Saturday, 3 October 2015
உனக்கு நீயே எதிரியாதல்
மதுரை வழக்குரைஞர் சங்க தலைவர் மற்றும் செயலாளர் ஆகியோர் மீதான் நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் கடந்தமுறை ஏ.கே.இராமசாமி அவர்களிடமும் இந்த முறை தர்மராஜ் அவர்களிடமும் நீதிமன்றம் பல கேள்விகளை எழுப்பி அதற்கான பதில்களை கேட்டது.
பொதுவாக அந்தக் கேள்விகளின் தன்மையானது, ‘ஆம்’ என்று பதிலளித்தால் அந்தப் பதிலே அவர்கள் நீதிமன்ற அவமதிப்பு குற்றம் புரிந்துள்ளார்கள் என்பதை நிரூபிக்க ஏதுவாக இருக்கும் வகையில் இருந்தது.
அவ்வகையான கேள்விகள் இந்திய அரசியலமைப்புச் சட்ட பிரிவு 20(3)ல் அளிக்கப்பட்ட ‘குற்றம் சாட்டப்பட்ட எந்த நபரையும், தமக்கு எதிராக தாமே சாட்சியம் கொடுக்கும்படி வற்புறுத்தக்கூடாது’ என்ற உரிமையை மீறுவதாகாதா? (Right against Self-incrimination)
‘இல்லை’ என்கிறது உச்ச நீதிமன்றம் தனது தில்லி ஜுடீசியல் அசோசியேசன் எதிர் ஸ்டேட் ஆஃப் குஜராத் (AIR 1991 SC 2176) என்ற வழக்கில்.
அதாவது நீதிமன்ற அவமதிப்பு வழக்கினை மற்ற குற்ற வழக்குகளோடு சம்பந்தப்படுத்த முடியாது, குற்றவியல் நடைமுறைச் சட்டமும் அதற்குப் பொருந்தாது என்றும் ‘எனவே நீதிமன்ற அவமதிப்பிற்காக வழக்கு தொடரப்படுபவரை பிரிவு 20(3)ல் குறிப்பிடப்படும் ‘குற்றம் சாட்டப்படுபவர்’ என்று கருத முடியாது’ என்றும் கூறியுள்ளது.
இருந்த போதிலும், இயற்கை நீதியில் அடிப்படையில் இது சரியாக இருக்குமா என்றால், இருக்கப் போவதில்லை என்பதுதான் என் பதிலாக இருக்க முடியும்.
நீதிமன்ற அவமதிப்பு வழக்கு மற்ற குற்றவியல் அடிப்படைகளிலிருந்து வேறுபடுகிறது என்றாலும், முடிவில் இங்கும் சம்பந்தப்பட்டவரின் தனிமனித சுதந்திரத்தைப் பறிக்கும் உத்தரவை பிறப்பிக்க முடியும். அதையும் அவரிடம் இருந்து பெறப்பட்ட பதிலை வைத்தே பறிக்க முடியும்.
அவ்வாறு என்றால், பிரிவு 20(3) எந்த நோக்கத்திற்காக இயற்றப்பட்டுள்ளதோ, குற்றம் சாட்டப்படுபவர் மீது எவ்விதமான அதிகார துஷ்பிரயோகம் பிரயோகிக்கப்படுவதிலிருந்து அவரை காப்பாற்றுவதற்காக சிந்திக்கப்பட்டுள்ளதோ அதே காரணங்கள் நீதிமன்ற அவமதிப்பு வழக்கிலும் இருக்காது என்பதற்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை என்றே நான் நினைக்கிறேன்.
பிரிவு 20(3) அளிக்கும் பாதுகாப்பு நீதிமன்ற அவமதிப்பு குற்றம் சாட்டப்பட்டவரின் உரிமையாக இல்லாதிருக்கலாம். ஆனால், அதன் நோக்கங்களை அறிந்து அதை அவருக்கு தாமாக அளிப்பது குற்றம் சாட்டுபவரின் கடமை!
Subscribe to:
Post Comments (Atom)
PROOF OF WILLS ADMITTED BY TESTATOR
INTRODUCTION I have had the privilege to hear the lecture of Mr.Nagamuthu, Senior Advocate on ‘Execution and Proof of Will’....

-
நண்பரின் மகளுக்கு ஞாயிறு அன்று திருமணம். “என்னடா, ஐயரை வச்சு கல்யாணம் பண்ணுறீங்க” கோவில் மண்டபத்தில் கல்யாணம் முடித்து வைத்த திரு...
-
Luden was a fisherman. The Government has enrolled Luden under a Group Insurance Scheme through National Federation of Fishermen Co-ope...
-
‘இறந்து போகும் ஒவ்வொரு உறவினரும் நான் வாழ்வதற்கான காரணங்களில் சிலவற்றை எடுத்துக் கொண்டே போகிறார்கள்’ சமீபத்தில் இறந்து போன சித்தப்பாவைப்...
No comments:
Post a Comment