Tuesday, 13 December 2016

பிங்க் (2016) இந்தி

ஆமாம், நாங்கள் பணம் வாங்கினோம். அதனால் என்ன? பணம் கொடுத்து விட்டதாலேயே சட்டப்படி….சட்டப்படி……. சொல்லுங்கள் அவர்களுக்கு எங்களை பலாத்காரம் செய்யும் உரிமை வந்து விடுமா?”

தொடர்ந்த குறுக்கு விசாரணையின் அழுத்தத்தால் ஒரு கட்டத்தில் உடைந்து போய் ஃபாலக் அலி (கீர்த்தி குல்காரி) கதறும் அந்தக் காட்சியில்தான் இந்த ஆண்டில் வெகுவாக பாராட்டப்படும்பிங்க்மற்ற திரைப்படங்களில் இருந்து வித்தியாசப்படுகிறது.

ஆனால் படம் பார்த்த பலர்ஃபாலக் அலி ஏற்றுக் கொண்டது போல உண்மையிலேயே தோழிகள் பணம் வாங்கினார்களா?’ என்ற சந்தேகத்தை இணைய விவாதங்களில் வெளிப்படுத்திக் கொண்டிருப்பதில் படத்தின் இயக்குஞரும், கதாசிரியர்களுமான அனிருத்த ராய் செளத்திரி, சூஜித் சிர்கார் ஆகிய இருவரும் படத்தில் தாங்கள் சொல்ல நினைத்த கருத்தை கடத்துவதில் சிலரிடம் தோல்வியடைகிறார்கள்.

ஆம். இதுவரை நாம் வகுத்து வைத்திருக்கும் ஒழுக்கக் கோட்பாடுகளை ஒரேடியாக மீறி அடுத்த கட்டத்திற்கு நம்மை தயார்ப்படுத்துவது என்பது அவ்வளவு சுலபமல்லதான்.

அந்த அச்சத்தில்தான், இங்கு இருப்பதிலேயே தாராள எண்ணம் கொண்டவராக அறியப்படும் கமல்ஹாசன் கூட தனது பாபநாசம் படத்தில் மிகவும் பாதுகாப்பாக பயணித்து, பெண் பிள்ளைகளுக்கு எதைச் சொல்ல வேண்டியிருக்கிறதோ அதைச் சொல்லியிருக்கக் கூடிய அருமையான வாய்ப்பினை நழுவ விட்டிருப்பார்

கமல்ஹாசனை சொல்லிக் குற்றமில்லை. ‘உங்கள் புகைப்படத்தினை யாராவது தவறாக பயன்படுத்தினால், யாரும் செய்யததையா நான் செய்து விட்டேன் என்ற தைரியம் கொண்டு எங்களிடம் வந்து புகார் செய்யுங்கள்என்ற விழிப்புணர்வை பெண்களுக்கு ஊட்ட வேண்டிய நமது சசைபர் க்ரைம் காவல் அதிகாரிகள் கூடபெண்கள் தங்களது படங்களை இணையத்தில் பொதுவில் வெளியிடாதீர்கள்என்று எச்சரித்துக் கொண்டிருக்கிறார்கள்.

விட்டால்ஸ்மார்ட் ஃபோன்கள் அதிகரித்து விட்டதால் பெண்கள் பர்தா அணிந்து வெளியே வருவதுதான் நல்லதுஎன்றும் சொல்வார்கள் போல.

ஆனால் பாபநாசம் சுயம்புலிங்கத்தின் மகளைப் போல எல்லா பிள்ளைகளும் தவறு ஏதும் செய்யாமலேயே இக்கட்டில் மாட்டிக் கொள்பவர்கள் இல்லை. விளையாட்டுத்தனமான தைரியத்தில் தாங்களும் இசைந்து செய்த செயல்களினால் பிரச்னைகளில் சிக்கிக் கொள்ளும் மகள்களுக்குத்தான் பெற்றோரின், சமூகத்தின் அரவணைப்பும், புரிதலும், தைரியமும் தேவைப்படுகிறது.


பிங்க்அந்தப் புரிதலை கூர்மையான அதன் வசனங்கள் மூலம் தருகிறது.


தில்லி அபார்ட்மெண்ட் ஒன்றில் வசிக்கும் மூன்று தோழிகள். இரவு கேளிக்கைக்கு சென்ற இடத்தில் பழகிய ஆண்களோடு இரவு உணவிற்காக தனி விடுதிக்கும் (Resort)  செல்கிறார்கள். தோழிகளின் தாராள குணத்தால் உந்தப்படும் ஆண்கள் அவர்களை பலாத்காரம் செய்ய முயல அவர்களில் ஒருவரான மினால் அரோரா (தப்ஸீ) ரஜ்வீர் சிங்கை பாட்டிலால் தலையில் அடித்து விட்டு அங்கிருந்து தப்பிக்கிறார்கள்.

சமாதான முயற்சிகள் தோல்வியடைய அரசியல்வாதியின் மகனான ரஜ்வீர் சிங் செல்வாக்கால் மினால் மீது கொலை முயற்சி வழக்கு தாக்கல் செய்யப்படுகிறது.

மிகச்சிறப்பாக கட்டமைக்கப்பட்ட திரைக்கதையில்தாங்களே இசைந்துதான் தோழிகள் ரஜ்வீர் சிங்குடன் சென்றார்கள் என்ற ரீதியில் நடத்தப்படும் நீதிமன்றத்தில் நடத்தப்படும் குறுக்கு விசாரணையின் வெப்பத்தை தாங்க முடியாத ஃபாலக், ‘ஆமாம் காசு வாங்கினோம்என்று  அது உண்மையோ பொய்யோ ஏற்றுக் கொள்கிறார்.

ஆனாலும் அவர்களது வழக்குரைஞரான தீபக் ஷெகால் (அமிதாப் பச்சன்)ஒரு பெண் இல்லை என்று சொன்னால் இல்லைதான். ஒரு ஆண் அந்த இடத்தில் நிறுத்தி விட வேண்டும்என்று வாதிட்டு வழக்கை வெல்வதுதான் கதை.

தில்லி நிர்பயா வழக்கில்அந்த இரவில் அந்தப் பெண்ணுக்கு வெளியே என்ன வேலைஎன்று கேட்பவர்களுக்கு பதில்தான்பிங்க்படத்தின்நோ மீன்ஸ் நோ


இதற்கேஅது எப்படி அவ்வளவு தூரம் விடுதி வரை போய் விட்டு பலாத்காரம் என்றால்என்று பொங்குபவர்கள் ஜூடி போஸ்டர் நடித்து 1998ல் வெளி வந்ததி அக்கியூஸ்ட்படத்தைப் பார்த்தால் என்ன சொல்வார்களோ?

Monday, 12 December 2016

தேசியக் கொடி...

திரையரங்குகளில் படம் தொடங்குவதற்கு முன்னதாக தேசிய கீதம் இசைக்கப்பட வேண்டும் என்பதோடு, திரையிலும் தேசியக் கொடியின் படம் காண்பிக்கப்பட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டுள்ளது.

டிஜிட்டல் யுகத்தில் வேண்டுமானால் திரையில் தேசியக் கொடி என்பது சாதாரணமாக இருக்கலாம். ஆனால் எழுபதுகளின் சிறுவர்களாகிய எனக்கும் எனது நண்பனுக்கும் மூவர்ணக் கொடி படம் ஏற்படுத்திய உள்ளக் கிளர்ச்சியை சொல்லிப் புரிய வைக்க இயலாது.

பின்ன, தேசியக் கொடி பிலிம் அவ்வளவு ஈஸியா கிடைக்காது.

பிலிம்?

ஆமாம், நாற்பது வருடங்களுக்கு முன்னால்ஹோம் தியேட்டர்என்றால் வீட்டு ஜன்னலை எல்லாம் மூடி அறையை இருட்டாக்கி, கதவை மட்டும் கொஞ்சமாக திறந்து அந்த இடுக்கு வழியாக வெளியே வெயிலில் நிறுத்தி வைத்த கண்ணாடியிலிருந்து வரும் ஒளியை சுவற்றில் அடிப்பதுதான்.

ஓளிக்கீற்றில் இரண்டு ஒளிப்பெருக்கிகளை வைத்து இடையில் ஒரு பிலிம்மை பிடித்தால் திரையில் தோன்றும் பிம்பங்கள் அன்று தந்த மகிழ்ச்சியும் வியப்பும் இன்று எந்த ஒரு ஐமேக்ஸ் திரையும் தரும் உணர்வுகளுக்கு நிகரானது.

அதற்கான சிரமங்கள் அப்படிப் பட்டது.

வெளியே நிறுத்தி வைத்த கண்ணாடி விழுந்து விடும். அல்லது வெயில் போய் விடும். சில சமயம் மூடிய ஜன்னலை யாராவது சேட்டைக்கார பையன்கள் திறந்து விடுவார்கள். அவர்களைக் கூட சமாளித்து விடலாம். இந்த லென்ஸுகளையும் பிலிமையும் சீராகப் பிடிப்பதற்குள், சம்பந்தப்பட்டவர்களுக்குள் ஏற்ப்படும் சண்டைகள்தாம் பல சமயங்களில் வசனங்களாக இருக்கும்.

பிலிம் என்பது தியேட்டர்களில் அறுந்து போன பிலிம் ரோலில் இருந்து ஒவ்வொன்றாக வெட்டப்பட்டு மூன்று மூன்றாக வைத்துக் கட்டி கடைகளில் விற்கப்படுவது. துரதிஷ்டமாக வந்த படமே திரும்பவும் கிடைக்கும். அதை சமயங்களில் மற்றவர்களிடம் கொடுத்து மாற்றிக் கொள்ளலாம்.

எழுத்து பிலிம் என்றால் டைட்டில் கார்ட். அது சில சமயம் கிடைக்கும் என்றாலும் அரிதிலும் அரிதாகவணக்கம்ஒற்றைச் சொல் சிலரிடம் மட்டுமே இருக்கும். வெயிலுக்கு பதில் மின்சார பல்ப், சுவற்றுக்கு பதிலாக வெள்ளை வேட்டி என்று டெக்காக சில புத்திசாலிகள் மற்ற சிறுவர்களிடம் காசு வசூலித்து அறைக்குள் அனுமதிப்பார்கள்.

நானும் ஒரு முறை காசு கொடுத்துப் பார்த்து இருக்கிறேன். காரணம், அவனிடம் தேசியக் கொடி பிலிம் இருப்பதாகவும் கடைசியில் அது காட்டப்படும் என்று சொன்னதாலும்தான். ஏனெனில் கடைகளில் திரைப்பட பெயர்களில்தாம் பிலிம்கள் கிடைக்கும். தேசியக் கொடி பிலிம் எப்படி கிடைத்தது என்பது தெரியவில்லை. நானும் என்னைக் கூட்டிப் போன நண்பனும் முதலிலேயே பிலிமை வாங்கி ஆச்சரியமாகப் பார்த்த பின்னர்தாம் காசு கொடுத்தோம்.

வழக்கமாக சினிமா தியேட்டர்களில்ஜன கன மனஎன்ற பாடலோடு தேசியக் கொடி பறக்கும் போது அது ஏதோ படம் முடிந்து விட்டது, கிளம்புங்கள் என்ற சமிக்ஞை என்பது போல தட்டுத் தடுமாறி வெளியேறுவது போல அல்லாமல் அன்று திரையில் தோன்றிய மூவர்ண தேசியக் கொடியைப் பார்த்தவுடன் உணர்ச்சி வெள்ளத்தில் கைகளைத் தட்டினோம்.


-oOo-


என் பர்த் டேவுக்கு என்ன கிஃப்ட்?’

ஏன் எதுனாலும் வாங்கித் தாரேன்

ம்ம்ம்ம்ஒரு புரஜெக்டர்

புரஜெக்டரா? அது எதுக்கு?’

சின்ன வயசுல இருந்து ஒரு ஆசை. அதான்

வாங்கிக்கோங்க, சரி எவ்ளோ விலை?’

நான் சொன்ன விலையை கேட்டு எனக்கு மட்டும் அதிர்ச்சியாயிருந்தது.

அதுக்கென்ன என்று லேசாக வீட்டில் சொல்லி விட்டாலும் எனக்கு வாங்கும் வரை பயம்தான், இது தேவையா என்று. ஆனால், கண்ணாடி வெளிச்சத்தில் காட்டிய படம் தொடங்கி நான் அண்ணன் எல்லாம் சேர்ந்து மொத்தமாக பணம் போட்டு சேவியர்ஸ் ஸ்கூல் டிராயிங் வாத்தியாரிடம் பத்து ரூபாய்க்கு வாங்கிய அந்த லைட் வச்ச கார்ட் போர்ட் பாக்ஸ் புரஜக்டரில் பாத்த பிலிம் படங்கள், பின்னர் எப்போதும்பேசும் படம்புத்தக விளம்பத்தில் பார்த்து மட்டுமே ஏங்கிய அந்தக் குட்டி புரஜக்டர், அமெரிக்காவிலிருந்து வந்த உறவினர் தனது தோளில் தாங்கிக் கொண்டிருந்த 8 எம் எம் மூவி கேமரா எல்லாம் மனதில் வேகமாக ஓடி மறைய கண்ணை மூடிக் கொண்டு வாங்கி விட்டேன்.


இப்ப கேமரா, புரெஜக்டர், ஸ்க்ரீன், அம்ப்ளிபயர் எல்லாம் இருக்கு. தேசியக் கொடியும் பாடலும்தான் இல்லை…

PROOF OF WILLS ADMITTED BY TESTATOR

INTRODUCTION I have had the privilege to hear the lecture of Mr.Nagamuthu, Senior Advocate on ‘Execution and Proof of Will’....