Showing posts with label HIndi Film. Show all posts
Showing posts with label HIndi Film. Show all posts

Tuesday, 13 December 2016

பிங்க் (2016) இந்தி

ஆமாம், நாங்கள் பணம் வாங்கினோம். அதனால் என்ன? பணம் கொடுத்து விட்டதாலேயே சட்டப்படி….சட்டப்படி……. சொல்லுங்கள் அவர்களுக்கு எங்களை பலாத்காரம் செய்யும் உரிமை வந்து விடுமா?”

தொடர்ந்த குறுக்கு விசாரணையின் அழுத்தத்தால் ஒரு கட்டத்தில் உடைந்து போய் ஃபாலக் அலி (கீர்த்தி குல்காரி) கதறும் அந்தக் காட்சியில்தான் இந்த ஆண்டில் வெகுவாக பாராட்டப்படும்பிங்க்மற்ற திரைப்படங்களில் இருந்து வித்தியாசப்படுகிறது.

ஆனால் படம் பார்த்த பலர்ஃபாலக் அலி ஏற்றுக் கொண்டது போல உண்மையிலேயே தோழிகள் பணம் வாங்கினார்களா?’ என்ற சந்தேகத்தை இணைய விவாதங்களில் வெளிப்படுத்திக் கொண்டிருப்பதில் படத்தின் இயக்குஞரும், கதாசிரியர்களுமான அனிருத்த ராய் செளத்திரி, சூஜித் சிர்கார் ஆகிய இருவரும் படத்தில் தாங்கள் சொல்ல நினைத்த கருத்தை கடத்துவதில் சிலரிடம் தோல்வியடைகிறார்கள்.

ஆம். இதுவரை நாம் வகுத்து வைத்திருக்கும் ஒழுக்கக் கோட்பாடுகளை ஒரேடியாக மீறி அடுத்த கட்டத்திற்கு நம்மை தயார்ப்படுத்துவது என்பது அவ்வளவு சுலபமல்லதான்.

அந்த அச்சத்தில்தான், இங்கு இருப்பதிலேயே தாராள எண்ணம் கொண்டவராக அறியப்படும் கமல்ஹாசன் கூட தனது பாபநாசம் படத்தில் மிகவும் பாதுகாப்பாக பயணித்து, பெண் பிள்ளைகளுக்கு எதைச் சொல்ல வேண்டியிருக்கிறதோ அதைச் சொல்லியிருக்கக் கூடிய அருமையான வாய்ப்பினை நழுவ விட்டிருப்பார்

கமல்ஹாசனை சொல்லிக் குற்றமில்லை. ‘உங்கள் புகைப்படத்தினை யாராவது தவறாக பயன்படுத்தினால், யாரும் செய்யததையா நான் செய்து விட்டேன் என்ற தைரியம் கொண்டு எங்களிடம் வந்து புகார் செய்யுங்கள்என்ற விழிப்புணர்வை பெண்களுக்கு ஊட்ட வேண்டிய நமது சசைபர் க்ரைம் காவல் அதிகாரிகள் கூடபெண்கள் தங்களது படங்களை இணையத்தில் பொதுவில் வெளியிடாதீர்கள்என்று எச்சரித்துக் கொண்டிருக்கிறார்கள்.

விட்டால்ஸ்மார்ட் ஃபோன்கள் அதிகரித்து விட்டதால் பெண்கள் பர்தா அணிந்து வெளியே வருவதுதான் நல்லதுஎன்றும் சொல்வார்கள் போல.

ஆனால் பாபநாசம் சுயம்புலிங்கத்தின் மகளைப் போல எல்லா பிள்ளைகளும் தவறு ஏதும் செய்யாமலேயே இக்கட்டில் மாட்டிக் கொள்பவர்கள் இல்லை. விளையாட்டுத்தனமான தைரியத்தில் தாங்களும் இசைந்து செய்த செயல்களினால் பிரச்னைகளில் சிக்கிக் கொள்ளும் மகள்களுக்குத்தான் பெற்றோரின், சமூகத்தின் அரவணைப்பும், புரிதலும், தைரியமும் தேவைப்படுகிறது.


பிங்க்அந்தப் புரிதலை கூர்மையான அதன் வசனங்கள் மூலம் தருகிறது.


தில்லி அபார்ட்மெண்ட் ஒன்றில் வசிக்கும் மூன்று தோழிகள். இரவு கேளிக்கைக்கு சென்ற இடத்தில் பழகிய ஆண்களோடு இரவு உணவிற்காக தனி விடுதிக்கும் (Resort)  செல்கிறார்கள். தோழிகளின் தாராள குணத்தால் உந்தப்படும் ஆண்கள் அவர்களை பலாத்காரம் செய்ய முயல அவர்களில் ஒருவரான மினால் அரோரா (தப்ஸீ) ரஜ்வீர் சிங்கை பாட்டிலால் தலையில் அடித்து விட்டு அங்கிருந்து தப்பிக்கிறார்கள்.

சமாதான முயற்சிகள் தோல்வியடைய அரசியல்வாதியின் மகனான ரஜ்வீர் சிங் செல்வாக்கால் மினால் மீது கொலை முயற்சி வழக்கு தாக்கல் செய்யப்படுகிறது.

மிகச்சிறப்பாக கட்டமைக்கப்பட்ட திரைக்கதையில்தாங்களே இசைந்துதான் தோழிகள் ரஜ்வீர் சிங்குடன் சென்றார்கள் என்ற ரீதியில் நடத்தப்படும் நீதிமன்றத்தில் நடத்தப்படும் குறுக்கு விசாரணையின் வெப்பத்தை தாங்க முடியாத ஃபாலக், ‘ஆமாம் காசு வாங்கினோம்என்று  அது உண்மையோ பொய்யோ ஏற்றுக் கொள்கிறார்.

ஆனாலும் அவர்களது வழக்குரைஞரான தீபக் ஷெகால் (அமிதாப் பச்சன்)ஒரு பெண் இல்லை என்று சொன்னால் இல்லைதான். ஒரு ஆண் அந்த இடத்தில் நிறுத்தி விட வேண்டும்என்று வாதிட்டு வழக்கை வெல்வதுதான் கதை.

தில்லி நிர்பயா வழக்கில்அந்த இரவில் அந்தப் பெண்ணுக்கு வெளியே என்ன வேலைஎன்று கேட்பவர்களுக்கு பதில்தான்பிங்க்படத்தின்நோ மீன்ஸ் நோ


இதற்கேஅது எப்படி அவ்வளவு தூரம் விடுதி வரை போய் விட்டு பலாத்காரம் என்றால்என்று பொங்குபவர்கள் ஜூடி போஸ்டர் நடித்து 1998ல் வெளி வந்ததி அக்கியூஸ்ட்படத்தைப் பார்த்தால் என்ன சொல்வார்களோ?

Wednesday, 20 January 2016

ஷாகித் (ஹிந்தி) 2012

கடந்த வார சாலைப்பயணத்தில் ஏற்ப்பட்ட கோபத்தில், ‘ஏதாவது இயக்கம் ஆரம்பிக்க வேண்டும். நெடுஞ்சாலைத் துறையோ மாநகராட்சியோ அனைத்து சாலை ஒப்பந்தங்களைப் பற்றிய முழு விபரமும் இணையத்தில் வெளியிட வேண்டும் என்று பொதுநல வழக்கு தாக்கல் செய்ய வேண்டும்’ என்று நினைத்தேன். அப்படி வெளியிட்டால், எங்கெல்லாம் சாலைகள் தரமில்லாமல் உடைகிறதோ, அங்கெங்ல்லாம் ஒப்பந்தக்காரர் மீது நடவடிக்கை எடுக்கச் சொல்லி சம்பந்தப்பட்ட துறையை வலியுறுத்த கோர்ட்டுக்கு செல்ல முடியும் என்ற யோசனை எனக்கே நன்றாக இருந்தது.

திடீரென ஒரு பயம்!

‘பாதிக்கப்படும் காண்டிராக்டர் கடுப்பில் ஆளை வைத்து போட்டுத் தள்ளிவிட்டால்?’ உடனடியாக இயக்க வேலைகளை நிறுத்தி விட்டு அடுத்த நாள் கேசுக்கு படிக்க ஆரம்பித்து விட்டேன்.

ஆனால், ஷாகித் ஆஸ்மி பயப்படவில்லை. இத்தனைக்கும், அவனது அச்சம் உண்மையானது. ஆபத்து நெருங்கிக் கொண்டேயிருந்ததையும் அவன் அறிந்துதானிருந்தான்.  அதானால்தான் அவனது பாதுகாப்பைப் பற்றி கவலைப்பட்ட அவனது அண்ணனிடம் கூட ‘ அதனால் என்ன, ஒரு ஷாகீத் (தியாகி) ஆக மரித்துவிட்டுப் போகிறேன்’ என்று சமாதானம் கூறினான்.

ஷாகீத்’ பாதுகாப்பு தேடி காவல்துறையிடமும் செல்ல விரும்பவில்லை; அதில் பலனில்லை என்பதால். இறுதியில் அவனது அலுவலகத்திலேயே வைத்து சுடப்பட்டு இறந்து போன போது ஷாகித் வயது வெறும் 32.

அதற்குள் அவனுக்கும்தான் என்ன மாதிரியான வாழ்க்கை அனுபவங்கள்?

மும்பை கலவரத்தில் 14 வயது சிறுவனாக கைது செய்யப்பட்ட ஷாகித், தான் கண்ட கோரக் காட்சிகளால் சென்று சேர்ந்த இடம் காஷ்மீர் தீவிரவாதிகளின் முகாம். அங்கே இன்னமும் கொடூரத்தை கண்ட வெறுப்பில் மும்பை திரும்பி வந்த ஷாகித் பொய் வழக்கில் கைது செய்யப்பட்டு ஏழு வருட சிறை வாழ்க்கைக்குப் பின்னர் நிரபராதி என்று விடுதலை. சிறை வாழ்க்கை அவனை மாற்றியிருந்தது. கல்வி ஒன்றே தான் உயர வழி என்று அறிந்த ஷாகித் சிறையில் பட்டப்படிப்பை முடித்து, விடுதலையானதும் தொடர்ந்தது படித்தது சட்டம்.

பட்டம் வாங்கி வழக்குரைஞராகப் பணியாற்றியது ஏழே ஆண்டுகள்தாம். பணத்தை தேடி ஓடவில்லை. மாறாக, பொடா சட்டத்தில் கைது செய்யப்பட்டவர்களுக்காக, இஸ்லாமிய தொண்டு நிறுவனம் மூலம் பெரும்பாலும் இலவசமாகவே வழக்கு நடத்தியதில் மும்பையை குலுக்கிய வெவ்வேறு வழக்குகளில் 17 அப்பாவிகள் நிரபராதிகள் என்று விடுவிக்கப்பட்டிருக்கிறார்கள். 2008 மும்பை தாக்குதலில் கைது செய்யப்பட்டு ஷாகித் இறந்து மூன்று மாதங்களுக்குப் பிறகு விடுதலை செய்யபப்ட்ட ஃபாஹிம் அன்சாரி உட்பட.


‘Shahid is the only lawyer who had the maximum cases showing that the police were fabricating evidence’ என்று சீனியர் வழக்குரைஞர் பிரசாந்த் பூஷன் கூறியது கொஞ்சமும் மிகையல்ல. ஏனெனில், குண்டு வெடிப்பு போன்ற பயங்கரவாத செயல்களில் கைது செய்யப்படுபவர் நிரபராதி என்று நீதிபதிகள் தெளிவாக நம்பினாலும், அவருக்கு விடுதலை என்பது எவ்வளவு கடினம் என்பதை இம்மாதிரியான வழக்குகளோடு சம்பந்தப்பட்டவர்கள் அறிவார்கள். எனவே 17 விடுதலை என்பது, பெரிய சாதனைதான்.

‘காங்க்ஸ் ஆஃப் வாஸேபூர்’ இயக்குஞர் அனுராக் கஷ்யப், நமக்குத் தெரிந்தவர்தாம். மும்பை குண்டு வெடிப்பைப் பற்றி அறிந்து கொள்ள வேண்டுமென்றால் இவரது ‘ப்ளாக் ஃப்ரைடே’ படத்தைப் பார்த்தால் போதும். உண்மைச் சம்பவத்தை அவ்வளவு விறுவிறுப்பாக ஹாலிவுட்டில்தாம் இயக்குவார்கள். அந்தப் படம் வெளிவருவதில் பிரச்னை வந்த பொழுது, அதற்காக வழக்கு நடத்தியது ஷாகித். அனுராக் கஷ்யப் நினைத்திருக்க மாட்டார், ஷாகித் வாழ்க்கையையும் அவர் படமாக்கும் காலம் வரப் போகிறது என்று.

தயாரிப்பாளர்தான் அனுராக் கஷ்யப். இயக்குஞர் ஹன்சாய் மேத்தா.

பல்வேறு விருதுகளை அள்ளிக் குவித்த படத்தைப் பற்றி வழக்குரைஞர் என்று சொல்லிக் கொள்ளும் நான் இரு வருடங்களாக அறியாமல் இருந்தது சற்று வெட்கமாக இருக்கிறது.

நிஜ மனிதர்கள் திரைப்படமாகும் பொழுது, நடிகர்கள் அழகாக இருப்பார்கள். விதிவிலக்கு தி ஃப்யூட்டிபுல் மைண்ட் கதாநாயகன் ரஸ்ஸல் க்ரோவை விட ஜான் நாஷ் அழகாக இருப்பார். ஷாகித் ஆஸ்மியும்தான்.

ஏழே வருடங்கள்! முப்பத்தி இரண்டே வயது! ஒரு வழக்குரைஞராக சாதிப்பதற்கு போதும் என்கிறான் என்னை விட 12 வருடம் இளையவனாகிய ஷாகித் ஆஸ்மி!

PROOF OF WILLS ADMITTED BY TESTATOR

INTRODUCTION I have had the privilege to hear the lecture of Mr.Nagamuthu, Senior Advocate on ‘Execution and Proof of Will’....