Friday, 3 April 2015

புனித வெள்ளியும், மூன்று மணி நேர பாடுகளும்!

நான் சிறுவனாயிருக்கையில், சலூனில் முடி வெட்டிக் கொள்வதை விட அச்சம் தரும் சடங்கு ஒன்று உண்டென்றால், அது புனித வெள்ளியன்று கோவிலுக்கு செல்வதுதான்!

கோடைக்காலம் தொடங்கியிருக்கும் மத்தியான வெயிலில் தொடர்ந்து மூன்று மணி நேரம் கோவிலுக்குள் உட்கார்ந்திருப்பது...இல்லை, உட்கார்ந்து, எழுந்து, பின் முட்டிக்காலிட்டு மீண்டும் உட்கார்ந்து, எழுந்து, முட்டிக்காலிட்டு என்று வறுத்து எடுக்கப்படுவது கொடுமை!

அதுவும் எங்கள் கோவில் உறுப்பினர்கள் பக்தியில் சிறந்தவர்கள், உடல் முழுவதும் வியர்த்துக் கொட்டினாலும் தொடர்ந்து ஜெபம் செய்வதில் சளைக்காதவர்கள்.

‘அடப்போங்கப்பா, இயேசுவுக்கே கஷ்டம் ஒரே நாளோடு போயிற்று...எனக்கு வருடா வருடம் இப்படி மூன்று மணிநேரம் இந்தப் பாடா’ என்று மனதிற்குள் நினைப்பதையும் வெளியில் சொல்ல முடியாது.

-oOo-

புனிதவெள்ளியில் கோவிலுக்கு செல்லும் பழக்கம் எப்போது நின்றது என்று நினைவில்லை. கல்லூரிக்கு சென்றதும், கொஞ்சம் கொஞ்சமாக கோவிலுக்கு செல்லும் பழக்கம் நின்று போனதோடு அதுவும் நின்றிருக்கலாம்.

ஆனால், மும்பையிலிருக்கையில் திடீரென ‘புனித வெள்ளிக்கு கோவிலுக்கு வர வேண்டும்’ என்று மனைவி வேண்டியதில், இது என்னடா புதுச்சோதனை என்றிருந்தது. நான் சார்ந்திருந்த புரொட்டஸ்டாண்ட் பிரிவினரைப் போல இல்லாமல், கத்தோலிக்கர்கள் ‘பூசை’யினை சுருக்கமாக முடித்துவிடுவார்கள் என்பதால் அவர்கள் மீது பரிவு இருந்தாலும், புனித வெள்ளி பூசையில் ஆழம் தெரியாமல் காலை விட நான் தயாராக இல்லை.

‘வெள்ளிக்கிழமை மத்தியானம் எல்லாம் ஆகாது. வேண்டுமானால் வியாழக்கிழமை மாலை பூசைக்கு வருகிறேன்’ என்றேன். இரவு நேரம், ஏதோ சினிமாவுக்கு போவது போல ஒரு மணி நேரத்தில் வந்து விடலாம் என்பதால்.

அதுவும் சரிதான் என்று சமரசமானார். ஆனால் வியாழக்கிழமை மாலை எனது நண்பரை பார்க்க வேண்டியிருந்ததால், வெள்ளிக்கிழமை காலை பார்க்கலாம் என்றேன்.

வெள்ளிக்கிழமை காலையும் முடியவில்லை. அதற்காக மத்தியான நேரத்து மூன்று மணி நேர பூசையெல்லாம் வரமுடியாது என்று திட்டவட்டமாக மறுத்துவிட்டேன். யார் கோவிலுக்குள் மூன்று மணி நேரம் உட்கார்ந்திருப்பது?

ஈஸ்டருக்கு போய்விட்டால் போயிற்று!

ஆனால், கத்தோலிக்கர்களுக்கு கிறிஸ்துமஸ் என்றாலும் சரி, புதுவருடமென்றாலும் சரி., ஈஸ்டரும் ஆகட்டும். நள்ளிரவில் கோவிலுக்கு போனால்தான் திருப்தியாக இருக்கும். அதற்கும் வந்தது ஆப்பு, உச்ச நீதிமன்ற உத்திரவு ஒன்றின் மூலம்.

மும்பையில் தாண்டியா கொண்டாட்டங்கள் இரவு பத்து மணி தாண்டிதான் வேகம் பிடிக்கும். பல இடங்களில் பன்னிரண்டு மணியையும் தாண்டி பத்து நாட்கள் உறக்கத்தை கெடுக்கும். அது குறித்து எழுந்த ஒரு வழக்கில், ‘இரவு பத்து மணிக்கு மேல் பொதுவில் ஒலிபெருக்கியை பயன்படுத்தக் கூடாது’ என்று உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு கத்தோலிக்க நள்ளிரவு பூசைக்கும் வேட்டு வைத்து விட்டது.

எனவே கிறிஸ்துமஸ், புதுவருட பூசைகள் மும்பை பாந்த்ரா (Bandra) கோவில்கள் முன்னாள் இரவு 8.30க்கு ஆரம்பித்து 9.30க்கெல்லாம் முடித்து விட்டார்கள். சரி, ஈஸ்டருக்கும் பிரச்னை இல்லை என நினைத்தேன்.

-oOo-

ஈஸ்டருக்கு மலாடிலுள்ள அக்கா வீட்டுக்கு போவதென்று முடிவாயிற்று. அங்கும் பூசை இரவு 8.30க்குத்தான். போனதுமே அக்கா சாப்பிடுகிறாயா என்று கேட்டாள். உணவின் மணம் என்னை இழுத்தாலும், ‘இன்னும் பசிக்கட்டும், அதுதான் பத்து மணிக்கு வந்து விடலாமே’ என நினைத்து வேண்டாமென்று விட்டேன்.

எனது மனைவியோ, ‘மூணு மணி நேரம் கோவிலுக்குள் உட்கார வேண்டுமா’ என்று வெள்ளிக்கிழமை பூசைக்கு வரவில்லை என்று எனது அம்மாவிடம் புகார் வாசித்துக் கொண்டிருந்தார்கள்.

கோவிலில் பூசை சரியாக 8.30 மணிக்கு சாதாரணமாகத்தான் ஆரம்பித்தது. ஆனால், பாதிரியார் புரட்சிக்காரர் போல, இது என்ன அரசு உத்தரவு போடுவது என்று நினைத்தாரோ இல்லையோ, பேசினார் பேசினார் பேசிக்கொண்டே இருந்தார். எனக்கோ பசி வேறு, கோபம் தலைக்கேறியது. நாற்காலிகளை நெருக்கமாக வேறு போட்டிருந்ததால் அங்கும் இங்கும் அசைய முடியவில்லை.

பின்னரும் பூசையினை இழுத்தடித்தார்கள். கடைசியில் வீட்டுக்கு வருகையில் மணி பன்னிரண்டு. வந்த பின்னர்தான் புரிந்தது. பூசை முடிந்த நேரம் சரியாக 11.30!

‘வெள்ளிக்கிழமை கோவிலில் 3 மணி நேரம் உட்கார்ந்திருப்பதா, என்று கேட்டீர்கள் அல்லவா. அதற்குதான் இன்று 3 மணி நேரம் உட்கார்ந்தீர்கள்’ என்று எனது மனைவி கிண்டல் செய்ய, அக்காவும் நானும் ஒருவரையொருவர் பார்த்து அர்த்தமாக புன்னகைத்துக் கொண்டோம்.

அதன் அர்த்தம் எனது மனைவிக்கு புரியவில்லை.

-oOo-

வெள்ளிக்கிழமை பூசைக்கு கோவிலுக்கு போகும் கட்டாயம், எனக்கு எப்பொழுது நின்றது என்று தெரியவில்லையாயினும் எனது மூத்த அண்ணன் எப்பொழுது நிறுத்தினான் என்று எங்களுக்கு மறக்காது.

அவன் கல்லூரிக்கு செல்ல ஆரம்பித்த பின்னர், வீட்டு ஒழுங்குகளிலிருந்து தானாகவே சில சலுகைகளை உருவாக்கிக் கொண்டான். இவ்வாறுதான் புனித வெள்ளிக்கு முன்னர், ‘மூன்று மணி நேரமெல்லாம் என்னால் கோவிலில் உட்கார முடியாது’ என்று சொல்ல, ‘அப்படியென்றால் வியாழக்கிழமை மாலை சர்வீஸுக்கு போய் வந்து விடுவதாக எங்கள் அம்மாவுடன் சமாதானமாயிற்று.

அக்காவும் கூட போக, தனது நண்பர்களிடம் ‘இன்னும் ஒரு மணி நேரத்திற்குள் வந்து விடுவதாக’ அவன் கூறிப்போனது எனக்கு இன்றும் ஞாபகம் இருக்கிறது.

ஆனால், சர்வீஸ் (தியானம்) ஆரம்பிப்பதற்கு சில நிமிடங்கள் இருக்கையில், மிக மிக அரிதாகவே மின் சப்ளை நிறுத்தப்படும் எங்கள் தெர்மல் நகரிலேயே (Thermal Nagar) மின் இணைப்பு  துண்டிக்கப்பட கோவிலுக்குள் இருட்டில் விசிறியும் இல்லாமல் வேர்த்துக் கொட்ட உட்கார்ந்திருக்கிறார்கள். கடைசியில் மின் இணைப்பு வந்து கோவில் முடிந்த பொழுது சரியாக ‘மூன்று மணி’ நேரம் கடந்திருந்ததாம்.

வீட்டுக்கு வந்து அக்கா சொல்லிச் சொல்லி சிரித்துக் கொண்டிருந்தார்கள்!

Thursday, 2 April 2015

விப்லாஷ்

“முதல் எட்டு வருடங்களுக்கு எனக்கு எவ்வித ப்ராக்டிஸும் இருந்ததில்லை. கஷ்டமான சூழ்நிலை. ஆனால் அவர் ஒருமுறை கூட நான் எனது பொருளாதார தேவைகளை எப்படிச் சமாளிக்கிறேன், என்ன செய்கிறேன் என்று கேட்டதில்லை. அவரே ஜூனியராக இருக்கையில் வறுமையில் வாடியவர்தான். அப்படியிருந்தவர்கள் அதே நிலையிலிருப்பவர்கள் மீது கருணை கொண்டிருப்பார்கள் என்று நான் நினைத்ததற்கு மாறாக அவர் இருந்தார். அதோடு தனது ஜுனியருக்கு வழக்குகளை கொடுத்து உதவுமாறு யாரிடமும் ஒரு சீனியர் கேட்கக் கூடாது என்ற தொழில் தர்மத்திலும் அவர் உறுதியாக இருந்தார்”

“நீ என்னைப் பற்றியும், நான் உனக்கு எவ்விதமான உதவியும் செய்யவில்லை என்பதைப் பற்றியும் என்ன நினைக்கிறாய் என்பதை நான் அறிந்திருக்கிறேன். ஆனால் இதற்காக என்னை நன்றியுடன் நினைக்கும் காலம் ஒருநாள் வரும்” என்று பின்னாட்களில் அவர் கூறியதாக சுதந்திர இந்தியாவின் மிகச்சிறந்த நீதிபதிகளில் ஒருவராக அறியப்படுகிற எம்.சி.சாக்ளா தனது சீனியரான முகமது அலி ஜின்னாவை அவரது ரோஸஸ் இன் டிசம்பர் நூலில் நினைவு கூறுகிறார்.

நியூயார்க்கில் உள்ள இசைப்பள்ளியில் பயிலும் டிரம்ஸ் வாசிக்கும் மாணவனை தன்னுடைய குழுவில் பயிற்சிக்காக சேர்த்துக் கொள்கிறார் அதன் பயிற்சியாளர். தன்னிடம் பயிலும் மாணவர்களை உடல்ரீதியாகவும் மன ரீதியிலும் எவ்வளவு முடியுமோ அவ்வளவு அழுத்தத்தைக் கொடுக்கிறார். பயிலரங்கத்தில் மாணவர்கள் மீது தொடுக்கும் கெட்ட வார்த்தைகளும் அவமானங்களும் பார்க்கும் நம்மையே சோர்வடையச் செய்கிறது. பெரும்புகழ் (Greatness) ஒன்றையே குறிக்கோளாகக் கொண்ட மாணவனுக்கும் பயிற்சியாளருக்குமான உளவியல் ரீதியான போராட்டமே விப்லாஷ் திரைப்படம். ஒரு கட்டத்தில் பொறுக்க முடியாமல் மாணவன் பொங்கி எழுந்து கல்லூரியிலிருந்தே விரட்டப்பட நமக்கே, ‘இதற்குப் பேசாமல் எங்காவது இசைக்குழுவில் சிவமணி போல டிரம்மராக சேர்ந்து பிழைத்துக் கொள்’ என்று நிம்மதியாக இருக்கிறது.


பி.டி.உஷாவைக் கண்டெடுத்து அவரை உலகளவில் உயர்த்திய ஓ.எம்.நம்பியாரை வைத்து, ஆசிய தடகளப் போட்டியின் பொழுது சுஜாதா ‘பத்து செகண்ட் முத்தம்’ என்ற அருமையான தொடர்கதையை எழுதினார். அதையெல்லாம் இங்கு யாராவது படமாக்க மாட்டார்களா என்று இருக்கிறது.

‘We can draw work by creating congenial atmosphere but greatness can be achieved only in adversarial circumstances’ என்பதை வலியுறுத்திச் சொல்கிறது விப்லாஷ்.

எவ்வளவு நாட்கள்தான் இசைவான சூழ்நிலையிலேயே நாமும் வேலை செய்து கொண்டிருப்பது?

DEMAND OF DEMAND IN WRITS

Any student of law, if asks me where to start into reading something interesting on legal issues, my immediate response could be the almost weekly articles, appearing in MADRAS LAW JOURNAL by its Deputy Editor Mr.V.Lakshminarayanan. On receiving my copy every week, the first thing I do is to check the title of his article and try to guess the content, but they never fails to surprise me with anecdotes and quotes from all the corners of the world but relevant to contemporary subjects he chooses. I am looking forward to the day, when MLJ publishes the compilation of these articles, which in the line of the books of Lord Denning will make the life and profession of any Advocate enterprising and entertaining.

My sincere advice to the Juniors, who aspire to be noted and watched by the Judges in the podium, litigants in gallery and the Seniors with envy, to follow such articles and pepper your submissions with what one read and enjoy. After all, we do not live by legal provisions and precedents alone…

Last week, there was an interesting article ‘Demand and Denial Vs Mandamus, A Cat and the Zen Master’. It is about the history behind our Registry and of course Judges insisting for a ‘demand to the Authorities’ before entertaining a Writ of Mandamus. This article will be soothing balm to many of us, suffering at the hands of the Registry, whose demand of demand, sometime is bordering absurdity. What else word is more appropriate, when my Client, whose name was left out to be sponsored by Employment Exchange to the written exam/ personal interview slated to be held in another two days was asked by the Registry to send a representation first and then to move the Court for a writ to direct the Authorities to sponsor his name.

Well, Section 80 of Civil Procedure Code expects a Plaintiff to notice the Government before filing a suit. I hardly remember any instance, when the Government has taken pain to reply. Never there is a notice, which has propelled the Government into take action to discharge the demand. I always wonder why then this unnecessary procedure and whether there was any statistics to support the continuance of this requirement in the statute book.

The Supreme Court in Salem Advocates Bar Association Vs Union of India reported in AIR 2005 SC 3353 (02/08/05) took note of this provision and found that ‘the underlying object is to curtail the litigation’ and batted for its continuance but with a direction to the Government to nominate an Officer in all departments, responsible for sending replies to the pre-litigation statutory notices. What is important is that the further direction that ‘if the Court finds that either the notice has not been replied or reply is evasive and vague and has been sent without proper application of mind, the Court shall ordinarily award heavy cost against the Government and direct it to take appropriate action against the concerned Officer including recovery of costs from him’

Whether this direction is considered in any of the civil suits against the Government, decided in the past 10 years is not in knowledge but why the it be tested in any of the Writ Petitions in which the High Court requires a ‘pre-writ demand’ as a condition precedent to entertain the Petition...

Madurai
02/0314

Wednesday, 1 April 2015

WHY ARGUE, WHEN INTERIM ORDERS DIE IN TWO WEEKS?

Any advocate following my dear friend G.R.Swaminathan in the Madurai Bench would have seen with amusement, he throwing the provisions of Article 226(3) of the Constitution of India before the Judges to bolster a point that any ad-interim order passed in a Writ Petition has a shelf value of only two weeks and not thereafter!

Naturally the Judges are embarrassed as it is near impossible, with the present infrastructure to decide any application to vacate an interim order within two weeks.

Article 226(3) inserted by way of substitution in the Constitution (Forty-Fourth Amendment) Act, 1978 provides that if an application to vacate an interim order is not disposed within two weeks, the interim order shall stand vacated on the next day of the expiry of two weeks period. The period is to be counted either from the date on which the application is served to the other side or filed whichever is later.

Last week, a friend expressed surprise that a Judge in Principal Bench has held the said provision is directory and not mandatory. The Judge might have felt it is nothing but practical to hold the provision as directory. Any other conclusion would have a cascading effect, leading to a disastrous result of automatic vacation of almost all the interim orders granted in the pending Writ Petitions/ Appeals.

However any rigid interpretation of law will tilt the balance towards holding this provision as mandatory. The language of this provision is much different from the similar provisions in other legislations, fixing a time limit for the Court to decide a dispute. For instance the provisions of Section 13 (3A) of Consumer Protection Act’1986 or even Rule 3A of Order 39 of the Civil Procedure Code though prescribe a time limit for the disposal of applications are not providing for any consequence, if it is breached. The Court has to only record reasons. Now by judicial precedent, the respondent will get a right of appeal as for as the ad-interim orders in suits are concerned.

On the other hand, Article 226(3) provides for a consequence that too in an unequivocal term leaving no room for dilution that the interim order shall stand vacated.

It is expected that all High Courts, dealing this inconvenient issue have held that the provision is mandatory and not directory as reportedly held by our High Court. The Calcutta High Court in Krishan Kumar Agarwala Vs Reserve Bank of India reported in AIR 1991 Cal 272 rejected the submission that 'an act of the court shall prejudice no man’ (actus curiae neminem gravabit) by following an earlier judgment of Rajasthan High Court holding 'that it was for the party who had obtained, an ex parte order, to take "active steps" to get the matter listed in Court within the period specified after he has received a copy of the application for vacation and that if he does not do so, he can do so at his own peril'.

The passionate argument by the Counsel that it was no fault of the Writ Petitioner in whose favour the order was made as the Petition not be so disposed of due to inadvertence of the office of the Court in listing the application or due to the Court itself being pre-occupied with other matters failed to cut ice but earned only the sympathy of the Court.

The only saving grace is an observation that 'nothing shall prevent the Court to grant an interim order afresh after hearing the parties, on the application for vacation or otherwise, if the Court finds sufficient grounds to make such fresh order'. Accordingly the Calcutta High Court considered the matter afresh for the grant of interim order but to be rejected.

The consequence is that on the expiry of prescribed period, the Respondent is not committing contempt in acting as if there is no interim order, no matter it is an order not limited by time. The Allahabad High Court in Justice Palok Basu (Rtd) Vs Sri R K Kulshrestha reported in 2007 (1) AWC 781 similarly held that any action taken contrary to the interim order after the expiry of such term would not amount to contempt.

In the meanwhile the Division Bench of Allahabad High Court in Dr.R.C.Chaudhary Vs Vice Chancellor B R Ambedkar University reported in AIR 2004 All 95 went even deeper into this issue by examining the intent of legislature and held that the provision is mandatory. However while concluding the judgment, an observation is made that the 'Respondent cannot claim that the interim order shall stand vacated, by filing the vacate stay application in a leisurely manner'. This unwarranted observation has the effect of creating confusion as to what length of term is 'leisurely manner'. The term 'reasonable time' mentioned in this judgment is relative and may anything between 10 days to 10 years. A person standing in contempt is entitled to argue that anytime is reasonable time. The court may have to accept his submission as the consequences of contempt proceedings is penal in nature.

The situation is no different, even if this provision is held to be directory. Still, it is possible for any contemnor to argue that in the given circumstance that order deemed to have been vacated by the operation of Article 226(3) and no Court could imprison a contemnor, when the continuance of the interim order is under cloud.

Hence the only possible way out is to pass a specific order extending the ad-interim orders every two weeks. Such measure will bring more pressure on the already over-worked Registry in listing the matter every two weeks and preparing order copies...

My friend commented, the CPC was amended by those who would not have practised a single day in a sub-ordinate court. Well, it is the same with the case of any legislation, mandating a time limit to the Courts...

Madurai
08/04/14

When I published the above article as my Face Book status message on 08/04/14, I did not have the privilege to know the Judgement of Justice Ramasubramaniam in Dr.T.Gnanasambhanthan Vs Board of Governors reported in (2014) 3 MLJ 1, where the Judge has held that the interim order would not go as no party can be prejudiced by the 'act of omission' on the part of the Court as the obligation was on the Court to take the hearing of the Miscellaneous Petition. However the question remains, what if a party argues in a Contempt Petition that he was under the bonafide impression that the interim order did not continue in view of the provisions of the Constitution and he the disobedience not willful.

TO DISPENSE WITH THE 'DISPENSE WITH'

In my estimation 99% of the Petitions to dispense with the production of the original order, in filing the Writ Petitions for Certiorari are allowed. Similar is the case of Petitions to file a Single Writ Petition, when more than one Petitioners have to seek a common relief. Is it necessary for the sake of 1% of the Petitions, our Registry to spend its precious time, scarce manpower and limited funds?

If we don’t have the will to think of a procedure to dispense with this empty exercise, at least we can alter the procedure to save stationery, manpower and time. Instead of separate applications for dispense with the order or to seek to leave to file single writ petition, such prayers could be allowed to be prayed in the Writ Petition like

For the reasons stated in the accompanying affidavit, the Petitioner prays that this Hon’ble Court may be pleased to :
(a) dispense with the production of the original or the order in Na.Ka…..
(b) permit the Petitioners to file a single Writ Petition
(c) issue a Writ of Certiorari

The first two prayers can be considered at the time, when the Writ Petition is taken up for admission. If the Court denies the First prayer, the Writ Petition may be adjourned, granting time to the Petitioner to produce the original. In the case of Second prayer, the Writ Petitioner may be dismissed with liberty to file separate Writ Petitions or to accept it as for as the 1st Petitioner is concerned with a liberty to others to file separate Writ Petitions.

A Miscellaneous Petition takes up a minimum of 10minutes of time & manpower of an Advocate, his juniors and the Clerk. Then the manpowers of the Office Assistant who receives the application with seal and entry to that of the Stenographer who types the Order, an MP requires the time/manpower of several hands such as Scrutiny Officer, Docketing Assistant, Posting Clerk, Court Officer, Judge, Stenographer etc., etc., Think of the number of man hours we can save, particularly at a time, when we don’t have enough staff to do work in our Registry.

With my experience in Bombay, I would say that a single application will work for the prayers (i) to condone the delay in filing an application to set aside abatement (ii) to set aside abatement and (iii) to bring on record Legal Representatives, which we do in three separate applications here.

I request my brothers to point out the difficulties and if workable, the Association may take this up with the High Court Rule making committee

Madurai
22/12/13

WHAT IF, ALL ORDERS ARE MADE REVISABLE?

Section 104 and Order XLIII of the CPC permit filing of appeals against the certain orders. The rest of the orders can be challenged by way of revision under Section 115. However to maintain a revision, there must be an ‘error of jurisdiction’ or ‘material irregularity’ in the passing of such order. The amendment in 2002 sought to restrict the power of revision by adding a proviso but the object is defeated by Advocates by resorting to superintending power of High Court under Article 227 of the Constitution of India. Hence the status quo continues that certain orders are appealable and the rest revisable.

The High Court Advocates, Registry and even the Court are spending considerable time whenever a doubt arises as to whether an order is appealable or revisable under Section 115 or revisable under Art.227.

I have not come across a situation when any Advocate or Court is going into the nuances of ‘error of jurisdiction’ in filing or entertaining a revision. Neither have I found any difference in the hearing of a CMA or CRP.

In the said circumstance, what will happen if Section 104 and Order XLIII are deleted from CPC and Section 115 is amended to the effect that all Orders of the Subordinate Courts are revisable without any qualification or proviso?

This may save considerable time of the Subordinate Courts by dispensing with their power of Appeal against Interlocutory Orders. The recurring confusion in High Court can be avoided. Even appeals can be dismissed without notice to the Respondent under Order 41 Rule 11 (1). Hence the right of appeal is subject to admission as in the case of revision.

Madurai
28/12/13

ட்ரையேஜ்

‘இறந்து போகும் ஒவ்வொரு உறவினரும் நான் வாழ்வதற்கான காரணங்களில் சிலவற்றை எடுத்துக் கொண்டே போகிறார்கள்’

சமீபத்தில் இறந்து போன சித்தப்பாவைப் பற்றி நினைக்கையில், ஒவ்வொருவராக கடந்து போன மற்றவர்களும் நிழலாட, நேற்றைக்கு முந்தைய நாள் மனதைப் படுத்திய வரிகள் இவை. ஆனால் அடுத்த நாளே அதற்கான பதில் இப்படத்தில் கிடைக்கும் என நான் எதிர்பார்க்கவில்லை.

‘Why are you so concerned about what happens to the dead?’

இது போன்ற ஆழமான உரையாடல்களால், படம் இறந்து போனவர்களைப் புதைக்காமல், மனதில் இருத்துவதின் உளவியல் விளைவுகளைப் பற்றிப் பேசி, ‘பிழைத்திருப்பது’ ஒன்றே வாழ்க்கையின் காரணம் என்பதை நிறுவ முற்படுகிறது.

இதன் டிவிடியை நண்பன் கொடுத்த பொழுதில், அதிலுள்ள படத்தை மேற்போக்காக கவனித்து, ஏதோ தனிமனித சாகசம் நிறைந்த வழக்கமான ஹாலிவுட் படம் என்று நினைத்தேன். சதாமின் ஈராக் மீதான குர்த் போராளிகளின் ‘இறுதி’ தாக்குதலை பத்திரிக்கைகளுக்காக புகைப்படம் எடுக்க செல்லுபவன்தான், கதாநாயகன் என்பதும் நிமிர்ந்து உட்கார்ந்தேன். பின் இறுதி வரை இருக்கையில் சரியவேயில்லை.

படம் ஹாலிவுட் படமல்ல. ஐரோப்பிய படம்!

குர்திஸ்தானிலிருந்து உடலெங்கும் காயங்களோடும் ஏதோ குற்ற உணர்வோடும் திரும்பியவனின், மன அழுத்தத்தில் கால்கள் செயல்படாமல் போக, அவனது மனைவி போர்முனையிலிருந்து திரும்பிய வீரர்களின் மன அழுத்தத்தை நீக்கும் மையத்தை நடத்தும் அவளது தாத்தாவை அழைக்கிறாள். மெல்ல மெல்ல அவனது மனதிலிருக்கும் முடிச்சுகள் அவிழ….போர்முனைக்கு அவனுடன் சென்ற நண்பனுக்கு என்ன நடந்தது என்ற உண்மையை அவன் கொட்டுவதோடு படம் முடிகிறது.

கதாநாயகியின் தாத்தா, டிராகுலா புகழ் கிறிஸ்டோபர் லீ. 86 வயது! படத்திலும், நிசத்திலும். ஆனால் தோற்றத்திலும், குரலிலும் என்ன ஒரு கம்பீரம். மனோதத்துவ நிபுணராக வரும் அவரது வாயிலிருந்து வரும் ஒவ்வொரு வசனமும், அத்தனை கன்வின்சிங்…..படத்தின் கதாநாயகனை மட்டுமல்ல.

I lost my entire family, I lost my parents, I lost my brothers and sisters and I lost my wife. And yet, I am still here, I can still smile, and the world is still, a wonderful place என்று தனிமையில் படம் பார்த்துக் கொண்டிருந்த எனக்காகவும் பேசியது மாதிரி இருந்தது...

சூடான் நாட்டில் பஞ்சத்தின் கொடுமையில் எலும்புக்கூடான சிறு பெண் உணவளிக்கும் மையத்தை நோக்கி தரையில் தவழ்கையில் பின் நிற்கும் வல்லூறு புகைப்படமொன்றை பார்த்திருக்கலாம். புலிட்சர் பரிசு பெற்ற புகழ் பெற்ற அப்படத்தை எடுத்த புகைப்படவியலாளர் கெவின் கார்ட்டர், தனது 33ம் வயதில் தான் பார்த்த கொடுமைகளின் மன அழுத்தத்தில் தற்கொலை செய்து கொண்டார். பாவம், அவர் இறந்து பத்து வருடங்கள் கழித்து இப்படம் வெளிவந்துள்ளது...                                                                                                                                                                                                                                                                                               மதுரை                                                                                                                                                   01/04/2014

PROOF OF WILLS ADMITTED BY TESTATOR

INTRODUCTION I have had the privilege to hear the lecture of Mr.Nagamuthu, Senior Advocate on ‘Execution and Proof of Will’....