Showing posts with label Criminal Procedure Code. Show all posts
Showing posts with label Criminal Procedure Code. Show all posts

Sunday, 15 March 2015

டிராஃபிக் ராமசாமி, இதுதாண்டா போலீஸ்...

சமீபத்தில்தான், அதாவது போன வருடம்தான் உச்ச நீதிமன்றம் அர்னேஷ் குமார் வழக்கில் (Arnesh Kumar vs. State of Bihar and Another reported in (2014) 3 MLJ (Crl) (SC) ஏழு வருடங்களுக்கு குறைவான தண்டனையுள்ள குற்ற வழக்கில் சம்பந்தப்பட்டவரை கைது செய்யும் முன்பு காவலர்கள் குற்றவியல் நடைமுறை சட்டம் பிரிவு 41(1)(b)(ii)ல் கூறப்பட்டுள்ள காரணங்கள் உள்ளனவா என்பதைக் குறித்து உறுதி செய்து கொள்ளவேண்டும் என்று கூறியுள்ளது.

காவலர்கள் மட்டுமல்ல, கைது செய்யப்பட்டவரை ரிமாண்ட் செய்யும் முன் நீதித்துறை நடுவரும் கைது செய்ய வேண்டிய தேவை மற்றும் காரணங்கள் அடங்கிய காவலரின் அறிக்கையை நன்கு பரிசீலிப்பதோடு, அதனை தானும் ஏற்றுக் கொள்ளும் காரணத்தையும் சுருக்கமாகவேனும் குறிப்பிட்ட பின்னரே ரிமாண்ட் செய்ய வேண்டும் என்றும் கூறியுள்ளது. பிரிவு 167ல் இவ்வாறு ரிமாண்ட் செய்யும் நடுவரின் பணியை இயந்திரத்தனமாக அல்லாமல் அதற்குறிய மரியாதையுடன் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது.

The power to authorise detention is a very solemn function. It affects the liberty and freedom of citizens and needs to be exercised with great care and caution. Our experience tells us that it is not exercised with the seriousness it deserves. In many of the cases, detention is authorised in a routine, casual and cavalier manner

உச்சநீதிமன்றத்தின் கட்டளையினை நிறைவேற்றும் வண்ணம் அனைத்து காவல் அதிகாரிகளுக்கும் பிரிவு 41(1)(b)(ii)ல் கூறப்பட்ட காரணங்கள் அடங்கிய கையேட்டினை அளிக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

அதற்குள் உச்சநீதிமன்றத்தின் உத்தரவினை காலில் போட்டு மிதித்த வண்ணம், ஸ்காட்லாண்ட் யார்ட்’டுக்கு இணையான தமிழக காவல்துறை 82 வயது முதியவரை அதிகாலை நான்கு மணிக்கு அவர் தனது சட்டையை கூட அணிந்து கொள்ள அவகாசமளிக்காமல் கைது செய்து ரிமாண்ட் செய்து விட்டார்கள். குற்றம்? கொலை மிரட்டலாம்…

நடந்திருப்பது மிகப்பெரிய மனித உரிமை மீறல். ஆனால், ஊடகங்களின் அமைதிதான், செய்யப்பட்ட கைதினை விட அச்சமளிப்பதாக உள்ளது. ஒரே திருப்தி, முன்பு செரினா என்ற இளம்பெண் பத்து கிலோ கஞ்சா வைத்திருந்ததாக கைது செய்து சிறையிலடைக்கப்பட்ட பொழுது டீக்கடையில் அரசியல் பேசும் கூலித்தொழிலாளி முதல் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி வரை அவ்வழக்கு போலியானது என எவ்வித சந்தேகமுமின்றி தெரிந்திருந்தாலும், காவலர்களோடு ஊடகங்களும் ‘செய்தி விழா’வென அக்கைதை கொண்டாடி மகிழ்ந்ததைப் போல இந்த முறை இல்லை. ஊடகங்களுக்கு, இளம்பெண்ணின் முகத்தைப் போல அல்லாமல் முதியவரின் மூஞ்சி அழகாக இல்லாமலிருப்பதன் வருத்தம் போல…

மற்றொரு அச்சம், நிர்பயா வழக்கு குற்றவாளி தரப்பு வழக்குரைஞர்களைப் போல சிலர் கிளம்பி ‘இவரே போஸ்டரைப் போய் கிழிக்கப் போனால், அப்படித்தான்’ என்று கிளம்பி வருவதுதான். போஸ்டரை கிழிப்பது என்ன பயங்கரவாத குற்றமா என்பது ஒரு பக்கம் இருந்தாலும், பிரச்னை ஒருவரை பழிவாங்குவதற்காக உச்ச நீதிமன்ற உத்தரவுகளையும் மீறி கைது செய்து சிறையிலடைக்க காவலர்களால் இயலும் என்ற யதார்த்தம் தரும் அச்சம்தான். நாளை நம் வீட்டுக் கதவுகளும் தட்டப்படலாம் என்ற பயம்தானேயொழிய முதியவர் விளம்பரப் பிரியர் எனபதிலில்லை.

நம்மால், இந்திய சிவில் சர்வீஸ் பரீட்சைக்கு படிப்பதற்கான உழைப்பு இல்லையே என்று வருந்தியிருக்கிறேன். இப்போது இல்லை. 82 வயது முதியவரை அதிகாலை 4 மணிக்கு கைது செய்து சிறையிலடைத்த வீர தீர பராக்கிரம செயலைச் செய்து விட்டு நமது காவல்துறை ஆணையரைப் போல அன்று இரவு நிம்மதியாக உறங்கியிருக்க முடியாது… 

மதுரை
15/03/15

Tuesday, 3 March 2015

முகமூடி எதற்கு?



கீர்த்திவாசன் பள்ளிச் சிறுவன். மாலை கீர்த்தியை பள்ளியிலிருந்து அழைத்து வந்த கார் முன்பின் தெரிந்திராத இரு நபர்களால் கடத்தப்பட்டது. காரைக் கடத்தியவர்கள் சிறிது தூரத்தில் ஓட்டுநரைப் வெளியே தள்ளிவிட்டு கீர்த்தியை மட்டும் கடத்திச் சென்று பணம் கேட்டு மிரட்டினர். தொகை கொடுக்கப்பட்டு சிறுவன் மீட்கப்பட்டாலும், பின்னர் காவலர்கள் கடத்தியவர்களைக் கைது செய்தது. கைதானவர்கள் அளித்த ‘ஒப்புதல் வாக்கு’ மூலமாக பிணையத்தொகை முழுவதும் மீட்கப்பட்டது.

நடந்த குற்றம் சென்னை நகரை உலுக்கியதால், மக்களிடையே காவலர்கள் மீது நம்பிக்கையை ஏற்ப்படுத்தும் விதமாக, காவல்துறை ஆணையாளரே நேரடியாக கைது செய்யப்பட்டவர்களை ஊடகவியலாளர்கள் முன் ஆஜர்படுத்தி பேட்டி கொடுத்தார். பிடிபட்டவர்களையும் மீட்கப்பட்ட பணத்தையும் தொலைக்காட்சியில் பார்த்த மக்களும் நிம்மதியானார்கள்.

கைதானவர்கள்தான் கீர்த்தியைக் கடத்தியது என்று குற்றம் நடைபெறுகையில் அவர்களைப் பார்த்த கீர்த்தியும், ஓட்டுநரும் சாட்சி சொல்ல வேண்டும். காவலர்கள் யாரைவாது பிடித்து ‘இவர்கள்தானே அவர்கள்’ என்று சாட்சிகளைக் கூற வைக்கும் அபாயம் இருப்பதால், நீதிமன்ற நடுவர் முன்னிலையில் கைதானவர்களை மற்றவர்களுடன் கலந்து நிற்க வைத்து சாட்சிகள் அவர்களை அடையாளம் காணும் அடையாள அணிவகுப்பு (identification parade) நடத்தப்பட வேண்டும். இவ்வாறு அடையாளம் கண்டது, அணிவகுப்பை நடத்திய நடுவர் மூலமாக பின்னர் வழக்கு விசாரணையில் சாட்சியாக ஏற்றுக் கொள்ளப்படும்.


கீர்த்தி வழக்கிலும் அடையாள அணிவகுப்பில் கைதானவர்கள்தாம், கீர்த்தியை கடத்தியவர்கள் என்று அடையாளம் காணப்பட்டனர்.

தற்பொழுது வழக்கு விசாரணையில், கைது செய்யப்பட்டவர்களை அடையாளம் கண்டவர்கள், ஏற்கனவே அவர்களை தொலைக்காட்சியில் தெளிவாகப் பார்த்த பிறகு, ‘அடையாள அணிவகுப்பு’ என்பது வெறும் கண்துடைப்பே என்று கேள்விகள் வைக்கப்படுகிறது. அதோடு நிற்காமல் அந்த வாதத்திற்கு வலு சேர்க்கும் வண்ணம், ‘சென்னை ஆணையாளரை’ தங்கள் தரப்பில் சாட்சியாக விசாரிக்க வேண்டும் என்றும் கோரப்பட்டு நீதிமன்றம் அதை ஏற்றுக் கொண்டது.

இவ்வாறு காவல்துறை ஆணையாளரையே குற்றம்சாட்டப்பட்டவர்கள் தரப்பு சாட்சியாக அழைத்ததை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆணையாளர் தரப்பில் மனுச் செய்ய, அதை நீதிபதி.நாகமுத்து அவர்கள் தள்ளுபடி செய்து சமீபத்தில் (State Vs K.Prabhu and another Crl.O.P.No.24768 of 2014 dated 12/12/14) தீர்ப்புக் கூறியுள்ளார்.


இந்த காரணத்திற்காகத்தான், குற்றம் செய்தவர்கள் என்ற சந்தேகத்தின் பெயரில் கைது செய்யப்படுபவர்களை வெளியில் அழைத்து வருகையில், காவலர்கள் அவர்களது முகங்களை மூடியவாறு அழைத்து வருகிறார்கள். ஆனால் இணையத்தில் தேடினால், சட்டமுறை சாராத பல காரணங்கள் கிடைக்கிறது.

மதுரை
24/01/15

PROOF OF WILLS ADMITTED BY TESTATOR

INTRODUCTION I have had the privilege to hear the lecture of Mr.Nagamuthu, Senior Advocate on ‘Execution and Proof of Will’....