Showing posts with label Andaman. Show all posts
Showing posts with label Andaman. Show all posts

Wednesday, 8 June 2016

அந்தமான், இருபது ரூபாயில்…

பொருள் ஒன்றை வாங்குவதில் அல்லது சேவையை பெறுவதில் இரண்டு வகைகள் இருக்கிறது.

எங்கேவிருட்டென போய் விடுவாரோ என்ற பயத்தில் ஆட்டோ கம்பியைப் இடக்கையால் பிடித்தபடி அல்லது சமயங்களில் தலையையும் சற்று குனிந்துபோகணும். எவ்வளவு?’ என்று கேட்பது முதலாவது வகை. கெளரவம் பார்க்காத சாமன்ய முறை.

எதுவும் பேசாமல்ஜம்என்று ஏறி உட்கார்ந்து, ‘எக்மோர் போங்கஎன்று சொல்வது ஃபைவ் ஸ்டார் வகை. ‘ரொம்பவும் அதிகமாக கேட்டு விடுவாரோஎன்ற பயம் அவ்வப்போது எழுந்தாலும், ‘கெத்தாக இருக்கும்.

அந்தமான் ரோட்டோரத்தில் ரெண்டு இளநீ வெட்டுங்க, தண்ணியா என்று சொல்லிவிட்டு பயணம் வந்திருக்கிறேன். இளநீ விலை எல்லாம் ஒரு பொருட்டல்ல என்று தோரணையில் இளநீ குடித்து முடித்தாலும், தமிழ்நாட்டில் கிடைத்த சில பைஃவ் ஸ்டார் அனுபவத்தால் எவ்வளவு சொல்லப் போகிராறோ என்று மனதிற்குள் சிறிய கவலை ரேகையாக படர்ந்து கொண்டுதானிருந்தது.

சாலிஸ் அதாவது நாற்பது என்றதும் நிம்மதியானது. மதுரையில் சமயங்களில் ஐம்பது ரூபாய் சொல்கிறார்கள்.

அட, நாற்பது என்றது ஒன்றுக்கு இல்லை. இரண்டுக்கும் சேர்த்து மொத்தமாக என்ற ஆச்சர்யத்தில் திளைத்ததில், பார்த்த இடத்தில் எல்லாம் இளநீதான். எங்கும் அதே இருபது ரூபாய்தான்.

ஆட்டோவிலும் எதுவும் பேசாமல் இருக்கையில் உட்கார்ந்து, போகுமிடத்தைச் சொல்லலாம். குறைந்தபட்ச கட்டணமான இருபது ரூபாயை முகத்தில் எவ்விதச் சலனமுமின்றி வாங்கிக் கொள்கிறார்கள்.

கடற்கரைகளில் சிவப்புத் துணியால் மூடப்பட்ட பானைகளில் வைத்து குல்ஃபி விற்கிறார்கள். அதே இருபது ரூபாய். தரம்? பயமே வேண்டாம். அவ்வளவு க்ரீமியாக இருந்ததில் நாலைந்தை தொடர்ந்து விழுங்கினேன். மதுரையில் நூறு ரூபாய்க்கு இன்னமும் நீளமான குச்சியில் கிடைப்பதை விடவும் யம்மி.

அது என்னமோ, இளநீயைப் போல அந்தமானில் பாலும் சுவையாக இருக்கும் போல. தென் தமிழகத்திலிருந்து அந்தமானில் குடியேறியவர்கள், ஆங்காங்கே சாலையோர டீக்கடைகளில் உளுந்தவடைகளுக்கு மற்ற அந்தமானியர்களை மொத்தமாக அடிமைப்படுத்தி வைத்திருக்கிறார்கள். பெங்காலி, ஒடிசாக்காரர்கள் எல்லாம், அண்ணே வடை என்று கூட்டமாக நின்று கொண்டு உரிமையாகக் கேட்டபடி தமிழை வாழ வைக்கிறார்கள்.

கல்கத்தாவில் சிறிய மண்சட்டிகளில் கிடைப்பது போல தெய்வீக சுவை இல்லை என்றாலும், ரசகுலா என்று சொல்லக்கூடிய அளவில் பெங்காலி கடையில் கிடைத்தது.

தமிழ்நாட்டில் ரசகுல்லா என்ற பெயரில் சீனிப்பாகில் ஊறவைத்த பஞ்சு போல எதையோ விற்கிறார்கள்.

மற்றபடி காய்கறிகள், பழங்கள், பருப்பு வகை என்று இங்கிருந்து செல்லும் அனைத்தும் அந்தமானில் விலை அதிகம் என்கிறார்கள்.

பிறந்து வளர்ந்தது எல்லாம் இங்கதான். சொந்த ஊர் சிவகங்கை. ஆனால் இதுவரை போனதில்லை என்றார் பேச்சுக் கொடுத்த ஆட்டோ டிரைவர். இளைஞர். அவரது சம்பாத்தியத்தில் சொந்தமாக வீடு வாங்கி குடும்பத்தையும் நடத்தில் விடலாம் என்ற நம்பிக்கையுடனிருந்தார்.


இண்டர் கல்சுரல் காதல் கதைகள் உண்டா என்று கேட்க நேரமில்லாதலால் தோன்றவில்லை. பூர்வகுடிகளைத் தவிர்த்து தமிழ், தெலுங்கு ஒடிசா, பிகாரி, பெங்காலிகளோடு அந்தமானியர்கள் என்ற கலவையான சமுதாயம் ஒருவேளை உருவாகிக் கொண்டிருக்கலாம்.

Thursday, 2 June 2016

அந்தமான், முதல் சுதந்திரப் போர்

ஆங்கிலேயர் ஆதிக்கத்துக்கு எதிராக 1857ல் வெடித்துக் கிளம்பி 1859ல் முற்றிலும் ஒடுக்கப்பட்ட போரினை முதல் இந்திய சுதந்திரப் போராக ஏற்றுக் கொண்டுள்ளோம். ஆயினும் அது தாய் மண்ணை மீட்டெடுப்பதற்கான சுதந்திரப் போரா அல்லது வேறு பல காரணங்களுக்கான கிளர்ச்சியா என்பதில் வரலாற்று ஆய்வாளர்கள் வேறுபடுகிறார்கள்.

ஆனால் அதே 1859ம் ஆண்டு இந்தியாவின் வேறு ஒரு பகுதியில்தாய் நாட்டை அந்நியர்களிடமிருந்து மீட்பதுஎன்ற ஒரே நோக்கத்தோடு ஆங்கிலேயர்கள் மீது நடத்தப்பட்ட நேரடிப் போர் நமது வரலாற்றுப் புத்தகங்களில் காணக் கிடைக்காததற்கு காரணம் இருக்கிறது.

ஒரு தலைப்பட்சமாக முடிந்து போன அந்த சண்டை நடந்த இடத்தில் கடந்த மூன்று நாட்கள் நான் தங்கியிருந்தேன்.

அபர்தீன்!

அந்தமான் தீவின் தலைநகரமான போர்ட் ப்ளேர்ரின் முக்கியமான மையப் பகுதி அபர்தீன்.

ஆப்ரிக்காவிலிருந்து வந்தவர்களா அல்லது அந்தமானிலேயே பரிணமித்து உருவானவர்களா எனபது தெரியாவிட்டாலும், அந்தமானின் பூர்வகுடிகள், பிற மனித இன வாடையே இல்லாமல் அங்கு வசித்து வந்தவர்கள். அவர்களில் முக்கியமான குடிகளானதி கிரேட் அந்தமானீஸ்என்று அழைக்கப்பட்டவர்கள்தாம் 1859ம் ஆண்டு மே மாதம் 17ம் தேதி 'பறிக்கப்பட்ட அவர்களது மண்ணை மீட்பதற்காக' ஆங்கிலேயர்கள் மீது பல முனைகளிலிருந்தும் ‘பேட்டில் ஆஃப் அபர்தீன்’ என்று கூறப்பட்ட ஒருங்கிணைந்த போரினை தொடங்கினர்.

ஏற்கனவே ஆங்கிலேய சிறையிலிருந்து தப்பித்து பூர்வகுடிகளிடம் அடைக்கலமாகி அவர்களுடனே ஒரு வருட காலமாக தங்கியிருந்ததுநாத் திவாரிஎன்னும்முதல் இந்திய சுதந்திரப் போராளிமுதல் ஆளாக ஓடிப் போய் ஆங்கிலேயரகளிடம் தாக்குதல் விபரத்தைப் போட்டுக் கொடுத்த துரோகமும் நடந்தது.

எது எப்படி என்றாலும், சாதாரண வில் அம்புகளை எதிர்த்து துப்பாக்கிகளும், பீரங்கித் தாக்குதல்களுமாக ஒரே நாளில் நடந்து முடிந்து போன போரில் எத்தனை அந்தமானீஸ் கொன்றழிக்கப்பட்டார்கள்  என்பது இன்னமும் அறியப்படாத ரகசியம்.

உயிர் பிழைத்தவர்கள் ஆங்கிலேயர்களால் பிற பூர்வகுடிகளை வேட்டையாட பயன்படுத்தப்பட்டுநாகரீகத்தின்பரிசாகக் கிடைத்த நோயிலும், மதுப்பழக்கத்திலும் அழிந்தே போக ஏறக்குறைய ஐம்பதாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக அதாவது சுமார் ஆயிரம் தலைமுறைகளாக அந்தமானின் பெரும்பகுதியில் வசித்து வந்த அந்தமானீஸ் ஐந்து ஆண்டுகளுக்கு முன் வெறும் ஐம்பது நபர்களாக அதுவும் தங்களது மொழியை, கலாச்சாரத்தை மறந்தவர்களாக சுருங்கிப் போய் விட்டனர்.

போர்ட் ப்ளேர் சிறிய ஆனால் அழகிய ஊர். நான் இருந்த இரண்டாவது நாள் நல்ல மழை. கண்ணைக் கட்டி திடீரென அந்த நகரின் ஏதாவது பகுதியில் இறக்கினால் கேரளா அல்லது கோவா என்று நினைப்போம்.

அந்தமானின் முக்கிய அம்சம் ஆங்காங்கே இருக்கும் கடற்கரைகளும், தீவுகளும். நன்றாக சுற்ற வேண்டுமென்றால் ஒரு வாரம் தேவைப்படும். அபர்தீன் பகுதியில் தங்கிக் கொண்டால் அனைத்து பகுதிகளையும் பார்த்து விடலாம்;


இந்தியாவின் முதல் சுதந்திரப் போர் நடைபெற்ற சுவட்டைத் தவிர

PROOF OF WILLS ADMITTED BY TESTATOR

INTRODUCTION I have had the privilege to hear the lecture of Mr.Nagamuthu, Senior Advocate on ‘Execution and Proof of Will’....