35. அவர்கள் ஒரு காரியத்தைக் கற்றுக்கொள்ள விரும்பினால், வீட்டிலே தங்கள் புருஷரிடத்தில் விசாரிக்கக்கடவர்கள்; ஸ்திரீகள் சபையிலே பேசுகிறது அயோக்கியமாயிருக்குமே
(புனித பவுல் கொரிந்திய சபைக்கு எழுதிய கடிதத்திலிருந்து)
மதத்தை இயேசு மக்களுக்கானதாக மாற்றினார். ஆனால் இயேசுவின் மதத்தை உலகம் முழுவதும் பரப்பிய புனித பவுலோ அதை மீண்டும் ‘மேன்’மக்களுக்கானதாக மாற்றினார்.
இயேசுவின் சீடர்கள் அனைவரும் படிப்பறிவில்லாதவர்கள். சமூகத்தின் கீழ்மட்டத்திலிருந்த மீனவர்கள். ஆனால் பவுலோ மெத்தப்படித்தவர். அறிஞர். உயர்குடியில் பிறந்தவர். இயேசு மனிதனாக நடமாடிய காலத்தில் அவரை சந்தித்திராதவர். அவர் பேசியதைக் கேட்டிராதவர். உயிர்த்தெழுந்த கடவுளாக மட்டுமே இயேசுவை அறிந்தவர்.
அதனால்தான் என்னவோ, பிறப்பிலிருந்து இறப்பு வரை, ஏன் உயிர்த்தெழுதல் வரையும் இயேசுவின் வாழ்வில் அவரோடு இணைந்து இருந்தவர்களான பெண்களைப் பற்றி இயேசுவே சொல்லாத ஒன்றை, பவுல் தனது ‘அறிவு’ரையாக சபைகளுக்கு கூற, கிறிஸ்தவ மதத்திலிருந்து பெண்கள் புறக்கணிக்கப்பட்டனர்.
கிறிஸ்தவ மதத்தின் தலைமை குருவாக பெண் நியமிக்கப்பட முடியும் என்பது இன்றும் நினைத்துப் பார்க்க இயலாத விடயம் எனினும், ஆயிரம் வருடங்களுக்கு முன்னர் போப்’பாக ஒரு பெண் தேர்ந்தெடுக்கப்பட்டார் என்பதும், நகர்வலம் செல்கையில் நடுத்தெருவில் அவருக்கு குழந்தைப் பிறப்பு நடந்து அதனால் இறந்தார் என்பதும் நம்புவதற்கரிய ‘தகவல்’.
இன்றும் வரலாற்று அறிஞர்கள் நம்பவில்லைதாம். தரவுகள் மூலம் அப்படி ஒருவர் இருந்திருக்க வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது, என்றாலும், பதிமூன்றாம் நூற்றாண்டின் வரலாற்று ஆசிரியர் ஒருவர் தனது குறிப்புகளில், இவ்விதம் ஒரு பெண் போப் இருந்து பின்னர் கிறிஸ்தவ வரலாற்றிலிருந்து முற்றிலும் அவரது வாழ்க்கை அழிக்கப்பட்டதாகவும் எழுதியுள்ளார். தொடர்ந்து வேறு சில ஆசிரியர்களும் அவருக்கு ‘ஜோன் அங்க்லிகஸ்’ என்று பெயரெல்லாம் வைத்து ஆதரிக்க பல நூற்றாண்டுகளுக்கு ஐரோப்பாவில் பெரும்பாலோர் இதை நம்பிக் கொண்டுதானிருந்தனர்.
காட்பாதர் படத்தில் தங்களுக்கு இசைவான போப்’பை தேர்ந்தெடுப்பதில் ஃமாபியா குழுக்கள் தலையிடுவதின் சூழ்ச்சிகள் சொல்லப்பட்டிருக்கும். ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் நிலமை அதை விட மோசம் என்பது இந்தப் படத்தில் தெரியும்...
No comments:
Post a Comment