Showing posts with label Tamil Book Review. Show all posts
Showing posts with label Tamil Book Review. Show all posts

Monday, 1 August 2016

பெருங்காற்று...

செம்பியின் கைகள் அவளின் உடலில் ஊடுருவி அடி வயிற்றில் இறங்கும் போது ஏதோ ஒரு நடுக்கம், ……………………………………………………………………………………………………………………… சற்று நடுக்கமும், வியர்வையும் மேலிட்டதுஎன்ற வரிகளைப் படிக்கையில்தடுக்காதே பெண்ணே, இணங்கிப் போஎன்று உங்கள் மனதில் தோன்றுவதற்கு நீங்கள் ஒரு போர்னோ கதையைப் படிக்கும் மனநிலையில் இருக்க வேண்டும் என்பது இல்லை. சக மனிதனுக்கு இழைக்கப்படும் கொடுமை கண்டு இரங்கும் மனிதம் கொஞ்சமேனும் ஒட்டிக் கொண்டிருக்கும் மனம் இருந்தாலே போதுமானது.

பாருடா உன் பொண்டாட்டியே பார்க்கணுன்னையே என்று வள்ளி பார்க்கவே போலீஸாரால் சுட்டுக் கொல்லப்பட்ட அவளது கணவன் கூட ஒருவேளை செத்த பின்னர் அவளை பேயாய் சுற்றி வந்திருந்தால் அன்றிரவாவது அவளால் வெகு நேரம் தூங்க முடிந்ததற்காக உங்களையும் என்னையும் போலவே செம்பியின் அரவணைப்பிற்கு வள்ளி இணங்கிப் போக வேண்டுமென நினைத்திருப்பான்.

வீரப்பன் தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட காவலர்களின் முகாம்களில் வள்ளி கடந்து வந்த வலிகளும் வேதனைகளும் அப்படிப்பட்டது.

ஏற்கனவே சோளகர் தொட்டி நாவல் மூலமாக சிவண்ணா அவன் மனைவி மாதி மூலமாக, முகாம்களின் அநீதியை இலக்கியத்தரத்துடன் ஆவணப்படுத்தியுள்ள .பாலமுருகன் அவர்களின் சிறுகதைத் தொகுப்பாக வெளிவந்துள்ள பெருங்காற்று என்ற புத்தகத்தின் தலைப்புக் கதையின் முக்கிய பாத்திரம்தான் வள்ளி.

.பாலமுருகன் இளைஞர். வழக்குரைஞர். முக்கியமாக மனித உரிமை செயற்பாட்டாளர்; செய்ற்பாட்டாளர் என்றால் உண்மையிலேயே களத்தில் இறங்கி பணியாற்றுபவர். அந்தப் பணிகளால் அவர் மண்டபம் அகதிகள் முகாமிலும், பஞ்சாபிலும், காஷ்மீரத்திலும், வீரப்பன் தேடுதல் வேட்டையில் இழைக்கப்பட்ட கொடுமைகளுக்காக நடத்தப்பட்ட விசாரணைகளிலும் அடைந்த வேதனைகளும், வலிகளும் அவரே நேற்று கூறியபடி ஒரு பேய் போல நிழல் போல அவரைத் துரத்த அந்த பாரத்தை சற்று இறக்கி வைக்கும் ஒரு கருவியாக எழுத்தைத் தேர்ந்தெடுத்து இக்கதைகளை எழுதியுள்ளார்.

இயற்கை உபாதைகளைக் கழிக்க மற்றவரின் துணை வேண்டியிருப்பதால், அதைத் தவிர்க்கும் பொருட்டு உணவே உட்கொள்ளாமல் இருக்கும் அகதியான மலர் மற்ற செயற்பாட்டாளர்களுக்கு ஒரு ஆவணம். பாலமுருகன் துயரமிக்க அவளது கண்களினூடாக அவளது கதையைத் தேடுகிறார். அது போலவே பஞ்சாபில் காணாமல் போன மனித உரிமை ஆய்வாளர் அல்லது காஷ்மீரத்தில் கடத்தப்பட்டு எங்கோ புதைக்கப்பட்ட பள்ளி ஆசிரியர் போன்றவர்கள் நமக்கு ஒரு செய்தி. ஆனால் பாலமுருகன் அவர்களது தாயின் தேடலை புனைவாக்கியுள்ளார்.

இவை மட்டுமல்லாது மற்ற பல கதைகளைப் பற்றியும் எவ்வளவோ பேச முடியும். பாலமுருகன் இறக்கி வைத்த பாரம் நம்மைத் தொற்றிக் கொள்வதை நம்மாலும் எவ்வளவுதான் சுமக்க முடியும்?

வலியைப் பற்றி எழுதியிருக்கிறேன். வேதனையைப் பற்றி எழுதியிருக்கிறேன் என்று கடந்த வருடங்களில் சிலர் தமிழ் இணையப் பக்கங்களில் பீற்றிக் கொண்டிருந்தார்கள். .பாலமுருகனின் சோளகர் தொட்டி நாவல் மற்றும் பெருங்காற்று சிறுகதைகளைப் படித்தால் அடேய் உண்மையான வலிகளும் வேதனைகளும் தினம் தினம் இங்கு நிகழ்ந்து கொண்டிருக்க வேறு எந்த வலியைப் பற்றியடா எழுதிக் குவிக்கிறீர்கள்? என்று கேட்கத் தோன்றும்


Friday, 22 July 2016

தீதும் நன்றும்!

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்என்று கையெழுத்திடாமலேயே நான்கு வருடங்களுக்கு முன்னர் இளவல் யாரோ ஒருவர் பரிசளித்தநாஞ்சில் நாடன்னின்தீதும் நன்றும்பிரியாணிக்குக் காத்திருந்த ரம்ஜான் நாளின் பகற்பொழுதின் உணவானது.

நாஞ்சில் நாடனின் கதைகளை வாசித்ததில்லை. ஆனால், முன்பு ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் தனது வேலை விஷயமாக மஹாராஷ்டிராவின் சோலாப்பூர் பகுதியில் பயணம் செய்ததில் சந்தித்த நபர்கள், முக்கியமாக ஒரு தமிழ் தம்பதிகளைப் பற்றி எழுதியிருந்ததைப் படித்ததில் இருந்து எனக்கு இவரை மிகவும் பிடித்திருந்தது.

அதோடு நிறுத்தி விட்டு அவரது கதைகளை தேடிப் போய் படித்திருக்க வேண்டும் நான். விகடனின் வேண்டுகோளை ஏற்று வாராவாரம் அதன் இதழ்களில் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பை கையிலெடுத்திருக்கக் கூடாது.

மொக்கை என்பது எனக்கு மிகவும் அந்நியப்பட்ட வார்த்தை. ஆயினும் இணையத்தில் தொடர்ந்து புழங்கியதின் பழக்கத்தில் ஐம்பது பக்கங்களைத் தாண்டுவதற்குள்ளாகவே இவ்வார்த்தை எனையறியாமலேயே தோன்றி மனதில் நின்றது.

பின்ன, பெண்கள் பழகினாலே இளைஞர்கள் காதலிக்க ஆரம்பித்து விடுகிறார்கள் என்று சொல்ல விழைந்தவர் கிராமப்புறங்களில் இந்த சமர்த்துகள் கிடையாது. ஏன் தெரியுமா? வெட்டிப்போடுவான் என்ற பயம்தான். என்று தமிழ் சினிமா முடித்தால்?

பத்தி எழுதுவது ப்ரத்யோகமான கலை. ஆங்கிலத்தில் நான் ரசிக்கும் சிறந்த பத்தி எழுத்தாளர்கள் நாவலாசிரியர்கள் அல்லர். அவரவர் துறை சார்ந்து எழுதுகிறார்கள். பொதுவாகவும் சிலர் எழுதுகிறார்கள்.

அமெரிக்காவில் ப்ளாண்ட் என்று கேலிக்குள்ளாக்கப்படும் மொத்த வடிவத்தை தன்னகத்தே கொண்டுள்ளதாக நான் நினைத்திருந்த ராஜேஷ் கன்னாவின் மகளும் அக்ஷய் குமாரின் மனைவியுமான ட்விங்கிள் கன்னா சண்டே டைம்ஸில் பத்தி எழுதுகிறார்.

அதிலுள்ள நகைச்சுவையும், மறைந்திருக்கும் புத்திசாலித்தனமும்தமிழில் ஒருவர் தேற மாட்டார்கள். சுஜாதா நீங்கலாக.

கிராமத்தில் பெண்களைத் துரத்தினால் வெட்டிப் போடுவார்கள் என்பதைத் தொடர்ந்து சில அரசியல் மொக்கைகள். ஈழப் படுகொலை புலம்பல்கள். அறிவுறுத்தல்கள் என்று எப்போது முடியும் என்று ஆகிவிட்டது; அவ்வப்போது தலைகாட்டிய சில சுவராசியங்களைத் தவிர.

இங்கு யாரைப் பற்றி எதைச் சொன்னாலும், யாருக்காவது கோபம் வந்து விடும் ஆரோக்கியமான சூழ்நிலை ஏற்ப்படுத்திய தயக்கமும் காரணமாக இருக்கலாம் என்பதால் நாஞ்சில் நாடன் போன்றவர்கள், நாவல்களோடு மட்டும் நின்று கொள்ளலாம். ஏதும் பிரச்னை என்றாலும் காப்பாற்றுவதற்கு நீதிமன்றங்கள் உள்ளன.

கடைசியாக, பெண்களை போகப் பொருளாகப் பார்க்கும் நம் சமூக சூழ்நிலைப் பற்றி அவ்வளவு தூரம் மாய்ந்து மாய்ந்து எழு்திய மகளிர் தினம் என்ற கட்டுரையில் ஏதோ சினிமா ஸ்டிலிலிருந்து எடுத்துப் போடப்பட்டுள்ள புகைப்படம் நாஞ்சில் நாடன் பார்வைக்கு வந்ததா என்பது தெரியவில்லை.


எதையாவது வாசி என்பது எனது கொள்கை. கண்டது கற்றுப் பண்டிதனாகலாம் என்று புத்தகப் பரிசுகள் கட்டுரையில் நாஞ்சில் நாடன் சொல்வதால் படித்ததில் பிழையில்லை என்று மனதை தேற்றிக் கொண்டேன்.

PROOF OF WILLS ADMITTED BY TESTATOR

INTRODUCTION I have had the privilege to hear the lecture of Mr.Nagamuthu, Senior Advocate on ‘Execution and Proof of Will’....