Showing posts with label Constitution of India. Show all posts
Showing posts with label Constitution of India. Show all posts

Friday, 28 October 2016

சிறுபான்மை கல்வி நிறுவனமும் நீதிமன்றமும் 2

பதினைந்து ஆண்டுகள் இருக்கும். வலைக்குழும விவாதம் ஒன்றில் குறுக்கிட்ட நண்பர் ஒருவர், ‘மைனாரிட்டிகளுக்குத்தான் நம் நாட்டில் அதிக உரிமைகள் அளிக்கப்படுகின்றனஎன்றார்.


இப்படித்தான் இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு திராவிடர் கழகத்தவர் யாரைப் பார்த்தாலும்சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்று. கரூர்-திண்டுக்கல் அகல ரயில்பாதையை செயலாக்கு. சேலத்தில் உருக்காலை உருவாக்குஎன்பார்கள்.


இந்துத்வா நண்பர்களும் தங்கள் பங்குக்குஅணு ஆயுத சோதனை, அயோத்தியில் ராமர் கோவில் என்பதோடு சிறுபான்மையினர் அப்பீஸ்மெண்டு என்பதையும் சேர்த்துக் கொள்வார்கள்


நான் அந்த நண்பரிடம், ‘மைனாரிட்டிகளுக்கு இந்தியாவில் அப்படி என்ன அதிகப்படியான உரிமைகள் அளிக்கப்படுகின்றன என்று சொல்ல முடியுமா?’ என்றேன்.


உடனடியாக அவர், ‘மற்றவர்கள் கூறக் கேட்டிருக்கிறேன். நான் இதைப் பற்றி படித்து விட்டு வந்து சொல்கிறேன்என்றதோடு சரி, பின்னர் அது பற்றி பேசவில்லை.


ஆனால் சில வருடங்கள் காத்திருந்தால், நண்பருக்கு ஒரு பாயிண்ட் கிடைத்திருக்கும். 2005ம் ஆண்டு இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் சேர்க்கப்பட்ட ஆர்ட்டிகிள் 15(5)!


இந்த ஆர்ட்டிகிளானது, அரசு உதவி பெறாத தனியார் கல்வி நிறுவனங்களில் கூட மாணவர் சேர்க்கையில் சமூக-கல்வி நிலையில் பின் தங்கியவர்களுக்கு இட ஒதுக்கீடு அளிக்க அரசு சட்டமியற்றலாம் என்று கூறுகிறது.


நண்பர் குற்றம் சாட்டியபடி இந்த ஆர்ட்டிகிளில் சிறுபான்மை நிறுவனங்களுக்கு விலக்கு அளிக்கப்படுகிறது,


அவை அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்களாக இருப்பினும் விலக்கு உண்டு.

ஆகவே, சிறுபான்மை கல்வி நிறுவனங்களில் மாணவர் சேர்க்கையில் இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும் என்று அரசு கட்டாயப்படுத்த முடியாது.


-oOo-


2009ம் ஆண்டு கல்வி உரிமை சட்டம் (Right of Children to Free and Compulsory Education Act’2009) இயற்றப்பட்ட பொழுது, தனியார் பள்ளி நிறுவனங்கள் அதிகம் அஞ்சியது, மாணவர் சேர்க்கையில் 25 சதவீதம் ஏழை மாணவர்களுக்காக ஒதுக்கப்பட வேண்டும் என்ற பிரிவு 12(1)(c) என்று பார்த்தோம்.


அந்த பிரிவானது செல்லும் என்று Society for Un-aided Private Schools of Rajasthan Vs Union of India (2012 (3) MLJ 993 SC) வழக்கில் தீர்ப்பு கூறப்பட்டதையும் அறிவோம்.


அரசியலமைப்பு சட்டத்தின் ஆர்ட்டிகிள் 15(5) செல்லாது என்று அறிவிக்கப்பட்டால், கல்வி உரிமை சட்டத்தின் பிரிவும் செல்லாததாக மாறிவிடும் என்பதால் ஆர்ட்டிகிள் 15(5) செல்லாது என்று அறிவிக்க வேண்டும் என்ற வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டு அவை உச்ச நீதிமன்றத்தால் பரமத்தி (Pramati Educational & Cultural Trust Vs Union of India (2014) 8 SCC 1) என்ற வழக்கில் தீர்ப்பு கூறப்பட்டது.


அரசியலமைப்பு சட்டப்பிரிவு சம்பந்தப்பட்ட வழக்கு என்பதால் உச்ச நீதிமன்றத்தின் ஐந்து நீதிபதிகள் அடங்கிய அரசியலமைப்பு சட்ட அமர்வு இந்த வழக்கினை விசாரித்து ஆர்ட்டிகிள் 15(5) செல்லும் என்று தீர்ப்பு கூறியது.


ஆனால், சிறுபான்மை நிறுவனங்களைப் பொறுத்தவரை அவை, அரசு உதவி பெற்றாலும் சரி பெறாவிட்டாலும் சரி, 2009ம் ஆண்டு கல்வி உரிமை சட்டம் செல்லாது என்று ஒரேடியாக அறிவித்து விட்டது. முதலில் கூறப்பட்ட 2012ம் ஆண்டு வழக்கில் மூன்று நீதிபதிகள் அடங்கிய அமர்வு அரசு உதவி பெறாத சிறுபான்மை பள்ளிகளுக்கு மட்டும் செல்லாது என்று கூறியது, தர்க்கத்துக்கு அப்பாற்ப்பட்டது என்று முன்பு கூறியிருந்தேன்.


மாணவர் சேர்க்கையில் இட ஒதுக்கீடு அளிக்கும் பிரிவு 12(1)(c) சிறுபான்மை நிறுவனங்களைப் பொறுத்தவரை ஆர்ட்டிகிள் 15(5)படி செல்லாது என்பது புரிந்து கொள்ளக் கூடியது.


சிறுபான்மை நிறுவனங்களுக்கு கல்வி நிறுவனங்களை நிர்வகிப்பது அடிப்படை உரிமையாக ஆர்ட்டிகிள் 30(1)படி ஏற்கனவே வழங்கப்பட்டிருப்பதால், சிறுபான்மை கல்வி நிர்வாகத்தில் தலையிடும் வண்ணம் கல்வி உரிமை சட்டத்தில் உள்ள மற்ற சில பிரிவுகளும் சிறுபான்மை நிறுவனங்களைப் பொறுத்து செல்லாது என்று கூறுவதில் கூட பிரச்னை இல்லை.


வழக்கில், சிறுபான்மை நிறுவனங்களுக்காக ஆஜரான மூத்த வழக்குரைஞரும் எனது நண்பருமாகிய அஜ்மல்கான் தாக்கல் செய்த எழுத்துபூர்வமான வாதவுரையில் கூட கல்வி உரிமை சட்டத்தின் குறிப்பிட்ட சில பிரிவுகள் மட்டுமே ஆர்ட்டிகிள் 30(1) மற்றும் 15(5)க்கு விரோதமானவை என்று குறிப்பிடப்படுகிறது. அனைத்து தரப்பும் தாக்கல் செய்த வாதவுரைகள் தீர்ப்போடு இணைக்கப்பட்டுள்ளது.


சட்டம் முழுமையும் செல்லாது என்பது வாதவுரையில் வேண்டப்படவில்லை.


ஆனால், உச்ச நீதிமன்ற ஐந்து நீதிபதிகள் அடங்கிய அரசியலமைப்பு பிரிவு சட்டம் மொத்தமும் சிறுபான்மை நிறுவனங்களைப் பொறுத்து செல்லாது என்று எந்த எந்த பிரிவுகள் செல்லாது என்பதைப் பற்றிய எவ்வித விவாதமும் இல்லாமல் தீர்ப்புக் கூறியது பல புதிய பிரச்னைகளுக்கு வழிவகுத்துள்ளது.


கல்வி நிறுவனங்களில் இருக்க வேண்டிய அடிப்படை வசதிகள் மற்றும் ஆசிரியர்களின் தகுதி பற்றி கல்வி உரிமை சட்டம் விதிக்கும் கட்டுப்பாடுகள் எவ்விதம் ஆர்ட்டிகிள் 30(1) அளிக்கும் அடிப்படை உரிமைகளைப் பாதிக்கும் என்பது கேள்விக்குறி.



அவ்வகை கேள்விக்குறிகள் உச்ச நீதிமன்றத்தின் முன் விரைவில் தோன்றும்; மீண்டும் உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பினை மறுபரிசீலனை செய்யலாம்.

Sunday, 16 October 2016

மாநில முதலமைச்சரின் தகுதிக்குறைவு...

r
நீங்கள் கூறுவதை வைத்துப் பார்த்தால், வேற்று நாட்டவர் அல்லது பதினெட்டு வயது கூட நிரம்பாத மைனர் அல்லது மனநிலை சரியில்லாதவர் ஒருவரை மாநில முதல்வராக பெரும்பான்மை கட்சியினர் தேர்ந்தெடுத்தால், ஆளுநர் அவரை முதல்வராக பதவிப் பிரமாணம் செய்து வைக்க வேண்டுமா?’

ஆளுஞருக்கு வேறு வழியில்லை. ஒருவர் முதல்வராக பதவி வகுக்க தகுதி உள்ளவரா என்பதை தீர்மானிக்கும் அதிகாரம் ஆளுநரிடம் இல்லை. சட்டசபையில் நம்பிக்கையில்லா தீர்மானம் நிறைவேற்றியே அப்படிப்பட்டவர்களை தகுதி நீக்கம் செய்ய இயலும்

மேற்கண்ட கேள்வியை கேட்டது உச்ச நீதிமன்றத்தின் ஐந்து நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு. பதில் கூறியது, இந்தியாவின் புகழ்பெற்ற வழக்குரைஞர்களில் ஒருவர்.

பதினைந்து ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த மிக முக்கியமான வழக்கு அது..

ஜெயலலிதா தலைமையிலான அதிமுக 2001ம் ஆண்டில் நடந்த சட்டமன்ற தேர்தலில் பெருவாரியான இடங்களில் வெற்றி பெற்றிருந்தது. ஆனால், ஜெயலலிதா அந்த தேர்தலில் போட்டியிட இயலவில்லை. இரு குற்ற வழக்குகளில் குற்றவாளி என்று அவருக்கு எதிராக தீர்ப்பு கூறப்பட்டிருந்ததால், அவரது வேட்பு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.

எனினும், அதிமுக சட்டமன்ற கட்சி அவரையே முதல்வராக தேர்ந்தெடுத்தது. முதலமைச்சராக தேர்ந்து எடுக்கப்படும் நாளில் எம் எல் ஏவாக இருக்க வேண்டிய அவசியமில்லை. தேர்ந்தெடுக்கப்பட்டு ஆறு மாத காலத்திற்குள் தேர்தலில் நின்று வெற்றி பெற்றால் போதுமானது.

ஆளுஞரும் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட ஜெயலலிதாவிற்குள்ள தகுதிக்குறைவை மனதில் கொள்ளாமலும் எவ்வித எதிர்ப்பையும் காட்டாமலும் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். தொடர்ந்து ஜெயலலிதாவிற்கு முதல்வராக பதவி வகிக்க தகுதி இல்லை என்று தாக்கல் செய்யப்பட்ட வழக்கு (writ of quo warranto) உச்ச நீதிமன்றத்தில் வாதிடப்பட்ட பொழுதுதான் மேற்கண்ட பதில் அளிக்கப்பட்டது.

அரசியல் அமைப்பு சட்டம் உட்பட எந்த சட்டத்திலும், முதலமைச்சருக்கான தகுதி/ தகுதியிழப்பு என்னவென்று கூறப்படவில்லை. மந்திரியாக இருப்பவர் ஆறு மாத காலம் தொடர்ந்து சட்டமன்ற உறுப்பினராக இல்லாத நிலையில் பதவியிழப்பார் என்றுதான் உள்ளது.

இதன் அடிப்படையில்தான், பதினெட்டு வயது நிரம்பாதவர் கூட முதல் மந்திரியாக பணியாற்ற இயலும் என்று ஜெயலலிதாவின் வழக்குரைஞரால் வாதிடப்பட்டது.

ஆனால் நீதிமன்றம் அந்த வாதத்தை நிராகரித்தது. நிகழப்போகும் அனைத்துபிரச்னைகளையும் எதிர்நோக்கி அரசியல் அமைப்பு சட்டம் உருவாக்கப்பட முடியாதுஎன்று கூறிய உச்ச நீதிமன்றம் ஆறு மாத காலத்திற்குள் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்றாலும் முதல்வராக பதவிப்பிரமாணம் செய்து வைக்கப்படும் அன்று சட்டமன்ற உறுப்பினராக பணியாற்றுவதற்கு தேவையான தகுதி இருக்க வேண்டும்/ தகுதியிழப்பு ஏதும் இருத்தல் கூடாது என்று அரசியலமைப்பு சட்ட பிரிவினை புரிந்து கொள்ள வேண்டும்என்று தீர்ப்பளித்தது.

இந்த தீர்ப்பின் காரணமாகத்தான் ஜெயலலிதா பதவி விலகி .பன்னீர் செல்வம் முதன்முறையாக தமிழக முதல்வராக பதவி ஏற்றார்..

ஒருவேளை மாநில முதல்வர் அல்லது நாட்டின் பிரதமர் மற்றவர்களுடன் பேச்சு, எழுத்து அல்லது செய்கை மூலமாக கருத்துப் பரிமாற்றம் செய்யும் நிலையில் இல்லை என்றால் அதன் காரணமாக அவர் பதவி வகிக்க தகுதியில்லாதவர் என்று கூறப்பட முடியுமா?

சட்டமன்ற உறுப்பினராக இருப்பதற்கான தகுதியிழப்புகள் (Disqualifications) என்னவென்று அரசியல் அமைப்பு சட்டம் கூறுகிறது. அவற்றில் ஒன்று அவர் சிறந்த மனநிலையில் இல்லாமல் (unsound mind) மற்றும் அவ்வாறாக நீதிமன்றத்தால் விளம்புகை செய்யப்படுவது என்று உள்ளது.

பொதுவாகசிறந்த மனநிலையில் இல்லை என்று நீதிமன்றத்தால் விளம்புகை செய்யப்படுவதுஎன்பது இந்திய லூனசி சட்டத்தில் உயர்நீதிமன்றத்தாலோ அல்லது மாவட்ட நீதிமன்றத்தாலோ அறிவிக்கப்படுவதைத்தான் குறிக்கும். ஆனால், அதற்கு சில வழிமுறைகள் உள்ளன.

அரசியல் அமைப்பு சட்டத்தில் கூறப்படும்அன் சவுண்ட் மைண்ட்என்பது மனநிலை பிறழ்ந்த நிலையை மட்டுமல்லாமல் மற்றவர்களோடு எவ்வகையிலாவது கருத்துப் பரிமாற்றம் செய்ய இயலாத நிலையையும் உள்ளடக்கியதாகும் என்று நீதிமன்றங்கள் கூறுவதற்கும் வாய்ப்பு உள்ளது.

எனவே, அவசரமான சூழலில் கருத்துப்பரிமாற்ற திறமையை இழந்தவரின் தகுதியிழப்பை ஆராயும் நீதிமன்றமே அவ்வாறு விளம்புகை செய்து அவர் பதவி வகுக்க தகுதி உள்ளவரா இல்லையா என்று நீதிப்பேராணை மனுவில் தீர்மானிக்க முடியுமா?

அவ்வாறான நிலையில், மாநில ஆளுநரே தலையிட்டு நடவடிக்கை எடுப்பதும் சாத்தியம்தான்


"The Constitution prevails over the will of the people as expressed through the majority party. The will of the people as expressed through the majority party prevails only if it is in accord with the Constitution. The Governor is a functionary under the Constitution and is sworn to preserve, protect and defend the Constitution and the laws. The Governor cannot, in the exercise of his discretion or otherwise, do anything that is contrary to the Constitution and the laws"
பி.ஆர்.கபூர் எதிர் தமிழக அரசு வழக்கில் உச்ச நீதிமன்றம்

PROOF OF WILLS ADMITTED BY TESTATOR

INTRODUCTION I have had the privilege to hear the lecture of Mr.Nagamuthu, Senior Advocate on ‘Execution and Proof of Will’....