ஒழுங்கு நடவடிக்கைக்கு உள்ளாகியுள்ள வழக்குரைஞர் நண்பர் ஒருவருக்கு பார் கவுன்ஸில் அளித்துள்ள ஆவணத் தொகுப்பினை ஆய்ந்து கொண்டிருந்தேன் அப்போது கண்ணில்பட்ட ‘Oh Central Government Oh Supreme Court’ என்ற வாசகத்தைப் படித்ததில் முதலில் ஒன்றும் புரிபடவில்லை.
முழுவதும் அந்த ஆவணத்தைப் படித்தால், குறிப்பிட்ட தினத்தில் நீதிமன்றத்திற்கு வெளியே கூடிய சில வழக்குரைஞர்கள் எழுப்பிய கோஷங்களைக் குறித்து உயர்நீதிமன்ற பதிவாளர் தலைமை நீதிபதிக்கு அனுப்பிய அறிக்கை அது.
அப்படியும் கொஞ்ச நேரம் பிடித்தது.
‘மத்திய அர’சே’ உச்ச நீதிமன்ற’மே’ என்பதின் ஆங்கில மொழிபெயர்ப்புதான் அது என்று புரிய.
‘கோர்ட் இங்கு சீரியஸாக நடந்து கொண்டிருக்கையில் என்னத்தை அங்கு படித்து விட்டு சிரித்துக் கொண்டிருக்கிறான்’ என்று நீதிபதி நினைத்திருப்பார்.
நீதிமன்றப் பதிவாளர் என்றால் எப்படி எல்லாம் கஷ்டப்பட வேண்டியிருக்கிறது.
நீதிபதி வேலை கூட அப்படித்தான்.
சில வருடங்களுக்கு முன்னர் விபத்து இழப்பீடு வழக்கு. மேல்முறையீடு தாக்கல் செய்ய வேண்டுமென்று தீர்ப்பினை படித்துக் கொண்டிருந்தேன்.
‘இறந்தவர் உலோகம் முதலான கடினப்பொருட்களுக்கான பட்டயப்படிப்பை படித்திருந்தார்’ என்ற வாசகம் என்னைக் குழப்பியது. ‘என்னடா இது, தென்காசியில் மெட்டாலர்ஜியெல்லாம் படிக்கிறார்களா?’ என்று நினைத்தேன். ஆவணங்களைப் பரிசீலித்த பின்னர்தான் புரிந்தது,
Diplomo in Hardware Technology!
விபத்தில் எலும்பு முறிவு ஏற்ப்படும் வழக்குகளீன் தீர்ப்புகள் அனைத்திலும் தவறாமல் ‘காயமடைந்தவர் ‘இயற்பியல் சிகிச்சை’ செய்த வகைக்கு உண்டான செலவு…..’ என்ற வாக்கியம் இடம் பெறும். எலும்பு முறிவுக்கும் பிஸிக்ஸுக்கும் ஏதும் சம்பந்தமில்லையே என்று நினைக்க வேண்டாம்.
இது Physiotherapy!
வழக்குரைஞர்களும் விதிவிலக்கல்ல...
இயேசு சிலுவையில் அறையப்படும் நாளுக்கு முந்தைய நாள் இரவு தனது சீடர்களுடன் உணவருந்திய சடங்கினை கிறிஸ்தவர்கள், தங்களது பிரார்த்தனையின் பொழுது பின் பற்றி வருகிறார்கள். சி எஸ் ஐ பிரிவினை சேர்ந்தவர்கள் எப்போது நடைபெற்றாலும் இந்த சடங்கினை ‘இராப்போஜனம்’ என்று அழைப்பார்கள். ஆங்கிலத்தில் ‘Holy Communion’
அவசரமாக பிராது எழுத முயன்ற, கிறிஸ்தவரல்லாத அந்த சீனியர் வக்கீலுக்கு ‘இராப்போஜனத்’தை ஆங்கிலத்தில் எப்படி எழுதுவது என்று புலப்படவில்லை. ‘The Defendant did not participate in ‘Night Meals’ என்று எளிதில் முடித்து விட்டார்.
அந்த சீனியருக்கே சீனியரான என் சீனியரின் கையில் அந்தப் பிராது வந்தது. ‘போன போடுறா அவனுக்கு’ என்று கூப்பிட்டு விளாசித் தள்ளிவிட்டார். டெல்லிக்கே ராஜாவானாலும் அம்மைக்கு பிள்ளைதானே...
கடந்த வாரம், உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் மனுதாரரின் விபரம் அதிர்ச்சியாக இருந்தது.
Fr.Francis Xavier
Shareholder
St.Assisi Roman Catholic Church
‘அட, வெளிப்படையாவே கோவில் சொத்தை பங்கு வச்சு பிரிச்சுக்கிட்டாங்களா’ என்று நினைத்தேன். சம்பந்தப்பட்டவரிடம் கேட்டால், ‘பங்குத் தந்தை’யை கிளார்க் அப்படி அடித்து விட்டதாக கூறினார்.
என்ன ஒரு தீர்க்க தரிசனம்!
Subscribe to:
Post Comments (Atom)
PROOF OF WILLS ADMITTED BY TESTATOR
INTRODUCTION I have had the privilege to hear the lecture of Mr.Nagamuthu, Senior Advocate on ‘Execution and Proof of Will’....

-
நண்பரின் மகளுக்கு ஞாயிறு அன்று திருமணம். “என்னடா, ஐயரை வச்சு கல்யாணம் பண்ணுறீங்க” கோவில் மண்டபத்தில் கல்யாணம் முடித்து வைத்த திரு...
-
Luden was a fisherman. The Government has enrolled Luden under a Group Insurance Scheme through National Federation of Fishermen Co-ope...
-
‘இறந்து போகும் ஒவ்வொரு உறவினரும் நான் வாழ்வதற்கான காரணங்களில் சிலவற்றை எடுத்துக் கொண்டே போகிறார்கள்’ சமீபத்தில் இறந்து போன சித்தப்பாவைப்...
No comments:
Post a Comment