Showing posts with label Pedestrian. Show all posts
Showing posts with label Pedestrian. Show all posts
Monday, 1 February 2016
பாதசாரி
தனிப்பட்ட வழக்கு ஒன்றிற்காக நேற்று செங்கல்பட்டு நீதிமன்றம் செல்ல வேண்டியிருந்தது. விடிகாலை சென்றதால் தங்க நேரிட்ட விடுதியிலிருந்து நீதிமன்றம் எவ்வளவு தூரம் இருக்கும் என்று கேட்டேன். இரண்டு கிலோ மீட்டருக்குள் என்றார்கள். வெயில் இல்லை. பருவநிலையும் இதமாக இருக்கவே, ‘ஊரையும் பார்த்த மாதிரி இருக்கும்’ என்று நடந்தே போனேன். முதலில் எந்த ஊரையும் போலவே தூசியாக இருந்தாலும் பின்னர் நீதிமன்றம் இருந்த சாலை ரம்மியமாகவே இருந்ததில் நடந்ததில் மெத்த திருப்தி.
ஆனால் மாலையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டியிருந்த சமரச பேச்சுக்கு விரும்பியிருந்தாலும் நான் நடந்திருக்க முடியாது. கடற்கரை சாலையில் ராணி மேரி கல்லூரியிலிருந்து என்று நினைக்கிறேன், சென்னை பல்கலைக்கழகம் வரை முதலமைச்சரின் உருவம் தாங்கிய கட்-அவுட்களும் அலங்கார தட்டுகளும் எவ்வித தயக்கமோ அச்சமோ இன்றி நடைபாதையின் குறுக்காக, முழுக்கவும் மறைத்து வைக்கப்பட்டிருந்தது.
நடைபாதையை பயன்படுத்த வேண்டிய அனைவரும் பிரதான சாலையோரமாக சென்று கொண்டிருந்தார்கள்.
சாலை வசதி என்பது முதலில் நடப்பவர்களுக்கு, பின்னர் மிதிவண்டி அதற்கும் மிஞ்சியதுதான் மோட்டார் வண்டிகளுக்கு என்பதை நாம் உணர்வதே இல்லை.
வேண்டுமானால் கட்-அவுட்களை இனி பிரதான சாலையில் வைக்கட்டும். நடைபாதையில் வைத்து, ஏற்கனவே அபாயகரமான முறையில் நடந்து செல்பவர்களை மேலும் அபாயத்தில் தள்ளுவது எப்படி நியாயமாக இருக்க முடியும்?
இந்த கட்-அவுட்களுக்கு முறையாக விண்ணப்பித்து கட்டணமும் செலுத்தப்பட்டுள்ளது என்று சென்னை மாநகராட்சி உயர்நீதிமன்றத்தில் வாதிடலாம். அவர்களைப் பார்த்து உயர்நீதிமன்றம் கேட்க வேண்டிய கேள்வி, ‘அவ்வாறாக கட்-அவுட் வைக்க வழங்கப்படும் உரிமம் பாதசாரிகளின் ‘வாழ்வதற்கான உரிமை’ என்ற அடிப்படை உரிமையை பாதித்தால் இரண்டில் ‘எந்த உரிமையை நாம் விட்டுக் கொடுப்பது?’ என்பதுதான்.
Subscribe to:
Posts (Atom)
PROOF OF WILLS ADMITTED BY TESTATOR
INTRODUCTION I have had the privilege to hear the lecture of Mr.Nagamuthu, Senior Advocate on ‘Execution and Proof of Will’....
-
நடந்து முடிந்த தேர்தலுக்கு முன்னதாக, அரசியல் கட்சிகள் தங்களது தேர்தல் அறிக்கைகளை வெளியிட்ட நேரம் . வழக்குரைஞர் ஒருவர் என்னை அணுகி ‘தே...
-
நண்பரின் மகளுக்கு ஞாயிறு அன்று திருமணம். “என்னடா, ஐயரை வச்சு கல்யாணம் பண்ணுறீங்க” கோவில் மண்டபத்தில் கல்யாணம் முடித்து வைத்த திரு...
-
‘அதனால்தான் என் கண்கள் சற்று சொருகியுள்ளது. மற்றபடி எனக்குப் பிரச்னையில்லை. ஆகவே, கடவுளுக்குப் படைக்கும் எதையும் எப்படி நான் எனக்குள் எடுத...

