Wednesday 11 November 2015

தீபாவளி வாழ்த்து...

முப்பது வருடங்களுக்கு முன்னர் பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்த சிறுமி காவலர் ஒருவரால் பலாத்காரம் செய்யப்பட்டார் என்ற செய்தி நகர மக்கள் அனைவரையும் உலுக்கியது என்பதில் வியப்பிருக்காது. மேலும் நகரம் என்றாலும் அது சிறிய ஊர்தான். பேருந்து நிலையமும் மிகச்சிறியது. ஆனால் அதன் அளவிற்கு சம்பந்தமேயில்லாது தினமும் காலையும் மாலையும் நூற்றுக்கணக்கான பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள் அங்கு கூடுவதை வைத்து மக்களின் அதிர்ச்சியை புரிந்து கொள்ளலாம்.


நகரின் ஒட்டு மொத்த வெறுப்பும் கைது செய்யப்பட்டவர் மீது இருக்க, அவருக்காக பிணை மனு தாக்கல் செய்தார் அந்த வக்கீல். ஏற்கனவே ‘பாரி’ல் அவரை யாருக்கும் பிடிக்காது. அனைவரின் கவனமும் பிணை மனு மீதான விசாரணையில்


நீதிபதி வக்கீலைப் பார்த்தார், இதில் பேசுவதற்கு என்ன இருக்கிறது என்பது போல...


’த பிராஸிக்யூரிக்ஸ் கேர்ல் இஸ் ஆஃப் இம்மாரல் கேரக்டர் யுவர் ஆனர்’ என்று ஆரம்பித்தார். நீதிபதி புருவத்தை உயர்த்த,


‘எப் ஐ ஆரிலேயே அப்படித்தான் இருக்கிறது’ என்று முதல் தகவல் அறிக்கையை கையிலெடுக்க நீதிபதி இப்போது போலீஸை முறைத்தார்.


’இதோ வாசிக்கிறேன் யுவர் ஆனர், அந்தப் பெண் சொல்கிறாள் ‘என் மாமா என்னை தீய வழிக்கு அழைத்துச் செல்வதற்காக பஸ் ஸ்டாண்டில் நின்று கொண்டிருந்தார். அப்போது...’


நீதிபதி மேலும் கேட்க விரும்பாமல், பிராஸிகியூட்டரை ‘இது என்ன’ என்பது போல பார்த்தார்.


அரசு வழக்குரைஞர் சற்று குழப்பத்துடன் எப் ஐ ஆரைப் பார்த்தவர் பின்னர் எழுந்து, ‘யுவர் ஆனர், நான் வாசிக்கிறேன் ‘என் மாமா என்னை தீபாவளிக்கு அழைத்துச் செல்வதற்காக பஸ் ஸ்டாண்டில் நின்று கொண்டிருந்தார்’ என்று இருக்கிறது’ எனவும் நீதிபதி வக்கீலைப் பார்த்த பார்வையின் வெறுப்பில் அவரை பின்னர் நீதிமன்றத்தில் பார்ப்பதை விட ராமாயணம், மகாபாரதம் என்று கதாகாலாட்சேப கூட்டங்களில்தான் பார்க்க முடிந்ததாம்...

No comments:

Post a Comment

PROOF OF WILLS ADMITTED BY TESTATOR

INTRODUCTION I have had the privilege to hear the lecture of Mr.Nagamuthu, Senior Advocate on ‘Execution and Proof of Will’....