Tuesday, 31 March 2015

தமிழுக்கு எண் 1ஐ அழுத்தவும்

அவ்வப்பொழுது தமிழ் படங்களைப் பற்றி எழுதிக் கொண்டிருந்தாலும், தமிழ்ப்படங்களே பார்ப்பதில்லையா என்று கேட்கிறார்கள்.

பல வருடங்களுக்கு முன்னர், எழுத்தாளர் சுஜாதா குரோம்பேட்டையிலுள்ள எம் ஐ டியில் நடைபெற்ற கருத்தரங்கு ஒன்றில் கலந்து கொள்ள வந்திருந்தார். அவர் தொழில்நுட்பம் படித்தது அங்குதான். மதிய உணவுக்குப் பின்னர் மாணவர்கள் அவருடன் அளவளாவிக் கொண்டிருந்தனர். ‘மாணவர்களுக்கு அவரது அறிவுரை என்ன’ என்று ஒரு மாணவர் கேட்க, ‘இந்தப் பாரதிராஜா, பாக்கியராஜான்னு சினிமா பாத்துக்கிட்டு இருக்காம ஒழுங்கா படிங்க. அது போதும்’ என்றாராம்.

அதுமாதிரி இந்தக் கமல்ஹாசன், ரஜினிகாந்த், சூர்யா, விஜய் எல்லாம் கொஞ்சம் ஒதுங்கிக் கொண்டு இப்போ புதுசு புதுசா இளைஞர்கள் தூள் கிளப்பிக் கொண்டிருக்கிறார்களே அவர்களுக்கு வழி விட்டால் நானும் தொடர்ந்து தமிழ் சினிமா பார்க்கத் தயார்.

போன வாரம் தற்செயலாக பார்க்க நேர்ந்த ‘தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும்’ என்ற படத்தைக் குறிப்பிட்டாக வேண்டும். இடையே எவ்வித தொய்வும் இன்றி முக்கியமாக பாடலின் குறுக்கீடு இல்லாமல் இறுதி வரை வேகமாக நகர்ந்த திரைக்கதை. டாக்ஸி ஓட்டுநராக நடித்தவரின் இயல்பான நடிப்பு. ஏன், அந்த நகுல்? டிவியில் அவரைப் பார்க்கும் பொழுதெல்லாம், ‘சுண்டெலி மாதிரி இருக்கிறான், இவன் எல்லாம் நடிக்க வந்திருக்கான்’ என்று நினைத்திருக்கிறேன். இந்தப் படத்தில் அவரை மிகவும் பிடித்து விட்டது. அவரைக் காதலிக்கும் கல்லூரிப் பெண் உட்பட சினிமாத்தனம் இல்லாத இயல்பான முகங்கள். பார்ப்பவர்களை கஷ்டப்படுத்தாத மிகையில்லாத நடிப்பு. இம்மாதிரியான படங்கள் வெற்றி பெற்றால் தமிழ்ப்படம் உருப்படலாம்.

படத்தில் வரும் கல்லூரி முதல்வரைப் பார்த்தவுடன், தனது பொறியியற் கல்லூரி மாணவர்களுடனும், அவர்களது புதிய புதிய ‘கண்டுபிடிப்பு’களுடனும் அடிக்கடி பத்திரிக்கைகளில் பெருமை பொங்க போஸ் கொடுக்கும் தென்மாவட்ட பல்கலைக்கழக தாளாளர் ஒருவர்தாம் நினைவுக்கு வந்தார்...

ரயிலின் கூரையில் விசிறியை பொருத்தி, ரயில் ஓடும் பொழுது சுற்றும் விசிறியிலிருந்து மின்சாரம் தயாரித்து ரயில் விளக்குகளை எரியச் செய்யலாம் என்ற ‘அதி’புத்திசாலித்தனமான கண்டுபிடிப்புகளை எல்லாம் நமது மாணவர்கள் பத்திரிக்கைகளில் நிகழ்த்துகிறார்கள். நோபல் பரிசு கொடுக்கத்தான் ஆளில்லை!

மதுரை
19/03/15

Sunday, 29 March 2015

THE CHICKENS WILL COME HOME TO ROOST

The judgement of the Supreme Court in Shreya Singhal is lauded, quite rightly for its scholarly attempt in striking down a penal legislation and the English press is more vociferous in its excitement. However two of the grounds on which the constitutionality of Section 66A is mainly tested viz., its vagueness and chilling effect may embarrass the Supreme Court when it sits to hear a Criminal Appeal pending on its file in Criminal Appeal No. 1234 of 2007.

It was in 2007, Mid Day ran certain investigative stories on the retired Chief Justice Y.K.Sabharwal, suggesting that he allowed his sons to benefit from the series of orders he passed, presiding the Court as Chief Justice to seal thousands of shops, houses and commercial complexes that cropped up all over Delhi in violation of Master Plan. The allegation was that such steamrolling of all commercial establishments into dust raised the demand for spaces in the Malls, where his sons had stakes.

Mid Day made known its intentions more succinctly by publishing a cartoon, depicting Chief Justice Y.K.Sabharwal in his robes holding a bag with currency flowing out and a man in the sidewalk crying ‘Help! the mall is in your court’

It was the cartoon more than the articles, which made the Delhi High Court to go livid with anger when Senior Advocate R.K.Anand brought them to its notice, which promptly initiated Contempt proceedings against the Cartoonist Irfan Khan besides the Editor, Printer and the Publisher trio. In the words of the Delhi High Court, the cartoon and the articles were aimed at lowering the image of judiciary. As expected Bhushan Sr. and Junior, stepped in aid of the contemnors.

In a strange irony of facts, R.K.Anand who made the Court to initiate contempt proceedings against Mid Day within few days found himself caught on tape in a sting operation, bribing a witness in the infamous BMW hit and run case and was proceeded against for contempt and punished within an year.

In Mid Day case, Bhushans defended the contemnors, submitting that Justice Y.K.Sabharwal was already retired no longer holding Court; and the element of truth. The Delhi High Court was not impressed and in a brief order sentenced the contemnors to imprisonment for four months. The Delhi High Court held that in the garb of attacking a retired Justice, the contemnors scandalised the Institution. The press all over India instantaneously rose up in protest against the sentence.

The Supreme Court brought in a temporary truce in suspending the sentence and it will be exciting to any student of law, if the Supreme Court takes up these appeal and hear it in the light of its observations in Shreya Singhal case on the ‘manageable standard' by which a person can be said to have committed an offence or not have committed an offence’

It is interesting to note whether the terms ‘scandalising the institution’ and ‘lowering the image of judiciary’ will be examined in the new findings of the Supreme Court that ‘ordinary people should be able to understand what conduct is prohibited and what is permitted. Also, those who administer the law must know what offence has been committed so that arbitrary and discriminatory enforcement of the law does not take place

The Mid Day Cartoon and the Articles were there before the nation and the entire press, barring few exceptions thought that the contemnors did not cross the ‘Laxman rekha’ to be hauled up for contempt; Will it be safe, in such a scenario to leave it to the wisdom of two learned Judges to say the collective wisdom of thousands of Cartoonists, Correspondents and Intelligentsia who rose in support of the contemnors as wrong?

I can’t wait, the day when the chickens will come home to roost!

Madurai
29/03/15

Saturday, 28 March 2015

இண்டர்ஸ்டெல்லாரில் பாகவத புராணம்!

ரேவதியின் தந்தைக்கு குழப்பம். அவரது தகுதிக்கும், ரேவதியின் அழகுக்கும் உரிய கணவனாக யாரைத் தேர்ந்தெடுப்பது என்பதில். பேசாமல் பிரம்மாவிடமே கேட்டு விடுவோம் என்று மகளை அழைத்துக் கொண்டு பிரம்மலோகம் சென்றார். அவர்கள் சென்ற நேரம் அருமையான இசைக் கச்சேரி நடந்து கொண்டிருந்தது. இசை முடியும் வரை காத்திருந்தவர், பின்னர் பிரம்மா சந்தித்து, ரேவதியை மணமுடிக்க மனுச்செய்த மாப்பிள்ளைகளின் பட்டியலிலிருந்து ஒருவரை தேர்ந்தெடுக்கச் சொன்னார்.

பிரம்மன் பெரிதாகச் சிரித்தார், ‘பிரம்மலோக இசையில் மயங்கி நீ காத்திருந்த சிறிது நேரத்தில் பூமியில் பல யுகங்கள் கழிந்திருக்குமே. இந்தப் பட்டியலில் உள்ளவர்கள் அனைவருக்கும் ஏற்கனவே திருமணமாகி செத்துப் போய் அவர்களது சந்ததிகளும் பல தலைமுறைகளுக்கு வாழ்ந்து மறைந்திருப்பார்கள் என்றார்.

ரேவதியின் தந்தைக்கு கிலி பிடித்தது. பிரம்மா அவரைத் தேற்றி, ‘பூமியில் விஷ்ணுவின் அவதாரமான கிருஷ்ணாவும் அவரது சகோதரர் பலராமரும் இருப்பார்கள். அவர்களில் பலராமருக்கு இவளை மணமுடி’ என்று அனுப்பி வைத்தார்.

பூமிக்குத் திரும்பியவர்களுக்கு அடுத்த அதிர்ச்சி. அனைத்தும் மாறிப் போயிருந்தது. முக்கியமாக பரிணாம வளர்ச்சியில் மனிதர்கள் சிறிய அளவில் மாறியிருந்தார்கள். பலராமர் வேறு வழியில்லாமல் தன் கையில் இருந்த கதையால் ரேவதியின் தலையில் அடிக்க அவள் பலராமர் உயரத்துக்கு குறுகி பின் அவரை மணமுடித்தாள்….

நேற்றுப் பார்த்த இண்டர்ஸ்டெல்லார் படக்கதை பாகவத புராணத்திலிருந்து திருடியதா தழுவியதா என்று யாரும் வழக்குப் போடவில்லையா?

II பேதுரு 3:8
பிரியமானவர்களே, கர்த்தருக்கு ஒருநாள் ஆயிரம்வருஷம்போலவும், ஆயிரம்வருஷம் ஒருநாள்போலவும் இருக்கிறதென்கிற இந்த ஒரு காரியத்தை நீங்கள் அறியாதிருக்கவேண்டாம்

சங்கீதம் 90:4
உமது பார்வைக்கு ஆயிரம் வருஷம் நேற்றுக்கழிந்த நாள்போலவும் இராச்சாமம்போலவும் இருக்கிறது

குரான் 22:47
அல்லாஹ் தன் வாக்குறுதிக்கு மாறு செய்வதேயில்லை; மேலும் உம்முடைய இறைவனிடம் ஒரு நாள் என்பது, நீங்கள் கணக்கிடுகிற ஆயிரம் ஆண்டுகளைப் போலாகும்

உண்மையச் சொல்லுங்க ஐன்ஸ்டைன், உங்க ஜெனரல் தியரி ஆஃப் ரிலேடிவிட்டி’’யை கண்டுபிடிச்சது யார்?

என்ன ஐன்ஸ்டைன் செத்துப் போய் பல வருசமாச்சா, அதனாலென்ன, பிளாக் ஹோல் ஈவண்ட் ஹொரைசனுக்குள்ள வண்டிய உட்டா அவரைப் புடிச்சுறலாம்….

நான் எங்க இருக்கேன்?

Madurai
24/11/14

INTERSTELLAR

Apocalypse; the instincts of an ordinary man may work to stand guard to his family but a scientist thinks for the survival of the humankind. The conflict between hero Cooper and Professor Brand, elegantly played by Michael Caine in ‘Interstellar’ is no different. Christopher Nolan has seamlessly woven a beautiful screenplay on an uncompromising bond between a father and daughter in the backdrop of pure science; at least in cinematic terms.

In the early eighties it was writer Sujatha, kindled my interest in ‘black holes’ and ‘time dilation’ with his comic strip in a weekly, the name I don’t remember; a dear friend and mentor tried to explain but with half success, Einstein’s theory of relativity with the passion and perseverance, no Professor whom later I came across exhibited.

Interstellar, I am sure will help in rekindling the interest on inter galactic travel in many a hearts; any viewer at the close of curtains will return home wondering about ‘wormhole’, ‘black hole’, and the relation between time with speed and gravity. Fear not, it is otherwise and interesting film and science is spoken in laymen’s language, keeping the general audience in mind.

Till the end there is no nail biting moment, to pull one to the edge of the seat but still the film succeeds in keeping the audience riveted to their seats with its thought provoking dialogues, monotonous they may be.

Survival; is intrinsic in every living thing, with no exceptions. We do not know why but it is written in our genetic codes that we have to survive; without such core quality we would not have been evolved against the odds. Mother’s love, I mean all living creatures and the urge to copulate cannot be explained otherwise. Methinks, if humans start to procreate through ‘in vitro fertilisation’ procedures, future generations may evolve with less and less appetite for sexual pleasures!

The quote ‘Do not go gentle into that goodnight’ which Caine uses to urge others to fight for survival is from a very famous poem written by a Welsh poet Dylon Thomas seeing his father fighting death. This poem, it seems has been used in many films, including ‘Independence Day’ with a minor variation as ‘We will not go quietly into the night’. One must admit and admire the fighting spirit of Americans, particularly after seeing they closed ranks and regrouped after September’11 attack.

In Interstellar as the world is sinking in its own weight, scientists as usual from US of A driven by their urge to survive devising ways to colonise planets in other galaxies. Help comes from ‘they’ one may interpret as God, aliens or future generations in forming a traversable wormhole to sneak into a distant galaxy. Cooper, a former shuttle pilot has to captain the mission to collect data from those who had already been sent to other planets and the film revolves around his love towards his family, particularly his promise to his daughter that he would return conflicting with his duty to the humanity.


In the end, we are left bewildered by the awesomeness of science and its unlimited possibilities and pondering over questions about what we now come in conflict,

‘The Family’.

Madurai
25/11/14

Thursday, 26 March 2015

தி இமிடேஷன் கேம்



இன்று காலை, ‘ஐக்கிய நாடு சபையில் வேலை செய்யும் ஒரே பாலின தம்பதிகளுக்கும் மற்றவர்களுக்கு அளிக்கப்படும் பேறுகால சலுகை உட்பட அதே சலுகைகளை அளிப்பதை ரத்து செய்ய வேண்டும்’ என்று ரஷ்யா கொண்ர்ந்த தீர்மானம் தோற்க்கடிக்கப்பட்டது’ என்ற செய்தியை படித்த பின் மதியம் ‘இமிடேஷன் கேம்’ படம் பார்க்க நேரிட்டது தற்செயலானதா என்பது தெரியாது. ஆனால், படம் பார்த்த பாதிப்பில், ரஷ்யாவின் தீர்மானத்துக்கு பாகிஸ்தானோடு சேர்ந்து இந்தியாவும் ஆதரவாக ஓட்டளித்ததில், இந்திய வெளியுறவுத்துறை மீது நேற்றுப் பார்த்த ‘டைம்ஸ் நவ்’ செய்தி ஆசிரியர்களைப் போலவே கோபம் வந்தது.

ஒரே பாலின உறவு என்பது இந்தியாவில் குற்றமாக இருக்கையில், இந்தியா ரஷ்யாவுக்கு ஆதரவாக ஓட்டளித்ததில் வியப்பில்லை. மிகமிகச் சிலரைத் தவிர ஏறக்குறைய அனைவருமே இங்கு ஒரே பாலின உறவினை வெறுத்து ஒதுக்கும் சூழலில், ‘இமிடேஷன் கேம்’ போன்ற படங்கள் முக்கியத்துவம் பெறுகிறது.

ஆலன் டூரிங். செயற்கை அறிவின் (Artificial Intelligence) தந்தை. அதோடு கணணியின் முன்னோடி என்று புகழப்படும் கணித மேதை. 1952ம் வருடம் பிரிட்டிஷ் அரசால் ஓரினச் சேர்க்கைகாக குற்றம்சாட்டப்பட்டார். இரண்டு வருடம் சிறை அல்லது பாலுணர்வை மழுங்கடிக்கும் மருந்தை ஏற்றுக் கொள்ளல் என்ற முடிவு அவர் முன் வைக்கப்பட்டது (Chemical castration). ஆலன் இரண்டாவதை ஏற்றுக் கொண்டார். மருந்தின் வீரியம் அவரைக் கடுமையாகத் தாக்க இரண்டே ஆண்டுகளில் ஆலன் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. அப்போது அவருக்கு 42 வயது கூட ஆகவில்லை.

கொடூரமான சட்டம் மூலம் ஆலன் டூரிங்’கின் உயிரைப் பலி வாங்கிய பிரிட்டிஷ் மக்களுக்கு அப்போது தெரிந்திருக்கவில்லை, ‘இரண்டாம் உலகப் போரில் நேச நாடுகளின் வெற்றிக்கு ஆலன் முக்கியப் பங்காற்றி வடிவமைத்த கருவியும் ஒரு காரணம்’ என்பது. ஆலன் முக்கியப் பங்காற்றிய பிரிட்டிஷ் குழு ஜெர்மனியர்களின் சங்கேத மொழியான எனிக்மா’வை உடைத்து அவர்களது செய்திப் பறிமாற்றத்தை தொடர்ந்து கண்காணித்திருக்காவிட்டால் உலகப் போர் முடிவடைய மேலும் சில ஆண்டுகளாகி பல மில்லியன் மக்களைப் பலிவாங்கியிருக்கும் என தற்பொழுது கணிக்கப்படுகிறது.

கணணி அறிவியலின் முன்னோடியான ஆலன் டூரிங்’கிற்கு ஆதரவாக இணையம் முலம் உருவாக்கப்பட்ட கருத்தாக்கத்திற்கு பணிந்து இங்கிலாந்து அரசாங்கம் 2009ம் ஆண்டில் ஆலனுக்கு இழைக்கப்பட்ட கொடுமைக்கு பொது மன்னிப்பு கோரியது. 2013ம் ஆண்டில் அரசி ஆலனின் ‘குற்றத்தை’ மன்னிப்பளித்தார்.

2014ல் ஹாலிவுட் சற்று சினிமாத்தனத்துடன், டூரிங்’கின் கருவியை மையமாக வைத்து ‘இமிடேஷன் கேம்’ படத்தை தயாரித்து விருதுகளை அள்ளியுள்ளது. முக்கியமாக, ஆலன் டூரிங்’காக நடித்துள்ள ‘பெனிடிக்ட் கம்பர்பேட்ச்’ என்ற நடிகரின் நடிப்பைக் குறிப்பிட வேண்டும்……அப்புறம் வழக்கம் போல, வசனம்

"மனிதர்கள் ஒருவருக்கொருவர் பேசும் பொழுது, அவர்கள் எதைச் சொல்ல நினைக்கிறார்களோ அதைப் பேசுவதில்லை………………….அவர்கள் எதையோ சொல்லி அவர்கள் சொல்ல நினைப்பதைத்தான் சொல்வதாக மற்றவர் புரிந்து கொள்ள வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள்

இணைய விவாதங்களில் எப்போதும் நடப்பது அதுதானே!

மதுரை
26/03/15

Wednesday, 25 March 2015

மன்னர் மறைந்தார், வாழ்க மன்னர்!

ஷ்ரேயா சிங்கால் வழக்கில் தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் பிரிவு 66Aவை நீக்கம் செய்துள்ள உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பினை வரவேற்று நாளை பத்திரிக்கைகள் அனைத்திலும் தலையங்களை எதிர்பார்க்கலாம். ஆனால் ஏதோ 66A வந்ததிலிருந்து பறிபோன சுதந்திரத்தை மீட்டெடுத்து விட்டதாக புகுந்து விளையாட காத்திருக்கும் இணையவாசிகளை மீண்டும் எச்சரிக்க வேண்டியது அவசியம் என உணர்கிறேன். என் பதிவுகளை தொடர்ந்து படித்தவர்கள் ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் ‘சைபர் க்ரைம்’ என்று எழுதப்பட்டு பின்னர் சின்மயி-ராஜன் பிரச்னையின் பொழுது மீள்பதியப்பட்ட பதிவினைப் பற்றி அறிந்திருக்கலாம்.

மீண்டும் சொல்கிறேன். நமது நாட்டில் யாரும் ஏதாவது குற்றத்திற்காக நாம் நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டு விடுவோமோ என்று அஞ்சுவதில்லை. மாறாக ஏதாவது குற்றத்திற்காக காவலர்களாள் கைது செய்யப்பட்டு விடுவோமோ என்பதுதான் அச்சமே. ஓவியர் ஹுசைனோ அல்லது நடிகை குஷ்பு’வோ இந்தியாவின் எந்த நீதிமன்றத்தாலும் தண்டிக்கப்படவில்லை. ஆனால் அனைத்து நீதிமன்றங்களிலும் இழுக்கப்பட்டு ஹுசைன் இந்தியாவை விட்டே ஓடினார். குஷ்பு அரசியல் கட்சியில் தஞ்சமடைந்தார். 66A அதற்கு காரணமில்லை.

66Aவை எடுத்துக் கொண்டாலும், அது துஷ்பிரயோகம் செய்யப்பட்டதாக கூறப்பட்டுள்ள எந்தவொரு வழக்கிலும் யாரும் அதாவது பால் தாக்கரே பற்றி எழுதிய மும்பை சிறுமிகள் ஷாகீன் தாதா, ரினு ஸ்ரீனிவாசனிலிருந்து அசம் கானை விமர்சித்த உத்தரபிரதேச சிறுவன் வரை இதுவரை தண்டிக்கப்பட்டதில்லை. ஆனால் கைது செய்யப்பட்டார்கள். சிறையிலடைக்கப்பட்டார்கள். அவமானங்களை சந்தித்தார்கள்.

66A இல்லாவிட்டாலும், இதே செயலுக்காக துணிந்தால் சம்பந்தப்பட்ட ஏதாவது இந்திய தண்டனைச் சட்டப்பிரிவுகளில் காவலர்களால் கைது செய்ய முடியும். அது பிணையில் விடக்கூடிய வழக்காக இருப்பினும், காவல்நிலையம், குற்றவியல் நடுவர் நீதிமன்றம், பிணை, கையெழுத்து, வாய்தா என்று அதே அவமானங்கள். உயர்நீதிமன்றம் பின் அந்த முதல் தகவல் அறிக்கையினை நசுக்கினாலும் (quash) இந்தச் செயல் இந்த சட்டப்பிரிவுக்குள் எப்படி வரும் என்று எந்தக் காவலர் மீதும் நடவடிக்கை இருக்கப் போவதில்லை.

66A தனிப்பட்ட நபருக்கு எரிச்சலூட்டும் (annoyance) காரியத்தை செய்தாலே குற்றம்சாட்டும் வகையில் இயற்றப்பட்டுள்ளது. உதாரணமாக ‘மோடி ஆட்சிக்கு வந்தால் ஹோலோகாஸ்ட் நிகழும்’ என்று எழுதியதும் அல்லது மம்தா பானர்ஜியை கிண்டல் செய்து வரையப்பட்ட கார்ட்டூனையும் கூறலாம். இந்த ஒரு கூறுதான் 66Aவை அதே போன்றதொரு மற்ற இந்திய தண்டனைச் சட்ட பிரிவுகளிலிருந்து வேறுபடுத்துகிறது. 66A இல்லாதது இத்தகைய செயல்களை மட்டுமே பாதுகாக்கலாம்…..லாம்’தான்.

ஏனெனில் பாராளுமன்றத்தைப் பற்றி கார்ட்டூன் வரைந்த அசீம் த்ரிவேதி மீது 66Aவோடு தேசதுரோக (sedition) குற்றமும் சுமத்தப்பட்டது. அசம் கானைப் பற்றி எழுதப்பட்ட செயலிலும் 66A இல்லாவிட்டாலும், ‘அவர் கோபமுற்று தனது தொண்டர்களைத் தூண்டி விட்டு கலவரம் செய்ய வேண்டுமென்ற எண்ணத்தில் எழுதினார்’ என்று இந்திய தண்டனைச் சட்ட பிரிவு 504ல் வழக்கு பதிவு செய்து கைது செய்தால் நீதிமன்றங்கள் பிணை வழங்கலாம், முதல் தகவல் அறிக்கையை தள்ளுபடியும் செய்யலாம். ஆனால் அதற்குள் சம்பந்தப்பட்டவர் வேண்டிய கஷ்டத்தை அனுபவித்து விடுவார்.

எனவே,  நாளை செய்தியைப் படித்து விட்டு ‘ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோம்’ என்று சார்லி ஹெப்டோ கார்ட்டூன்களை தூசி தட்ட ஆரம்பித்து விடாதீர்கள்.


மதுரை
24/03/15

Tuesday, 24 March 2015

தி ப்ரின்ஸ் ஆஃப் ஈஜிப்ட்/ எக்ஸோடஸ் காட்ஸ் அண்ட் கிங்ஸ்

ஜியாஃப்ரே கட்டன்பெர்க்’கும் அவரது டிஸ்னி குழுமமும் ஐநூறுக்கும் மேற்ப்பட்ட யூத, கிறிஸ்தவ, இஸ்லாமிய அறிஞர்களை, மோசஸ் பிரின்ஸ் ஆஃப் ஈஜிப்ட் (1998) திரைக்கதையின் உண்மைத்தன்மைக்காக ஆலோசித்தார்களாம். ஆனால், மகாபாரத கர்ணன் – துரியோதனன் நட்பினைப் பற்றி அறிந்திருந்தார்களா என்பது தெரியவில்லை. 

மோசே பற்றி எத்தனையோ படங்கள் எடுக்கப்பட்டிருப்பினும், இந்த ஒரு படத்தில்தான் மோசே – ராமஸீஸ்’ நட்பானது பைபிளில் அது பற்றிய குறிப்புகள் ஏதும் இல்லை என்றாலும் உணர்வுபூர்வமாக திரைக்கதையாக்கப்பட்டிருக்கும்.  ராமசீஸ்’ஸின் பாத்திரமும், பார்வையாளர்களது அனுதாபத்தை அள்ளிச் செல்வதாகவும் சொல்லப்பட்டிருக்கும். கர்ணன் மோசே இருவரின் மனப்போராட்டங்களுக்கும் ஒன்றுதான் என்றாலும் கர்ணன் துரியோதனன் நட்பு நமது மரபுவழி அறநெறி சார்ந்தது. 

ஹாலிவுட்’ அறிந்தோ அறியாமலோ இப்படத்தில் அதை உள்வாங்கியிருக்கும்...

ஆனால், தற்பொழுது வெளிவந்துள்ள ரிட்லி ஸ்காட்டின் எக்ஸ்டோடஸ் தொழில்நுட்பத்திலும், திரையாக்கத்திலும் டிஸ்னியின் கார்ட்டூனை விட பல மடங்கு பெரிதாயினும், பதினைந்து ஆண்டுகளாயினும் இன்னமும் நம் மனதில்  உறைந்து போன பிரின்ஸ் ஆப் ஈஜிப்ட்’டின் உணர்வுகளையும் உறவுகளையும் கொஞ்சமும் அசைக்க முடியவில்லை. படம் முடிந்து வெளியே வருகையில் பத்தோடு பதினைந்து அதில் இதுவும் ஒரு படம் என்ற உணர்வுதான் மிஞ்சுகிறது. மீண்டும் பார்வோனை வில்லனாக சித்தரிக்க முனையும் இப்படம் எகிப்தில் தடை செய்யப்பட்டிருப்பதில் வியப்பில்லை.

1956ல் வெளிவந்த ‘டென் கமாண்ட்மெண்ட்ஸ்’ பற்றியும், செங்கடல் பிளக்கும் அதன் உச்சகட்ட காட்சி பற்றியும் என் அம்மா பிரமிப்புடன் கூறக் கேட்டிருக்கிறேன். பார்த்ததில்லை. 1998க்கு முன்பும் பின்னும் எத்தனையோ படங்கள் வந்திருக்கலாம். ஆனால் பிரின்ஸ் ஆஃப் ஈஜிப்ட்’ நம் மனதில் ஏற்ப்படுத்திய தாக்கத்தினை எந்தப் படமும் ஏற்ப்படுத்தப் போவதில்லை. அதற்கு பலர் நினைப்பது போல அப்படத்தின் பாடல்கள் முக்கிய காரணமல்ல.

மாறாக, ஆழமான நட்பு முன்னிறுத்தப்பட்டதேயாகும்...

மதுரை
22/03/15

PROOF OF WILLS ADMITTED BY TESTATOR

INTRODUCTION I have had the privilege to hear the lecture of Mr.Nagamuthu, Senior Advocate on ‘Execution and Proof of Will’....