Monday 7 September 2015

இராமலிங்க விலாசம்

இராமநாதபுரத்திலுள்ள நண்பர் வீட்டிற்கு பலமுறை சென்றிருந்தாலும், அருகிலுள்ள அரண்மனைக்கு சென்று பார்த்ததில்லை.

இன்று நண்பருடைய தந்தையாரின் இறுதிச் சடங்கில் கலந்து கொண்ட பொழுது கிடைத்த நேரத்தில் அரண்மனையில் அமைந்துள்ள ‘இராமலிங்க விலாசம்’ என்ற பெயரிலமைந்ததும், தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ளதுமான மாளிகைக்கு சென்றோம்.

தரை மற்றும் இரு தளங்களில் அமைந்த மண்டபங்களின் சுவர்கள் முழுவதும் அழகிய ஓவியங்கள் அலங்கரிக்கின்றன. எங்கள் ஆர்வத்தில் உற்சாகமடைந்த தொல்லியல் துறை அலுவலர் அரசரின் அந்தப்புறமான இரண்டாவது தளத்திற்கு அழைத்துச் சென்று, நாலாபுறமும் வரையப்பட்டிருந்த சென்ஸுவல் ஓவியங்களை விளக்க ஆரம்பித்து விட்டார்.

ஜாக்ஸன் துரை கட்டபொம்மனை சந்தித்து பின் சுரங்கப்பாதை வழியாக கட்டபொம்மன் தப்பித்தது, இராமலிங்க விலாசத்தில்தானாம்.

வெள்ளிக்கிழமை வார விடுமுறை. இராமநாதபுரம் சின்ன ஊர்தான். அரண்மனையைத் தேடி அலையத் தேவையிருக்காது. மற்ற வேலைகளுக்கிடையில் அரை மணி நேரத்தில் பார்த்து திரும்பி விடலாம்.

மதுரை

06/09/15

No comments:

Post a Comment

PROOF OF WILLS ADMITTED BY TESTATOR

INTRODUCTION I have had the privilege to hear the lecture of Mr.Nagamuthu, Senior Advocate on ‘Execution and Proof of Will’....