர் ஹைகோர்ட் ஸ்டாஃப் மஸ்ட் பி கிவன் பிஹெச்டி ஃபார் தெர் ஆபீஸ் அப்ஜெக்ஷன்ஸ்என்றார் நீதிபதி பி கே மிஸ்ரா ஒருமுறை என்னிடம்.

இரு வாரங்களுக்கு முன்னர் என்னுடைய கிரிமினல் அப்பீல் விசாரணைக்கு வந்த பொழுது, ரிவிஷன் அல்லவா போட்டிருக்க வேண்டும் என்று நினைத்தேன். நீதிபதியே மாற்றியிருக்க முடியுமென்றாலும், வழக்கு ரீச் ஆகவில்லை என்பதால் தனியே அதற்கு மனுப்போடுவதாக கூறி தாக்கலும் செய்தாகிவிட்டது.

ஒரு வாரமாகியும் மனு நம்பர் ஆகவில்லையே என்று கேட்டால், ‘சார், அபிடவிட் ரொம்ப சின்னதாக இருக்கு. பெருசா எழுதிட்டு வாங்கன்னு சொல்றாரு சார்ங்கிறார் என்னுடைய க்ளார்க்.

எனக்கு கோபம் வரவில்லை. ஏனெனில் பழைய விசயம் ஒன்று நாபகத்துக்கு வந்தது. அவரை நீதிமன்ற சூழலுக்கு புதிதான இளம் வழக்குரைஞர்களாகிய நாங்கள்சிவில் டெகாயிட்என்போம். மனைவிக்காக கணவரிடம் இருந்துஜுடீசியல் செப்பரேஷன்கேட்டு மனு.

ஏன் இன்னும் பாஸ் ஆகவில்லைஎன்று சீனியர் கேட்டதன் பேரில், சிவில் டெகாயிட்டைப் பார்க்கப் போனேன். டேபிளில் தனியே வைத்திருந்த மனுவை என் முன் விரித்து, ‘இதில்க்ரூயல்டியே இல்லையேஎன்றார்.

சீனியரிடம் போய்ச் சொன்னால், ‘அதுக்காக அவனைக் கூட்டிட்டு வந்து இன்னும் ரெண்டு அடி அடின்னா சொல்ல முடியும்என்றார் கோபமாக.

அதற்குள் விஷயமறிந்த இன்னொரு ஜூனியர், ‘சார் அந்தக் க்ளையண்டை அவனுக்கு தெரியும். உங்க சார் ரெண்டாயிரம் ரூபா பீஸ் வாங்கியிருக்காரு. எனக்கு கொஞ்சம் கூட கொடுக்கச் சொல்லுங்கன்னு கேக்குறாருஎன்றார். க்ரூயல்டி பிரச்னை முடிவுக்கு வந்தது.

நேற்று நீதிபதி சிவஞானம் பெஞ்சில் ஒரு ரிட் அட்மிஷனுக்கு இருந்த போது நடந்தது சூப்பர்!

ட்ராபிக் ராமசாமியின் வழக்குரைஞர் லஞ்ச் மோஷனுக்கு மென்ஷன் செய்தார். ‘அதான் ஃசீப் பெஞ்சில் மூவ் செய்தீர்களேஎன்றார் நீதிபதி.

அவர் இங்கே மூவ் செய்யக் கூறினார்


சரி அதற்கு என்ன?’

அது டிவிஷன் பெஞ்ச் என்பதால் இரண்டு செட் பேப்பர்ஸ் பைல் செய்தோம். இப்போது சிங்கிள் ஜட்ஜ் முன் இரண்டு செட் பேப்பர்ஸ் தாக்கல் செய்யக் கூடாது என்று அப்ஜெக்ட் செய்கிறார்கள்


ஜட்ஜெஸ் டு லிவ் லைக் அன் அஸெட்டிக்னு சொல்வாங்க. நீதிபதி சிவஞானம் அந்த நிலையை அடைஞ்சுட்டார்னு நினைக்கிறேன். எந்த ரியாக்ஷனும் காட்டாமல், ‘அத லிஸ்ட் பண்ண சொல்லுங்கன்னார்.

மதுரை
14/03/15

PROOF OF WILLS ADMITTED BY TESTATOR

INTRODUCTION I have had the privilege to hear the lecture of Mr.Nagamuthu, Senior Advocate on ‘Execution and Proof of Will’....