Thursday 5 November 2015

பாபநாசம் (தமிழ்) 2015

‘பாபநாசம்’ படத்தில் அதி தீவிர திரைப்பட ரசிகரான கமல்ஹாசன் ஒரு திரைக்கதையைப் போலவே ஆகஸ்ட்  2ம் தேதி என்ற நாளைச் சுற்றி கற்பனையாக நிகழ்ச்சிகளை உருவாக்கி காவலர்களை நம்ப வைத்துள்ளார் என்று காவல் அதிகாரியாக வரும் ஆஷா சரத் கூறுவார்.


ஹாலிவுட்டின் சிறந்த பத்து படங்கள் என்று பட்டியலிட்டால், பல திரைப்பட ரசிகர்களின் பட்டியல் இடம் பெறக்கூடிய படம் ’12 ஆங்ரி மென்’ என்ற பெயரில் 1957ம் ஆண்டு வெளி வந்த திரைப்படம்.


கொலை வழக்கு ஒன்றின் சாட்சி விசாரணை முடிந்து, முடிவெடுப்பதற்காக பன்னிரண்டு ஜூரர்கள் அறைக்குள் செல்வதோடு ஆரம்பிக்கும் படம் ‘குற்றவாளி இல்லை’ என்ற முடிவோடு அறையிலிருந்து வெளிவருவதோடு முடியும். படத்தின் 99 சதவீத நேரமும் அந்த அறைக்குள் மட்டும் நிகழ்வதுதான் சிறப்பு.


ஆனாலும் படம் முழுவதும் விறுவிறுப்பாகவே இருக்கும்.


‘குற்றவாளி இல்லை’ என்று முதலிலேயே நம்பும் ஒரே ஒரு ஜூரர் மற்ற ஜூரர்கள் அனைவரின் மனதை எவ்வாறு மாற்றுகிறார் என்பதுதான் திரைக்கதை. படம் முழுக்க அவர் பேசிக் கொண்டே இருந்தால் எப்படி விறுவிறுப்பாக இருக்கும் என்று நினைத்தால், அவர் பேசுவது வெறும் விவாதமல்ல. மாறாக குறுக்கு விசாரணை.


ஆம். நீதிமன்றத்தில் சாட்சிகளிடம் நடந்திருக்க வேண்டிய குறுக்கு விசாரணையை அவர் ஜூரர்களிடம் நடத்துவார்.


வெறும் ‘கோர்ட் ரூம் ட்ராமா’வாக பத்தோடு பதினொன்றாக இருந்திருக்க வேண்டிய ஒரு படத்தை புத்திசாலித்தனமான திரைக்கதை மூலம் ஜூரர்கள் அறைக்குள் நடத்தி ஏதோ வித்தியாசமான படம் போல ஒட்டு மொத்த ரசிகர்களையும் நம்ப வைத்துள்ளார்கள் என்று படம் பார்த்த எனக்குத் தோன்றியது.


பாபநாசம் படம் முடிந்த பின்னர் எனக்கு ஆஷா சரத் சொன்னதும், 12 ஆங்ரி மென் படமும் ஞாபகத்துக்கு வந்தது. ஏனென்றால் பாபநாசத்திலும் தேவையில்லாத ஒன்றைச் சுற்றி புத்திசாலித்தனமான திரைக்கதையை உருவாக்கி நம்மை நம்ப வைத்துள்ளார்களோ என்ற சந்தேகம் எழுந்தது.


அவ்வளவு ரிஸ்க் எடுத்து, இறந்தவனின் காரைக் கொண்டு எங்கோ தள்ளுவதைக் கூட விடுங்கள், ஏன் அப்படி மெனக்கெட்டு அக்டோபர் 2ம் தேதி ஊரில் இல்லாதது போல ஆவணங்களைத் திரட்டி காவலர்களோடு கண்ணாமூச்சி ஆட வேண்டும் என்ற கேள்வி எழுவது எனக்கு மட்டும்தானா?


இந்தக் கேள்வி புடிக்காத கமல் ரசிகர்களுக்கு.


பேருந்து நடத்துநர் காசு வாங்க மறுத்து பணத்தை கமலிடமே திருப்பிக் கொடுக்கும் காட்சியில் பக்கத்தில் அமர்ந்திருக்கும் கெளதமி முகத்தில் தோன்றும் பெருமித உணர்வையும் சிறு புன்னகையையும் பலர் கவனித்திருக்க வாய்ப்பில்லை. விநாடி நேரம்தான், அதுவும் அவர் முகம் சற்று அவுட் ஆஃப் போகஸில் தெரியும். இயக்குஞர் கூட ‘நீங்க அதுக்கு இப்படி எக்ஸ்பிரஷன் கொடுக்குறீங்க’ன்னு சொல்லியிருப்பாரான்னு தெரியல.


உண்மையாகவே மனைவியாக இருப்பவருக்குத்தான் அப்படி ஒரு இயல்பான ரியாக்க்ஷன் சாத்தியம்.

No comments:

Post a Comment

PROOF OF WILLS ADMITTED BY TESTATOR

INTRODUCTION I have had the privilege to hear the lecture of Mr.Nagamuthu, Senior Advocate on ‘Execution and Proof of Will’....