வாழ்த்துக்கள்!
இவ்விரு சகோதரர்களுக்கான கட்டணச் செலவை முழுவதுமாக அரசு ஏற்றுக் கொண்டாலும், இவர்கள் மட்டுமல்லாமல் ஐஐடியில் படிக்கும் அனைத்து மாணவர்களின் கட்டணச் செலவில் ஒரு பகுதியினை ஏற்றுக் கொள்பவர்களைப் பற்றியும் இன்றைய செய்தித்தாள்களில் வெளியாகிய செய்தி பலராலும் கண்டு கொள்ளப்படவில்லை.
பிரச்னை என்னவென்றால், அவர்களில் நான்கு பேர் இறந்து விட்டனர். அதுவும் தனியார் பாதுகாப்பு காவலர்களால் சுடப்பட்டும், அதனால் எழுந்த கலவரத்தில் மலையிலிருந்து விழுந்தும்.
அவர்களது குற்றம்; அந்த ஹிமாச்சலப் பிரதேச குளிரிலும், பனியிலும் வாடியபடி அவர்கள் கட்டிக் கொண்டிருக்கும் புதிய ஐஐடி (மாண்டி) யில் செய்த வேலைக்குறிய கூலியை கேட்டதும், அவர்களது போராட்டத்தை தனியார் பாதுகாவலர்களைக் கொண்டு அடக்க முயன்றதைக் கண்ட வெறுப்பில் கலவரத்தில் ஈடுபட்டதும் என்கிறார்கள்.
கூலி உயர்வு கூட இல்லை. கூலிதான்!
ஐஐடி பட்டாதாரிகளுக்கும் சிம்பன்ஸிகளுக்கும் இருக்கும் டிஎன்ஏவுடைய வித்தியாசம் வெறும் இரண்டு சதவீதம்தான் என்று கூறப்படுகிறது. அப்படியாயின் மிகமிகச் சிறிய மயிரிழையில்தான் ஒருவன் ஐஐடி பட்டாதாரியாகவும், மற்றவர்கள் கட்டிட தொழிலாளியாகவும் மாறுவதும் நடக்கிறது.
ஆனால் அவர்களுக்கிடையான கூலி வித்தியாசம்?
என்னைக் கேட்டால், ராஜு மற்றும் பிரிஜேஷ் சகோதரர்கள் மட்டுமல்லாமல் அனைத்து ஐஐடி மாணவர்களின் கல்விக் கட்டணத்தில் ஒரு பகுதியை மாண்டி’யில் நேற்று மாண்டவர்களும் காயமடைந்தவர்களும் ஏற்றுக் கொண்டார்கள் என்றே சொல்வேன்...
No comments:
Post a Comment