Thursday 6 August 2015

ஆல் அபவுட் மை மதர் 1999

எழுத்தாளர் சுஜாதா மூலமாக அறிந்த ஜென் கதை.

‘குருவே, வாழ்க்கையில் மகிழ்ச்சி என்பது எது?’

‘தந்தை இறக்கிறான். மகன் இறக்கிறான். பேரன் இறக்கிறான்’

கேள்வி கேட்டவனைப் போலவே எனக்கும் முதலில் குழப்பம், ‘அது எப்படி இறப்பது மகிழ்ச்சியாகும்’ என்று. அண்ணன் விளக்கியதற்குப் பின் புரிந்தது.

“There are people who think that children are made in a day. But it takes a long time, a very long time. That's why it's so awful to see your child's blood on the ground. A stream that flows for a minute yet costs us years”

நேற்று முன்னிரவு பார்த்த ‘ஆல் அபவுட் மை மதர்’ (1999) என்ற ஸ்பானிய படத்தில் கண் முன்னே நடக்கும் சாலை விபத்தில் மகனைப் பறிகொடுக்கும் மானுவேலாவின் மேற்கண்ட புலம்பலில் ‘புத்திரசோக’த்தின் வலி மேலும் புரிய வந்தது. இத்தனைக்கும் மானுவேலா மூளைச்சாவு அடைந்தவர்களின் உறுப்புகளை தானம் பெறுவதற்காக உறவினர்களை மனரீதியில் தயார்படுத்தும் பணியிலிருக்கும் செவிலி. அவருக்கே அப்படி ஒரு நிலை ஏற்ப்படுகையில் அதன் வேதனையிலிருது விடுபட தனது மகனின் தந்தையைத் தேடி பார்ஸிலோனா செல்கிறாள்

தந்தை லோலா உடல்ரீதியில் ஆண் என்றாலும் மனரீதியில் பெண்ணாக வாழும் டிரான்வெஸ்டைட். பார்ஸிலோனா’வில் மானுவேலா சந்திக்கும் நபர்களும் கிடைக்கும் அனுபவங்களும் இயல்பாகவே நம்மையும் உள்ளிழுத்து இறுதியில் படம் முடிகையில் அதன் ஆழமான பாதிப்பு நம்மிலும் ஏற்ப்படுவதை அழுத்தமாகவே இயக்குஞரான ‘பெத்ரோ அல்மதோவார்’ உணர வைக்கிறார்.

ஹாலிவுட்டில் அழகு தேவதையாக மட்டுமே வலம் வந்த பெனிலோப் க்ரூஸ் ஒரு நேர்த்தியான நடிகையும் கூட என்பது ஸ்பானிஷ் படங்களைப் பார்க்கும் பொழுதுதான் தெரிகிறது. ‘லோலா’வுடனான பழக்கத்தில் ஒரு குழந்தை மட்டுமல்லாது, எய்ட்ஸ் நோயை’யும் பெறும் இளம் சமூக ஊழியராக வரும் பெனிலோப் க்ரூஸுக்கு அடைக்கலம் தந்து பிறக்கும் குழந்தைக்கும் மானுவேலாவே தாயாகும் நம்பிக்கைக் கீற்றோடு படம் நிறைவடைகிறது.

மானுவேலா’வின் உற்ற தோழியான திருநங்கை ‘அக்ரடோ’ படத்தின் பின்னணி இசை போலவே மறக்க முடியாத மற்றொரு பாத்திரம்.

இயக்குஞர் படத்தை தனது அம்மாவுக்கும் ‘To all women who act. To men who act and become women. To all the people who want to be mothers’க்கும் சமர்ப்பணம் செய்துள்ளார்.

No comments:

Post a Comment

PROOF OF WILLS ADMITTED BY TESTATOR

INTRODUCTION I have had the privilege to hear the lecture of Mr.Nagamuthu, Senior Advocate on ‘Execution and Proof of Will’....