‘பள்ளிகளில் தவறிழைக்கும் சிறார்களை ஒழுங்குபடுத்த காலங்காலமாக வழங்கப்பட்டு வரும் தண்டனை முறைகள் அவர்களை திருத்துவதற்குப் பதிலாக மேலும் மேலும் தண்டனைக்கு பழக்கப்படுத்துகின்றன எனவும் அதற்கான மாற்று முறைகளை சிந்திக்க வேண்டும்’ என்கிற ரீதியில் இன்று டைம்ஸில் செய்திக் கட்டுரை எழுதப்பட்டுள்ளது.
அமெரிக்க மனோதத்துவ நிபுணரான ரோஸ் கிரீன் ‘த எக்ஸ்போஸிவ் சைல்ட்’ ‘லாஸ்ட் அட் ஸ்கூல்’ என்ற தனது புத்தகங்களில் இந்தப் பிரச்னையை எப்படிக் கையாளுவது என்பதை அலசுகிறாராம்.
நமது கல்வியியல் (பி.எட்., டி.டி.இ) மாணவர்கள் மாற்று முறைகளைப் பற்றி சிந்திக்கிறார்களா என்பது தெரியாவிட்டாலும், சீனியாரிட்டி லிஸ்ட், புரோமஷனல் பேனல், இன்கிரிமெண்ட், லீவ் சாலரி, டிரான்ஸ்பர், மைக்ரேஷன், க்ராஸ் டிகிரி பற்றி சிந்திப்பதைப் பார்த்திருக்கிறேன்.
சிந்திக்க நேரமில்லாதவர்கள், குறைந்த பட்சம் நானும் ரான்யாவும் நேற்று இரவு பார்த்த ஆர்னால்டு ஸ்வார்ட்ஸ்நேகரின் ‘மாகி’ என்ற படத்தையாவது மாற்றுத் தண்டனையாக யோசிக்கலாம்.
உத்தம வில்லனை’யே கடைசி வரை பார்த்த ரான்யா கூட பாதியில் தூங்கி விட்டாள்.
‘மாகி’ குழந்தைகளுக்கு ஒத்துக் கொள்ளாது என்பது உண்மைதான் போல...
மதுரை
12/07/15
No comments:
Post a Comment