Showing posts with label Freedom of Expression. Show all posts
Showing posts with label Freedom of Expression. Show all posts

Thursday, 14 July 2016

டாக்டர் ஜாகிர் நாயக்?

தான், தன் குடும்பம் குழந்தைகளின் கல்வி, வேலை என்ற அளவோடு கூடிய வரையில் பிற சமூகத்தவரோடு இசைந்து வாழ்ந்து வந்த சாதாரண நடுத்தர இஸ்லாமியர்களை திடீரென மிகப் பெரிய அவநம்பிக்கைக்குள் ஆழ்த்திய நிகழ்வு ஒன்று உண்டென்றால் அது பாப்ரி மஸ்ஜித் இடிப்பு.

பாப்ரி மஸ்ஜித் நிகழ்வு அளவிற்கு இல்லை என்றாலும் அதற்கு நிகரான அளவிற்கு இஸ்லாமியர்கள் மன உளைச்சலுக்கு ஆளாக்கும் ஆபத்துடைம்ஸ் நவ்அர்னாப்பின் தினப்படி கூச்சல்களை ஏதோ இந்தியாவின் ஒட்டு மொத்த குரல் என்று நம்பி, இஸ்லாமிய மத போதகரான டாக்டர் ஜாகிர் நாயக்கை இந்திய அரசு தடை செய்யும் முயற்சியில் இருக்கிறது.

இஸ்லாமிய நண்பர் ஒருவர் அனுப்பி வைத்ததாகடாக்டர் ஜாகிர் நாயக்கின் டிவிடிக்கள் எனக்கு இரு நாட்களுக்கு முன் வந்தது. ‘ஒரு நாளுமில்லாத வழக்கமாக, இது என்னஎன்று அவரைத் தொடர்பு கொண்டதில், ‘இல்லை. நீங்கள் இவரது பேச்சைக் கேளுங்கள். எங்கள் மதத்தைப் பற்றி பேசுவதற்குக் கூடவா, உரிமையில்லைஎன்றார்.

படித்த மிதவாத எண்ணம் கொண்ட சாதாரண இஸ்லாமியர்களின் பொதுவான பதட்டத்தை என்னால் தொலைபேசியிலேயே உணர முடிந்தது.

அந்த டிவிடிக்களை தொடக்கூட எனக்கு நேரமோ, பொறுமையோ இல்லை என்றாலும், போரடித்துப் போன பின்னிரவு நேரங்களில்கூட்டத்தினரின் கேள்விகளுக்கு ஜாகிர் நாயக்பதில் கூறுவதைக் ஏற்கனவே கேட்டிருக்கிறேன். சங்கடமான கேள்விக்கு சுற்றி வளைத்து பதில் கூறி அவர் முடிக்கும் கடைசி வாக்கியம் தொடங்கும் முன்னரே மொத்த கூட்டமும் கை தட்டினாலும் கேள்வி கேட்டவர் அவர் இஸ்லாமியர் அல்லாதவர் எனில்திருப்தியின்மை முகத்தில் ஸ்பஷ்டமாகத் தெரிய அசட்டுப் புன்னகையோடு நின்று கொண்டிருப்பார்.

பிற மதங்களை இஸ்லாத்திற்கு எதிராக மட்டுப்படுத்துவதில் கூட சில சமயங்களில் நான் கேட்க நேரிட்ட பெந்தேகொஸ்தே பாஸ்டர்களின் பேச்சுக்களில் அதிக ஆபத்தை உணர்ந்திருக்கிறேன்.

பெந்தேகொஸ்தே என்ன மற்ற சில கிறிஸ்தவ போதகர்கள் கூட விலக்கல்ல.

செய்தித் தாளிகளில் வரும் பெரிய விபத்துச் செய்திகளைப் பாருங்கள். எல்லாம் இந்துப் பெயர்களாக இருக்கும். கிறிஸ்தவப் பெயரே இருக்காது. கர்த்தருக்கு ஸ்தோத்ரம். அல்லேலூயாஎன்று எளிதாகக் கூறிப் போனார் ஒரு போதகர்.
வீட்டுக்கு வந்ததும் அம்மாஅவர் கரெக்டா சொன்னார் பாத்தியாஎன்றார் பெருமையாக. ‘போம்மா, அமெரிக்காவுல ஆக்ஸிடெண்ட் நடந்தா அவ்வளவும் கிறிஸ்தவப் பெயராக இருக்கும்என்றேன்.

கிறிஸ்தவர்களை தர்மசங்கடத்தில் நெளிய வைத்துக் கொண்டிருக்கும் உமாசங்கர் அரசு ஊழியராக இருந்து கொண்டே பிற மதங்களை வெளுத்துக் கட்டுவதைக் கூட சகித்துக் கொள்ளும் அளவிற்கு பேச்சுரிமையை வளர்த்துக் கொண்டுள்ள நாம் ஓரளவிற்கு அதை தன்மையாகவே கையாளும் ஜாகிர் நாயக்கை துரத்துவோம் என்றால், அதை எப்படிச் சொல்வது, இஸ்லாம்ஃபோபியா என்றா?

இதுதான் இவரது குற்றச்செயல் என்று ஏதும் குறிப்பிடாமலேயே, ‘கைது செய்’ ‘தடை செய்’ ‘முடக்குஎன்று சில ஊடகங்கள் கூக்குரலிடுவதின் காரணமும் அதுதான் இருக்க முடியும்.

தூய்மைவாதம் என்பது அனைத்து மதங்களிலும் ஏன், சித்தாந்தங்களிலும் தோன்றுவதுதான். வன்முறையை, அழுத்தத்தை நம்மீது திணிக்காதவரை அதற்கான உரிமையை நாம் மறுப்பது பேச்சுரிமைக்கான அவர்களது அடிப்படை உரிமையை மறுப்பதாகும்.

கொடூர பயங்கரவாதச் செயல்களில் ஈடுபட்ட இரு இளைஞர்கள் இவரது பேச்சுக்களால் வசீகரிக்கப்பட்டதாக குற்றம் சாட்டப்படுகிறது. மகாத்மா காந்தியின் பேச்சால் வசீகரிக்கப்பட்ட காங்கிரஸ்காரர்களில் சிலர் கூட ஒத்துழையாமை இயக்கத்தில் வன்முறையில் ஈடுபட்டார்கள்.

டாக்டரைப் போல கல்லூரிக்குப் போய் ஆங்கிலம் பேசக் கற்றுக் கொண்டு கோட்டும் சூட்டும் போட்டு மேடைகளில் பேச வேண்டும், அவரைப் போல புகழடைய வேண்டும் என்றும் வசீகரிக்கப்படும் பல்லாயிரக்கணக்கான இஸ்லாமிய இளைஞர்களை மறந்து விடுகிறோம்.

இஸ்லாமிய இளைஞர்கள் அனைவரையும் அப்துல் கலாமோ, ஆமிர் கானோ வசீகரிக்க முடியுமானால் எனக்கு மகிழ்வே. ஆனால் மதத்தால் கட்டுண்ட நிலையில் பெருவாரியான இளைஞர்கள்/ யுவதிகள் நிற்கும் நிலையில் அவர்கள் முன் இருப்பது இரு தேர்வுகள்; ஒரு பக்கம் கல்வியால் தன்னை முன் நிறுத்தும் டாக்டர் ஜாகிர் நாயக். மறுபக்கம் பள்ளிப்படிப்பைக் கூட முடிக்காமல் துப்பாக்கியைத் தூக்கி முக அழகால் தன்னை முன்னிறுத்தும் பர்ஹான் வானி.


டாக்டர் ஜாகிர் நாயக்களை அனுமதிப்பது புத்திசாலித்தனம்

Wednesday, 25 March 2015

மன்னர் மறைந்தார், வாழ்க மன்னர்!

ஷ்ரேயா சிங்கால் வழக்கில் தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் பிரிவு 66Aவை நீக்கம் செய்துள்ள உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பினை வரவேற்று நாளை பத்திரிக்கைகள் அனைத்திலும் தலையங்களை எதிர்பார்க்கலாம். ஆனால் ஏதோ 66A வந்ததிலிருந்து பறிபோன சுதந்திரத்தை மீட்டெடுத்து விட்டதாக புகுந்து விளையாட காத்திருக்கும் இணையவாசிகளை மீண்டும் எச்சரிக்க வேண்டியது அவசியம் என உணர்கிறேன். என் பதிவுகளை தொடர்ந்து படித்தவர்கள் ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் ‘சைபர் க்ரைம்’ என்று எழுதப்பட்டு பின்னர் சின்மயி-ராஜன் பிரச்னையின் பொழுது மீள்பதியப்பட்ட பதிவினைப் பற்றி அறிந்திருக்கலாம்.

மீண்டும் சொல்கிறேன். நமது நாட்டில் யாரும் ஏதாவது குற்றத்திற்காக நாம் நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டு விடுவோமோ என்று அஞ்சுவதில்லை. மாறாக ஏதாவது குற்றத்திற்காக காவலர்களாள் கைது செய்யப்பட்டு விடுவோமோ என்பதுதான் அச்சமே. ஓவியர் ஹுசைனோ அல்லது நடிகை குஷ்பு’வோ இந்தியாவின் எந்த நீதிமன்றத்தாலும் தண்டிக்கப்படவில்லை. ஆனால் அனைத்து நீதிமன்றங்களிலும் இழுக்கப்பட்டு ஹுசைன் இந்தியாவை விட்டே ஓடினார். குஷ்பு அரசியல் கட்சியில் தஞ்சமடைந்தார். 66A அதற்கு காரணமில்லை.

66Aவை எடுத்துக் கொண்டாலும், அது துஷ்பிரயோகம் செய்யப்பட்டதாக கூறப்பட்டுள்ள எந்தவொரு வழக்கிலும் யாரும் அதாவது பால் தாக்கரே பற்றி எழுதிய மும்பை சிறுமிகள் ஷாகீன் தாதா, ரினு ஸ்ரீனிவாசனிலிருந்து அசம் கானை விமர்சித்த உத்தரபிரதேச சிறுவன் வரை இதுவரை தண்டிக்கப்பட்டதில்லை. ஆனால் கைது செய்யப்பட்டார்கள். சிறையிலடைக்கப்பட்டார்கள். அவமானங்களை சந்தித்தார்கள்.

66A இல்லாவிட்டாலும், இதே செயலுக்காக துணிந்தால் சம்பந்தப்பட்ட ஏதாவது இந்திய தண்டனைச் சட்டப்பிரிவுகளில் காவலர்களால் கைது செய்ய முடியும். அது பிணையில் விடக்கூடிய வழக்காக இருப்பினும், காவல்நிலையம், குற்றவியல் நடுவர் நீதிமன்றம், பிணை, கையெழுத்து, வாய்தா என்று அதே அவமானங்கள். உயர்நீதிமன்றம் பின் அந்த முதல் தகவல் அறிக்கையினை நசுக்கினாலும் (quash) இந்தச் செயல் இந்த சட்டப்பிரிவுக்குள் எப்படி வரும் என்று எந்தக் காவலர் மீதும் நடவடிக்கை இருக்கப் போவதில்லை.

66A தனிப்பட்ட நபருக்கு எரிச்சலூட்டும் (annoyance) காரியத்தை செய்தாலே குற்றம்சாட்டும் வகையில் இயற்றப்பட்டுள்ளது. உதாரணமாக ‘மோடி ஆட்சிக்கு வந்தால் ஹோலோகாஸ்ட் நிகழும்’ என்று எழுதியதும் அல்லது மம்தா பானர்ஜியை கிண்டல் செய்து வரையப்பட்ட கார்ட்டூனையும் கூறலாம். இந்த ஒரு கூறுதான் 66Aவை அதே போன்றதொரு மற்ற இந்திய தண்டனைச் சட்ட பிரிவுகளிலிருந்து வேறுபடுத்துகிறது. 66A இல்லாதது இத்தகைய செயல்களை மட்டுமே பாதுகாக்கலாம்…..லாம்’தான்.

ஏனெனில் பாராளுமன்றத்தைப் பற்றி கார்ட்டூன் வரைந்த அசீம் த்ரிவேதி மீது 66Aவோடு தேசதுரோக (sedition) குற்றமும் சுமத்தப்பட்டது. அசம் கானைப் பற்றி எழுதப்பட்ட செயலிலும் 66A இல்லாவிட்டாலும், ‘அவர் கோபமுற்று தனது தொண்டர்களைத் தூண்டி விட்டு கலவரம் செய்ய வேண்டுமென்ற எண்ணத்தில் எழுதினார்’ என்று இந்திய தண்டனைச் சட்ட பிரிவு 504ல் வழக்கு பதிவு செய்து கைது செய்தால் நீதிமன்றங்கள் பிணை வழங்கலாம், முதல் தகவல் அறிக்கையை தள்ளுபடியும் செய்யலாம். ஆனால் அதற்குள் சம்பந்தப்பட்டவர் வேண்டிய கஷ்டத்தை அனுபவித்து விடுவார்.

எனவே,  நாளை செய்தியைப் படித்து விட்டு ‘ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோம்’ என்று சார்லி ஹெப்டோ கார்ட்டூன்களை தூசி தட்ட ஆரம்பித்து விடாதீர்கள்.


மதுரை
24/03/15

PROOF OF WILLS ADMITTED BY TESTATOR

INTRODUCTION I have had the privilege to hear the lecture of Mr.Nagamuthu, Senior Advocate on ‘Execution and Proof of Will’....