Saturday 3 October 2015

நீதிமன்றத்திற்குள்ளான ஆர்ப்பாட்டங்கள்


ஏப்ரல்’1 2015.

காலை சரியாக மணி பத்து. தலைமை நீதிபதியின் மன்றம். நீதிபதிகள் அனைவரும் அமர்ந்த பின்னர் மற்றவர்களும் தங்கள் இருக்கையில் அமர்கின்றனர். முதல் வழக்கு அழைக்கப்படும் அதே நேரத்தில், பார்வையாளர்கள் வரிசையிலிருந்து ஒருவர் எழுகிறார். பதாகை ஒன்றை உயர்த்தியபடி ‘ நம் நாட்டின் மக்களாட்சி மாண்பினைக் காக்க இங்கு நான் எழுகிறேன். ஒருவரு ஒரு ஓட்டு’ என்று உரத்த குரலில் கத்தவும், காவலர்கள் பாய்ந்து வந்து அவரை மடக்கி வெளியே அழைத்துச் செல்கின்றனர்.

தலைமை நீதிபதி சுதாரித்துக் கொண்டு, ‘இன்றைக்கு விசாரிக்கப்படவுள்ள இன்ஸால்வன்ஸி வழக்குக்கு இத்தனை ஆர்ப்பாட்டமா?’ என்று கிண்டலடிக்கவும், அனைவரும் சிரிக்க நீதிமன்றம் சகஜமாகியது.

ஆனால் அந்த அமைதி கொஞ்ச நேரம் கூட நீடிக்கவில்லை. சில நிமிடங்களில் வேறு ஒருவர் எழுந்து வேறு ஒரு முழக்கத்தை எழுப்பவும், அவரும் குண்டுக்கட்டாக தூக்கப்படுகிறார்.
தொடர்ந்து மற்றொருவர். இப்படியாக பெண்கள் உட்பட ஏழு நபர்கள். அதில் ஒருவர் தனது முழக்கத்தை பாட்டாகப் பாடியது இன்னமும் வேடிக்கை.

ஐந்து நபர்கள் கைது செய்யப்பட்டு தற்பொழுது வழக்கினை எதிர் நோக்கியுள்ளனர்.

நீதிபதிகளுக்கும் இது புது அனுபவமல்ல. ஏற்கனவே 2014ம் ஆண்டில் இதே 99rise இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் இவ்வாறு முழக்கத்தை எழுப்பியதற்கு கைது செய்யப்பட்டனர். மீண்டும் பிப்ரவரி 2015ல் மீண்டும் முழக்கங்கள். கைது.

இதெல்லாம் எங்கு?

அமெரிக்க உச்ச நீதிமன்றத்தில்.

தேர்தலில் கட்டுக்கடங்காமல் பணம் செலவழிப்பதை அனுமதிக்கும் உச்ச நீதிமன்ற தீர்ப்புகளை எதித்துதான் இந்தப் போராட்டங்கள்.

முதலிருமுறையும் போராட்டம் நடத்தியதை வீடியோ எடுத்து வெளியிட்டதை தடுக்கும் வண்ணம் மார்ச்’2015ல் நீதிமன்றத்திற்கு வருபவர்கள் கடுமையான சோதனைக்கு பின்பு அனுமதிக்கப்பட்டாலும் மூன்றாம் முறையும் பேனா கேமரா மூலம் வீடியோ எடுக்கப்பட்டு விட்டது.

அமெரிக்க உச்ச நீதிமன்ற வரலாற்றிலேயே அதன் நீதிமன்ற அறை வீடியோ எடுக்கப்பட்டது இந்த மூன்று முறைதான்.

முதலிரண்டு முறையும் கீழமை நீதிமன்றங்களில் சாதாரண கிரிமினல் வழக்குகள் தொடர்ந்து, ஒன்றிரண்டு நாட்களிலேயே விடுதலை செய்யப்பட்டாலும், இம்முறை நீதிபதிகளின் கோபம் உக்கிரமடைந்துள்ளதால் முழக்கமிட்டவர்கள் மீது கிரிமினல் கண்டெம்ட் வழக்கு தொடரலாமா என்று விவாதித்து வருகிறார்கள்.

போராட்டவாதிகளின் வழக்குரைஞரும் சாமான்யப்பட்டவர் இல்லை. நீதிமன்றத்திற்குள் முழக்கமிடக்கூடாது என்பது பேச்சுரிமையைப் பாதிப்பது இல்லையா என்ற ரீதியில் தாக்கல் செய்துள்ள எதிர்வாதவுரையை பாருங்களேன்.

Even as to a nonpublic forum, a restriction on speech must still be reasonable. A ban on ‘loud … language,’ which is entirely untethered to the need to maintain the order and decorum of the court, is unreasonable. It is not reasonable to prohibit loud language regardless of whether the loudness is necessary; regardless of whether the speech is disruptive; regardless of whether the speech is raucous; regardless of whether the volume of the speech is intended to communicate a message rather to interfere with official proceedings; regardless of the time of day; regardless of whether the loudness of the speech presents a clear and present danger of imminent violence; regardless of whether the speech is amplified; regardless of the location of the speaker within the forum; and regardless of the actual volume of the speech

அபார துணிச்சல்தான்...

No comments:

Post a Comment

PROOF OF WILLS ADMITTED BY TESTATOR

INTRODUCTION I have had the privilege to hear the lecture of Mr.Nagamuthu, Senior Advocate on ‘Execution and Proof of Will’....