Showing posts with label Demonstrations. Show all posts
Showing posts with label Demonstrations. Show all posts

Saturday, 3 October 2015

நீதிமன்றத்திற்குள்ளான ஆர்ப்பாட்டங்கள்


ஏப்ரல்’1 2015.

காலை சரியாக மணி பத்து. தலைமை நீதிபதியின் மன்றம். நீதிபதிகள் அனைவரும் அமர்ந்த பின்னர் மற்றவர்களும் தங்கள் இருக்கையில் அமர்கின்றனர். முதல் வழக்கு அழைக்கப்படும் அதே நேரத்தில், பார்வையாளர்கள் வரிசையிலிருந்து ஒருவர் எழுகிறார். பதாகை ஒன்றை உயர்த்தியபடி ‘ நம் நாட்டின் மக்களாட்சி மாண்பினைக் காக்க இங்கு நான் எழுகிறேன். ஒருவரு ஒரு ஓட்டு’ என்று உரத்த குரலில் கத்தவும், காவலர்கள் பாய்ந்து வந்து அவரை மடக்கி வெளியே அழைத்துச் செல்கின்றனர்.

தலைமை நீதிபதி சுதாரித்துக் கொண்டு, ‘இன்றைக்கு விசாரிக்கப்படவுள்ள இன்ஸால்வன்ஸி வழக்குக்கு இத்தனை ஆர்ப்பாட்டமா?’ என்று கிண்டலடிக்கவும், அனைவரும் சிரிக்க நீதிமன்றம் சகஜமாகியது.

ஆனால் அந்த அமைதி கொஞ்ச நேரம் கூட நீடிக்கவில்லை. சில நிமிடங்களில் வேறு ஒருவர் எழுந்து வேறு ஒரு முழக்கத்தை எழுப்பவும், அவரும் குண்டுக்கட்டாக தூக்கப்படுகிறார்.
தொடர்ந்து மற்றொருவர். இப்படியாக பெண்கள் உட்பட ஏழு நபர்கள். அதில் ஒருவர் தனது முழக்கத்தை பாட்டாகப் பாடியது இன்னமும் வேடிக்கை.

ஐந்து நபர்கள் கைது செய்யப்பட்டு தற்பொழுது வழக்கினை எதிர் நோக்கியுள்ளனர்.

நீதிபதிகளுக்கும் இது புது அனுபவமல்ல. ஏற்கனவே 2014ம் ஆண்டில் இதே 99rise இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் இவ்வாறு முழக்கத்தை எழுப்பியதற்கு கைது செய்யப்பட்டனர். மீண்டும் பிப்ரவரி 2015ல் மீண்டும் முழக்கங்கள். கைது.

இதெல்லாம் எங்கு?

அமெரிக்க உச்ச நீதிமன்றத்தில்.

தேர்தலில் கட்டுக்கடங்காமல் பணம் செலவழிப்பதை அனுமதிக்கும் உச்ச நீதிமன்ற தீர்ப்புகளை எதித்துதான் இந்தப் போராட்டங்கள்.

முதலிருமுறையும் போராட்டம் நடத்தியதை வீடியோ எடுத்து வெளியிட்டதை தடுக்கும் வண்ணம் மார்ச்’2015ல் நீதிமன்றத்திற்கு வருபவர்கள் கடுமையான சோதனைக்கு பின்பு அனுமதிக்கப்பட்டாலும் மூன்றாம் முறையும் பேனா கேமரா மூலம் வீடியோ எடுக்கப்பட்டு விட்டது.

அமெரிக்க உச்ச நீதிமன்ற வரலாற்றிலேயே அதன் நீதிமன்ற அறை வீடியோ எடுக்கப்பட்டது இந்த மூன்று முறைதான்.

முதலிரண்டு முறையும் கீழமை நீதிமன்றங்களில் சாதாரண கிரிமினல் வழக்குகள் தொடர்ந்து, ஒன்றிரண்டு நாட்களிலேயே விடுதலை செய்யப்பட்டாலும், இம்முறை நீதிபதிகளின் கோபம் உக்கிரமடைந்துள்ளதால் முழக்கமிட்டவர்கள் மீது கிரிமினல் கண்டெம்ட் வழக்கு தொடரலாமா என்று விவாதித்து வருகிறார்கள்.

போராட்டவாதிகளின் வழக்குரைஞரும் சாமான்யப்பட்டவர் இல்லை. நீதிமன்றத்திற்குள் முழக்கமிடக்கூடாது என்பது பேச்சுரிமையைப் பாதிப்பது இல்லையா என்ற ரீதியில் தாக்கல் செய்துள்ள எதிர்வாதவுரையை பாருங்களேன்.

Even as to a nonpublic forum, a restriction on speech must still be reasonable. A ban on ‘loud … language,’ which is entirely untethered to the need to maintain the order and decorum of the court, is unreasonable. It is not reasonable to prohibit loud language regardless of whether the loudness is necessary; regardless of whether the speech is disruptive; regardless of whether the speech is raucous; regardless of whether the volume of the speech is intended to communicate a message rather to interfere with official proceedings; regardless of the time of day; regardless of whether the loudness of the speech presents a clear and present danger of imminent violence; regardless of whether the speech is amplified; regardless of the location of the speaker within the forum; and regardless of the actual volume of the speech

அபார துணிச்சல்தான்...

நீதிமன்றம், ஆர்ப்பாட்டங்கள், துண்டுப்பிரசுரங்கள்...

சென்னை உயர்நீதிமன்ற வளாகத்திற்குள் போராட்டம், ஆர்ப்பாட்டம் போன்றவை நடத்தக் கூடாது என்று ஏற்கனவே உத்தரவு இருப்பதாக நினைவு. ஆயினும் ஊர்வலம், போராட்டம் என்று தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டுதான் இருந்தது, சமீப காலம் வரை.

ஆனால், இது வரை பொதுமக்கள் கூடி ஆர்ப்பாட்டம் நடத்தியதில்லை என்று நினைக்கிறேன்.

ஆனால் அமெரிக்காவில் நடத்துவார்கள்.

அவற்றைத் தடுப்பதற்காக 1949ம் ஆண்டில் இயற்றப்பட்ட சட்டம் உச்சநீதிமன்ற கட்டிடம், வளாகம், மற்றும் சுற்றுப் பாதைகளில் மக்கள் கூடுவதோ, ஊர்வலம் நடத்துவதோ, ஆர்ப்பாட்டம் செய்வதோ, பதாகைகளை பிடிப்பதோ, பிரசுரங்களை விநியோகிப்பதோ குற்றம் என்று தடை செய்தது.

இவ்வாறு ஆர்ப்பாட்டங்கள் நடத்துவது, ‘நீதிமன்றத்தின் மாண்பினைக் குலைத்து விடும் என்பதோடு, வழக்கின் போக்கினை இவ்வகையான போராட்டங்களும் தீர்மானிக்கும் என்ற எண்ணப்பாட்டினை மக்கள் மனதில் உருவாக்கலாம்’ என்பதும் காரணம்.

ஆனால் பிரச்னை, ‘அமெரிக்க சட்டமன்ற கட்டிடத்திற்கு வெளியே மக்கள் ஆர்ப்பாட்டம் நடத்துவதை தடை செய்த சட்டமானது செல்லாது’ என்று 1972ம் ஆண்டு கூறப்பட்ட தீர்ப்பில் ஆரம்பித்தது.
சில வருடங்களில் உச்ச நீதிமன்றத்தை சுற்றியுள்ள நடைபாதை (sidewalk) யில் நீதிபதிகளையும் தீர்ப்புகளையும் எதிர்த்து ஆர்ப்பாட்டம் செய்து, துண்டுப் பிரசுரங்களை விநியோகித்த இருவர் தடுக்கப்பட்டனர்.

மாவட்ட நீதிமன்றம் 1949ம் வருட சட்டம் செல்லும் என்று தீர்ப்பு கூறினாலும் உயர் நீதிமன்றமும் உச்ச நீதிமன்றமும் சுற்றுப்பாதையில் ஆர்ப்பாட்டம் செய்வதை தடை விதிப்பது செல்லத்தக்கதல்ல என்று கூறி சுற்றுப் பாதையில் ஆர்ப்பாட்டங்களை அனுமதித்தது.

சுற்றுப் பாதையோடு திருப்தி அடையாத போராளிகள், உச்ச நீதிமன்ற வளாகத்திற்குள்ளும் அவ்வப்போது நுழைந்து போராட மீண்டும் வழக்கு.

மாவட்ட நீதிமன்றம் (Circuit Court) இந்த முறை சுற்றுப் பாதையில் என்ன உள்ளேயும் போராட்டம் நடத்துவதை தடை செய்வது செல்லாது என்று கூறவும் உயர்நீதிமன்றத்தில் (Court of Appeals) மேல்முறையீடு செய்யப்பட்டு கடந்த மாதம் 28ம் தேதி உயர்நீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள் அடங்கிய அமர்வு அப்படியெல்லாம் உள்ளே வர முடியாது, சுற்றுப்பாதையிலேயே ஆர்ப்பாட்டங்கள் நின்று விட வேண்டும் என்று தீர்ப்பு கூறியுள்ளது.

இனி வழக்கு உச்ச நீதிமன்றம் போகலாம். ஆனால் தீர்ப்பு எழுதியவர் யார் என்று தெரிந்தால், ‘ஆர்ப்பாட்டமாவது மண்ணாவது, தீர்ப்பு முழுக்கவும் சரிதான்’ என்று கூறத் தோன்றும்.

பராக் ஒபாமாவால் நியமிக்கப்பட்டவரும், உச்ச நீதிமன்றம் செல்வார் என்று நம்பப்படுபவருமானவரும், நம்மவருமானவருமான நீதிபதி சீனிவாசன்!

PROOF OF WILLS ADMITTED BY TESTATOR

INTRODUCTION I have had the privilege to hear the lecture of Mr.Nagamuthu, Senior Advocate on ‘Execution and Proof of Will’....