Showing posts with label Jaggi Vasudev. Show all posts
Showing posts with label Jaggi Vasudev. Show all posts

Wednesday, 9 September 2015

பாம்பு விஷ பிரசாதம்!

‘அதனால்தான் என் கண்கள் சற்று சொருகியுள்ளது. மற்றபடி எனக்குப் பிரச்னையில்லை. ஆகவே, கடவுளுக்குப் படைக்கும் எதையும் எப்படி நான் எனக்குள் எடுத்துக் கொள்ளாமல் படைக்க முடியும்? நெடுங்காலமாக நஞ்சு எனக்கு நல்ல விதமாகவே இருந்து வருகிறது’

‘பாம்பின் நஞ்சு (Venom) சிறு அளவில் உட்கொண்டால் மிகவும் போதையூட்டக் கூடியது. அளவுக்கு மிஞ்சும் எதுவும் உங்களைக் கொல்லக் கூடியது’

ஜக்கி வாசுதேவ் நடத்தி வரும் ‘ஈஷா யோக மையத்தில் 2011ம் வருடம் நடந்த ஆலயப் பிரதிஷ்டை நிகழ்ச்சியில், பாலுடன் ராஜநாகத்தின் (King Cobra) நஞ்சினையும் சிறிது கலந்து அதை சிவலிங்கத்துக்கு படைக்கும் முன் தானும் கொஞ்சம் அருந்தியதைப் பார்த்து கேள்வி எழுப்பிய பக்தர்களுக்கு அளித்த பதிலில்தான் சத்குரு இவ்வாறு கூறுகிறார்.

விரிவான செய்தி ஈஷா மையத்தின் இணைய தளத்தில் சலனப் படத்துடன் உள்ளது.

ஆனால், சத்குருவின் இந்தச் செயல் வனவிலங்குகள் (பாதுகாப்பு) சட்டம்’ 1972ன் கீழ் குற்றமல்லவா?

பிரிவு 12(d)ன் படி பாம்பின் விஷத்தை எடுக்க அரசின் முன் அனுமதியும் தலைமை வன உயிரின காப்பாளரின் அனுமதியும் தேவை, அதுவும் உயிர் காக்கும் மருந்து தயாரிப்பதற்கு மட்டுமே அளிக்கப்படும்.

இச்சட்டத்தின் பிற பிரிவுகள் சிலவும் உரிமம் இன்றி பாம்பு விஷத்தைக் கையாளுவதை தடுக்கிறது.

சத்குருவிற்கு இவ்வாறு பாம்பு நஞ்சை எடுப்பதற்கும், அதை தானே அருந்துவதற்கும் உரிமம் அல்லது அனுமதி வழங்கப்பட்டுள்ளதா என்று தகவல் அறியும் சட்டத்தில் கேட்டுள்ளார்களா என்பது தெரியவில்லை.

பாம்பு விஷ முறிவிற்கான மருந்து வேகமாக குறைந்து வருவதால் மரணங்கள் நிகழ்வது அதிகமாகலாம் என்று இன்று பிபிசி இணையதளம் கூறும் செய்தியால்…

இனி யாராவது கேட்கலாம்.

PROOF OF WILLS ADMITTED BY TESTATOR

INTRODUCTION I have had the privilege to hear the lecture of Mr.Nagamuthu, Senior Advocate on ‘Execution and Proof of Will’....