இந்திய உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக மட்டுமே 7 ஆண்டுகள் பணியாற்றியவர் Y.V.சந்திரசூட். மும்பை உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்படுவதற்கு முன்னர் சுமார் 18 ஆண்டுகள் வழக்குரைஞராக பயிற்சி பெற வேண்டியிருந்தது. அதிக காலம் பணியாற்றிய மற்றொருவரான K.G.பாலகிருட்டிணன் வழக்குரைஞராக பணியாற்றத் தொடங்கியது 1968. கேரள உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டது 1985. அதாவது இவரும் அதே அளவு வருடங்கள் நீதிபதியாக நியமிக்கப்படுவதற்கு காத்திருக்க வேண்டியிருந்தது.
தமிழகத்தில் உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்படுவதற்கே 45 வயது நிரம்ப வேண்டும் என்ற எழுதப்படாத விதி உள்ளது. குறைந்தபட்சம் 20 வருட அனுபவம் வேண்டும்.
சில வருடங்களுக்கு முன்னர், தில்லி உயர்நீதிமன்றத்திலிருந்து வெறும் 10 வருடம் 4 மாத அனுபவம் மட்டுமே நிரம்பிய வழக்குரைஞர் ஒருவரை உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமிக்க பரிந்துரைக்கப்பட்டு, பின்னர் உச்ச நீதிமன்றமும் அதனை ஏற்றுக் கொண்டது. தொடர்ந்து பிரதம மந்திரியின் ஒப்புதலையும் கடந்து இறுதியில் அந்த வழக்குரைஞரின் பெயர் ஒப்புதலுக்காக குடியரசுத் தலைவரிடம் சென்றது.
குடியரசுத் தலைவருக்கு ஆச்சரியம்!
நமது அரசியலமைப்புச் சட்டம் உயர்நீதிமன்ற நீதிபதிக்கு தகுதி 10 வருட அனுபவம் என்று கூறினாலும், அந்த குறைந்த பட்ச அனுபவத்திலேயே நீதிபதியாக பரிந்துரைக்கப்படும் அளவிற்கு அவ்வளவு திறமை வாய்ந்தவரா, இவர் என்று.
வழக்குரைஞரின் திறமைக்கு அறுதியான அளவு கோல் கிடையாது. ஆயினும் வழக்குரைஞர்களின் வருமானம் ஒரு அளவு கோல். எனவே, உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்படுபவரின் வருமான வரி கணக்கு ஒரு ஆதாரமாக சமர்ப்பிக்கப்படும். இந்த வழக்குரைஞரின் வருமான வரி கணக்கை ஆராய்ந்த குடியரசுத் தலைவருக்கு மேலும் அதிர்ச்சி. அந்த காலகட்டமான 1989-90 ஆண்டில் அந்த வழக்குரைஞரின் மாத வருமானம் ரூ.2000க்கும் கீழ்!
குடியரசுத் தலைவர் அந்த பரிந்துரையை மறுபரிசீலனை செய்யும்படி பிரதமருக்கே அனுப்பினார். அந்த வழக்குரைஞர் பின் எப்போதும் நீதிபதியாக தேர்ந்தெடுக்கப்படவில்லை.
அந்த குடியரசுத் தலைவர் மறைந்த R.வெங்கட்ராமன்.
வழக்குரைஞரின் பெயர் ரொக்சனா. அதே காலகட்டத்தில் இந்தியாவின் சட்ட அமைச்சராக பணியாற்றிய டாக்டர்.சுப்பிரமணிய சுவாமி அவர்களின் மனைவி.
(From 'My Presidential Years' by R.Venkatraman)
“I would’ve made a dreadful judge, and am glad I didn’t succeed” Roxana at her magnanimous best in an interview to OUTLOOK.
Subscribe to:
Post Comments (Atom)
PROOF OF WILLS ADMITTED BY TESTATOR
INTRODUCTION I have had the privilege to hear the lecture of Mr.Nagamuthu, Senior Advocate on ‘Execution and Proof of Will’....

-
நண்பரின் மகளுக்கு ஞாயிறு அன்று திருமணம். “என்னடா, ஐயரை வச்சு கல்யாணம் பண்ணுறீங்க” கோவில் மண்டபத்தில் கல்யாணம் முடித்து வைத்த திரு...
-
Luden was a fisherman. The Government has enrolled Luden under a Group Insurance Scheme through National Federation of Fishermen Co-ope...
-
‘இறந்து போகும் ஒவ்வொரு உறவினரும் நான் வாழ்வதற்கான காரணங்களில் சிலவற்றை எடுத்துக் கொண்டே போகிறார்கள்’ சமீபத்தில் இறந்து போன சித்தப்பாவைப்...
No comments:
Post a Comment